Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 16 மே, 2013

தென்காசி ரயில்வே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


விசாரணை கைதிகளாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். புளியங்குடியில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

புளியங்குடியில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மத்தி, மாநில அரசின் 10 சதவீத இடஒதுக்கீடு கோரியும், சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரியும் மாபெரும் விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது.

காயிதே மில்லத் திடலில் வைத்து நடந்த கூட்டத்திற்கு மைதீன்வாவா தலைமை வகித்தார். நகர தலைவர் செய்யது சுலைமான், மாவட்ட துணைத்தலைவர் மைதீன்பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அப்துல் வகாப் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட தலைவர் துராப்ஷா, மாவட்ட செயலாளர்கள் மீரான் மைதீன்,செய்யது முகம்மது, மாவட்ட பொருளாளர் காதர் மைதீன், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்காதர், முன்னாள் நகர செயலாளர் அப்துல் ரகீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட் தீர்மானங்கள்:

1.தென்காசி ரயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடித்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.
2.மத்திய மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
3.பத்து ஆண்டுகளுக்கு மேலாக  சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்.
4.குடிநீர் இணைப்புகளுக்காக புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றது அப்பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. புதிய இணைப்புகள் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கும் போது பொதுமக்களுக்கு சிரமம் இன்றி நகராட்சி தனது சொந்த செலவில் இணைப்பு வழங்க நகராட்சியை கேட்டுக்கொள்ளப்பட்டது.
5..வலையர் ஊரணியின் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் முகம்மது இஸ்மாயில், மாநில இளைஞர் லீக் துணைச் செயலாளர் முகம்மது அலி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முகம்மது அசன், காயல்பட்டினம் முகம்மது நாசர், கடையநல்லூர் நகர பொருளாளர் கோதரி, ஹைதர் அலி, பக்கீர் மைதீன், புளியங்குடி நகர இளைஞர் லீக் தலைவர் பக்கீர் ஒலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸ் நன்றி கூறினார்.

இந்தியாவில் நடத்தப்படும் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வுகள்


கேட் (COMMOM ADMISSION TEST):
இது ஐ.ஐ.எம். எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் நடத்தும் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு. இந்தியாவில் மிக மிகக் கடினமாக தேர்வாக இது கருதப்படுகிறது. பொதுவாக இது நவம்பர்/டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.

எக்ஸ்.ஏ.டி. (XEVIAR'S  INSTITUTE ADMISSION TEST):

சேவியர் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் எம்.பி.ஏ. படிப்புக்கான தேர்வு இது. இதுவும் பலத்த போட்டியை உள்ளடக்கியது. பொதுவாக இந்தத் தேர்வுக்கு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகிறது. டிசம்பருக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 50%க்கு குறைவாக பட்டப்படிப்பில் மதிப்பெண் பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வில் தகுதி பெற்றால் சேவியர் குழுமத்தில் உள்ள 41 கல்வி நிறுவனங்கள் நடத்தும் எம்.பி.ஏ. படிப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் பினான்சியல் மேனேஜ்மெண்ட் அண்ட் ரிசர்ச், லிபா, எம்.ஓ.பி.வி. கல்லூரி ஆகியவை எக்ஸ்.ஏ.டி. தகுதி பெற்றவரை தங்களது படிப்பில் அனுமதிக்கின்றன. இந்தியாவில் 31 நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
2 1/2 மணி நேரத்திற்கு நடத்தப்படும் அப்ஜக்டிவ் தேர்வைத் தொடர்ந்து விரிவாக ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் பகுதியும் இடம் பெறும்.

மேட் (MANAGEMENT APTITUDE TEST ):
இதை ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேசன் நடத்துகிறது. இது ஒரு தேசிய நுழைவுத் தேர்வாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கு பொதுவாக இது 4 தடவை நடத்தப்
படுகிறது. கணிதம், அனலிடிகல் திறன், ரீசனிங், பொதுத் திறன் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் அமைகின்றன.
இக்னோ ஓபன்மேட்: இந்தியாவின் புகழ்பெற்ற திறந்தவெளி பல்கலைகழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைகழகம் நடத்தும் எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு இது. இது ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது.

எப்.எம்.எஸ். (FMS): 
டில்லி பல்கலைகழகத்தின் எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு இது.
பொதுவாக எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதம், டேட்டா இன்டர்பிரடேசன், லாஜிகல் எபிலிடி போன்றவற்றில் கேள்விகள் அமைகின்றன. 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை இதற்காக நீங்கள் உங்கள் பட்டப்படிப்பு படிக்கும் போதே தயாராகிக் கொண்டு வர வேண்டும். துல்லியமாகவும் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் கேள்விகளுக்கு பதிலளிப்பது மிக மிக அடிப்படையானது. இப்போதிருந்தே நுழைவுத் தேர்வு பாடத் திட்டத்திற் கேற்ப தயாராக வேண்டும். முடிந்தால் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து படிக்கலாம்.