Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

குறைந்தபட்ச நிலப் பரப்பளவு இல்லாததால் தமிழ்நாட்டில் 1,500 பள்ளிகள் மூடப்படும் அபாயம் !


 குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள், தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கும் முன், ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளும், அரசின் அங்கீகாரத்துடன் இயங்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல், பள்ளிகள் இயங்கக் கூடாது. அப்படி இயங்கினால், அந்தப் பள்ளிகளை மூட வேண்டும் என, சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள் வரை, மூடும் அபாயத்தில் உள்ளன. ஊராட்சி பகுதியாக இருந்தால், 3 ஏக்கர்; நகர பஞ்சாயத்து பகுதி எனில், 1 ஏக்கர்; நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு; மாவட்ட தலைநகராக இருந்தால், 8 கிரவுண்டு; மாநகராட்சி பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு இடமும், பள்ளிக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்த நில அளவு, 20, 25 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பள்ளிகளில் இல்லை. தற்போது துவங்கப்படும் பள்ளிகள், மேற்கண்ட குறைந்தபட்ச நில பரப்புடன் விண்ணப்பிக்கின்றன. பழைய பள்ளிகளில், குறைந்தபட்ச நில அளவு இல்லாததால், தொடர் அங்கீகாரம் வழங்க, சம்பந்தப்பட்ட துறைகள் மறுத்து விட்டன.

இதன் காரணமாக, மெட்ரிகுலேஷன் இயக்குனரக துறையில், 1,000 பள்ளிகளும், பள்ளிக்கல்வித் துறையின் கீழ், 120 பள்ளிகளும், தொடக்க கல்வித் துறையின் கீழ், 500 நர்சரி, பிரைமரி மற்றும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளும், அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக கூறப்படுகிறது.

ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்குள், இந்த பிரச்னையில், ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில், தமிழக அரசு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் செயலர் இளங்கோவன் கூறியதாவது: நில அளவு காரணமாகத் தான், அங்கீகாரம் பெற முடியாத நிலை உள்ளது. இதனால், பள்ளி வாகனங்களுக்கு, பெர்மிட்டும் வாங்க முடியவில்லை. அங்கீகாரம் இல்லாததால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய, 6 ஆண்டுகள், தமிழக அரசு கால அவகாசம் அளித்தது. இருந்த போதும், நில மதிப்பு, 20 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பள்ளியை ஒட்டி, நிலம் வாங்க முடியாத நிலை உள்ளது.

பள்ளிக்கு, அருகாமையில், இடம் வாங்கினால், அதை ஏற்பது இல்லை. பள்ளிக்கு பக்கத்திலேயே வாங்க வேண்டும் என, கூறுகின்றனர். நடைமுறையில், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை, அதிகாரிகளும், அரசும் உணர வேண்டும்.

எனவே, பள்ளி இயங்கும் இடத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட மாணவ, மாணவியர் படிக்கும் வகையில், அரசு அனுமதித்து, உத்தரவு வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு, 10 சதுர அடி வேண்டும் என, அரசு கூறுகிறது. 6 சதுர அடி போதும் என, நாங்கள் கூறுகிறோம்.

எனவே 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பள்ளிகள், புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்னைகளை உணர்ந்து, அரசு சுமூகமான ஒரு முடிவை எடுத்து, வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் அறிவிக்க வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரம் கூறுகையில், "கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இயங்கக் கூடாது. இந்த பிரச்னையை, அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளோம். ஜூன் மாதத்திற்குள், தமிழக அரசு, ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் என, எதிர்பார்க்கிறோம்," என, தெரிவித்தனர்.

மரணத்திற்கு காரணமான கோக கோலா

நியூசிலாந்து பெண்ணின் கோக கோலா குடிக்கும் பழக்கம், அவரது உயிரை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இவ்னர்கார்கில் பகுதி‌யை சேர்ந்தவர் நடாஷா ஹாரிஸ் (30). இவர் கடந்த சிலஆண்டுகளாக தினமும் 10 லிட்டர் அளவிற்கு கோக கோலா குடித்து வந்துள்ளார். இருதய நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நடாஷா, சமீபத்தில் மரணமடைந்தார்.

அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. உடலில் அளவுக்கதிகமாக கோக கோலா இருந்ததால், அவரது வளர்சிதை மாற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரது இதயம் பலவீனமாகி இறுதியில் அவரது மரணத்திற்கு காரணமாகி உள்ளது. கோக கோலா உள்ளிட்ட குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - திரேஷ்புரத்தில் தொழுகைக்கு பாங்கு சொல்ல விதிக்கப்பட்ட தடை ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முயற்சியால் உடனடியாக நீக்கப்பட்டது .


பள்ளிவாசல் ஒலிபெருக் கியில் பாங்குசொல்ல தடை இல்லை என்றும், இதற்கு எழுத்துப்பூர்வமான அனுமதி வழங்கப்படும் என்றும் தூத் துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடனடியாக மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தூத்துக்குடியில் பதற்றம் தணிந்து, இயல்பு நிலை திரும்பியது.

பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், இந்து கோவில்கள் போன்றவற்றில் ஒலிபெருக்கி கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. ஆண்டாண்டு கால மாக பள்ளிவாசல்களில் ஐவேளை தொழுகைக்கான பாங்கு என்னும் தொழுகை அழைப்பு ஒலிபெருக்கி மூலம் சொல்லப் பட்டு வருகிறது. இந்த பாங்கு ஓரிரு நிமிடங்கள் மட்டுமே சொல்லப்படும்.

மத வழிபாட்டுத் தலங் களில் ஒலிபெருக்கி பயன்படுத் தப்படுவதால் கல்வி நிலையங் களில் மாணவர்கள் பாதிக்கப் படுவதாகவும், பொது மக்க ளுக்கு இடையூறு ஏற்படுவதா கவும் கூறி, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மகேஷ் ஏற்பாட்டில் வழிபாட்டுத் தலங் களின் நிர்வாகிகளை அழைத்து நிறுத்துமாறு உத்தர விடப்பட்டது.

நேற்று (11-2-2013) இரவு தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பீமராஜ் காவல் நிலையத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இந்த உத்தரவு சொல்லப்பட்டு ஒலிபெருக்கி பயன்படுத்த மாட்டோம் என நிர்வாகிகளிடம் கையெழுத்தையும் பெற்றார்.

பிப்ரவரி 12-லிருந்து ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட் டால் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகள் கைது செய்யப் படுவார்கள் என்றும் எச்சரிக்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து மீன்பிடி தொழிலாளர்கள் நிறைந்த தூத்துக்குடி திரேஷ் புரத்தில் இன்று காலை பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் அங்கு ஜமாஅத்தினர் திரண்டனர். உடனடியாக ஜமாஅத் தலைவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை மைக்கு தகவல் தெரிவித்தனர்.

எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. எஸ்.பி.யுடன் பேச்சு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆலோசனையின் பேரில் காயிதெ மில்லத்பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. பீகார் தலைநகர் பாட்னாவிலி ருந்து தொலைபேசி மூலம் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் ராஜேந்திரனிடம் இதுபற்றி பேசினார்.

பள்ளிவாசல் ஒலிபெருக்கி யில் பாங்கு சொல்வது யாருக் கும் இடையூறானது அல்ல. ஓரிரு நிமிடங்கள் மட்டுமே சொல்லப்படும் இந்த பாங்கு ஒலியால் யாரும் பாதிக்கப்படு வதும் இல்லை. இதை தடுப்ப தன் மூலம் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த உரிமையை தடுக்கக் கூடாது என கேட்டுக் கொண் டார்.

தங்களுடைய உணர்வு களை புரிந்து கொள்வதாகவும், உடனடியாக தங்கள் தரப்பில் குழுவினர் தன்னை சந்திக்க லாம் என்றும் காவல் துறை கண்காணிப்பாளர் குறிப்பிட் டார்.

இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை தூத்துக்குடி திரேஷ்புரத்தில் பள்ளிவாசல் பணிகளை பார்வையிட சென்றிருந்த கத் தார் நாட்டின் காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் கே.வி.ஏ. டி. ஹபீப் முஹம்மதுவை தொடர்பு கொண்டு ஜமாஅத் தலைவர்களை அழைத்துக் கொண்டு காவல் துறை கண்காணிப்பாளரை உடனடி யாக சந்திக்குமாறு அறிவுறுத் தியது.

இதனைத் தொடர்ந்து கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மது திரேஷ்புரம் ஜமாஅத் தலைவர் அப்துல் ஜப்பார், செயலாளர் முஹம்மது தௌஃபீக் மற்றும் ஆஷிக், தாவா சென்டர் பொறுப் பாளர்கள் சுலைமான் முஹம்மது உள்ளிட்டோர் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேந்தி ரனை சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது, காவல் துறை கூடுதல் கண் காணிப்பாளர் மகேஷ், ஆய்வா ளர் பீமராஜ், எஸ்.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இக்குழுவினரிடம் பேசிய காவல் துறை கண்காணிப்பாளர், `தனிப்பட்ட முறையில் தாம் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், மதச்சார்பற்ற கொள்கையை உறுதியாக பின்பற்றக் கூடியவர் என்றும்’ அனைத்து மத உணர்வு களையும் புரிந்து கொண்டவர் என்றும், முஸ்லிம்களின் மத உணர்வுகளை தான் நன்கு உணர்ந்திருப்பதாகவும் எடுத்துக் கூறி, பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்வது தடை செய்யப் பட மாட்டாது என்றும், அப்படி பாங்கு சொல்வதற்கு எழுத்துப் பூர்வமான அனுமதி வழங்கப் படும் என்றும் அறிவித்தார்.

இதனை, முஸ்லிம் தூதுக் குழுவின் சார்பில் கே.வி.ஏ.டி. ஹபீப் முஹம்மது ஜமாஅத்தின ரிடம் எடுத்துக் கூறி, எத்தகைய சட்டம் ஒழுங்குபிரச்சினையும் ஏற்படுத்தாமல், எவருக்கும் இடையூறு செய்யாமல் கலைந்து செல்லு மாறு மக்களை கேட்டுக் கொண்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அமைதியான அணுகு முறையை பாராட்டிய பொது மக்கள் அமைதியுடன் கலைந்து சென்றனர்.

காவல் துறை கண்காணிப் பாளரை மீண்டும் தொடர்பு கொண்ட எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் மனப் பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.