Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 8 நவம்பர், 2012

கிரிக்கெட் விளையாட அசாருதீனுக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை சட்டவிரோதம்: ஆந்திர ஐகோர்ட்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ,இந்நாள் மொராதாபாத் தொகுதியின் நாடுமன்ர உறுப்பினருமான  அசாருதீன் மீதான ஆயுட்கால தடை சட்டவிரோதம் என ஆந்திர ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஆயுட்கால தடை விதித்து, இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2000-மாவது ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஐதராபாத்தில் உள்ள சிவில் கோர்ட்டில் அசாருதீன் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், தடையை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஆந்திர ஐகோர்ட்டில் அசாருதீன் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு விசாரணையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் அசாருதீனுக்கு தண்டனை வழங்கி விட்டதாக வாதிட்டனர். இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பளித்த ஆந்திர ஐகோர்ட், அசாருதீன் மீதான ஆயுட்கால தடை சட்டவிரோதம் என கூறியுள்ளது. இது அசாருதீனுக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுத்துள்ளது.

49 வயதான அசாருதீன், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தற்போது மொராதாபாத் எம்.பி.,யாக உள்ளார். மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்த அசாருதீன், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6215 ரன்களும், 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9378 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக