Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 6 ஜூன், 2013

போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் கம்ப்யூட்டரில் பதியும் முறை அமலுக்கு வந்தது

விழுப்புரம் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகளை, கம்ப்யூட்டரில் பதியும் முறையை எஸ்.பி., மனோகரன் நேற்று துவக்கி வைத்தார்.குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்க எளிதாக, வலை பின்னல் முறை திட்டத்தின் கீழ் வழக்குகளை கம்ப்யூட்டரில் பதியும் நடைமுறை நேற்று முதல் மாவட்டத்தில் துவங்கியது. இதற்கான நிகழ்ச்சி , நேற்று காலை விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

எஸ்.பி., மனோகரன் ரிப்பன் வெட்டி, கம்ப்யூட்டர்கள் மூலம் வழக்குப் பதியும் பணியை துவக்கி வைத்து கூறியதாவது:இந்தியா முழுவதும் பதியப்படும் வழக்குகளை உடனுக்குடன், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் கண்காணிக்க உதவிடும் வகையில், இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார்.

தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் நடக்கும் சம்பவங்கள், அதன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் எளிதில் அடையாளம் காணப்படுவர் இதனால் குற்றவாளிகள் எளிதில் பிடிபடுவார்கள். வழக்கு பதிவுகள் ஒளிவு, மறைவு இல்லாமல் நடப்பது பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.இத்திட்டம் முன்னோடி நிலை மற்றும் முதல்நிலை என்ற இரு கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப் படுகின்றன. முன்னோடி நிலை செயல்பாட்டில் திருவள்ளூர், அரியலூர், சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களும், மற்ற 35 போலீஸ் மாவட்டங்கள் முதல்நிலை செயல் பாட்டிலும் உள்ளன. இத்திட்டத்தின் மூலம் முதல் தகவலறிக்கை மற்றும் வழக்கு விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு, மாநில தகவல் சேகரிப்பு மையத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன.56 ஸ்டேஷன்கள்விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 56 போலீஸ் ஸ்டேஷன்களிலும் இச்சேவை நேற்று முதல் இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக பதிந்துள்ள வழக்குகள் அனைத்தும் கம்ப்யூட்டர்களில் மீண்டும் பதிந்து, பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்காக ஒரு போலீஸ் ஸ்டேஷனில், 3 போலீசார் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் பொது மக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உடனுக்குடன், கம்ப்யூட்டர் மூலமே, வழக்குப் பதிவிற்கான ஒப்புதல் நகல் வழங்கப்படும். இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. இவ்வாறு எஸ்.பி., மனோகரன் கூறினார்.டி.எஸ்.பி., சங்கர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், ஜோதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

என்னென்றும் மதிப்பு குறையா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பு

 டூல்கள், மெஷின்கள், பிற மெக்கானிக்கல் உபகரணங்களோடு தொடர் புடைய இன்ஜினியரிங் பிரிவு தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங். தொழிற்துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகளைக் கொண்டிருப்பதும் இது தான். இந்த இன்ஜினியரிங் பிரிவைச் சார்ந்தே பல இன்ஜினியரிங் பிரிவுகளும் இயங்குகின்றன.

இத்துறையினர் புதிதாக உபகரணங்களை வடிவமைப்பது மட்டுமின்றி அவற்றுக்கான பொருட்களையும் தயாரிக்கிறார்கள். மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், டிவிடிக்கள் என அனைத்துப் பொருட்களின் தயாரிப்பிலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவினருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

பொதுவாக மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவரின் பணி என்பது சவால்கள் மிகுந்ததாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருப்பதைக் காணலாம். ஐ.டி திறன், டிசைனிங் மற்றும் பகுத்தாராயும் திறன்களையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டியுள்ளது. தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் வணிக ரீதியாக சாத்தியமானவைகளாக இருப்பதையும் அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டியுள்ளது.

ஆட்டோமொபைல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டீல் ஆலைகள், எண்ணெய் சுரங்கங்கள், சுத்திகரிப்பு, ராணுவத்தின் டெக்னிக்கல் பிரிவுகள், விண்வெளி ஆய்வு என எதில் தான் இவர்களுக்கான தேவை இல்லை? அரசுத் துறை நிறுவனங்களிலும் இவர்கள் பெரிதும் தேவைப்படுகிறார்கள்.

ரயில்வே, தபால் துறை, பாதுகாப்பு, பொதுப் பணித் துறை, ஏரோநாடிகல், விவசாயம், கெமிக்கல் என பல துறைகளிலும் இவர்களுக்கான தேவை எப்போதும் காணப்படுகிறது. ரொபோடிக்ஸ்,சி.ஏ.டி., பயோமெக்கானிக்ஸ், ஆட்டோமேஷன், தெர்மல் இன்ஜினியரிங், சிஸ்டம்ஸ் அண்ட் டிசைன் இன்ஜினியரிங்,மெட்டீரியல்ஸ் சயின்ஸ் இன்ஜினியரிங் போன்றவற்றிலும் இவர்கள் பணி புரிகிறார்கள்.