Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 1 செப்டம்பர், 2012

சிட்டுக்குருவி ஆராய்ச்சி மையம்


தமிழ்நாட்டில் 40 சதவீதம் சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டதாக,'' சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் பாஸ்கரன் கூறினார்.

இதன் கல்லூரியில், "சிட்டுக்குருவி ஆராய்ச்சி மையம்' அமைப்பு சார்பில், நடந்த "இன்றைய சூழலில் சிட்டுக்குருவியின் நிலை' பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கை, துவக்கி வைத்து அவர் பேசியபோது,
‘’ விவசாயம் மனிதனுக்கும், பறவைகளுக்கும் வாழ்க்கை சக்கரமாக உள்ளது. காலத்திற்கு ஏற்ப விவசாயம் நடக்காததால், சிட்டு குருவிகளுக்கு உணவு தட்டுப்பாடு நிலவுகிறது.

சிட்டுகுருவி வாழ்விடம் அமைப்பதற்கான புல் கிடைக்கவில்லை. மற்ற பறவைகளின் இறகுகள் இல்லாத நிலையில், சிட்டுக்குருவியால் வாழ்விடம் அமைக்க முடியவில்லை. இதன் அழிவுக்கு இதுவும் முக்கிய காரணம்.
தமிழ்நாட்டில் 1979 முதல் 2006 வரை 40 சதவீதமும், கடந்த 35 ஆண்டுகளில் உலக அளவில் 70 சதவீதம் அளவு சிட்டுக்குருவி குறைந்து விட்டது.

பிரிட்டனில் 15 ஆண்டுகளில் 70 முதல் 90 சதவீதம், லண்டனில் 1994 முதல் 2005 வரை 65 சதவீதம் சிட்டுக்குருவிகள் அழிந்து வருகிகின்றன. அழிந்து வரும் இனத்தை பாதுகாக்க, சிட்டுக்குருவிக்கு வீடுகளில் தானியம், தண்ணீர் வைக்க வேண்டும். மண்பானை, மரத்தலான கூடுகளை கட்டி வையுங்கள்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக