Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 19 நவம்பர், 2012

கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரட்டை வேடம்


சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது.

இதற்கு இடதுசாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கொணடு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கமாட்டோம். மம்தா கொண்டு வரும் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டால், அது மத்திய அரசுக்கு ஆதரவாகவே முடியும்.

அதேசமயம் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம். நேரடி அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக