Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 25 ஜூன், 2012

சுனாமி திருடர்களுக்கு ,சமுதாய போர்வாள் சவால் !

 நேற்று (24 /06 /2012 )    லால்பேட்டை மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது .அந்த கூட்டத்தில் சமுதாயத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களும் ,சமுதாய போர்வாள்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரகுமான் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள் .என்றைக்குமே ,முஸ்லிம் லீக் தலைவர்களுக்கு பிறரை சாடி பேசும் பழக்கம் கிடையாது .ஆனால் ,உண்மைக்கு பங்கம் விளைவிக்க யாரும் முயற்சித்தால் ,அதனை தடுத்து உண்மையை சமுதாயம் அறியச்செய்வது அவர்களின் கடமை .எனவே ,பொய்யான பேச்சுக்கள் ,தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தினரால் சுனாமி திருடர்கள் என்று அழைக்கப்படும் தமுமுக வினர் ,குறிப்பாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா பல மேடைகளில் ,முஸ்லிம் தலைவர்களை ,நம் சமுதாயத் தந்தை காயிதே மில்லத் (ரஹ்) அவர்களையும் சேர்த்து விமர்சித்து ,பொய் குற்றச்சாட்டு கூறி வருவதை சமுதாய மக்கள் பார்த்து வருகின்றனர் .


முன்பு ,தமுமுக விலிருந்து TNTJ  துவங்கிய கால கட்டத்தில் ,திருநெல்வேலி  மாவட்டம் கடையநல்லூரில் நடந்த தமுமுக கூட்டத்தில் ,அரசியல் நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பற்றி ,அன்றிருந்த எந்த முஸ்லிம் தலைவரும் பேசவில்லை என்று நம் சமுதாயத்தந்தை காயிதே மில்லத் (ரஹ் ) அவர்களை குறைசொல்ல எத்தனித்து ஜவாஹிருல்லா பேசிய போது ,அவரின் பேச்சை துணிவுடன்  சமுதாய இளைஞர்கள் தடுத்து வெள்ளை காகிதத்தில் அரசியல் நிர்ணய சபையில் நடந்ததை சுட்டி காட்டி எழுதிக்கொடுத்த போது பதில் சொல்லாமல் வேறுபக்கம் பேச்சை திசை திருப்பி  பேச்சை முடித்து விட்டு சென்றார். இது அவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது ,

அதுபோல் நமது சமுதாயத்தின் போர்வாளாக நாடெங்கும் சுற்றி சுழன்று ,சமுதாய மக்களுக்காக  பாடுபட்டு வரும் எம்.அப்துல் ரகுமான் எம்.பி அவர்கள் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை பற்றி வாய்திறக்கவில்லை என்று நாக்கூசாமல் ,தான் பேசும் மேடைகளில் பகிரங்கமாக பொய் பிரச்சாரம் ஜவாஹிருல்லா செய்து வருகின்றார் என்று செய்தி பலதடவை நம் சமுதாய பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களிடம் புகார்கள் வந்தன .அவர்கள் அதனை பெரியவிசயமாக எடுக்க வேண்டாம் , நமது பணிகள் நம் சமுத்திற்கு தெரியும் ,அதுவும் நாடாளுமன்ற நடவடிக்கைள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது ,அவருக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று கூறி ,தமது சமுதாய பணிகளை கவனித்து வந்தனர் .ஆனால் ,ஜவாஹிருல்லாவின்  பொய் பிரச்சாரம் நின்றபாடில்லை .எனவே ,லால்பேட்டை பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.அப்துல் ரகுமான் எம்.பி. அவர்கள்  காலத்தின் கட்டாயத்தால் ,சமுதாயத்தில் பொய்ப்பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்! நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடுப்பற்றி நான் பேசவில்லை என்பதை தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் நிரூபிக்கத் தயாரா? பேசியதை ஆதாரத்துடன் வெளியிட்டால் வருத்தம் தெரிவிக்கத் தயாரா?என்று  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி.பகிரங்க சவால்விட்டு  பேசினார் .சவாலை  ஏற்றுக் கொள்ள ஜவாஹிருல்லா தயாரா? என்று கூட்டத்திற்கு வந்த சமுதாய இளைஞர்கள் பகிரங்கமாக பேசிக்கொண்டனர் .


ஆதாரத்தை நாமே வெளியிட்டுள்ளோம் ,ஜவாஹிருல்லா என்ன செய்யப்போகிறார் ?  அவர்தான் பதிலளிக்க வேண்டும் 

செய்தி உதவி :லால்பேட்டை அன்வர்



சர்வாதிகாரம் ஒழிந்தது ,ஜனநாயகம் மலர்ந்தது

  எகிப்து அதிபர் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சியின் வேட்பாளர் முகம்மது முர்ஸி (60) வெற்றிபெற்றார்.

இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் பரூக் சுல்தான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் முகம்மது முர்ஸிக்கும், முன்னாள் பிரதமர் அகமது சபீக் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில், மொத்தம் 51.73 சதீவத வாக்குகளைப் பெற்று முகம்மது முர்ஸி வெற்றி பெற்றார்.முர்ஸிக்கு மொத்தம் 1,32,30,131 வாக்குகளும், அகமது சபீக்கிற்கு 1,23,47,380 வாக்குகளும் கிடைத்தன.
முகம்மது முர்ஸி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் கெய்ரோவின் தாஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய அவரது தொண்டர்கள் முர்ஸிக்கு ஆதரவாகவும், ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

முன்னதாக கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 18 நாள்கள் போராட்டத்துக்குப் பின், ராணுவத்தின் நிர்பந்தம் காரணமாக அவர் பதவி விலகினார். 800 அரசு எதிர்ப்பாளர்கள் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது சிறையில் உள்ளார்.