Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 3 ஜூலை, 2012

நேர்மை ஜெயாவிற்கு தமிழில் பிடிக்காத வார்த்தையோ ?


அங்கன்வாடி, சத்துணவு காலிப் பணியிடங்களை எந்தவித பரிந்துரைக்கும், கையூட்டுக்கும் இடமின்றி நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை எடுத்த, விருதுநகர் கலெக்டர் பாலாஜி என்பவரை மாறுதல் செய்து வேறு பணியிடம் எதுவும் கொடுக்காமல், காத்திருப்போர் பட்டியலில் தமிழக  அரசு வைத்திருக்கிறது.

           பொதுமக்களுக்கு நன்மைகள் பல சட்டப்படி கிடைக்கசெய்தார் பாலாஜி .ஆக்கிரமிப்புகள் அகற்றம் ,அரசு அதிகாரிகள் நேர்மையுடன் செயல் பட உத்தரவு ,அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி நேர்மையாக செயலாற்றி வந்த கலெக்டர் என்று மக்கள் பாராட்டும் ஆட்சியர் திரு .பாலாஜி .

        அங்கன்வாடி, சத்துணவு காலிப் பணியிடங்களை எந்தவித பரிந்துரைக்கும், கையூட்டுக்கும் இடமின்றி நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டதால் காத்திருப்போர் பட்டியலில் ஜெயா அரசால் வைக்கப்பட்டுள்ளார் ."நேர்மை" என்ற வார்த்தை தமிழில் ஜெயா விற்கு பிடிக்காத வார்த்தையோ என்று விருதுநகர் மாவட்ட மக்கள் பேசிக்கொள்கின்றனர் .