Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கு உதவி செய்ய IUML நிவாரணக்குழு அமைப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் மற்றும் கட்சி யின் சட்ட திட்ட திருத்தக் குழு ஆகியவற்றின் கூட்டுக் கூட்டம் ஆக.1-ந்தேதி புது டெல்லி ரபீ மார்க்கில் உள்ள அரசியல் சட்ட அரங்கில் நடை பெற்றது. கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய வெளியு றவுத் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரு மான இ. அஹமது சாஹிப் தலைமை தாங்கினார். 


அசாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்க ளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக நிதி திரட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செய லாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர் களை அமைப்பாளராக கொண்டு 7 பேர் அடங்கிய ஒரு குழுவை புதுடெல்லி யில் கூடிய தேசிய நிர்வா கிகள் குழு அமைத்துள்ளது. நிவாரண உதவிகளுக்காக தாராளமாக நிதியுதவி அளிக்கும்படி அக் கூட்டத் தில் வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது. 


கீழ்க்கண்டவர்களை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அசாம் கலவர நிவாரண கமிட்டியை அமைக்க இந்த கூட்டம் முடிவெடுக் கிறது. 

1. பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர், தேசியச் செயலாளர் - அமைப்பாளர். 

2. இக்பால் அஹமது - தேசிய துணைத் தலைவர் - உறுப்பினர் 

3. ஈ.டி. முஹம்மது பஷீர் எம்.பி.,- உறுப்பினர் 

4. கே.பி.ஏ. மஜீத் - கேரள மாநில பொதுச் செயலாளர் - உறுப்பினர் 

5. பி.வி.. அப்துல் வஹாப், முன்னாள் எம்.பி., - உறுப்பினர் 

6. தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, தேசிய பொருளாளர் - உறுப்பினர் 

7. குர்ரம் அனீஸ் உமர், தேசியச்செயலாளர் - உறுப்பி னர் 

அசாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண உதவிகள் வழங்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைத்துள்ள அசாம் நிவாரண நிதிக்கு தாராளமாக பொருளு தவி வழங்கும்படி வேண்டு கோள் விடுக்கப்படுகிறது. 


நிவாரண நிதி அளிக்கவிரும்புவோர் 
காசோலை எடுக்கவேண்டிய முகவரி :
`IUML - ASSAM RELIEF FUND ' என்ற பெயரில் 
இந்தியன் வங்கி ஹார்பர் கிளை 
சென்னை - 1 


காசோலை அனுப்ப வேண்டிய முகவரி :
காயிதே மில்லத் மன்ஸில்
36, மரைக்காயர் லெப்பை தெரு,
 சென்னை - 600 001

10 லட்சம் குழந்தைகள் பட்டினி

ஆப்பிரிக்காவில் மேற்கு பகுதியில் சினேகல் என்ற நாடு உள்ளது. இங்கு சமீபகாலமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் இங்குள்ள மக்களால் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. உணவு பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாமல் பெரும்பாலும் பட்டினியாக கிடக்கிறார்கள். 

சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உடல் மெலிந்து நோய்வாய்ப்பட்டு இருப்பதாக ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள மாலி, நைஜர், சாட், முரிட்டோனியா ஆகிய நாடுகளில் இதே போன்ற நிலைமை நிலவுகிறது. 

இந்த நாடுகளில் மட்டும் 18 லட்சம் பேர் போதிய உணவு இல்லாமல் பட்டினி கிடப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நாடுகளில் இருக்கும் அரசுகளின் நிர்வாக திறமையின்மை காரணத்தினால் தான் இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். 

பட்டினியை தவிர்க்க உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க உதவ  வேண்டும் என மற்ற நாடுகளை ஐ.நா.சபை கேட்டுக் கொண்டு உள்ளது.

மியான்மரில் இராணுவமே முஸ்லிம் பெண்களை கற்பழித்த கொடுமை :மனித உரிமை அமைப்பு அறிக்கை

மியான்மர் நாட்டில் உள்ள ரோகின் கயா பகுதியில் கடந்த மாதம் பயங்கர மத கலவரம் ஏற்பட்டது. மியான்மரில் புத்த மதத்தினர் அதிகமாக உள்ளனர். இதுபோல சிறுபான்மை மதங்களும் உள்ளன. இதில் புத்தமதத்தினருக்கும், ஒரு சிறுபான்மை மதத்தினருக்கும் இடையே மோதல் நடந்தது. 

இந்த கலவரத்தில் 80 பேர் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் தெரி விக்கின்றன. ஆனால் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கலவரத்தில் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள வங்காள தேசத்திற்கு ஓடினார்கள். இந்த கலவரம் தொடர்பாக நியூயார்க்கை சேர்ந்த மனித உரிமை அமைப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- 

மியான்மரில் நடந்த கலவரத்தில் ராணுவமே அத்து மீறி நடந்து கொண்டது, அவர்கள் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக இருந்தனர். சிறுபான்மை மக்களை வேண்டும் என்றே சுட்டுக் கொன்றனர். ஏராளமான சிறுபான்மை பெண்களும் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். 

மியான்மர் அரசு கலவரத்தை கட்டுப்படுத்த போதிய  நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தவறு செய்த ராணுவத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. கண் முன்பே கலவரம் நடந்த போது ராணுவம் வேடிக்கைபார்த்தது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை

அடிப்படை அறிவியல் (Basic Science) பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் மத்திய அரசு ஆண்டு தோறும் KISHORE VAIGYANIK PROTSAHAN FELLOWSHIP - 2012 கல்வி உததவித்தொகை வழங்கி வருகிறது.


கல்வித்தகுதி: Stream SA: 10ம் வகுப்பு பொது தேர்வில் அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடப்பிரிவில் +1 படித்து கொண்டிருக்க வேண்டும்.



Stream SX: அறிவியல் பாடப்பிரிவில் தற்போது +2 படித்துக் கொண்டிருக்க வேண்டும். 80 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்று அறிவியல் பாடத்தில் பி.எஸ்சி படிப்பை தொடர விரும்பும் மாணவராக இருக்க வேண்டும்.



Stream SB: +2 அறிவியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்சி படிப்பை தொடரும் மாணவராக இருக்க வேண்டும்.



தகுதியான மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் உதவித்தொகைப் பெற தேர்வு செய்யப்படுவர். மதிப்பெண் விகிதத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு 10 சதவீத சலுகை தரப்படும்.

2012-13ம் கல்வியாண்டில் +1, +2, பி.எஸ்சி., படிக்கும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக மாதம் ரூ.4000 முதல் ரூ.7000 வரை வழங்கப்படும்.

3 வருடம், வருடத்திற்கு 4 மாதங்கள் மட்டும் வழங்கப்படும். மேலும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பா மேற்கொள்ளப்படும் பயணங்கள், இதர செலவுகள் மத்திய அரசால் வழங்கப்படும்.

www.kbpy.org.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 07 கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 12 கடைசி நாளாகும்.

Kishore Vaigyanik. Protsahan Yojana (KVPY), Indian Institute of Science. Bangalore - 560012.என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.