Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 1 செப்டம்பர், 2012

தென்காசி பகுதியில் ஆப்பிள், மாதுளை விற்பனை அதிகரிப்பு

தென்காசி பகுதியில் ஆப்பிள், மாதுளை பழங்களின் விற்பனை அமோகமாக உள்ளது.குற்றால சீசனை முன்னிட்டு தென்காசி பகுதியில் மலைப் பகுதியில் விளையும் பழ வகைகள் விற்பனைக்கு அதிகளவில் குவிக்கப்பட்டன. சீசன் டல் அடித்ததால் பழ வகைகளின் விற்பனையும் சரிந்தது. ஆனால் ஆப்பிள், மாதுளை போன்ற பழ வகைகளின் விற்பனை சீராக இருந்தது. ஆப்பிள் கிலோவிற்கு 120 ரூபாய் வரையிலும், மாதுளை கிலோவிற்கு 180 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

தற்போது ஆப்பிள், மாதுளை பழங்களின் அறுவடை சீசன் என்பதால் அவற்றின் வரவு அதிகமாக உள்ளது. பழக்கடைகளில் மட்டும் அல்லாமல் சாலையோரங்களிலும் அதிகளவில் இப்பழங்கள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மாதுளை கிலோவிற்கு 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், ஆப்பிள் கிலோவிற்கு 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.காஷ்மீர் மாநிலத்திலிருந்து ஆப்பிள் பழங்களும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து மாதுளை பழங்களும் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால்தான் இவற்றின் விலை குறைந்துள்ளது. விலை குறைந்ததால் இப்பழங்களை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக