Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 26 டிசம்பர், 2012

சமூகத்தை ஒருங்கிணைப்பதே நம் தலையாயப்பணி, ஒன்றுபட்டு பணியாற்றி தமிழக முஸ்லிம் சமூகத்தை தலைநிமிரச் செய்வோம் : காயல் மஹபூப்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செய லாளரும், மணிச்சுடர் நாளேடு செய்தி ஆசிரியருமான காயல் மகபூபுக்கு ஹாங்காங் காயிதெ மில்லத் பேரவை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹாங்காங் ஷிம்ஷாஷி பூங்காவில் 22-12-2012 இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மூத்த பிரமுகர் அப்துல் வதூத் தலைமை தாங்கினார். இர்ஷாத் அலி இறைமறை ஓதினார்.

ஹாங்காங் காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் வி.எம்.டி. முஹம்மது ஹஸன் வரவேற்புரை யாற்றினார். காயல் மகபூபை வரவேற்று இந்திய முஸ்லிம் சங்க முன்னாள் தலைவர் பாக்கர் உரையாற்றினார்.

மணிச்சுடர் நாளிதழ் வெள்ளிவிழா சிறப்பு மலரை கீழக்கரை ஹஸன் பாக்கர் வழங்க காயல்பட்டினம் ஹசன் மரைக்கார் பெற்றுக் கொண் டார். மணிச்சுடர் நாளிதழை நீடூர் அப்துல் ரஹ்மான் வழங்க காயல்பட்டினம் இன்ஜினியர் முஸ்தபாவும், பிறைமேடை இதழை உவைஸ் வழங்க வி.எம்.எம். தம்பியும், டைம்ஸ் ஆப் லீக் இதழை கதீபும் மொகு தூம் வெளியிட புகாரி அப்துல் ரவூப் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் காயல் மகபூப் பேசியதாவது-

இந்த கடுமையான குளிரில் திறந்த வெளியில் தரையில் அமர்ந்து நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு கொண்டுள்ளது மெய் சிலிர்க்க வைத்துள்ளது. இந்த வரவேற்பு என்னைப் போன்றோ ரின் பொது நலப் பணிகளுக்கு நீங்கள் தரும் அங்கீகாரம்.

கடல் கடந்து எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தாயகத்தை மறக்க மாட்டோம்; சமூகத்திற்கு பணி செய்வோம்; சொந்த ஊர் வளர்ச்சிக்கு துணை புரிவோம் என்ற உறுதியுடன் பணியாற்று வது பெருமைக்குரியது.

இன்று மூத்தவர்கள் மட்டு மல்ல, இளைய தலைமுறையி னர் பொதுநல சேவையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அவர்களிடத்தில் அறிவும், ஆற்றலும் நிரம்ப உள்ளது. இணைய தளத்தின் மூலம் நட்பு வட்டாரத்தையும், தங்கள் பணிகளையும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்க முடிகிறது.

ஒன்றில் மட்டும் நீங்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். ஆன்மீகம், அறிவியல் என நீங்கள் எந்த கொள்கையில் இருந்தாலும் ஊர், சமுதாயம் என்று வரு கின்ற போது ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அந்த ஒற்றுமையில் தான் நம் சமூகத்தின் மரி யாதை, கண்ணியம் அனைத் தும் இருக்கிறது. எந்தச் சூழ் நிலையிலும் அதை விட்டுக் கொடுக்கக்கூடாது.

வாழும் நம்மவருக்கிடையில் பிளவுகளும், பிரச்சினைகளும் உருவாகிக் கொண்டேயிருக்கு மானால் அது சமூகத்தின் முன்னேற்றத்தை தடைபடுத் தும்.

இன்று வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் நல்ல வேலைவாய்ப்புகளில் இருக்கின்றனர். அவர்களின் அறிவு கூர் தீட்டப்பட்டு, சமூகப் பணிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

ஹாங்காங் நாட்டில் தமிழக முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கிறார்கள். குறிப்பாக காயல்பட்டினம், கீழக்கரை, நீடூர், கூத்தாநல்லூர் போன்ற ஊர்க் காரர்கள் இவர்கள்.

தமிழகத்தின் பிரபலமான இந்த ஊர்களில் கூட அவசியம் கவனத்துடன் செய்ய வேண்டிய வைகளை கோட்டை விட்டு விடுகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. அதில் நாம் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால்தான் நமது எண் ணிக்கை குறைகிறது. பிறகு இடஒதுக்கீட்டிற்காக சதவீதம் எப்படி உயர்த்திக் கேட்க முடி யும்?

தேசிய அடையாள அட்டை இன்று மிக மிக அவசியமாகும். வருங்காலத்தில் அனைத்திற் குமே இதுதான் ஆதாரமாக இருக்கப் போகிறது. நம்மில் எத்தனை பேர் விண்ணப்பித் துள்ளோம்? எண்ணிப் பாருங் கள்.

சச்சார் குழு பரிந்துரை அடிப்படையில் எவ்வளவோ மானிய உதவிகள், குறிப்பாக கல்விக்காக மத்திய அரசு தருகிறது. நம் பிள்ளைகளில் எத்தனை சதவீதம் இதனை பயன்படுத்துகின்றனர். மதர ஸாக்களின் கல்வியை மேம் படுத்த பல நூறு கோடி ரூபாய் களை ஒதுக்கினால் நம்மவர்கள் விண்ணப்பிப்பதற்கு கூட முன் வருவதில்லை.

குடும்ப அட்டைகளில் நமது பெயரை சரியான உச்சரிப்பில் பதிவு செய்யக்கூட நாம் அக்கறை காட்டுவதில்லை. பெயரில் என்ன இருக்கிறது என அலட்சியமாக இருந்து விடு கிறார்கள். தேவைப்படும் போது அங்கலாய்க்கிறார்கள். அப்படி சங்கடப்பட்டவர்களில் நானும் ஒருவன். இதுபோன்ற விஷயங்களில் எல்லா ஊர்கள்தோறும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது சமூகத்திற்கு பயனளிக் கும். இன்று கேரள முஸ்லிம் கள் இந்திய அளவில் பொருளாதார, கல்வி - வேலைவாய்ப்பில் முதலிடம் வகிக்கிறார்கள். ஆனால் அவர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள மேற்கு வங்க முஸ்லிம்கள் தாழ்ந்த நிலையில் உள்ளனர். அஸ்ஸாம் அதைவிட பரிதா பம். ஏன் இந்த நிலை? என்று பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

மக்கள் தொகையில் 25 சதவீதம் உள்ள கேரள முஸ்லிம் கள் சாதனைபடைக்கிறார்கள். தமிழ்நாட்டில் 6 சதவீதம் மட்டுமே உள்ள முஸ்லிம்கள் 60 பிரிவாக சிதைந்து கிடக்கிறார்கள். எனவே, சமூகத்தை ஒருங் கிணைப்பதே இன்றைய தலையாய பணி. அந்தப் பணி யில் அக்கறை காட்டுங்கள்.

இவ்வாறு காயல் மகபூப் குறிப்பிட்டார்.

கடையநல்லூர் தாலுகா அமைப்பு ஆரம்பகட்ட பணிகள் வருவாய்த்துறை தீவிரம்

கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அமைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போதே இதற்கான அறிவிப்பு வெளிவரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் நெல்லை மாவட்ட கலெக்டர் சமய மூர்த்தி பேசுகையில் : - கடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா அலுவலகம் அமைக்க அரசு முன்வரவேண்டுமென கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கலெக்டர்கள் மாநாட்டில் தெரிவித்த மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் பேரில் தற்போது அதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறையினர் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கடையநல்லூரை பொறுத்தவரை தென்காசி தாலுகாவில் இடம்பெற்றுள்ளது. கடையநல்லூர் பிர்கா, சேர்ந்தமரம் பிர்கா மற்றும் சிவகிரி தாலுகாவில் உள்ள நகராட்சி ஆகியனவற்றை ஒன்றிணைத்து கடையநல்லூர் தாலுகாவில் இடம் பெறும் வகையில் பஞ்.,கள் பிர்கா வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.தற்போது கடையநல்லூர் தாலுகா அமையும்போது அதற்கான எல்கை எந்த பகுதியில் இருக்க வேண்டுமென்பது தொடர்பான வரைபடங்கள் வருவாய்த்துறை மூலம் அளவிடப்பட்டு வருகிறது. மேலும் கடையநல்லூர் தாலுகாவில் இடம்பெறக்கூடிய பஞ்.,கள், டவுன் பஞ்.,கள், நகராட்சிகள் போன்றவை குறித்த பட்டியல்கள் தொடர்பான கருத்துருக்களும் கோரப்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கடையநல்லூர் தாலுகா அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பு இருக்குமென்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தாலுகா அலுவலகம் எந்த இடத்தில் அமையக்கூடும் என்பது தொடர்பான சர்வே நம்பர்களையும் வருவாய்த்துறை மூலம் தமிழக அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை: பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகள் மூடல்


தொழில் கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், 1978ம் ஆண்டு, தொழில் கல்வி பாடப்பிரிவு துவங்கப்பட்டது. மாணவர்களின் தொழில்திறன் மேம்பாட்டிற்கு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் வர்த்தகம், விவசாயம், பொறியியல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ், மின் மோட்டார் பழுது பார்த்தல், கணக்கு தணிக்கை பயிற்சி உள்ளிட்ட, 66 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தது.

இப்பிரிவுகளில் படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, 4 சதவீதம் பொறியியல் கல்லூரிகளிலும், 10 சதவீதம் பட்டயப் பிரிவுகளிலும், கலை கல்லூரிகளில், 25 சதவீதமும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பாடப்பிரிவுகள் துவங்கப்பட்ட போது, அகடமிக் பிரிவுகளை ஒப்பிடும் போது, தொழில்கல்வி பிரிவுகளில், 3:1 என்ற அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருந்தது. தற்போது, 8:1 என்ற அளவிற்கு, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதே, இந்நிலைக்கு முக்கிய காரணம். கடந்த, 1978 முதல் 1990 வரை தொழில் கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள், 5,300 பேர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, 1,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சில பள்ளிகளில், இப்பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், மிகவும் சொற்ப சம்பளத்திற்கு, ஆசிரியர்களை நியமித்து உள்ளனர்.

பல பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமிக்காமல், மாணவர்கள் சேர்க்கை இல்லை என்ற தவறான காரணங்கள் கூறி, பள்ளிகளில், இத்துறை மூடப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலர் நல்லப்பன் கூறியதாவது:

கடந்த, 2007 ம் ஆண்டு முதல் ஆசிரியர் பணி நியமனம் செய்யவும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், காலி பணியிடங்களை நிரப்பவும், எவ்வித நடவடிக்கையும், அரசு மேற்கொள்ளவில்லை. மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இப்பிரிவுகள் துவக்கப்படுவதும் கிடையாது.

மத்திய அரசு, கடந்த முறை தொழிற்கல்வி மேம்பாட்டுக்காக, 100 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதி, எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது புரியவில்லை. தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு, பல பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. பணி மூப்பு, தகுதிக்கு ஏற்ப, பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எவ்வித பதவி உயர்வும், எங்களுக்கு இல்லை என்பது, வேதனைக்குரியது.

மேலும், 27 ஆண்டுகள் பணிபுரிந்தும், நடைமுறை சிக்கல் என்ற பெயரில், 400 ஆசிரியர்கள் ஓய்வூதியம், பிற உதவிகள் ஏதும் இன்றி, ஓய்வு பெற்று உள்ளனர். இதுபோன்று, தொழில் கல்வி பாடப்பிரிவில் பாகுபாடு காட்டுவது சரியல்ல. இதற்கு, அரசு, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பள்ளி பாட புத்தகங்கள் சிடி முறையில் மாற்றத் திட்டம்


 தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை சிடி வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான, பாடத்தினை இ-கன்டன்ட் என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப முறையின் கீழ், "வெர்ஷன் 2020" இலக்கை அடைய, அடுத்த கல்வியாண்டில், கம்ப்யூட்டர் வழியாக, பாடம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக, பாடங்களை சிடி வடிவில் தொகுத்து, முதல் கட்டமாக, பள்ளிகளுக்கு வழங்கப்படும். சிடிக்கள் மூலம், ஆசிரியர்கள் பாடம் நடத்துவர். இதை தொடர்ந்து, புத்தகங்களுக்கு பதில், மாணவர்களுக்கு சிடியாக வழங்கப்படும். தற்போது, மாவட்டம் வாரியாக,6 முதல், 8 வகுப்பு பாடம் தொடர்பாக, மின்னணு பாடப்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆர்வம் உள்ளவர்கள், 6 முதல், 8ம் வகுப்பு பாடங்களில், ஏதேனும், ஒரு பாடப்பகுதியை தேர்ந்தெடுத்து, 3டி வீடியோ முறையில், எளிமையாக புரியும் வகையில், தமிழில் விளக்க பயிற்சியுடன் வழங்கவேண்டும். இப்போட்டியில், பங்கேற்போர், வரும், ஜனவரி 18ம் தேதிக்குள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்திற்கு, முழுவிபரத்தை அனுப்ப வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி, ஒருவர் கூறியதாவது: முதல் கட்டமாக, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான பாடங்களை தேர்வு செய்து, அதில், கடினமான பாடங்களை, எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கம்ப்யூட்டர் மூலம் நடத்துவதற்காக, சிடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

இதற்காக, பாடங்கள் குறித்து, "கிராபிக்ஸ், அனிமேஷன்" போன்று பாடங்களை உருவாக்கி, மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், சிடி தயாரிக்கும் போட்டி நடத்த உள்ளோம். தொடர்ந்து மாநில அளவில், புத்தகங்கள் சிடி வடிவில் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.