Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 17 ஜூலை, 2013

கடலியல் எனப்படும் ஓசனோகிராபி

 படிப்பவருக்கு ஆர்வத்தை மேலும் மேலும் துõண்டக்கூடிய துறை இது. பெருங்கடல் பற்றிய படிப்பு என்பதால் எப்போதும் கடலில் தான் இருக்க வேண்டுமோ என எண்ண வேண்டாம். கடலோரங்கள், கடல் நீர், கடல் படுகை, ஆற்றல் வளங்கள், உயிர்வளங்கள், என கடல் தொடர்பான பலவற்றைப் பற்றியும் ஆழமாக படிப்பதே இத்துறை. உயிரியல், வேதியியல், நிலவியல், நிலஇயற்பியல், கணிதம், பொறியியல் என அனைத்துத் திறன்களும் இப்படிப்பு படிப்பவருக்கு தேவைப்படுகிறது.

கடலியல் கெமிக்கல் ஓசனோகிராபி, ஜியாலஜிகல் ஓசனோகிராபி, பயாலஜிகல் ஓசனோகிராபி, பிசிகல் ஓசனோகிராபி என சிறப்புப் படிப்புப் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. கடலுக்கு அடியிலுள்ள வேதியியலைப் படிப்பது கெமிக்கல் ஓசனோகிராபி. கடல் மட்டத்திற்கு அடியிலுள்ள பூமியின் மேற்பரப்பைப் பற்றிப் படிப்பது ஜியாலஜிகல் ஓசனோகிராபி. கடல்களுக்கு அடியிலுள்ள உயிர்களைப் பற்றி, அதாவது, மரைன் லைப் பற்றிப் படிப்பது பயாலஜிகல் ஓசனோகிராபி. அலைகள், தட்பவெப்பம், உப்புத் தன்மை போன்றவற்றைப் பற்றிப் படிப்பது பிசிகல் ஓசனோகிராபி.

பேக்கேஜிங், மரைன் மார்க்கெட்டிங் மற்றும் மரைன் ஏற்றுமதி போன்ற துறைகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் சிறப்பான வேலை வாய்ப்புகள் இந்தப் படிப்பை முடிப்பவருக்குக் கிடைக்கின்றன. மேலும் ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா, தட்பவெப்பத் துறைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் அமைப்புகளிலும் நல்ல வேலைகளைப் பெற முடிகிறது.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பெற்ற கிராமம்

மகாராஷ்டிராவில் பழங்குடியின கிராமத்துக்கு, நாடு சுதந்திரம் அடைந்த, 65 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, மின்சார வசதி கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கிராம மக்கள் கொண்டாடினர்.

மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின் பிருத்விராஜ் சவான், முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள, அடர்ந்த வன மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு நடுவில், கரான்சி என்ற குக்கிராமம் உள்ளது.

சிம்னி விளக்குகள்:
பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், மின்சார வசதியே இல்லை. மின்சாரம் இல்லாததால், தெரு விளக்குகள் இருப்பது இல்லை. வீடுகளில், மண்ணெண்ணெய் மூலம் எரியும், சிம்னி விளக்குகள் தான், கண் சிமிட்டும். தங்கள் கிராமத்துக்கு, மின்வசதி செய்து தரக் கோரி, இந்த கிராம மக்கள், ஒவ்வொரு அலுவலகமாக படியேறியும் பயன் கிடைக்கவில்லை."அடர்ந்த மலை மற்றும் வனப் பகுதிகளுக்கு நடுவில், மின் கம்பங்களை அமைத்தால் மட்டுமே, மின்சார வசதியை ஏற்படுத்த முடியும். அது, இப்போது சாத்தியமில்லை' எனக் கூறி, அதிகாரிகள், தட்டி கழித்து வந்தனர்.இந்நிலையில், கடும் முயற்சி, போராட்டங்கள் காரணமாக, நாடு சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, இந்த கிராமத்துக்கு தற்போது, மின்சார வசதி கிடைத்துள்ளது. இதற்கான துவக்க விழா, சமீபத்தில் நடந்தது. முதல் முறையாக, தங்கள் கிராமத்துக்கு மின்சார வசதி கிடைத்துள்ளதை, அந்த கிராம மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மகிழ்ச்சி:
மகாராஷ்டிரா மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கரான்சி கிராமம், இதுவரை இருளில் மூழ்கியிருந்தது. கிராம மக்களின் தொடர் முயற்சி காரணமாக, தற்போது, மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதற்காக, மின்துறை அதிகாரிகள், மிகவும் சிரமப்பட்டனர். இந்த கிராமத்துக்கு மின்வசதி கிடைத்ததில், அங்குள்ள மக்களை விட, நாங்கள் தான் அதிகம் சந்தோஷப்படுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார். 

வீட்டுமனை கேட்டு குவிந்த மக்கள்


வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகம் திக்குமுக்காடியது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஞ்சாயத்து யூனியனுகுட்பட்ட வேகுபட்டியில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு (சர்வே எண்:234/2) இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித்தொழில் செய்துவரும், 50 குடும்பத்தினர் குடிசைகள் அமைத்து, ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர். குடியிருப்புகளுக்கு பட்டா இல்லாததால், மின் இணைப்பு உள்ளிட்ட சலுகைகள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

நீர்நிலை புறம்போக்கு என்பதால் பட்டா வழங்க வருவாய்த்துறையினர் மறுத்து வருகின்றனர். நீர்நிலை புறம்போக்கு பகுதி என்பதை, நஞ்சை அல்லது தரிசு என வகைமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே, பட்டா வழங்குவதாக கூறியுள்ளனர்.இதையடுத்து நீர்நிலை புறம்போக்கு இடத்தை வகை மாற்றம் செய்வதற்காக, தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமாறு வேகுபட்டி பஞ்சாயத்து நிர்வாத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட பஞ்சாயத்து நிர்வாகம், தொடர்புடைய நீர்நிலை புறம்போக்கு இடத்தை தரிசு நிலமாக வகைமாற்றம் செய்து ஆணை பிறப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.மாதங்கள் பல கடந்தும் இதுவரை வகைமாற்றம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த வேகுபட்டி கிராம மக்கள், பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுபோன்று புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட சந்தைப் பேட்டையில் குடிசைகள் அமைத்து ஆண்டாண்டு காலமாக குடியிருந்து, துப்புரவுத்தொழில் செய்துவரும் குறவர் மற்றும் அருந்ததியினர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மக்கள், தங்களுடைய குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இவ்வாறு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வேகுபட்டி கிராம மக்கள் மற்றும் புதுக்கோட்டை நகர்ப்பகுதி மக்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து முற்றுகையிட்டதால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் நேற்று திக்குமுக்காடியது. இவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனோகரன் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.