Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

காஜி சான்றிதழ்கள் சட்டப்படியானவை என அரசு அங்கீகரிக்க வேண்டும் ,முஸ்லிம்கள் திருமணங்களை சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்யாதீர் :இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு அரசுக்கும் சமுதாயத்திற்கும் வேண்டுகோள்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (அக்.5) காலை 10.30 மணிக்கு சென்னை வேப்பேரி, ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள பெரியார் மைய அரங்கில் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் நடைபெற்ற இக் கூட்டத் தில் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெ மில்லத் சர்வதேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. மற்றும் மாநில நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர் கள், மாவட்டங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 454 பேர் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சமுதாயப் பிரபலங் களில் காலம் சென்றோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மஃபிரத்துக்கு துஆ செய்யப் பட்டது.

அதனைத் தொடர்ந்து வருகை தந்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை எடுத் துக் கூறினர்.


இக்கூட்டத்தில் கீழ்க் காணும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன:

1. இஸ்லாமிய திருமணச் சட்ட விளக்கக் கருத்தரங்குகள் கூட்டங்கள் வெற்றிக்கு நன்றி

இஸ்லாமிய திருமணச் சட்ட விளக்கக் கருத்தரங்கு கள் தமிழகத்தின் பெரும் பாலான நகரங்களில் சிறப்பாக நடத்தி, முஸ்லிம் சமுதாய மக்கள் மத்தியிலும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் இடத்தி லும் இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் பற்றிய தெளிவை யும் விழிப்புணர்வையும் ஏற்ப டுத்திய மாவட்ட முஸ்லிம் லீகுகளுக்கு இப்பொதுக் குழு பாராட்டும் வாழ்த்தும் தெரி விக்கிறது.

இந்தக் கருத்தரங்குகள் வெற்றிபெற அனைத்து வகை களிலும் ஒத்துழைப்பும் ஆதர வும் அளித்துள்ள மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் சங்கைக்குரிய உலமா களுக் கும் சமுதாயச் சான்றோர்க ளுக்கும் புரவலர்களுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கிறது. 2. """"முன்மாதிரி"" மஹல்லா விருதுகள் வழங்கும்

மஹல்லா ஜமாஅத் மாநாடு
தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு, 2013 டிசம்பர் 28 சனிக்கிழமை திருச்சியில் நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.

தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத்துகளை கிராமப்புற மஹல்லா ஜமாஅத், நகர்ப்புற மஹல்லா ஜமாஅத், மாநகர் மஹல்லா ஜமாஅத் என்று மூவகைப்படுத்தி, ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத் நிர்வாக மும், மஸ்ஜிது பராமரிப்பு, மதரஸா நடத்துதல், ஷரீஅத் பஞ்சாயத்து நடத்துதல், மஹல்லா ஜமாஅத் பைத்துல் மால் நடத்துதல், திருமணப் பதிவு செய்தல், பிறப்பு இறப்பு பதிவு செய்தல், அரசு களின் நலத் திட்டங்களை ஜமாஅத்தினரின் பயன்பாட் டுக்கு உதவி புரிதல் போன் றவைகளில் முன்னுதாரணமாக திகழும் மஹல்லா ஜமாஅத் துகளை மேற்கண்ட மூன்று வகையில் இருந்தும் வகைக்கு ஐந்து ஜமாஅத்துகள் தெரிவு செய்து, அவ்வாறு தேர்வு செய்யப்படும் 15 மஹல்லா ஜமாஅத்களுக்கு முன்மாதிரி மஹல்லா ஜமாஅத் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது எனவும் இப்பொதுக்குழு முடிவு செய்கி றது.

3. வார்டு கன்வீனர்கள் நியமனம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட, நகர, வார்டு மற்றும் பிரைமரி நிர்வாகிகளில் சிலர் மாற்றப்பட்டும், சிலர் வெளிநாடு சென்றும், அவர் களின் முகவரிகள் மாற்றப்பட் டும் உள்ள நிலையில், மாவட்ட, நகர, வார்டு மற்றும் பிரைமரி நிர்வாகிகளின் புதிய பட்டி யலை தலைமை நிலையத் துக்கு அக்டோபர் 15ம் தேதிக் குள் அனுப்பி வைக்க வேண் டப்படுகிறது. ஒவ்வொருவரின் முழு முகவரியுடன் தொடர் புக்குரிய தொலைபேசி எண்ணும் அவசியம் குறிப்பி டப்படுதல் வேண்டுவதாகும்.

இதுவரை இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் அமைப்புகள் இல்லாமல் இருக்கிற மாநகர, நகர, பேரூர் வார்டுகளில், வார்டு கன்வீனர் என்று அந்த வார்டு முஸ்லிம் லீகர் ஒரு வரைத் தெரிவு செய்து, அவ் வாறு கன்வீனர்கள் நியமிக் கப்பட்டுள்ள வார்டு விவரங் களும், அவைகளின் கன்வீனர் களின் முகவரி மற்றும் தொலைபேசி விவரங்களும், அவர்களின் புகைப்படங் களுடன் அக்டோபர் இறுதிக் குள் தலைமை நிலையத்துக்கு மாவட்ட தலைவர்கள்/செயலா ளர்கள் அனுப்பி வைக்கப் பணிக்கப்படுகிறார்கள்.

அக்டோபர் இறுதிக்குள் இந்த பட்டியல் அனுப்பத் தவறும் மாவட்டங்களில் உள்ள மாநகர, நகர, பேரூர் வார்டுக ளுக்கு, அந்தந்த வார்டுகளில் உள்ள முஸ்லிம் லீக் உறுப்பி னர்களில் ஒருவரை வார்டு கன்வீனராக நியமித்து அறி விக்கும் அதிகாரத்தை தலைமை நிலையம் செயல் படுத்தும் என்றும் முடிவு செய் யப்படுகிறது.

4. தேர்தல் நிதி
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தமிழகம் முழுவதிலும் உள்ள சமுதாய மக்களிடமி ருந்து தேர்தல் நிதி திரட்டுவது என்றும், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. ஆயிரம், ரூ. 500, ரூ. 100 என்று நன்கொடை ரசீது அச்சிட்டு மாவட்ட முஸ்லிம் லீகுகள் மூலம் அக்டோபர் 15ம் தேதியி லிருந்து துவங்குவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

5. காஜிகளுக்கு அங்கீகாரம்
தலைமை காஜி, மாவட்ட காஜிகள், மஹல்லா ஜமாஅத் துகளில் இயங்கும் மஸ்ஜிதுக ளின் இமாம்களான மஹல்லா காஜிகள், முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திரு மணம் மற்றும் மணமுறிவு நிகழ்வுகளின் போது முன் னின்று, அக்காரியங்களை நிறைவேற்றி வைக்கும் பழக்க மும் பண்பாடும் பாரம்பரியமாக முஸ்லிம் சமுதாயத்தில் காலங் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.



அதனடிப்படையில்தான் திருமணம் அல்லது மண முறிவு நடந்ததற்கான அத் தாட்சி சான்றிதழ்களை காஜி கள் வழங்கிவரும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது. இத்தகைய காஜிகளின் சான்றிதழ்கள் நீதிமன்றங்களி லும், அரசாங்க அலுவலங்களி லும் சொத்து மற்றும் பாகப் பிரிவினைகள் நடக்கும் மன் றங்களிலும், ஏற்றுக்கொள்ளப் படுவதும் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ள வழக்க மேயாகும். இந்தப் பாரம்பரிய முறை யில் திருமணம், மணமுறிவு மற்றும் வாரிசுதாரர்கள் பற்றிய காஜிகளின் சான்றளிப்புகளை தமிழக அரசும் மத்திய அரசும் அங்கீகரித்து ஏற்று, காஜிக ளின் சான்றிதழ்கள் சட்டப்படியா னவை என்று அறிவிக் குமாறு மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக்கொள் கிறது.

6. மஹல்லா ஜமா அத் திருமணப்பதிவு
தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் திருமணப்பதிவு தப்தர் (பதிவேடு)களில், தமிழ் நாடு அரசு 2009இல் நிறை வேற்றியுள்ள திருமண கட்டா யப்பதிவு சட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரின் திருமண பதிவுக்கென்று தனியே தரப்பட்டுள்ள படிவம் 1(அ) இல் கண்டுள்ள விவரங்களின்படி முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்யுமாறும், அதற்கு ரிய நான்கு நகல்களை வைக்குமாறும், பதிவு செய்யப் பட்ட படிவ நகல் ஒன்றை மணமகன் வீட்டாருக்கும், மற்றொன்றை மணமகள் வீட்டாருக்கும், மற்றொன்றை மஹல்லா ஜமாஅத்திற்கும், மற்றொன்றை மாவட்ட காஜியின் திருமணப் பதிவு கோப்புக்கும் தரும் வகையி லும் தப்தர்களை அமைத்துக் கொள்ளுமாறு தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை இப்பொதுக் குழுக் கேட்டுக் கொள்கிறது.

7. முஸ்லிம் திருமணங்களை சிறப்பு திருமணப் பதிவு சட்டப்படி பதிவு செய்யாதீர்

மஹல்லா ஜமாஅத் தப்தர் களில் பதிவு செய்யப்படும் திருமணங்கள், அரசு பதிவா ளர் அல்லது சார் பதிவாளர் இடம் பதிவு செய்யும்போது, படிவம் 1(அ) இல் உள்ளபடியும், மஹல்லா ஜமாஅத் தப்தரில் உள்ளபடியும் பதிவு செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம் திருமணங்களை விஷேச திருமணப்பதிவு சட்டப்படி (ளுயீநஉயைட ஆயசசயைபந ஹஉவ) பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் தத்தமது ஜமாஅத் தார்களுக்கு விளக்கி கூறு மாறும் இப்பொதுக் குழு வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது. 8. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துக

இந்திய சிறுபான்மையருள் பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம் சமுதாயம், கல்வி, பொருளாதார, சமூக வாழ்வில் மிகவும் பின் தங்கியும், எஸ்ஸி, எஸ்.டி. வகுப்பினரின் நிலையி லும் தாழ்ந்து உள்ள நிலையி லும் உள்ளதால், முஸ்லிம் களின் மேம்பாட்டுக்கென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் களுக்கென்று தனியே 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக் கப் பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு சட்டமாக்கி, முஸ்லிம் சமுதாயத்திற்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட் டுக்கொள்கிறது.

9. பொதுசிவில் சட்டம் பற்றிய பிரிவை நீக்குக
இந்திய அரசியல் அமைப் புச் சட்டத்தில் உள்ள 44வது பிரிவும், நாடு முழுவதிலும் எல்லா மக்களுக்கும் ஏற்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அதில் இடம் பெற்றி ருக்கும் வாசகமும் அதே அரசியல் அமைப்புச் சட்டத் தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும், மத சுதந்திரத்திற்கும், சமயச் சார்பின்மைக் கொள்கைக்கும் மாறுபட்டும் முன்னுக்குப் பின் முரணா கவும் இருப்பதால், அந்த 44வது பிரிவை அரசியல் அமைப்புச்சட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக் குழுக் கூட்டம் வற்புறுத்து கிறது.

10. உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகள் நியமனம் செய்யக் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத் தில் நிரந்தர நீதிபதிகள் 40 பேரும் கூடுதல் நீதிபதிகள் இருவரும் உள்ளனர். அறுபது நீதிபதிகள் நிரந்தரமாக இருப்ப தற்கு நியதி இருக் கிறது. இப்போதுள்ள 42 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த வராக இருக்கிறார். அவரும் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது. 42 நீதிபதிகள் இருந்த போது 4 முஸ்லிம் நீதிபதி கள் இருந்து வந்துள்ள மரபு இருக்கிறது. அந்த பாராட்டுக் குரிய மரபு இப்பொழுது பின்பற்றப் படாதிருப்பது, தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்குரிய பிரதிநிதித் துவமே இல்லை என்னும் வருந்ததக்க நிலையை உருவாக்கியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் குறைந்தபட்சம் நான்கு முஸ்லிம் நீதிபதிகள் இடம்பெறும் வகையிலும் சமூக நீதியை நிலை நிறுத்தும் வகையிலும் நீதிபதிகளின் நியமனங்களைச் செய்யுமாறு மத்திய மாநில அரசுகள் பரிந் துரைக்க இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


 11. இலங்கை வடக்கு மாகாண புதிய அரசுக்கு வரவேற்பு
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடந்த மாகாண கவுன்சில் தேர்தலில், தமிழ் தேசிய முன்னணி 80 சதவீதம் வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியைக் குவித்து, நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர் களை முதலமைச் சராகத் தேர்வு செய்திருப்பதை இக்கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியோடு வரn வற்று வாழ்த்துகிறது.

இலங்கையின் இறை யாண்மையையும் ஒற்றுமை யையும் நிலைநிறுத்தும் வகை யில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அதிகாரப் பகிர்வுகளையும் ஜனநாயக முறையில் பெறுவதற்குரிய அணுகுமுறையை தமிழ்தேசிய முன்னணி அரசு பின்பற்றும் என முதலமைச்சர் திரு விக் னேஸ்வரன் அவர்கள் தெரி வித்திருப்பது மிகுந்த பாராட் டுக்குரியதாகும்.

வடக்கு மாகாண தமிழ் தேசிய முன்னணி அரசின் இந்த பண்பட்ட, பாராட்டுக் குரிய, பக்குவப்பட்ட அரசியல் ரீதியான அணுகு முறைக்கு இலங்கை அரசும், இந்திய அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங் களும் தேவைப்பட்ட ஒத்து ழைப்பு, ஆதரவு, உதவிகள் அனைத் தையும் செய்திட முன்வர வேண்டும்மென இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

12 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி
2014 மே மாதம் நடைபெற விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்று, ஜனநாயகப் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்வதென்றும், தேசிய அளவில் ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமதர்ம, சமூகநீதிக் கொள்கைகளைப் பேணிப் பாதுகாப்பதுடன், மாநில அரசுகளின் உரிமைக ளுக்கு உரிய மதிப்பளித்து, மாநிலந்தோ றும் தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதா ரத்துறைகளில் தன்னிறைவு பெறும் வகையில் எல்லா வகையான ஒத்துழைப்பும் நல்கிவருவதோடு, நாட்டு மக்களின் சமூகப் பன்முகத் தன்மையை மதித்துப்போற்றி, மதம், மொழி, இனம், மற்றும் கலாச்சார வழிப்பட்ட சிறு பான்மை மக்களின் உரிமை களுக்கு பாதுகாப்பளித்து, அவர்களின் நன் மதிப்பைப் பெறுகின்ற நல்லாட்சி அமையப் பாடுபடுவதெனவும் இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் தி.மு.க.வுக்கும் இடை யில் நீண்ட காலமாக தொடர்ந்து நீடித்து வரும் கொள்கை ரீதியான உறவும், கூட்டணியும் தொடரும் என இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வேண்டும்,அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும் :முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு கோரிக்கை

சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அக்டோபர் 5ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணிவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு- 

1. மாணவர் கல்விக் கடன் துரிதமாக கிடைக்கச் செய்தல்
உயர் கல்வி பயிலும் மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண் டும் என்பது அரசின் நிலைப் பாடு. இந்தக் கல்விக் கடன்கள் எந்தச் சூழ்நிலையிலும் நிராகரிக்கப் படாமல் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும் என மத் திய அரசு பல முறை அறிவுறுத்தி யுள்ளது. ஆயி னும், எண்ணற்ற ஊர்களில் ஏராளமான வங்கிகள் ஜாமீன் உள்ளிட்ட பல்வேறு கார ணங்களை கூறி விண்ணப்பங் களை நிராகரிக்கின்றன.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்று மாண வர்களின் சொந்த ஜாமீன் அடிப்படையில் வங்கிகள் கடன் உதவி வழங்க வேண் டும் என வலியுறுத்துவதோடு, இந்த கல்விக் கடன்களை ஆண்டின் இறுதியில் வழங்காமல் கல்வி யாண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.



2. கல்விக் கடன் வட்டியை ரத்து செய்ய வேண்டுதல்
பொருளாதாரத்தில் நலிவ டைந்த பிரிவினருக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இக் கடனை பெறுகின்ற மாண வர்கள் படித்துப் பட்டம் பெற்று, வேலைவாய்ப்புக்காக காத்தி ருந்து வேலைவாய்ப்புக் களை பெற்றபின், கடன்களை அடைக் கின்றனர். ஆனால், கல்விக் கான கடனுக்கு தொடக்கத்தி லிருந்தே வட்டி விதிக்கப்படுவ தால் உரிய வேலைவாய்ப்பு பெறாதவர்கள் பெரும் சிரமம் அனுபவிக்கின்றனர். எனவே, கல்வி நலனுக்காக மாணவர்களின் நலனுக்காக எத்தனையோ திட்டங்களை தீட்டக்கூடிய மத்திய அரசு, வங்கிகள் வழங்கக்கூடிய கல்விக்கடனுக்கான வட்டியை ரத்து செய்து வங்கிகளின் இந்த வட்டியை ஏற்குமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. 3. தமிழகத்திற்கு சிறுபான்மை பல்கலை.

சிறுபான்மை சமூகத்தின் கல்வி மேம்பாட்டு அவசியம் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு பல பல்கலைக் கழகங் களை அமைத்து சிறுபான்மை யினரை கைதூக்கி விட முடி வெடுத்துள்ளது. அதன் தொடக்கமாக 6 பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட உள்ளன. அவ்வாறு அமைக்கப் படும் சிறுபான்மையினருக் கான 6 மத்திய பல்கலைக்கழ கங்களில் ஒன்றை தமிழ்நாட் டில் அமைக்குமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4. சிறுபான்மை மொழிக்கான அங்கீகாரம் உறுதி செய்தல்
தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழி வழியில் கல்வி கற்று வந்தனர். சமச்சீர் கல்வி தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டபோது சிறுபான்மை மொழிகளுக்கான அந்தஸ்து காப்பாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு அது ஏற்கப்பட்டது.


ஆனால், உர்தூ, மலை யாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் அரபி வழியில் கல்வி கற்கும் வாய்ப்பு படிப்படியாக குறைக்கப் பட்டு சிறுபான் மையின மொழிகள் நசுக்கப் பட்டு விடுமோ என்ற ஐயப்பாடு தமிழக சிறுபான்மை மொழி பேசுவோருக்கு ஏற்பட்டுள் ளது.

எனவே, சிறுபான்மை மொழி பேசுவோர் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி கற்க தகுந்த உத்தரவு பிறப் பித்து அதை உறுதிப்படுத் துமாறு தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தமிழ்நாடு மாநில உர்தூ அகாடமி வேண்டுதல் 

தமிழகத்தில் உர்தூ மொழி பேசுவோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின் றனர். உர்தூ மொழியின் நன்மைக்காக கடந்த காலங்களில் உர்தூ அகாடமி செயல்பட்டு வந்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாகியும் உர்தூ அகாடமி இதுவரை அமைக்கப்படவில்லை. நிதி நிலை அறிக்கையில் அறிவிக் கப்பட்டும் இது செயல்படுத் தப்படாதது உர்தூ மொழி பேசுவோரிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள் ளது.

இதுமட்டுமின்றி, ஆங்கி லேயர் ஆண்டு கொண்டிருந்த 1902-ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலை தாஹிர் சாஹிப் தெருவில் உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி துவக் கப்பட்டு கடந்த 111 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்தது. அப் பயிற்சிப் பள்ளிக்கான முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டு விரிவுரை யாளர் பணியிடங்கள் நிரப்பப் படாமலேயே இருந்து அதையே காரணம் காட்டி மாணவர்கள் சேர்க்கப்படாமல் இறுதியில் 6-8-2013-ம் தேதிய அறிவிப்பில் அந்த பயிற்சிப் பள்ளி மூடப்பட்டு விட்டது. இது உர்தூ மொழி பேசுவோருக்கு இழைக்கப் பட்ட மாபெரும் அநீதியாகும்.

எனவே, தமிழக அரசு உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை உடனடியாக திறப்ப தோடு, காலியான பணி இடங் களில் உர்தூ ஆசிரியர்களை நியமிக்கவும், மாநில உர்தூ அகாடமியை அமைக்கவும் வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது. 



6. மாவட்ட தலைநகரங்களில் சிறுபான்மை மாணவர் விடுதி
பள்ளிப் படிப்பை முடித்த சிறுபான்மையின மாணவர் கள் உயர் கல்வி பெறுவதற்கு கிராமப்புறங்களில் வாய்ப்புக் கள் இல்லாததால் நகரப்புறங் களையே நாட வேண்டி யுள்ளது. அவ்வாறு நகர்ப்புற கல்லூரி களில் படிக்கும் மாணவர்கள் அங்கு பெரும் தொகை கட்டணமாக வசூலிக் கப்படுவதால் விடுதிகளில் தங்கி படிக்க வாய்ப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.

மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட நகரங்களில் சிறு பான்மையின மாணவர்களுக் கென விடுதிகள் இல்லை. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு தடைபடுகிறது.

எனவே, மாவட்ட தலைநக ரங்களில் சிறுபான்மை மாண வர்களுக்கென விடுதிகளை அமைக்குமாறு தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள் கிறது.

7. முஸ்லிம் களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்றவுடன் மொழி மற்றும் மதச்சிறுபான்மையி னருக்கான தேசிய ஆணை யத்தை 2005 மார்ச் 15-ம் தேதியன்று அமைத்தது. அந்த ஆணையம் 2006 மே 26 அன்று பிரதமரிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்தது. சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் - அதில் முஸ்லிம் களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்த அந்த ஆணை யத்தின் அறிக்கை மத்திய அரசால் ஏற்கப்பட்டு உடனடி யாக அமுல்படுத்தப்பட வேண் டும் என இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

8. தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டை உயர்த்துக
தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம் களுக்கு தனி உள்ஒதுக்கீடு 2007 செப்டம்பர் 17-ல் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களை கைதூக்கி விட இந்த ஒதுக் கீட்டை உயர்த்தித் தர வேண் டும் என தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது.



நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தித்தரப் படும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அம்மையார் குறிப்பிட்டிருந் தார். அது நிறைவேற்றப்பட வில்லை. எனவே, முஸ்லிம்களுக் கான 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள் கிறது.

9. முழு மதுவிலக்கை அமல்படுத்துக  

அனைத்து தீமைகளுக் கும் காரணம் மது என்றால் அது மிகையல்ல. வருமா னத்தை அதிகரிக்க மதுக் கடைகள் அதிகரிப்பது நமது நாட்டுக்கு உகந்ததல்ல.

கண்ட இடங்களில் எல்லாம் பார் திறக்கப்படுவ தும், இரவு நேரங்களில் கூட அதனை திறக்கச் செய்திருப் பதும், யார் வேண்டுமானாலும் மது வாங்கவும், குடிக்கவும் அனுமதிப்பதும், இளைஞர்கள், குறிப்பாக மாணவர்களை சீரழியச் செய்து வருகிறது.

எனவே இதனை முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமுல் படுத்துமாறு இம் மாநாடு வலி யுறுத்துகிறது. 


10. அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை
நாட்டின் பல்வேறு மாநி லங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் எண்ணற்ற முஸ்லிம் இளை ஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி ஆண் டாண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடு விக்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக மத்திய அரசு மாநி லங்களுக்கு உரிய தாக்கீது களை பிறப்பித்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக சில தினங்களுக்கு முன்னால் மத்திய உள்துறை அமைச்சர் மாநில முதல்வர்களுக்கு அனுப்பிய தாக்கீதில் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் இல்லை என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்றுள்ளது. எனவே, இன்னமும் காலம் கடத்தாமல் நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விடுவிக்கப்படுவதோடு நீண்ட காலம் அவர்களுடைய சிறை வாழ்வுக் காக உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.





11.மத்திய அரசின் சிறுபான்மையோருக்கான பல்கலைக் கழகம்
சிறுபான்மையோர் கல்விநிலை மேம்படும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள  சிறுபான்மையோருக்காக தனி பல்கலைகழகத்தில் ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது .
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தந்த இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : மு.க.ஸ்டாலின்

அரசியல் நிர்ணய சபை நாடாளுமன்ற, சட்டமன்றங் களில் இடம்பெற்று முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சார தனித்தன்மை களை பாதுகாத்தல் உள்ளிட்ட வாழ்வுரிமையை பெற்றுத்தந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். முஸ்லிம் சமுதாயத்தை இன்று கண்ணியத்தோடு வழி நடத்துகிறார் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் என முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாட்டில் தி.மு.க. பொரு ளாளரும் முன்னாள் துணை முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் மனம் திறந்த பாராட்டு தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாடு சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அக்டோபர் 5ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணிவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில்

முஸ்லிம் மாணவர் பேரவை மாநில செயலாளர் ஏ. செய்யது பட்டாணி வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

 மு.க.ஸ்டாலின் தளபதி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாடு இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. காலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூடி 12 தீர்மானங்களை நிறைவேற்றி மாலையில் நடைபெறுகின்ற மாநில மாநாட்டிலும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இங்கு கருத்தரங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றிருக் கிறது. பல்வேறு தலைப்புகளில் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பங்கேற்று அதிலே மிகச்சிறப்பாக உரையாற்றி இருக்கிறீர்கள்.

பேராசிரியர் உரையாற்றும் போது பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய மாணவச் செல்வங்களின் மிகச்சிறப்பான உரையை குறிப்பிட்டு சொன் னார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டது. இக்கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சி ஒரு புறம் என்றாலும் அந்த அற்புதமான உரைகளை கேட்க தவறிவிட் டோமோ என்ற வருத்தம்தான்.

என்னை இந்த மாநாட்டிற்கு அழைத்தபோதும் அழைப் பிதழை தந்த சமயத்திலும் நான் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று கேட்டேன். 6.30 மணிக்கு வாருங்கள் 8.00 மணிக்கு அனுப்பி விடுகிறோம் என்றார்கள். அவர்கள் முற் கூட்டியே வரச்சொல்லியிருந் தால் கருத்தரங்கில் எழுச்சி யோடு உரையாற்றிய மாணவச் செல்வங்களின் உரையை கேட்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அந்த மாணவ நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன்.



இந்த மேடையில் ஒரு பொருத்தம் ஏற்பட்டிருக்கிறது . அது என்ன பொருத்தம் என்றால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொருளாளரான பி.கே. குஞ்ஞாலி குட்டியும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளரான நானும் கலந்து கொண்டிருப்பதுதான். திட்டமிட்டுத்தான் அழைத்திருக் கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

மாநாட்டு தீர்மானங்கள்
இங்கே 10 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்தீர்மானங்கள் இந்த மேடையில் முன் மொழியப் பட்டு உங்களால் ஏற்று கொள்ளப் பட்டிருக்கிறது. தீர்மானங்களை நிறைவேற்றித்தாருங்கள் என்று உணர்வு பூர்வமாக கோரி யிருக்கிறீர்கள்.

அத்தீர்மானங்கள் இங்கே முன்மொழியப்பட்டபோது பேராசிரியர் என்னிடத்திலே சொன்னார்; ஏதோ நீங்கள் ஆட்சியில் இருப்பதை போல இந்த தீர்மானங்களை நாங்கள் எடுத்து சொல்கிறோம் என்று இங்கே பேசுகிறபோது கூட அதை எடுத்து சொன்னார்கள். அதை மாற்றிக் கூட சொன்னார்கள் நீங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த மேடையி லேயே அதை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற உறுதி மொழி தந்திருப்பீர்கள் என்றார்கள்.

எனக்கு என்ன உணர்வு எற்படுகிறது என்று கேட்டால் கலைஞர் முதல்வராக, தி.மு.க. ஆட்சியிலே இருந்திருந்தால் இந்த தீர்மானங்களை முன் மொழிய வேண்டிய அவசியமே இருந்திருக்காது, அந்த வாய்ப்பை தமிழக மக்கள் தவற விட்டு விட்டார்கள். நான் உங்களை குறை சொல்ல வில்லை தயவு செய்து யாரும் தவறராக கருதி விடக்கூடாது. தமிழக மக்கள் தவற விட்டு விட்டார்கள். அதனால் இப்பொழுது வேதனை படு கிறார்கள்- வருத்தப்படு கிறார்கள்- துக்கப்படுகிறார் கள்-வெளியிலே சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள். உரிமையோடு வரக்கூடியவர்கள்

முஸ்லிம் மாணவர் பேரவையின் இந்த மாநாடு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப் பாளர்களாக கேரள மாநில தொழில் அமைச்சர் வந்திருக் கிறார். நான் வந்திருக்கிறேன். தொடர்ந்து வந்து கொண்டி ருக்க கூடியவன்தான். தலைவர் கலைஞர் அவர்களாக இருந் தாலும் சரி திராவிட முன் னேற்றக்கழகத்தில் எங்களை போன்றவர்களாக இருந்தாலும் சரி நீங்கள் அழைக்கிற போதெல்லாம் வரக்கூடியவர் கள். அதையும் தாண்டி உரிமையோடு சொல்ல வேண்டு மானால் நீங்கள் அழைத்தாலும் அழைக்க வில்லையென்றாலும் உரிமையோடு வரக்கூடியவர் கள் நாங்கள். அந்த வகையிலேதான் இந்த நிகழ்ச் சிக்கு நாங்கள் பெருமையோடு வந்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற நல்வாய்ப்பை பெற்றிருக் கின்றேன். அதற்காக முஸ்லிம் மாணவ பேரவை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளுக்கு, அதையும் தாண்டி பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர் களுக்கு என்னுடைய நெஞ் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உரிமைகளை பெற்றுத்தந்த முஸ்லிம் லீக்
இந்திய திருநாடு ஆங்கி லேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருந்த காலகட்டத் தில் 1906ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப் பட்டு முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன்மைகளை பாதுகாத்து, கல்வி வேலை வாய்ப்புகளை உருவாக்கி விகிதாச்சார பிரதிநி தித்துவத்தை பெற்றுத் தந்தது. 1948ம் ஆண்டு மார்ச் மாதம் 10 தேதி சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கக் கூடிய அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் இந்த இயக்கத்தை தலைவரக பொறுப்பேற்று அயராது உழைத்திருக்கக்கூடிய அந்த உழைப்பை பாடுபட்டிருக்கக் கூடிய அந்த பண்பை சமு தாயத்தின் வளர்ச்சிக்காக குரல்கொடுத்திருக்க கொண்டி ருக்க கூடிய அந்த உணர்வு களை எல்லாம் நான் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கி றேன்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இடம்பெற்று அன்றைக்கே குரல் கொடுத்திருக்கிறார். முஸ்லிம் களின் வாழ்வாதார உரிமைக் காக, இட ஒதுக்கீட்டிற்காக, தனித் தன்மைகளை பாது காக்க வேண்டும் என்பதற்காக அன்றைக்கே குரல் கொடுத் திருக்கக்கூடிய அந்த வரலாற்றை நாம் இன்றைக்கு எண்ணிப் பார்க்கிறோம். இன்னமும் சிறப்பாக சொல்ல வேண்டும். என்றால் இந்தியா வின் ஆட்சி மொழியாக எந்த மொழி இடம் பெற வேண்டும் என்ற பிரச்சினை வந்த நேரத்தில், இலக்கண வளமும் இலக்கிய நயமும் ஒருங்கே அமைய பெற்றிருக்கக்கூடிய என்னு டைய தாய் மொழி தமிழ்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக அமைய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.

அப்படிப்பட்ட கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி அவருடைய மறைவுக்குப் பின்னால் மறைந்த பெருமதிப் பிற்குரிய அப்துஸ் ஸமது அவர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்தி, அவர் மறைவுக்கு பின்னால் இந்த இயக்கத்தை பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கள் சிறப்போடும் கண் ணியத்தோடும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பல்வேறு தலைவர்கள் இடம் பெற்று இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை பெற்று தந்திருக் கிறார்கள். அறிஞர் அண்ணா காலம் தொட்டு கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்து தோழமை உணர்வோடு, அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் அவர்கள் அதே நிலையை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

அந்த உணர்விலேதான் தலைவர் கலைஞர் அவர்கள் சிறுபான்மை முஸ்லிம் சமுதாய பெருமக்களுக்காக எத்தனை யோ சாதனைகளை திட்டங் களை உருவாக்கி தந்திருக் கிறார்கள். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கல்வி வேலை வாய்ப்பு பெறுவதற்காக முஸ்லிம் சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டு மென கோரிக்கை வைத்த போது அதை நிறைவேற்றி தந்தார். பிற்படுத்தபட்டோருக் கான இட ஒதுக்கீட்டிலிருந்து 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை முஸ்லிம் சமு தாயத்திற்காக வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இதன் காரணமாகத்தான் பொறியியல் கல்லூரியிலும், மருத்துவ கல்லூரியிலும் முஸ்லிம் மாணவர்கள் ஏராள மானோர் பயிலக்கூடிய வாப்பை பெற்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. இதனை நான் பெருமை யோடு இங்கே குறிப்பிட முடியும்.

பெண்களுக்கு சொத்திலே பங்களிக்கப்பட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்காக தந்தை பெரியார் அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் மிக முக்கியமானது எது என்றால் சொத்திலே பெண் களுக்கு சம உரிமை தந்திட வேண்டும் என்பதுதான். 1929லே நிறை வேற்றப்பட்ட அந்த தீர்மானத்தை அறுபது ஆண்டு களுக்குப்பிறகு 1989லே நிறைவேற்றித் தந்தது கலைஞர் தலைமையிலான திராவிடர் முன்னேற்ற கழக ஆட்சி.

1969ல் மீலாது நபிக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சிதான். உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் சேர்த்த தும் தி.மு.கழக ஆட்சிதான். அண்ணா சாலையிலுள்ள கலைக்கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டி மகிழ்ந்ததும் தி.மு.கழக ஆட்சிதான். விண் ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு வழங்கியது தி.மு.கழக ஆட்சி தான். 1999ல் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம், 2001லே காயிதே மில்லத் மணி மண்டபம் அமைத்திட ரூ 58 லட்சரூபாய் ஒதுக்கி அந்த பணியையும் தொடங்கி வைத் தது தலைவர் கலைஞர் அவர்கள் தான். சீறாப்புராணம் பாடிய அமுதகவி உமறுப்புலவருக்கு 2008ல் எட்டயபுரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது கலைஞ ருடைய ஆட்சியில்தான் என்பதை நான் இங்கு நினைவு படுத்திட விரும்புகிறேன். இப்படி ஒரு பெரிய பட்டியலை நான் தர முடியும். நேரத்தின் அருமை கருதி நான் சுருக்கமாகவே இவைகளை எடுத்து நான் சொல்லியிருக் கிறேன். முஸ்லிம் மாணவர் பேரவையில் இருந்து உருவான தலைவர்கள்

மாணவச்செல்வங்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாட்டை நடத்துகிறீர்கள். இங்கு உரையாற்றியவர்கள் கூட சொன்னார்கள், ‘பெரியவர் களாகிய நாங்கள் இதில் தலையிடவில்லை ஒதுங்கிக் கொண்டோம். முழு பணியையும் மாணவர்கள் இடத்தில் ஒப் படைத்தோம் அவர்கள் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’ என்று.

இங்கே உரையாற்றியவர்கள் குறிப்பிட்டார்கள், முஸ்லிம் மாணவர் பேரவை 1958லே உருவாக்கப்பட்டது என்று. அந்த அமைப்பிலிருந்து உருவானவர் தான் கேரளாவின் முதல்வர் பதவியிலே அமர்ந்த சி.எச். முஹம்மது கோயா அவர்கள். அதைப்போன்று இன்றைக்கு மத்தியிலே அமைச்சர் பொறுப்பிலே உள்ள இ. அஹமது அவர்களும் இந்த அமைப்பி லிருந்து உருவானவர் தான். ஏன், இங்கே அமர்ந்திருக் கக்கூடிய கேரள தொழில்துறை அமைச்சர் பி.கே. குஞ்ஞாலி குட்டியும் இந்த அமைப்பில் இருந்து உருவான வர்தான்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலத்தில் முஸ்லிம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர்தான் இன்று இயக்கத்தை நடத்தக்கூடிய கண்ணி யத்திற்குரிய அய்யா காதர் மொகிதீன் என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

இவைகளை எல்லாம் நான் இங்கு எடுத்துச்சொல்வதற்கு என்ன காரணம் என்றால் வரக்கூடிய தலைமுறையின ரானமாணவ செல்வங்கள் எழுச்சியோடு மாநாட்டை நடத்து வது மட்டும்மல்ல தீர்மானங்களை நிறைவேற்று வது மட்டுமல்ல, இங்கே பேசுகின்ற உரைகளை கண் ணும் கருத்துமாக கேட்பது மட்டுமல்ல நாட்டினுடைய நிலைமைகளை நினைத்து பார்த்து இங்கு சொல்லப் படக்கூடிய கருத்துக்களை ஏற்று செயல்படுத்த வேண்டு மென கேட்டுக் கொள்ள கடமைபட் டிருக்கிறேன்.

மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதை மனதிலே பதிய வைத்து கொள்ள வேண்டும். எதையும் என்று சொன்னால் எதை செய்ய வேண்டுமோ அதை. விஞ் ஞானத்தின் வளர்ச்சியில் நாம் கம்ப்யூட்டரின் முன் னேற் றத்தை கண்டு கொண்டு இருக்கிறோம். இன்று மாணவர்களின், இளை ஞர்களின் வாழ்வில் நாட்டுப் பற்று, மொழிப்பற்று என்பது குறைந்து கொண்டே வருகிறது. நாம் அதை மறுத்திட முடியாது.

ஆனால் காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி என்பது வேண்டும் ஒரு நாடு வளர வேண்டுமானால் விஞ்ஞான வளர்ச்சி தேவை. விஞ்ஞான வளர்ச்சி சில நேரங்களில் ஆபத்தாகவும் முடிந்து விடு கிறது. விஞ்ஞான வளர்ச்சியால் தான் செல்போன் உருவானாது. அந்த செல்போன்கள்தான் கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர் களையே காட்டி கொடுத்தது. அந்த வளர்ச்சி தேவையில்லை. மாணவர் போராட்டம்

1967ல் அண்ணா தலைமை யில் திராவிடர் முன்னேற்றக் கழக ஆட்சி அமைவதற்கு எது காரணம் என்று சொன்னால் மாணவர் அமைப்புதான். 1937-38ம் ஆண்டிலே இந்தி திணிப்பை எதிர்த்து போராடிக்கூடிய மொழிபோர் தொடங்கப்பட்ட போது அதன் உச்சகட்டமாக அது 1962லேதான் வெடித்தது. திணிக்கப்படக்கூடிய இந்தியை எதிர்க்க வேண்டும். நம்முடைய தாய் மொழி அழகு தமிழ் மொழியை காப்பற்றிட வேண்டும் என்ற முழக்கம் ஒலிக்கிறது.

இந்த போராட்டம் உச்ச கட்டத்தை அடைகிறது தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு காரா கிரகத்தில் அடைக்கப்படுகிறார்கள். அண்ணா சிறையில் அடைக் கப்படுகிறார். தலைவர் கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார். பல தலைவர்கள் இப்படி சிறையில் அடைக்கப்படு கிறார்கள். அப்போது தமிழகத் தில் இருக்கக்கூடிய இளைஞர் கள் குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.


எங்கு பார்த்தாலும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவர் கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த சிதம்பரம் நகர் வீதியிலே ஒன்று சேர்ந்து ஊர்வலத்தை நடத்துகிறார்கள். அவர்களின் வலது கையிலே திராவிட முன்னேற்றக்கழகத்தின் இரு வண்ணக்கொடி. இடது கரத்தில் இந்தி ஒழிக,தமிழ் வாழ்க என எழுதப்பட்ட அட்டை அதைத் தாங்கி முழங்கி வருகிறார்கள்.

அப்போது கோட்டையில் அமைர்ந்திருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் உத்தரவிடு கிறார்கள். இந்தியை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும், தமிழ் வாழ்க என எவனாவது வாய் திறந்து சொன்னாலும் அவனை எல்லாம் காக்கை குருவிகளை சுட்டு தள்ளுவதைப்போல் சுட்டுத்தள்ளுங்கள். என ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதற்கு கட்டுப்பட்டு காவல் துறையினர் செயல்படுகிறார் கள். காக்கை குருவிகளை சுட்டு தள்ளுவதை போல் சுட்டு தள்ளுகிறார்கள்.

அப்படி சுடப்பட்ட நேரத்தில் அந்த மாணவர் பட்டாளத்துக்கு தலைமை ஏற்று நடத்திய ஒரு மாணவன் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய மாணவன். அவன் யார் என்று கேட்டால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு போலீசார் பெற்றெடுத்த செல்வன் அவன் பெயர் ராஜேந் திரன். நீங்கள் இன்றைக்கு சிதம்பரத்திற்கு சென்றால் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குள்ளே ஒரு சிலை இருக்கிறது. அந்த சிலைதான் ராஜேந்திரனுடைய சிலை.

இன்னும் பெருமையுடன் சொல்கிறேன் அவன் படித்த பல்கலைக்கழகத்திலே இருக் கிறது உலகத்திலேயே எந்த பல்கலைகழகத்திலும் படித்த மாணவனுக்குசிலை கிடையாது. ஆனால் சிதம்பரத்தில் இருக்கக் கூடிய அண்ணாமலை பல்கலை கழகத்தில் இருக்கிறது. அவன் ஏன் சிலையாக மாறியிருக் கிறான் என்றால் அந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி வந்தபோது போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி றான். அவன் நெஞ்சிலே குண்டு பாய்கிறது. அவன் கீழே சாய்கிறான் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தபோது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறான். அவனை பெற்றெடுத்த பெற்றோர்கள் ஒரு போலீசார் குடும்பம்.

அவனை தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல மாணவர்கள் முயற்சிக் கிறார்கள். அவன் தடுக்கிறான். நியாயமாக அவன் என்ன சொல் லியிருக்க வேண்டும், என் தாய், தந்தையரை பார்க்க வேண்டும் என் உறவினர்களை பார்க்க வேண்டும் என்று. ஆனால் அவன் கடைசி நேரத்தில் கூட நான் படித்து பட்டதாரி ஆக வேண்டும் என்றுகூட சொல்ல வில்லை. அந்த கடைசி நேரத் தில் கூட அவன் முழங்கிய முழக்கம் எது என்று சொன்னால் இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று அந்த முழக்கத்தோடுதான் உயிர் பிரிந்தது. ஆக, அந்த உணர்வு மாணவர், இளைஞர்கள் இடத்தில் இருக்கிறதா என்றால் அது குறைந்து கொண்டிருக் கிறது. நமக்காக இல்லை யென் றாலும் நம்முடைய எதிர்கால சந்ததியினருக்காக உங்களைப் போன்ற மாணவர்கள் இளைஞர் கள் முன் வந்தால்தான் ஒரு புத் துணர்ச்சியை மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அதை ஏற்படுத்துவதற்கு உறுதி எடுக்கின்ற முயற்சியிலேதான் இந்த மாநாட்டை நடத்தி கொண்டிருக்கிறீர்கள். அந்த உணர்வோடுதான் நானும் பங்கேற்க வந்திருக்கிறேன். உங்கள் தீர்மானங்கள் வெற்றி பெற தலைவர் கலைஞரோடு சேர்ந்து நானும் ஒத்துழைப்பேன் என உறுதி கூறுகிறேன்.

இவ்வாறி தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.