Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 1 செப்டம்பர், 2012

தென்காசி பகுதியில் ஆப்பிள், மாதுளை விற்பனை அதிகரிப்பு

தென்காசி பகுதியில் ஆப்பிள், மாதுளை பழங்களின் விற்பனை அமோகமாக உள்ளது.குற்றால சீசனை முன்னிட்டு தென்காசி பகுதியில் மலைப் பகுதியில் விளையும் பழ வகைகள் விற்பனைக்கு அதிகளவில் குவிக்கப்பட்டன. சீசன் டல் அடித்ததால் பழ வகைகளின் விற்பனையும் சரிந்தது. ஆனால் ஆப்பிள், மாதுளை போன்ற பழ வகைகளின் விற்பனை சீராக இருந்தது. ஆப்பிள் கிலோவிற்கு 120 ரூபாய் வரையிலும், மாதுளை கிலோவிற்கு 180 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

தற்போது ஆப்பிள், மாதுளை பழங்களின் அறுவடை சீசன் என்பதால் அவற்றின் வரவு அதிகமாக உள்ளது. பழக்கடைகளில் மட்டும் அல்லாமல் சாலையோரங்களிலும் அதிகளவில் இப்பழங்கள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மாதுளை கிலோவிற்கு 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், ஆப்பிள் கிலோவிற்கு 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.காஷ்மீர் மாநிலத்திலிருந்து ஆப்பிள் பழங்களும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து மாதுளை பழங்களும் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால்தான் இவற்றின் விலை குறைந்துள்ளது. விலை குறைந்ததால் இப்பழங்களை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி சென்றனர்.

சிட்டுக்குருவி ஆராய்ச்சி மையம்


தமிழ்நாட்டில் 40 சதவீதம் சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டதாக,'' சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் பாஸ்கரன் கூறினார்.

இதன் கல்லூரியில், "சிட்டுக்குருவி ஆராய்ச்சி மையம்' அமைப்பு சார்பில், நடந்த "இன்றைய சூழலில் சிட்டுக்குருவியின் நிலை' பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கை, துவக்கி வைத்து அவர் பேசியபோது,
‘’ விவசாயம் மனிதனுக்கும், பறவைகளுக்கும் வாழ்க்கை சக்கரமாக உள்ளது. காலத்திற்கு ஏற்ப விவசாயம் நடக்காததால், சிட்டு குருவிகளுக்கு உணவு தட்டுப்பாடு நிலவுகிறது.

சிட்டுகுருவி வாழ்விடம் அமைப்பதற்கான புல் கிடைக்கவில்லை. மற்ற பறவைகளின் இறகுகள் இல்லாத நிலையில், சிட்டுக்குருவியால் வாழ்விடம் அமைக்க முடியவில்லை. இதன் அழிவுக்கு இதுவும் முக்கிய காரணம்.
தமிழ்நாட்டில் 1979 முதல் 2006 வரை 40 சதவீதமும், கடந்த 35 ஆண்டுகளில் உலக அளவில் 70 சதவீதம் அளவு சிட்டுக்குருவி குறைந்து விட்டது.

பிரிட்டனில் 15 ஆண்டுகளில் 70 முதல் 90 சதவீதம், லண்டனில் 1994 முதல் 2005 வரை 65 சதவீதம் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிகின்றன. அழிந்து வரும் இனத்தை பாதுகாக்க, சிட்டுக்குருவிக்கு வீடுகளில் தானியம், தண்ணீர் வைக்க வேண்டும். மண்பானை, மரத்தலான கூடுகளை கட்டி வையுங்கள்’’ என்றார்.