Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

செலவிடப்படாத ரூ.2.50 கோடி கல்வி நிதி.......

மதுரை மாநகராட்சியில், பல பள்ளிகளில் கழிப்பறை வசதி, புதிய கட்டட வசதிகள் தேவையாக இருந்தும், 2 ஆண்டுகளாக ரூ.2.50 கோடி கல்வி நிதி செலவிடப்படாமல் பயனின்றி கிடக்கிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் 66 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், மாணவர்களுக்கு எண்ணிக்கை ஏற்ப கட்டட வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மாணவர்கள் அறிவை வளர்க்கும் நூலகங்கள் இல்லாமல் உள்ளன. ஆனால், இதுபோன்ற வசதிகளை மேற்கொள்வதற்காக மாநகராட்சி கல்வி நிதி ரூ.2.50 கோடி, 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கிடப்பில் உள்ளன. இந்நிதியை கேட்டுபெற ஆளில்லை.

மாநகராட்சி கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சியில் பல்வேறு திட்ட நிதி, பொது நிதி மூலம் பல வேலைகள் நடக்கின்றன. சிறப்பு திட்டம் தீட்டி, நிதியை உடனடியாக பயன்படுத்துகின்றனர். பெரிய தொகையில் "சிவில் வொர்க்' எடுத்து செய்தால் "கமிஷன்' அதிகம் பார்க்கலாம். கல்வி நிதியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஒரு பள்ளிக்கு சிறிய அளவில் மட்டுமே நிதி ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதனால், பெரிய தொகைக்கு ஒப்பந்தம் எடுக்க முடியாது. சிறிய தொகையில் வேலையை எடுத்து செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை. இதனால்தான், ரூ.2.50 கோடி கல்வி நிதி இரு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. பெரிய வேலையை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு, இந்நிதியில் இருந்து ஒரு வேலையை ஒதுக்கி, பல பள்ளிகளுக்கு அடிப்படை வசதி கிடைக்க செய்யவேண்டும், என்றார்.

62 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாத கிராமம் .....!


கடலாடி அருகே குண்டும், குழியுமாகி ரோடு குறுகிவிட்டதால், வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன.
கூடுதல் வாடகை கொடுத்தும் வரமறுப்பதால், ஏனாதி ஊராட்சி மக்கள் , வயல் வரப்புகளில் நடந்து செல்லும் அவலம், 62 ஆண்டுகளாக தொடர்கிறது.
ஏனாதி ஊராட்சி பொந்தம்புளி பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு 2 கி.மீ., தொலைவுள்ள முதுகுளத்தூருக்கு சித்திரங்குடி வழியாக ரோடு வசதி சரியில்லை.

குண்டும், குழியுமாக உள்ள ரோட்டில் செல்ல கூடுதல் வாடகை கொடுத்தாலும், வாகனங்கள் வருவதில்லை.
இதனால் கோடையில் வயல் வழியாக நடந்து செல்கின்றனர். மழை காலங்களில் வரப்பு மீது நடந்து செல்ல, முதியோர், கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். வாகனங்களில் செல்ல, சித்திரங்குடி ரோடு வழியாக 10 கி.மீ., சுற்றி வரவேண்டும்.

சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளாகியும், "நடராஜா சர்வீஸ்' தான். பொந்தம்புளி-சித்திரங்குடிக்கு, தார் ரோடு அமைத்து, பஸ் விட வேண்டும் என வலியுறுத்தியும் பலனில்லை.
பொந்தம்புளி ஞானதிரவியம் கூறுகையில், ""தார் ரோடு கிடையாது. மெட்டல் ரோடும் பழுதடைந்து கரடு முரடாக உள்ளது. பஸ்சில் செல்ல வயல் வழியாக முதுகுளத்தூர் விலக்கு ரோட்டிற்கு, 5 கி.மீ., நடந்து செல்ல வேண்டிருக்கிறது,'' என்றார்.

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வினியோகம்


பாளை.,யில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அஞ்சல்வழி கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுவதாக பயிற்சி நிலைய முதல்வர்(பொறுப்பு) பரமசிவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது;பாளை., என்.ஜி.ஓ.,காலனியில் உள்ள மேடைதளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 14வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 11வது வகுப்பு தேர்ச்சி அல்லது புதிய 10ம் வகுப்பு தேர்ச்சி என விண்ணப்ப படிவத்தில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.


அஞ்சல்வழி கூட்டுறவு பட்டய பயிற்சி அனைவருக்கும் வழங்குவதில் தடை இல்லை என்பதால், ஓராண்டு தொடர் பணி இருக்க வேண்டும் என நிபந்தனையின்றி கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இந்த பயிற்சியினை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர் பணிநியமனம் செய்யப்பட்ட முறைகள் குறித்து அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ அல்லது கருணை அடிப்படையிலோ அல்லது அரசு, பதிவாளர் உத்தரவுப்படியோ அல்லது முறையற்ற நியமனம் என குறிப்பிடுதல் வேண்டும்.இப்பயிற்சி ஞாயிற்றுகிழமைகளில் மட்டுமே நடைபெறும். எனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு பண்டகசாலைகள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்ற அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிவோரும் இந்த பயிற்சியில் சேரலாம்.

பயிற்சியில் சேர விரும்புவோர் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 21ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் முதல்வர், மேடை தளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையம், உதயா நகர், என்.ஜி.ஓ.,நியூ காலனி, பெருமாள்புரம், திருநெல்வேலி-7 என்ற முகவரியிலோ அல்லது 0462-2552695 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு பயிற்சி நிலைய முதல்வர்(பொறுப்பு) பரமசிவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் குடியினம் தமிழ் குடியினம் - கவிக்கோ .அப்துல் ரகுமான்


தமிழினம் ஆதி குடியினம் என்று ஈரோட்டில் நடந்த கருத்தரங்கில் கவிஞர் அப்துல்ரகுமான் கூறினார்.
ஈரோட்டில் சிக்கய்யநாயக்கர் கல்லூரி, சென்னை காவ்யா அறக்கட்டளை சார்பில் திரா விட இயக்க நூற்றாண்டு சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் சீனிவாசன் வரவேற்றார்.

 கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சர்வலிங்கம் தலைமை வகித்தார். காவ்யா அறக்கட்டளை சண்முகசுந்தரம் உள்பட பலர் பேசினர். இதில் ‘திராவிட இயக்க கவிஞர்களும், கவிதைகளும்‘ என்ற நூலை கவிஞர் அப்துல்ரகுமான் வெளியிட்டு பேசியபோது,


முதன்முதலாக உருவான நாகரீகம் என சுமேரிய நாகரீகத்தை குறிப்பிடுவர். இந்த சுமேரிய நாகரீகம் மெசபடோமியாவில் தான் உருவானது. தமிழினம் என்பது உலகின் ஆதி குடியினம். இந்த தமிழ் குடியினத்தை சேர்ந்தவர்களால் தான் சுமேரிய நாகரீகம் உருவானது என்றும், சுமேரிய நாகரீகத்தின் தொடர்ச்சியாகவே எகிப்திய, கிரேக்க நாகரீகம் உருவானது என்பதும் இலக்கியங்கள் கூறும் சான்று. தமிழில் இருந்து தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு என திராவிட மொழிகள் உருவானது. இவ்வளவு எழுச்சி மிக்க திராவிட மொழிகளில் முதன்மையான தமிழின் தொன்மையை நான் கூறி உலகிற்கு தெரிய வேண்டியதில்லை.

திராவிட மொழிகளின் குடும்பத்தில் தமிழ் தான் தலைமையானது என்று எல்லீஸ்துரை என்ற மாவட்ட கலெக்டர் ஒருவர் ஆய்வின் மூலம் கண்டறிந்து உலகிற்கு தெரியப்படுத்தினார். ஆனால் இக்கூற்றை ஏற்று கொள்ள மனமில்லாத சிலர் இதை எதிர்த்தனர். ஆனால் வரலாற்றை யாராலும் மறைக்கவோ, மாற்றவோ முடியாது என்பது தான் உண்மை என்பதை ஏனோ அவர்கள் மறந்து விட்டார்கள்’’என்று தெரிவித்தார்.