Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 10 அக்டோபர், 2012

தொலைநிலைக் கல்வியா? கவனம் தேவை


தொலைநிலையில் உயர்கல்வி மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் முன்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் தொலைநிலையில் வழங்கும் பாடத்திற்கு அங்கீகாரம் இருக்கிறதா என்பதை, தெலைநிலைக் கல்வி கவுன்சிலின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவேளை, நீங்கள் தொலைநிலைக் கல்வி மூலமாக மேற்கொள்ளும் பாடம், தொலைநிலைக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெறாமல் இருந்தால், அதன்மூலம் நீங்கள் பெறும் பட்டமானது, மத்திய அரசின் பணிகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பல கல்வி நிறுவனங்கள் சார்பாக, தொலைநிலைக் கல்விக்கான பாடங்கள் குறித்து பல போலியான விளம்பரங்கள் வருகின்றன. எனவே மாவர்கள் இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும்.

மேலும், தொலைநிலைக் கல்வியில் சேரும்போது, Franchised study centre மற்றும் Contact point -ல் சேர்க்கை பெற வேண்டாம் என்றும், தொலைநிலைக் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி, பல்கலை அல்லது கல்வி நிறுவனத்தால், அதன் நிர்வாக எல்லைக்குள் நடத்தப்படும் Study centre -களில் மட்டுமே சேர்க்கை பெறுவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் 52 பொறியியல் கல்லூரிகள் மூடல்


தொழில் முறை கல்விக்கு ‌ஒரு பொற்காலம் என்பதை குறிப்பிடுகையில் புதிதாக நூறு கல்வி நிறுவனங்கள் உருவாகின்றன. அதே வேளையில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் 2011லிருந்து 225 பி-கிரேடு பள்ளிகளும் 52 பொறியல் கல்லூரிகளும் மூ‌டிவிட்டன என தெரியவந்துள்ளது.

பல கல்லூரிகளில் பொறியியல் மற்றும் மேலாண்மைப் பாடப் பிரிவுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, அதிக மாணவர்களை ஈர்த்த எம்.பி.ஏ. படிப்புக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மவுசு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2011-12ல் மட்டும் நாடு முழுவதும் 146 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (பி-ஸ்கூல்) தொடங்கப்பட்டன. எனினும், அதே கால கட்டத்தில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த 124 பி-ஸ்கூல் மூடப்பட்டன. அதேபோல் 84 கல்லூரிகளில் எம்.சி.ஏ. படிப்பு நிறுத்தப்பட்டு விட்டன.

இந்த ஆண்டு நிலைமை மேலும் மோசமடைந்து விட்டதாக ஏ.ஐ.சி.டி.இ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் 101 மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், புதிதாக 82 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன.