Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 20 நவம்பர், 2012

7வது நாளாக காசா மீது இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல் : அமெரிக்கா தவிர உலக நாடுகள் கண்டனம்


 7வது நாளாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ராக்கெட் குண்டுகள், வான்வழி துப்பாக்கி சூடு மூலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 111 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். சமீபத்தில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலில் ஓரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள், பெற்றோருடன் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் ஏவுகனை தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் பள்ளிக் கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளை தவிர உலக நாடுகள் இஸ்ரேலின் அத்துமீறலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐ.நா.சபையில் கண்காணிப்பு உறுப்பினராக பாலஸ்தீன அரசு முயற்சித்து வருகிறது. நவம்பர் 29ல் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அப்படி ஐ.நாவில் கண்காணிப்பு உறுப்பினராக ஆகும் பட்சத்தில், தனது தரப்பு நியாயங்களை பாலஸ்தீன அரசு அறிவிக்க ஒரு வாய்ப்பு அமையும். இது இஸ்ரேலுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாலஸ்தீனம் இஸ்ரேலை எச்சரித்து வருகிறது.

ஊரணிகளை காணவில்லை:கலெக்டரிடம் புகார்

"ராமநாதபுரம் நகராட்சியில் ஊரணிகளை காணவில்லை' என, மக்கள் குறை தீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் வெண்குளம் ராஜூ, கலெக்டர் நந்தகுமாரிடம் அளித்த மனு:ராமநாதபுரம் நகராட்சியில் நீர்நிலைகள் குறித்து, தகவல் உரிமை சட்ட தகவலின்படி, 31 ஊரணிகள் மற்றும் பொது கிணறு பயன்பாட்டில் இருந்தது. தற்போது, ஆக்கிரமிப்பால், மழைநீர் வெளியேற வழியின்றி, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.ஐகோர்ட் உத்தரவுபடி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதன்படி, கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, காணாமல் போன ஊரணிகளை கண்டுபிடித்து, பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விசாரித்து நடவடிக்கை எடுக்க, நகராட்சிக்கு கலெக்டர் நந்தகுமார் பரிந்துரைத்தார். நகராட்சி கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், "நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

நூறு சதம் வங்கி சேவை கொண்ட மாவட்டம் கேரளமாநிலம் எர்ணாகுளம்

நாட்டின் முதல், நூறு சதவீத வங்கி சேவை மாவட்டம் என்ற பெருமையை, கேரளாவின், எர்ணாகுளம் மாவட்டம் பெற்றுள்ளது.அனைத்து பகுதிகளிலும் வங்கிகள், அனைவருக்கும் வங்கிக்கணக்கு, வங்கிகளில் அதிநவீன சேவைகள் போன்றவற்றின் அடிப்படையில், நூறு சதவீத வங்கி சேவை மாவட்டம் என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் மக்கள்தொகை, 32 லட்சம். வங்கிகளில், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை, 37 லட்சம். இந்த மாவட்டத்தில் மட்டும், 41 வணிக வங்கிகள், தலா ஒரு வட்டார கிராம வங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கியை கொண்டிருக்கும் இந்த மாவட்டத்தில் வங்கிப் பயன்பாடும் அதிகம்.இந்த பெருமைகளின் அடிப்படையில், நாட்டின் முதல், நூறு சதவீத வங்கி சேவை மாவட்டம் என்ற பெருமையை, எர்ணாகுளம் பெற்றுள்ளது.

இதற்கான விழா, நாளை மறுநாள், 22ல், எர்ணாகுளத்தில் நடக்கிறது.அதில், ரிசர்வ் வங்கி கவர்னர், சுப்பா ராவ், முதல்வர், உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர், கே.வி.தாமஸ், "ஆதார்' அடையாள அட்டை அமைப்பின் தலைவர், நந்தன் நிலேகனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.