Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 21 ஜூலை, 2014

ஜூலை25 ரமளான் கடைசி வெள்ளி "அல்குத்ஸ்" தினம் பலஸ்தீன முஸ்லிம்களை பாதுகாக்க புனித பைத்துல் முகத்தஸை மீட்க அல்லாஹ்விடம் மன்றாடுவோம்! --- பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன்

உலக முஸ்லிம்களின் முதல் கிப்லா "பைத்துல் முகத்தஸ்"- மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்று. இறுதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விண்வெளி பயணம் தொடங்கிய இடம் - பலஸ்தீன் நபிமார்கள் நடமாடிய பூமி.

எனவேதான் பலஸ்தீன், பைத்துல் முகத்தஸ், ஜெருசலம் - உலக முஸ்லிம் களின் பிரச்சனை! இதை உணர்த்தவும், இஸ்ரேலிய யூத நாசகார சக்தி களிடமிருந்து மீட்டெடுக்கவும் ரமளான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை
"அல் குத்ஸ்" தினமாக உலக முஸ்லிம் களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு புனித ரமளான் மாதத்தை யுத்த காலமாக்கி அப்பாவி பலஸ்தீனர்களை வேட்டையாடி வருகிறது இஸ்ரேல். காஸாவில் கடந்த இருவாரங்களாக வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலில் 337 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், உயிரிழப்பு அதிகம். தரைமட்டமாக்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளை அப்புறப்படுத் தினால்தான் சரியான எண்ணிக்கை தெரிய வரும். ஆனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில்!

"இஸ்ரேலின் மிருகவெறித் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள்" என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா. சபையின் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களில் அடுத்த தலைமுறை வளரக் கூடாது என்றே யூத சக்திகள் திட்டமிட்டு இதனை செய்கின்றன.

முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமை இல்லை - ஐரோப்பிய நாடு கள் மவுனம் சாதிக்க, இஸ்ரேல் தாக்குதலை அமெரிக்கா ஆதரிக்கிறது. அதனால் ஐ.நா. சபை செயலிழந்து கிடக்கி றது.பலஸ்தீனத்தை இந்தியா உறுதியாக ஆதரித்த நிலை மாறி - இஸ்ரேல் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கூட இன்றைய மத்திய அரசு சம்மதிக்க மறுக் கிறது.இதுதான் அரசியல் மாற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டி ருக்கும் அலங்கோலம்!

எனவே, இப்போது ஒரே நம்பிக்கை எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மன்றாடுவதுதான். பலஸ்தீனர்களின் உயிர் காக்க புனித பைத்துல் முகத்தஸை யூதர்களிடமிருந்து மீட்க ரமளான் கடைசி வெள்ளியான ஜூலை 25 ,ஜும்ஆ தொழுகையின்போது அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்து அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சுவோம்.

துஆகள் தோற்பதில்லை அல்லவா!

பலஸ்தீனத்தை மையப்படுத்தி அன்றைய தின குத்பா உரை நிகழ்த்த சங்கைக்குரிய உலமா பெருமக்களை அன்புடன் வேண்டு கிறோம் என்று  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது அறிக்கையில் கூறியுள்ளார் .

சனி, 19 ஜூலை, 2014

இஸ்ரேல் தீவிரவாதிகள் தாக்குதல்: காஸாவில் உயிரிழப்பு 300-ஐ தாண்டியது

காஸா மீது இஸ்ரேல் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 26 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இதனால், காஸாவில் 12ஆவது நாளாக இஸ்ரேலின் தீவிரவாதிகள் நடத்தி வரும் கடும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.

இஸ்ரேல் தீவிரவாதிகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே கடந்த 8ஆம் தேதி முதல் கடும் போர் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலின் தீவிரவாதிகள்  விமானப்படை, கடற்படை மற்றும் பீரங்கிப்படை என முப்படைகளும் குழந்தைகள் ,பெண்கள் ,வயதானோர் என்று பாராமல்  காஸா மீது இரவு பகலாக குண்டுகளை வீசி கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதற்கு பதிலடியாக,இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரை குறிவைத்து காஸா பகுதியில் இருந்து ஏவுகணைகள் மூலம் ஹமாஸ் போராளிகள்  தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 காஸாவில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2,200 பேர் காயமடைந்துள்ளதாகவும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.