Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 5 ஜூலை, 2012

சீமானின் ஈழத் தமிழர் ஆதரவு போலித்தனமானது :திருமாவளவன்

ஆனந்த விகடன் கேள்விக்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில்

''பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?''


''என்னைப் பொறுத்தவரை அம்பேத்கரை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படித்தான் பெரியாரையும் பார்க்கிறேன். பெரியார் வாழ்ந்த காலத்தின் நிலவியல், அரசியல் போன்றவற்றைப் புரிந்துகொள்ளாமல் எதுவும் பேசக் கூடாது. அப்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம் இருந்தது. தமிழ்நாடு அப்போது உருவாகவில்லை. அந்தச் சமயத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கினார் பெரியார். திராவிடக் கருத்தியலைப் பேசினார். அது சரிதான். அதன் பின்னரே 1956-ல் மொழிவழி மாகாணங்கள் உருவாகி தமிழ்நாடு உருவானது. இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பது சரியானதே. ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசவே, அன்றைக்குப் பெரியார்தான் வித்திட்டார் என்பதை மறந்து, திராவிடத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளுவது நன்றியுணர்வு அற்ற செயல். பெரியாரிடம் கருத்து மாறுபட் டால் விமர்சனம் செய்யலாம். ஆனால், அவரையும் திராவிடக் கருத்தியலின் பங்களிப் பையும் கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அப்படிக் கொச்சைப்படுத்துபவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் எத்தகை யது? தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவத் தேசியத்தை, இந்திய தேசியத்தை, இந்தி தேசியத்தை எதிர்ப்பதாக, சாதிகளை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வெறும் மொழி உணர்வு, இன உணர்வு என்கிற அடிப்படையில் எழும் தமிழ்த் தேசியம் சரியானது அல்ல. ஈழ மக்களை நான் ஆதரிக்கிறேன் என்றால், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் என்பதால் அல்ல; அங்கே அவர்கள் சிங்கள ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான். ஆனால், ஈழத்தை ஆதரிக்கிறவர்கள் அங்கே வாழ்ப வர்கள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக் காக ஆதரிக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் பரமக்குடியில் உள்ள தலித் தமிழர்கள் கொல்லப்பட்டால் கேட்கத் துணிச்சல் இல்லாதவர்கள், ஈழத்தில் நடந்தால் மட்டும் கூக்குரல் இடுவேன் என்பது போலித்தன மானது!''


 
நன்றி : ஆனந்தவிகடன் 
11-ஜூலை -2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா யாத்திரை

பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாத்தின் மாண்பை காக்கவும், வலிமை படுத் தவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் மாநிலம் தழுவிய மஹல்லா யாத்திரையை ஜுலை-7 சனிக்கிழமை முதல் நெல்லை மாவட்டம் தென்காசியி லிருந்து தொடங்குவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டத்தில்
 முடி வெடுக்கப்பட்டுள்ளது.

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 04-07-2012 புதன் கிழமை காலை 11 மணிக்கு சென்னை - 1 மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள இலக்கம் 36, காயிதெ மில்லத் மன்ஸிலில் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில்  நடைபெற்றது.
 மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

 கூட்டத்தின் நோக்கம் குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விளக் கினார். இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
 பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் தின் மாண்பை காக்கவும் அதனை வலிமைப்படுத்தும் வகையில் ஷரீஅத் பஞ்சாயத், பைத்துல்மால், மதரஸாக்கள் ஓராசிரியர் பள்ளி உள்ளிட்ட வைகளை உருவாக்கவும் வலி யுறுத்தும் வகையில் மஹல்லாக் கள் தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் யாத்திரை செல்வதென்று 2012 ஏப்ரல் 14ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு எடுத்த முடி வின் படி எதிர் வரும் ஜுலை 7ம் தேதி முதல் நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து இந்த மஹல்லா யாத்திரையை தொடங்குவதெனவும்,இக்கூட்டம் முடிவு செய்கிறது.

 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சேவை திட்டங்களில் ஒன் றான புனித ரமளான் மாதத்தில் கடந்த காலங்களில் செய்த பணிகளை குறிப்பாக ஏழை களுக்கு உணவுப்பொருட்கள், புத்தாடைகள், வழங்குதல் சகோதரதுவத்தை வலியுறுத் தும் இப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவை களை இன்னும் சிறப்பாக செய்ய பிரைமரி அமைப்புகளை இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ரமளான் மாதத்திற்கு பள்ளி வாசல் நிர்வாகங்களுக்கு உத வும் வகையிலும், பள்ளிவாசல் களை தூய்மைப் படுத்தும் வகையிலும், பணியாற்ற முஸ் லிம் மாணவர் பேரவை மற்றும் முஸ்லிம் யூத் லீக் செயல்வீரர் களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 இந்த ஆண்டு ரமளான் மாத நோன்பு ஜுலை 21ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. ரமளான் மாதத்தில் நோன்பு கஞ்சி நோன்பாளிகளுக்கும் அப்பகுதி யில் வாழும் சகோதர சமுதாய ஏழை எளிய மக்களுக்கும் வழங்கப்படுகிறது.

பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சிக்கான பச்சரிசி அல்லது பச்சரிசி குருணையை தமிழக அரசு மானிய விலையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு அதிகாரிகள் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப் படாத பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க முடியாது எனக் கூறி விண்ணப்பங்களை நிரா கரித்துள்ளனர்.

நோன்பாளிகளுக்கு உதவும் வகையில் அரிசி வழங்கப்படு கிறதேயன்றி பள்ளிவாசல் நிர் வாகங்களுக்கு அரிசி வழங்கப்படுவதில்லை. இந்த அடிப்படை அம்சத்தை கவனத் தில் கொண்டு வக்ஃப் வாரியத் தில் பதிவு பெற்ற பள்ளி பதிவு பெறாத பள்ளி என பாகுபாடு காட்டாமல் அனைத்து பள்ளி களுக்கும் நோன்பு கஞ்சி அரி சியை வழங்கவும், அதனை நோன்பு துவங்கும் ஜுலை 21ம் தேதிக்கு முன்னதாகவே வழங் கிட சம்மந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.