Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 21 டிசம்பர், 2012

உலகளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்


நடப்பு 2012ம் ஆண்டில், சர்வதேச அரிசி ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.நடப்பாண்டில், இதுவரையிலுமாக, இந்தியா, 90 லட்சம் டன்னுக்கும் அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம், இதுவரை அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்த தாய்லாந்தை, பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறியுள்ளது.

எனினும், நடப்பு வேளாண் பருவத்தில், போதிய பருவமழை இல்லாததால், நாட்டின் நெல் உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வரும் 2013ம் ஆண்டு, தாய்லாந்து மீண்டும் அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது என, சர்வதேச உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தடை நீக்கம்:கடந்த 2011ல், தனியார் அரிசி ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நீக்கியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் நிறுவனங்களும் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டதால், பாரம்பரிய நாடுகளுக்கு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. இத்துடன், அரிசி ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தைகளுக்கும் வர்த்தகத்தை விரிவுபடுத்தினர்.

அதேசமயம், இந்திய ஏற்றுமதியாளர்கள், சர்வதேச சந்தை விலையை விட, குறைந்த விலைக்கு அரிசியை ஏற்றுமதி செய்தனர். இதனால், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.இந்நிலையில், தாய்லாந்து அரிசி விலை அதிகம் என்பதால், அந்நாட்டின் அரிசி ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இந்த நிலை, வரும் ஆண்டு மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை:தாய்லாந்து, சர்வதேச சந்தையில் அதன் அரிசி விலையை குறைத்துள்ளது. இதனால், வரும் ஆண்டில், உலக நாடுகளிடையே, தாய்லாந்து அரிசிக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் விளைவாக, தாய்லாந்து, வரும் 2013ம் ஆண்டில், அரிசி ஏற்றுமதியில் மீண்டும் முதல்இடத்தை பிடிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், பருவமழை பொழிவில் ஏற்பட்ட தாமதம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால், இந்தியாவின் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் ஆண்டில், அரிசி ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

உணவு தானியங்கள்:எனினும், நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில் (ஜூன்-ஜூலை), இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதி,1.57 கோடி டன்னாக இருக்கும். இதில், 77 லட்சம் டன் அரிசியும், 50 லட்சம் டன் கோதுமையும், 30 லட்சம் டன் மக்காச்சோளமும் அடங்கும்.கடந்த வேளாண் பருவத்தில், இந்தியாவின் கோதுமை உற்பத்தி, 9.40 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டியது. அதேபோன்று, நெல் விளைச்சலும், 10.04 கோடி டன்னாக உயர்ந்தது. மக்காச்சோள உற்பத்தி, 1.62 கோடி டன்னாக இருந்தது.

உணவு தானிய உற்பத்தி :உச்சத்தை எட்டிய நிலையில், மத்திய அரசு, அதிக அளவில் நெல் மற்றும் கோதுமையை கொள்முதல் செய்தது. இதனால், தனியார் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த அளவிற்கே உணவு தானியங்கள் கிடைத்தன.இந்நிலையில், நடப்பாண்டில், மத்திய அரசு, அதன் கையிருப்பில் உள்ள உபரி உணவு தானியங்களை அதிக அளவில் விற்பனை செய்து, அறுவடையாகி வரும் புதிய உணவு தானியங்களுக்கு, கிடங்குகளில் கூடுதலாக இட வசதி அளிக்க திட்டமிட்டுள்ளது.

கோதுமை:இதன் விளைவாக, முதலில், 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, மேலும், 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட உள்ளது.ரபி பருவத்தில், நெல் மற்றும் கோதுமை விதைப்புக்கான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன. கோதுமை அதிகம் விளையும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பருவமழை குறைவாக பொழிந்துள்ளது.

எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’


கனடா நாட்டில் வழங்கப்படும் 2012–ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கனடா நாட்டில் உள்ள கனடா தமிழ் கலை இலக்கிய தோட்டம் சார்பில், ஆண்டு தோறும் தமிழ் எழுத்து துறையில் சாதனை படைத்து வருபவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயம் மற்றும் 2,500 கனடியன் டாலர்’ ஆகியவை வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டுகளில் முக்கிய எழுத்தாளர்களான சுந்தரராமசாமி, வெங்கடசாமிநாதன், ஜார்ஜ் எல்.ஹார்ட், லட்சுமி ஹோம் ஸ்ரோம், அம்பை, ஐயிராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுதுரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடியை அடுத்த வீரநாராயணமங்கலத்தை சேர்ந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 6 நாவல்கள், 9 சிறுகதை தொகுப்புகள், 6 கட்டுரை தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகளை எழுதி உள்ளார். இவற்றின் மூலம் நாஞ்சில் நாட்டு வட்டார மொழியை தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தி வருகிறார்.

நாஞ்சில் நாடன் எழுதிய ‘‘சதுரங்க குதிரை’’ என்ற நாவல் 1993–ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டது. 2008–ம் ஆண்டு கோவையில் ‘‘கண்ணதாசன் விருதும்’’, 2009–ம் ஆண்டு தமிழக அரசு ‘‘கலைமாமணி விருதும்’’ வழங்கியது. இதனை தொடர்ந்து ‘‘சூடிய பூ சூடற்க’’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக, மத்திய அரசு கடந்த 2010–ம் ஆண்டு ‘‘சாகித்திய அகடாமி விருது’’ வழங்கியது.

இவர் எழுதிய ‘‘தலைகீழ் விகிதங்கள்’’ என்ற நாவலை தழுவி, சினிமா டைரக்டர் தங்கர்பச்சான் ‘‘சொல்ல மறந்த கதை’’ என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இது தவிர, தற்போது ஓடிக்கொண்டிருக்கும், டைரக்டர் பாலா இயக்கிய ‘‘பரதேசி’’ திரைப்படத்திற்கும் வசனமும் எழுதி உள்ளார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது:

இது குறித்து நாஞ்சில் நாடன் கூறியதாவது:–

என்னுடைய எழுத்துப்பணியை கவுரவிக்கும் வகையில், கனடா தமிழ் கலை இலக்கிய தோட்டம் சார்பில், இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு என்னை தேர்வு செய்துள்ளது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. விருது, கேடயம் மற்றும் 2,500 கனடியன் டாலர் வழங்கும் விழா 2013–ம் ஆண்டு ஜூன் 13–ந் தேதி கனடா நாட்டில் உள்ள டேரோண்டோ நகரில் நடக்கிறது. இந்த விழாவில் இதனை வழங்குகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத 7,000 பணியிடங்கள் காலி


மாநிலம் முழுவதும் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 7,000 பணியிடங்கள், காலியாக உள்ளன. இந்த விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, உத்தரவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும், 14 வகையான இலவச திட்டங்கள், உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கும் வழங்கப்படும் நிலையில், போதிய பணியாளர்கள் இல்லாததால், நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், சிக்கலான நிலை நீடித்து வருகிறது.

தமிழகத்தில், 55 ஆயிரத்து, 667 பள்ளிகள் உள்ளன. இதில், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய பிரிவுகளில், 8,266 பள்ளிகள், அரசு நிதியுதவியுடன் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 33 லட்சம் மாணவ, மாணவியர், படிக்கின்றனர்; 95 ஆயிரம் ஆசிரியர், பணிபுரிந்து வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர் என, பல வகையான பணியிடங்கள், உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன. ஆனால், உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழக அரசு ஓரளவு அக்கறை செலுத்துகிறது. ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதில், சுத்தமாக கவனம் செலுத்துவதில்லை என, குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஒரு பள்ளியில், நான்கு, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இருந்தால், இரு பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. புதிய பணியிடங்களை அனுமதிக்காவிட்டாலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்டு, தற்போது, காலியாக உள்ள பணியிடங்களை மட்டுமாவது நிரப்ப, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, முதன்மைக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும், அத்தனை திட்டங்களையும், உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும். ஆனால், நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், அதிகளவில், காலியாக உள்ளன.

இலவச பொருட்கள் குறித்த கணக்கு விவரங்களை பராமரித்தல், எத்தனை மாணவர்களுக்கு, பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன, இன்னும் எத்தனை பேருக்கு வழங்க வேண்டும், பொருட்களின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு கணக்கு பராமரிப்புகளை, ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தான் கவனிப்பர். இந்த பணியாளர்கள் இல்லாததால், அந்தப் பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறோம்.

இதனால், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் வருகின்றன. மேலும், ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவதும், பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு பள்ளியிலும், காலியாக இருந்த இடங்கள், முழுமையான அளவில் நிரப்பப்படவில்லை.

அதனால், ஏற்கனவே உள்ள காலி பணியிடங்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலி பணியிடங்கள் என, 5,000 முதல், 7,000 பணியிடங்கள் வரை, காலியாக இருக்கின்றன. இந்த பணியிடங்களை நிரப்பாவிட்டால், நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில், வரும் கல்வியாண்டில் பெரும் சிக்கல் ஏற்படும்.

புதிய பணியிடங்களுக்கு அனுமதி வழங்காவிட்டாலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணியிடங்களை மட்டும் நிரப்ப, அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

இந்த விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, உத்தரவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.

12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் : எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை


டெல்லியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவா லியாவைச் சந்தித்த  கூட் டத்தில் வேலூர் நாடாளு மன்ற உறுப்பினரும், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளருமான எம். அப்துல் ரஹ்மான் பேசுகையில், 12-வது ஐந்தாண்டுத் திட்டத் தில் சிறுபான்மை சமூகத்த வருக்கான மேம்பாட்டு நிதியை உயர்த்தி, திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 18-12-2012 அன்று முஸ்லிம் எம்.பி.க்களின் குழு திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவா லியாவைச் சந்தித்து கலந்துரை யாடினர். இந்தக்கூட்டம் புதுடெல்லி யோஜனா பவனில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் பேசினார்.

12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சிறுபான்மை சமுதா யத்தவருக்கான மேம்பாட்டு நிதியென ரூபாய் 17,323 கோடியை மாத்திரமே அரசு அறிவித்திருக்கிறது. திட்ட மதிப்பீடாகக் கணிக்கப்பட்ட ரூ.44,020 கோடி வெகுவாகக் குறைக்கப்பட்டு மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நிச்சயமாக போதாது. கல்வி உதவித் தொகை, கல்விக்கான அடிப்படை கட்ட மைப்பு வசதிகள், தொழிற் பயிற்சி, பொருளாதார உதவி கள் என பலவகையிலான திட்டங்கள் முழுமையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்த வேண்டுமானால் தொடக்கத் தில் வரையரை செய்யப்பட்ட தொகையான 44,030 கோடி ரூபாயை ஒதுக்கித் தர வேண் டும். சிறுபான்மையினர் நலனில் அக்கரை கொண்ட அரசு என்று சொல்வதில் அர்த்தம் இருக்க வேண்டுமானால் இந்த நிதி ஒதுக்கீடு அவசியம் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.