Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 12 செப்டம்பர், 2012

"காயிதேமில்லத் பல்கலைக் கழகம்" காலத்தின் கட்டாயம் !


இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த அரசியல் நிர்ணய சபையில் எத்தனையோ தமிழ்நாட்டுத் தலைவர்கள் இருந்தும் ,தனியொருவராக நின்று இந்தியாவின் ஆட்சிமொழியாகும் தகுதி தொன்மையான , நான் பேசும் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு ,அந்த தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய பெருந்தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) ஆவார்கள் .

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தவுடன் ,தன கல்லூரி படிப்பை தூக்கி எறிந்துவிட்டு ,ஒத்துழையாமை இயக்க மாநாட்டை தான் பிறந்த நெல்லை சீமையில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தலைவர் காயிதே மில்லத் (ரஹ் )

பெரியார் ,அண்ணா ,காமராஜர் ,போன்ற தலைவர்களை எல்லா தலைமுறையினரும் அறியும் பொருட்டு அவர்கள் பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன .அதுபோல் ,நாட்டுப்பற்றாலும் ,மொழிப்பற்றாலும் உயர்ந்து நிற்கும் அந்த பெருமகனார் யார் என்று வாழும் தலைமுறையும் , எதிர்வரும்  தலைமுறையும் அறியும் பொருட்டு ,தமிழகத்தில் காயிதே மில்லத் பல்கலைக் கழகம் தமிழக அரசு உருவாக்க வேண்டும் .இந்தக் கோரிக்கையை வென்றெடுப்பது தமிழக மக்களின் அனைவரின் கடமை .

டிப்ளமோ படித்தவர்களுக்கு டைடல் பார்க்கில் வேலை : 20 ஆயிரம் சம்பளம்


சென்னையில் இயங்கி வரும் TIDEL PARKல் காலியாக உள்ள Technical Assistant, Store Keeper பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணி: Technical Assistant
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணி: Store Keeper
கல்வித்தகுதி: ஏதாவதொரு இன்ஜினியரிங் பிரிவில் டிகிரி அல்லது டிப்பளமோ அல்லது மெட்ரீயல் மேனேஜ்மென்டில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட இரு பணிகளுக்கும் மாதம் ரூ. 20.000

வயதுவரம்பு: 01.09.2012 தேதிப்படி 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை 20.09.2012-க்குள் அனுப்ப வேண்டும்.

தங்களைப்பற்றிய பயோ-டேட்டாவை அனுப்ப வேண்டிய முகவரி
The Managing Director, TIDEL Park Limited, 1st Floor, ''A'' Block, No: 4, Rajiv Gandhi salai, Taramani, Chennai - 600113

மேலும் முழுமையான தகவல்களை அறிய www.tidelpark.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இ-மெயில் முகவரி: tidel@vsnl.com

மனித உருவில் மிருகங்களின் அட்டகாசம் !

ஊத்துக்கோட்டை கூனிபாளையத்தை சேர்ந்தவர் எழிலரசன் (எ) நாகலிங்கம். இவருக்கும், கடம்பத்தூர் அருகே பிஞ்சிவாக்கத்தை சேர்ந்த தேன்மொழி என்பவருக்கும் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடந்தது. இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் மண்டபம் களை கட்டியிருந்தது.

திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் கூனிபாளையத்தை சேர்ந்த வினோத், பிரதாப், பாபுராஜ், பிரேம் ஆகியோர், ‘திருமணத்தில் பிரியாணி போடாதது ஏன்' என கேட்டு போதையில் தகராறு செய்தனர். அதோடு, மணமேடைக்கு சென்றனர். அங்கு, மணமக்களுக்காக கேக் வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து, மணமகளுக்கும் மணமகனுக்கும் ஊட்டினர். பின்னர், கேக்கை எடுத்து மணமக்களின் முகத்திலும் பூசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதை பார்த்து ஆத்திரம் அடைந்த மணமகளின் உறவினர், பிளஸ் 2 படிக்கும் கவுதம் தாசா (17) என்ற மாணவன், 4 பேரையும் தட்டி கேட்டான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த 4 பேரும், அங்கு கிடந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து கவுதம் தாசாவை தாக்கினர். அதில், கவுதம் தாசாவின் வயிறு கிழிந்து ரத்தம் கொட்டியது. அவர் அலறி துடிப்பதை பார்த்து உறவினர்கள் ஒன்று திரண்டனர். அதற்குள் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த கவுதம் தாசாவை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசில் நேற்றிரவு புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், எஸ்ஐ சக்கரை வழக்கு பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பால் பொருள் பதப்படுத்த ஒரு மாத இலவச பயிற்சி



பால் பொருட்கள் பதப்படுத்துதல், மீன் பொருட்கள் தயாரித்தல் குறித்த, இலவசப் பயிற்சியில் சேர விரும்புவோர், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னையில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில், அக்., 1 முதல், அக்., 31ம் தேதி வரை, ஒரு மாதத்திற்கு, பால் பதப்படுத்துதல் தொடர்பாக இலவசப் பயிற்சி அளிக்க உள்ளது.பால் உற்பத்தியாளர்கள், பால் பதப்படுத்தும் தொழில் ஆர்வமுள்ளோர், வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 25ம் தேதி, விண்ணப்பித்தோரில், 30 பேர் தேர்வு செய்யப்படுவர்.

 விவரம் தேவைப்படுவோர், முதல்வர், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, அலமாதி அஞ்சல், செங்குன்றம், சென்னை - 52 என்ற முகவரியிலும், 2768 0214, 2768 0217 என்ற தொலைபேசியிலும், 94448 10657 என்ற அலைபேசியிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.