Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 12 செப்டம்பர், 2013

35 சதவீதம் இளைஞர்கள் புகையிலைக்கு அடிமை

புகையிலை பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பான, சர்வதேச கருத்தரங்கம், டில்லியில் நேற்று நடைபெற்றது. உலக சுகாதார மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் பேசியதாவது: நம் நாட்டில், 27.6 கோடி பேர், புகையிலை பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். நம் இளைஞர்களில், 35 சதவீதம் பேர், புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட, குட்கா, ஜர்தா போன்ற புகையிலை பழக்கம் தான், அதிக அளவில் உள்ளது.
சிகரெட் பிடிக்கும் பழக்கம், 9 சதவீதம் பேரிடம் உள்ளது என்றால், குட்கா, ஜர்தா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோரின் சதவீதம், 35 வரை உள்ளது. மத்திய அரசு, குட்கா, ஜர்தா போன்றவற்றை, தடை செய்துள்ளது. இவ்வாறு, அமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசினார்.

மத்திய சுகாதாரத் துறை செயலர், டெய்சி ராஜு பேசும்போது, ""புகையிலையை, அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. புகையிலையை அதிக அளவில், உற்பத்தி செய்யும் நாடுகள் வரிசையிலும், மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது,'' என்றார்.

பொது இடத்தில் புகை பிடிப்பதற்கும், புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரங்களுக்கும், உள்ள தடையால், புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிகை குறைந்து உள்ளது. புகையிலை இல்லா சமுதாயம்அமைப்பதில், நாம் தீவிரமாக உள்ளோம். புகையிலை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பார்லிமென்ட்டில்ஒருங்கிணைந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிவில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு

துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து இடையூறின்றி நடைபெறுவதற்கு அப்பகுதிகளில் தூர்வாரப்படுவதும், ஆழப்படுத்தப்படுவதும் கட்டாயத் தேவை. இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களுக்கான இத்தகைய டிரெட்ஜிங் பணிகளை டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிறுவனம் இயற்கையாகவே மிக முக்கிய துறைமுகமான விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் சர்வேயர் (டிரெய்னி) பிரிவில் 13 சிவில் இன்ஜினியரிங் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்
டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில் இன்ஜினியரிங் அல்லது சர்வே இன்ஜினியரிங்கில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற 2 கட்ட நிலைகளிலான தேர்ச்சி முறையை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

இதர விபரங்கள்
டிரெட்ஜிங் கார்ப்பரேஷனின் சிவில் இன்ஜினியரிங் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/- க்கான டி.டி.,யை "DREDGING CORPORATION OF INDIA LTD" என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு 16.09.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும்.

முகவரி
Dy. Manager(HR)(CM/IR), DCI Limited, Dredge House, Port Area, Visakhapatnam - 530 001

இணையதள முகவரி: http://dredge-india.nic.in