Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 20 நவம்பர், 2012

நூறு சதம் வங்கி சேவை கொண்ட மாவட்டம் கேரளமாநிலம் எர்ணாகுளம்

நாட்டின் முதல், நூறு சதவீத வங்கி சேவை மாவட்டம் என்ற பெருமையை, கேரளாவின், எர்ணாகுளம் மாவட்டம் பெற்றுள்ளது.அனைத்து பகுதிகளிலும் வங்கிகள், அனைவருக்கும் வங்கிக்கணக்கு, வங்கிகளில் அதிநவீன சேவைகள் போன்றவற்றின் அடிப்படையில், நூறு சதவீத வங்கி சேவை மாவட்டம் என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் மக்கள்தொகை, 32 லட்சம். வங்கிகளில், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை, 37 லட்சம். இந்த மாவட்டத்தில் மட்டும், 41 வணிக வங்கிகள், தலா ஒரு வட்டார கிராம வங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கியை கொண்டிருக்கும் இந்த மாவட்டத்தில் வங்கிப் பயன்பாடும் அதிகம்.இந்த பெருமைகளின் அடிப்படையில், நாட்டின் முதல், நூறு சதவீத வங்கி சேவை மாவட்டம் என்ற பெருமையை, எர்ணாகுளம் பெற்றுள்ளது.

இதற்கான விழா, நாளை மறுநாள், 22ல், எர்ணாகுளத்தில் நடக்கிறது.அதில், ரிசர்வ் வங்கி கவர்னர், சுப்பா ராவ், முதல்வர், உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர், கே.வி.தாமஸ், "ஆதார்' அடையாள அட்டை அமைப்பின் தலைவர், நந்தன் நிலேகனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக