Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 29 ஏப்ரல், 2013

கூடங்குளம் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 925 மெகாவாட்: அணுசக்தி துறை அறிவிப்பு



நெல்லை, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதலாவது யூனிட் அமைக்கப்பட்டு, 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி துவங்க, தயாராக உள்ளது. இரண்டாவது யூனிட்டிலும், 1000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான, கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

"இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கே வழங்க வேண்டும்' என, தமிழக அரசு முதல் தொழில், வர்த்தக அமைப்புகள் வரை, குரல் கொடுத்து வருகின்றன. இதற்காக, மதுரை சிறுகுறுந்தொழில் அதிபர்கள் சங்கம் (மடீட்சியா) என்ற அமைப்பும், டில்லி பார்லிமென்ட் முன், போராட்டம் நடத்தியது. "தமிழக மின்தேவைக்கு, மின்பாதை அமைக்க வேண்டும்.
கூடங்குளம் மின்சாரத்தை, முழுமையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி, பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, அணுசக்தி துறையின் சார்பு செயலாளர் சி.டி.சாக்கோ, "மடீட்சியா' நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கூடங்குளத்தில் உற்பத்தியாகும், 2000 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்திற்கு 925 மெகாவாட், கர்நாடகத்திற்கு 442 மெகாவாட், கேரளத்திற்கு 266 மெகாவாட், புதுச் சேரிக்கு 67 மெகாவாட், ஒதுக்கீடு செய்யப்படாதவை 300 மெகாவாட்' என, குறிப்பிடப்பட்டுள்ளார். அணுசக்தித் துறையின் அறிவிப்புக்கு, "மடீட்சியா' தலைவர் மணிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதழியல் துறை (Journalism ) படிப்புகள்


இன்றை கால கட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கேற்ப எளிதான, பரந்த வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி, தொலைக்காட்சிகள் மட்டுமே தகவல் அறிய உதவும் சாதனங்களாக இருந்தநிலை, இன்று தலைகீழாக மாறியிருப்பது ஒன்றே, இத்துறையில் வளர்ச்சியை காட்டுகிறது.

இதழியல் துறையில் அவரவர் பதவி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் கிடைக்கிறது. பேனாவும், புகைப்படக் கேமராவும் மட்டும் இருந்தால் போதும் என்று எண்ணக்க்கூடாது. நடப்பு விவகாரங்கள் உட்பட அனைத்து துறைகள் சார்ந்த அறிவும், தெளிவான கண்ணோட்டமும், எளிய மொழி நடையும், கருத்துக்களை துணிவுடன் வெளியிடக்கூடிய மனப்பாங்கும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் இத்துறைக்கு இன்றியமையாதது.
நேரம் காலம் கருதாமல் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டியதும் பத்திரிக்கையாளர்களின் கடமை.

அரசு வகுத்துள்ள நெறிகளின்படி நிருபருக்கு குறைந்த பட்சம் ரூ. 5,500 ல் இருந்து 10,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. மூத்த நிருபருக்கு இந்த ஊதியம் மேலும் அதிகரிக்கிறது.

உதவி ஆசியர் பணிக்கு ரூ. 8,000 என்று தொடங்கி ரூ. 15,000 ஆயிரம் வரை கிடைக்கிறது. அனுபவம், தகுதி போன்றவற்றின் அடிப்படையில் இது மேலும் அதிகரிக்கும். பணி புரியும் நிறுவனங்களைப் பொறுத்து இந்த ஊதியம் வேறுபடுகிறது. தற்போது இத்துறையில் போட்டி அதிகரித்திருப்பதால், பத்திரிக்கையாளர்களின் ஊதியமும் அதற்கேற்ப அதிகரித்து வருகிறது.

மேலும் பயணப்படி, தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. பலதரப்பட்ட பிரமுகர்களோடு பழகும் வாய்ப்பு, இத்துறையில் பணி புரிபவர்களுக்கு கிடைக்கும் சாதகமான அம்சம் ஆகும்.

நாட்டில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் இதழியல் பாடங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இதழியல் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிலையங்கள் :

1. University Of Madras
2. SRM University , Chennai
3. Madras Christian College, Chennai
4. Asian College Of Journalism , Chennai
5. Alagappa University
6. Annamalai University
7. Bharathidasan University
8. Bharathiyar University
9. Centenary Bldg College , Chennai 
10. softview media college , Chennai

இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி படிப்பு

இந்த நூற்றாண்டில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியத்துறை பயோ டெக்னாலஜி. என்சைம்கள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றின் உதவியுடன் ரசாயனப் பொருட்கள், எரிபொருட்கள் உற்பத்தி செய்யும் துறையே இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி என்கிறோம்.

உயிரியல் அடிப்படையில் பொருள்களை உருவாக்கும் புதிய துறை இது. சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு போன்ற துறைகளில் இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள், வேளாண் தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், உணவு பதனீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை அமைப்புகள், பயோ எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், பயோ டெக் ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

நான்கு ஆண்டு இளநிலைத் தொழில்நுட்பப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிலையங்கள் :

1. ANNA UNIVERSITY  , CHENNAI

2. ALAGAPPA COLLEGE OF TECHNOLOGY , CHENNAI

3. Arulmigu Kalasalingam University

4. Bharathidasan Institute of Engineering & Technology, Tiruchirappalli

5. Kamaraj College of Engineering & Technology, Madurai 

கேம் (GAME ) டிஸ்சைனிங் படிப்பு


சாப்ட்வேர் டெவலப்மெண்டில் கேம்டிசைனிங் என்பது இன்று ஒரு தவிர்க்க முடியாத வடிவமாகும்.

போர்டு கேம்ஸ், வீடீயோ கேம்ஸ், கார்ட் கேம்ஸ் என இன்று கேம்ஸ்களோடு அறிமுகம் இல்லாதவர் யார் இருக்கிறார்? சினாப்ஸ், ஸ்மாக்ஆல், இஸிர் இன் போடெக் போன்ற கேம்ஸ் சாப்ட்வேர் நிறுவனங் களில் இத் துறையில் சிறப்புத் திறன் பெற்றிருப் பவருக்கு நல்ல வாய்ப் புகள் கிடைக்கின்றன.

இத்துறையில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் கேம் டிசைன், டிப்ளமோ இன் கேம் டிசைன் அண்ட் கேமிங், வீடியோ கேம் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் சர்டிபிகேஷன் என பல படிப்புகள் இருக்கின்றன.

ஐதராபாத்திலுள்ள கலர் சிப்ஸ் அனிமேஷன் டிரெயினிங் சென்டர், அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், மும்பை யிலுள்ள டிஜிடல் அகாடமி பிலிம் ஸ்கூல் மற்றும் சென்னையிலுள்ள இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் ஆகியவற்றில் இந்தத் துறைப் படிப்புகளைப் படிக்கலாம்.