Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 8 நவம்பர், 2012

தெலுங்கானா உருவானால் கட்சியை காங்கிரசுடன் இணைக்கத்தயார் -- சந்திரசேகர ராவ்


ஆந்திராவை தனியாக பிரித்து தெலுங்கான மாநிலம் உருவாக்கிட கோரி தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகரராவ் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்‌கொண்டார். இதையடுத்து மத்திய அரசு தெலுங்கானா மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து.ஆனால் மத்திய அரசு தொடர்ந்து இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்து வந்தது. இருப்பினும் ‌தெலுங்கானா கோரிக்கை இன்னும் ஆந்திராவில் அனலாய் ‌பற்றி எரிந்து வருகிறது.

தெலுங்கானாவை வலியுறுத்தி பல கட்டப்போராட்டங்களை தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக்குழு உள்ளிட்ட அமைப்புகளும் ,உஸ்மானியா பல்கலை. மாணவர்களும் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வரும் 2014-ம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கும், பாராளுமன்ற லோக்சபாவிற்கும் ஒன்றாக தேர்தல் நடக்க உள்ளது. எனவே காங். மீண்டும் தனது செல்வாக்கினை நிலை நிறுத்த தெலுங்கானா விவகாரத்தினை கையில் எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை காங்.இணைக்க பேரம் பேசியது.இது தொடர்பாக அக்கட்சியின் ‌தலைவர் சந்திரசேகரராவ் ,டில்லியில் மத்திய அமைச்சர் வயலார் ரவியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எனினும் இதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை என தெரிகிறது.

தனிதெலுங்கானாவே எனது லட்சியம்:
இந்நிலையில் சந்திரசேகரராவ் நிருபர்களிடம் கூறுகையில், வரும் 2014-ம் ஆண்டு நடக்க உள்ள பார்லிமென்ட் லோக்சபா மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டோம். வரப்போகும் தேர்தலையொட்டி வரும் நவம்பர் 29-ம் தேதி முதல் தெலுங்கானா பகுதி மாவட்டங்களில் ‘தீக்ஷா திவாஸ்’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை துவக்க உள்ளேன். இந்த இயக்கம் ‌தனித்தெலுங்கானா கோரிக்கை குறித்து பிரசாரம் ‌மேற்கொள்ளும்.

ஏற்கனவே காங்.கிடம் தனித்தெலுங்கானா உருவாக்கிட எனது கோரிக்கையை கடிதமாக அளித்துள்ளேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு, தெலுங்கானா விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கினால் அடுத்த நிமிடமே, எனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசுடன் இணைக்க தயாராக உள்ளேன். நிறைவேறவில்லை எனில் தெலுங்கான கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு சந்திரசேகரராவ் கூறினார்.

நிப்ட்(NIFT ) வழங்கும் டிசைன் மேலாண்மை படிப்புகள்


நிப்ட் (NIFT ) கல்வி நிறுவனம், டிசைன், மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை வழங்குகிறது.

படிப்புகளின் விபரங்கள்

இளநிலை:

B.Des. (Accessory design)
B.Des. (Fashion communication)
B.Des. (Fashion design)
B.Des. (Knitwear design)
B.Des. (Leather design)
B.Des. (Textile design)
B.F.Tech. (Apparel production)

முதுநிலை:

M.Des. (Design space)
M.F.M. (Fashion management)
M.F.Tech. (Fashion technology)

விண்ணப்பங்களை, நவம்பர் 6 முதல் அடுத்தாண்டு ஜனவரி 14 வரை, ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். பேப்பர் வடிவில், நவம்பர் 12 முதல் அடுத்தாண்டு ஜனவரி 10 வரை பெற்றுக் கொள்ளலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் - ஜனவரி 14, 2013.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - பிப்ரவரி 10, 2013.

விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் இதர விபரங்களை அனைத்தையும் முழுமையாக அறிந்துகொள்ள www.nift.ac.in என்ற வலைத்தளம் செல்க. ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெற www.nift.ac.in அல்லது http//specialtest.in/nift2013 என்ற இணைப்புகளுக்கு செல்லவும்.

எளிமையான அலங்காரமே மகளிருக்கு அழகாக இருக்கும் : சோனியா காந்தி


பெண்கள் இந்திரா காந்தியைப் போல எளிமையாக தோற்றமளித்தால் அழகாக காட்சியளிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

ரே பரேலில் உள்ள தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசிய சோனியா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தோற்றத்தில் எளிமையும், பேஷன் என்பதன் மீதான பார்வையும் அவரை உலக அளவில் புகழ்பெற வைத்தது.

தற்போது இந்திய பெண்களின் நாகரீகம் மாறுபட்டு வருகிறது. அதிக வேலைப்பாடு செய்யப்பட்ட, அலங்கரம் செய்யப்பட்ட ஆடைகளை பெண்கள் அணிகிறார்கள். ஒரே ஒரு ஆடையில், சரிகைகள், மணிகள், வேலைப்பாடுகள், கற்கள் பதித்து அணிகின்றனர். இவ்வளவு அலங்காரம் செய்து ஒரு ஆடையை அணிவது பெண்களுக்கு அதனை அணிய ஏற்றதாக இருக்க முடியாத அளவுக்கு சிரமத்தை தருகிறது. நாகரீகம் என்பது அதீத அலங்காரத்தில் இல்லை.

இந்தியாவின் பிரதமராகவும், ரே பரேலி தொகுதி எம்.பியாகவும் இருந்த இந்திரா காந்தி, தனது எளிமையான தோற்றத்தின் மூலமே நாகரீகமாகத் தோன்றினார். ஆடைகளில் அலங்காரத்தை அதிகரிக்கலாம். ஆனால், அது நாகரீகத்தை பிரதிபலிக்காது என்று பேசினார்.

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஒரு பாரம்பரிய ஆடைகள் உள்ளன. அவை, அவர்களது வாழ்விடங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதனை எப்போதும் நாம் மறக்கக் கூடாது என்று குறிப்பிட்டார் சோனியா.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை


 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்ககடலில் உருவான நீலம் புயல் சின்னம் காரணமாக வடதமிழகத்தில் பலத்த மழை பெய்தது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் சாகுபடியை செய்ய முடியாமல் கவலையில் உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையையொட்டி தென்மேற்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு நெல்லை, ஆலங்குளம், தென்காசி. செங்கோட்டை, சங்கரன்கோவில், தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகபட்சமாக பாபநாசத்தில் 57 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மற்ற இடங்களில் பதிவான மழை விவரம் வருமாறு:-

மணிமுத்தாறு-52.8 மி.மீ, ஆய்குடி- 40.2 மி.மீ., அம்பை- 30.5 மி.மீ., சேரன்மகாதேவி- 25.6.மி.மீ., நாங்குநேரி- 27 மி.மீ., பாளை- 37 மி.மீ., நெல்லை- 25 மி.மீ., ராதாபுரம்- 29 மி.மீ., சங்கரன்கோவில்- 12 மி.மீ., செங்கோட்டை- 20 மி.மீ., தென்காசி- 20 மி.மீ., சிவகிரி- 5மி.மீ., ஆலங்குளம்- 35.8மி.மீ. இந்த மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணை- 75.50 அடியாகவும், மணிமுத்தாறு அணை- 61.70 அடியாகவும் உள்ளன.

மற்ற அணைகளின் நீர்மட்டம் விவரம் வருமாறு:-

சேர்வலாறு- 88.25 அடி, கடனாநதி அணை - 74 அடி,
ராமநதி அணை- 81.50அடி, கருப்பாநதி அணை-63.6அடி, குண்டாறு அணை-36.10அடி, வடக்கு பச்சையாறு அணை- 16 அடி,
நம்பியாறு அணை- 17.26 அடி, அடவிநயினார் அணை- 93.50 அடியாகவும் உள்ளன.

முதன்முதலாக ஆன்லைன் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வு டிசம்பர் 09 -ல் நடக்கின்றது


டிஎன்பிஎஸ்சி, முதன்முதலாக, பேப்பர் இல்லாத ஒரு தேர்வை, டிசம்பர் 9ம் தேதி நடத்தவுள்ளது. பயோமெட்ரிக் முறையில் தேர்வர்கள் அடையாளம் காணப்படுவார்கள். இத்தேர்வின் மூலம், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணிகள் நிரப்பப்படவுள்ளன.

இந்தப் புதிய முறையைப் பற்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் கூறியதாவது: கேள்வித் தாளானது, தேர்வு ஆரம்பிப்பதற்கு 1 மணிநேரம் முன்னதாக லோட் செய்யப்படும். தேர்வெழுதுபவர் ஒரு குறிப்பிட்ட பாஸ்வேர்ட் மூலமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு தேர்வருக்கும் ஒரு கணினி வழங்கப்படும் மற்றும் கேள்வித்தாள் திரையில் தெரியும். இதை எழுதுவதற்கு ஒரு தேர்வர், கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. Objective முறையில் இருக்கும் கேள்விக்கு, சரியான விடையை Mouse -ஐ நகர்த்தி கிளிக் செய்தால் போதும். அதேசமயம், ஒருவர் அளித்த பதிலை மாற்றவும் முடியும்.

தேர்வெழுதி முடித்தப் பின்னர் ஒருவர், பதிலளித்த கேள்வித்தாளை பிரின்ட் எடுத்துக் கொள்ளவும் முடியும். இத்தேர்வுக்கான Key answers, தேர்வு முடிந்த மறுநாள் வெளியிடப்படும். தேர்வரின் அடையாளத்தை உறுதி செய்யும் பொருட்டு, முதன்முறையாக, பயோமெட்ரிக் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.

இத்தேர்வில், சில ஆயிரம் தேர்வர்கள்(candidates) கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். தேவைப்படும் கணினிகளை வழங்க, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணினியில் வரும் கேள்வித்தாளுக்கு பதிலளிக்கும் பொருட்டு, தேர்வர்களுக்கு பயிற்சியளிக்க, www.tnpsc.gov.in வலைத்தளத்தில், மாதிரி கேள்வித்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் இதுகுறித்து தெளிவுபெற, 18004251002 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது contacttnpsc@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

தேர்வு முடிந்தவுடன், பதிலளிக்கப்பட்ட ஆன்லைன் தாள்கள், TNPSC -க்கு மாற்றப்படும். இதன்மூலம், தேர்வு முடிந்த அதேநாளிலேயே, முடிவுகளை வெளியிட முடியும். இப்புதிய தேர்வு முறை வெளிப்படையானது மட்டுமின்றி, எளிமையானதும் கூட. இதன்மூலம் தேர்வெழுதுபவரின் நேரமும் மிச்சமாகிறது. மேலும், பிரின்ட் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் மற்றும் பதிலளிக்கப்பட்ட தாள்களை இடமாற்றம் செய்கையில் ஏற்படக்கூடிய முறைகேடு அபாயங்களை முற்றிலும் தவிர்க்க இயலும்.

இந்த கணினி அடிப்படையிலான தேர்வில், அறிமுகத்தை ஏற்படுத்த, ஒரு மாதிரித் தேர்வை டிஎன்பிஎஸ்சி கமிஷன் நடத்தவுள்ளது. இத்தேர்வானது, தோட்டக்கலை அலுவலர், உதவி பொறியாளர், முதுநிலை ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது.

ரேஸ் கார் தயாரிப்பில் தமிழக மாணவர்கள் சாதனை!


ரேஸ் கார்கள் தயாரிப்பில் பல வெற்றிகளை குவித்து வந்துள்ளனர் தமிழ்நாட்டின் சேலம் சோனா பொறியியல் கல்லூரியை சேர்ந்த பி.இ., மெக்கானிகல் இஞ்சினீர் மாணவர்கள்.

ரேஸ் வேகத்தில் அவர்கள் நம்மிடம் பேசியது.... இதோ

'எங்க டீம்ல 17 பேரு... பிரவீன் தான் எங்க கேப்டன், ஆகாசும், சரணும் தான் ரேஸ் கார் டிரைவர்ஸ்.... 'டெராசிவின்' தான் எங்க டீம் பேரு. டெல்லில நொய்டால 'சுப்ரா எஸ்.எ.இ இந்தியா' காம்பிடேசன் நடந்தது அகில இந்திய அளவுல நடந்த போட்டி. வழக்கமா கார் ரேஸ் நடக்கும்  புத் இண்டர்நேசனல் சர்கியோ ல தான் நடந்தது.

அதாவது ரேஸ் கார் தயாரிப்பது தான் இந்த போட்டி. தயாரிச்ச கார்களில் வளம் வரணும். இதுல நாடு முழுக்க 125 கல்லூரி கலந்துகொண்டு 63 செலெக்ட் ஆகி, பின் இறுதியாக 25 கல்லூரி அணிகள் தேர்வானது. அதில் எங்க அணியும் ஒன்று. 'சி.எ.இ என்கிற அவார்ட் எங்களுக்கு கிடைத்தது. எங்க கார் மாருதி 800 இஞ்சின். வேலாக்ஸ் 1.0 என்பது எங்க மாடல். மணிக்கு 110 கி.மீ வேகம் போறது. எங்க ரேஸ் கார் ஓட்டும்  டிரைவர் உயிருக்கு பாதுகாப்பு தர்றது. அந்தளவு நாங்க குறைந்த விலையில் தரமான பாதுகாப்பான கார் பிரேம் தயாரிச்சோம் ரேசில் விபத்து நடந்தால் கூட அந்த அதிர்வை சமமா கார் பிரேம் உள் வாங்கி கொள்ளும்... அதனால் விபத்தின் வேகம் குறைந்து ஓட்டுபவருக்கு ஆபத்தை தராது... இதை பார்த்து தான் எங்களுக்கு விருது வழங்கினர் .கார் ஸ்டியரிங் உட்பட்ட உபகரணங்கள் நாங்களே எங்கள் கல்லூரியில் தயாரித்தது... எங்க சேர்மன் தீரஜ்லால் சார் தான் எல்லா உதவியையும் செஞ்சு தந்தது.. எங்க H.O.D வெங்கடேசன் சார் நிறைய ஆலோசனைகள் வழங்கினார்  . இதனால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம்.. அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
 
அடுத்து உலகளவில் அமெரிக்காவின் லிங்கன் என்ற பகுதியில் பார்முலா எஸ்.ஐ என்ற ரேஸ் கார் தயாரிப்பு போட்டி நடக்கின்றது , 600 c.c திறன் கொண்ட கார் ரேஸ் போட்டி அது.
 
இந்தியாவில் இருந்து மூனே மூணு அணி தான் தேர்வு ஆகி இருக்கு... அதுல தமிழ்நாட்டில் எங்க அணி ஒன்று.... சந்தோசமா இருக்கு அங்கயும் வெற்றி பெற்று வருவோம்' என்ற மாணவர்கள் நம் முன் அவர்கள் தயாரித்த ரேஸ் காரில் வேகமாய் பயணம் செய்து காட்டி அசத்தினர்.
 
உலக அரங்கு போட்டியில் கால் பதிக்கும் தமிழக மாணவர்களை பெருமையோடு வாழ்த்தி விடை பெற்றோம்.

தெலுங்கானா போராட்டம் மீண்டும் தீவிரமடைகிறது


ஆந்திர மாநிலம் அதிலாபாத் மாவட்டம் குசலாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தாஷ்குமார். இவர் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் ஆவார். இவர் தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விரைந்து வந்து சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். சந்தோஷ் குமார் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் மத்திய அரசு தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காலம் கடத்துவதால் தூக்கு போட்டு தற்கொலை செய்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு செகந்திராபாத்தில் தனி தெலுங்கானாவுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் நினைவு சின்னம் அருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சந்தோஷ்குமாரின் உடலை அவரது தந்தை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார். இந்த நிலையில் தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். இதனால் தெலுங்கானா பகுதிகளில் பதட்டம் நிலவியது. நேற்று இரவு ஐதராபாத் ராமாந்தயூர் பகுதியில் 2 அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியல் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் கோதண்டராம் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று தெலுங்கானா பகுதியை சேர்ந்த 10 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் ஈரானை தாக்குவோம்: இஸ்ரேல் பிரதமர் கொக்கரிப்பு


 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியதாவது :-

நான் பிரதமராக இருக்கும் வரை ஈரானை அணுகுண்டு தயாரிக்க விடமாட்டேன். இதையும் மீறி ஈரான் அணு குண்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனவே எந்த நேரத்திலும் நாங்கள் ஈரான் மீது போர் தொடுப்போம்.

பொருளாதார தடைகளையும் மீறி ஈரான் அத்து மீறி செயல்படுகிறது. இதற்கான பலனை அது சந்திக்க நேரிடும். இவ்வளவு நாளும் நாங்கள் ஈரானை தாக்காமல் இருப்பதற்கு அமெரிக்காவே காரணம். அவர்கள் தான் எங்களை தடுத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது நீடிக்குமா? இல்லையா? என்பது ஈரான் கையில் தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் விளையாட அசாருதீனுக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை சட்டவிரோதம்: ஆந்திர ஐகோர்ட்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ,இந்நாள் மொராதாபாத் தொகுதியின் நாடுமன்ர உறுப்பினருமான  அசாருதீன் மீதான ஆயுட்கால தடை சட்டவிரோதம் என ஆந்திர ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஆயுட்கால தடை விதித்து, இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2000-மாவது ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஐதராபாத்தில் உள்ள சிவில் கோர்ட்டில் அசாருதீன் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், தடையை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஆந்திர ஐகோர்ட்டில் அசாருதீன் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு விசாரணையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் அசாருதீனுக்கு தண்டனை வழங்கி விட்டதாக வாதிட்டனர். இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பளித்த ஆந்திர ஐகோர்ட், அசாருதீன் மீதான ஆயுட்கால தடை சட்டவிரோதம் என கூறியுள்ளது. இது அசாருதீனுக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது.

49 வயதான அசாருதீன், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தற்போது மொராதாபாத் எம்.பி.,யாக உள்ளார். மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்த அசாருதீன், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6215 ரன்களும், 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9378 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.