Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 20 மே, 2013

நேனோடெக்னாலஜி (NANOTECHNOLOGY) படிப்புகள்


மருத்துவம், ஏரோஸ்பேஸ், இன்ஜினியரிங், மருத்துவம், தொழிற் துறைகளில் நேனோடெக்னாலஜி அடுத்த சில ஆண்டுகளில் புரட்சியை உருவாக்கப் போகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

 சூரிய ஒளியிலிருந்து அளவற்ற மின்சாரம் தயாரிப்பதிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட செல்லை சரி செய்திட, பெரிய நீர் நிலைகளை சில நொடிகளில் சுத்தம் செய்திட என்று இதன் பயன்பாட்டைப் பற்றிக் கேட்டால் நம்ப முடியாததாக இருக்கிறது.

இப்படித்தான் கம்ப்யூட்டரைப் பற்றியும் இதன் பயன்பாட்டைப் பற்றியும் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். அதுபோலவே விஞ்ஞானத்தின் அடுத்த புரட்சி நேனோடெக்னாலஜி தான் என கருதப்படுகிறது.

குற்றவாளிகளின் டி.என்.ஏவைக் கொண்டு அவர்களை எளிதாக அடையாளம் காணுவது, கெமிக்கல் ஆயுதங்களிடமிருந்து பாதுகாக்கும் ஆடைகளைத் தயாரிப்பது, இது இயற்பியல், வேதியியல், பயோஇன்பர்மேடிக்ஸ், பயோடெக்னாலஜி போன்றவற்றின் மிகச் சிறந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் முறையாக தற்போது அறியப்படுகிறது.

16 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இதைப் பற்றிய ஆய்வுகள் தொடங்கினாலும் கடந்த சில ஆண்டுகளாகத் தான் இத் துறை வேகமாக வளரத் தொடங்கியுள்ளது.

நேனோடெக்னாலஜி தகுதிக்கான வேலைத் துறைகள் எவை தெரியுமா? பார்மாசூடிக்கல், மருத்துவம், விவசாயம், உணவு மற்றும் பானங்கள், சுற்றுச்சூழல் நிறுவனங்கள், அரசு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் ஆய்வு மையங்கள்.கல்வி நிறுவனங்கள், பயோடெக்னாலஜி, ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் மற்றும் மையங்கள் மற்றும் புதிய பொருட்களை வடிவமைப்பது, தொழில் நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளை கிரியேட்டிவாக பயன்படுத்தக்கூடிய மீடியா மற்றும் கம்யூனிகேஷன் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் நானோடெக்னாலஜியைப் படித்துத் திறன் பெறுபவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.

தற்போது இத்துறையில் பட்ட மேற்படிப்புகள் குறிப்பாக எம்.டெக். படிப்பு மட்டுமே தரப்படுகிறது.

என்றாலும் விரைவில் பட்டப்படிப்புகளும் சிறப்பு டிப்ளமோ படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றே நம்பலாம்.

இதில் சிறப்புப் படிப்புகளைத் தரும் நிறுவனங்கள்:
Jawaharlal Nehru Center for Advanced Scientific Research, Bangalore
Indian Institute of Science, Bangalore
National Physical Laboratory, Delhi
Solid State Physics Laboratory, Delhi
National Chemical Laboratory, Pune
Central Scientific Instruments Organization, Chandigarh;
Defence Materials Store Research & Development Organizations, kanpur
Indian Institutes of Technology at Kanpur, Chennai, Guwahati, Delhi and Mumbai

இது தவிர டில்லி பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வுப் படிப்புகள் உள்ளன. தனியார் துறையில் நொய்டாவில் இயங்கும் அமிட்டி இன்ஸ்டிடியூட் ஆப் நேனோடெக்னாலஜி 2 ஆண்டு எம்.டெக். படிப்பைத் தருகிறது.

2011-TNPSC குரூப் 2 தேர்விலும் மோசடி


கடந்த, 2012ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்விலும், மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, வணிக வரித் துறை துணை கமிஷனரான ரவிக்குமார் என்பவரை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில், 2012 ஆக., 12ம் தேதி, அரசுத் துறையில் காலியாக இருந்த, 3,631 பணியிடங்களுக்கு நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், ஈரோடு, தர்மபுரி, அரூரில் வினாத்தாள் அவுட்டானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வில் மோசடி செய்து, வினாத்தாளை வாங்கிய, நாகை மாவட்ட வணிக வரித் துறை துணை கமிஷனராக பணியாற்றி வந்த ரவிக்குமார் என்பவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, ஈரோடு ஜே.எம்., 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மே, 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டதை அடுத்து, ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனர்.

கடந்த, 2012ல் நடந்த, குரூப் 2 தேர்வில் மோசடி நடந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வும் ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இது குறித்து, சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2011ம் ஆண்டு, ஜூலை, 30ம் தேதி, டி.என்.பி. எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6,695 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும், 4.80 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் வெளியாகி, தேர்வானவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. கடந்த, 2012ல் நடந்த, குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அவுட் ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரோக்கர்களிடம் வினாத்தாள் வாங்கித் தேர்வு எழுதியோர் பற்றி விசாரித்து வந்தோம். அதிரடி திருப்பமாக, கடலூர் மாவட்டம், பண்ருட்டி, பத்தரக் கோட்டையைச் சேர்ந்த சீராளன் மகன் ரவிக்குமார், 32, கடந்த, 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வின் போது, கடலூர் புரோக்கர்கள் மூலம் வெளியான வினாத்தாளை வாங்கியதும், தேர்வு எழுதி, தற்போது, நாகை மாவட்ட வணிக வரித் துறையில் துணை கமிஷனராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, ரவிக்குமாரை கைது செய்துள்ளோம். மேலும் மோசடி செய்து, தேர்வு எழுதி, அரசுத் துறையில் பணியாற்றி வருபவர்கள் பற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்

கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் குடும்பத்துடன் கொலை ?



டில்லியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பத்ரிஷ் தத். இவர் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பெருமளவில் ஸ்பாட் பிக்சிங் நடைபெறுவதாக புகார் பதிவு செய்தார். இது குறித்து எப்.ஐ.ஆர்.,ம் பத்ரிஷால் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் பதிவு செய்த மறுநாளே (மே 10ம் தேதி) குர்கானில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் தனது மனைவியுடன் பிணமாக கிடந்துள்ளார். இந்த மர்ம சாவு குறித்து குர்கான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பத்ரிஷ் உடலில் குண்டு காயங்கள் இருந்த போதிலும் இதனை தற்கொலை என்றே போலீசார் கூறி வருகின்றனர். டில்லி போலீசில் ஸ்பெஷல் செல் அதிகாரியாக பணியாற்றி வந்த பத்ரிஷ், ஸ்பாட் பிக்சிங் குறித்த மும்பை தரகர்கள் சிலரின் தொலைப்பேசி உரையாடல்களை கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக அவர் மே 09ம் தேதி எப்.ஐ.ஆர்., ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

எப்.ஐ.ஆர்., அறிக்கை :
பத்ரிஷ் பதிவு செய்த எப்.ஐ.ஆர்., அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எப்.ஐ.ஆர்., அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : மேட்ச் பிக்சர்ஸ் மற்றும் தரகர்கள் டில்லி,மகாராஷ்டிரா,குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள்; இந்தியன் பிரிமியர் லீக்கில் விளையாடும் வீரர்கள் சிலரும் இவர்களுடன் இணைந்து ஸ்பாட் மற்றம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டுள்ளனர்; இது தொடர்பாக ஏப்ரல் 3வது வாரத்தில் ஸ்பெஷல் செல்லிற்கு புகார் ஒன்று பெறப்பட்டுள்ளது; அதில் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் சூதாட்டத்தில் நிகழுலக தாதாக்கள் சிலரும் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது; டில்லியில் உள்ள சில மர்ம அமைப்புக்கள் மூலம் இவை நடைபெறுகிறது; தற்போது விளையாடும் வீரர்கள் பலருக்கும் பெரிய அளவிலான தொகைகள் கைமாறி உள்ளது; இது டிக்கெட் விற்பனை மூலம் தங்கள் சம்பாதித்த பணத்தை இழக்கும் விளையாட்டு பிரியர்கள் மற்றும் அப்பாவிகளை ஏமாற்று செயல்; இது மைதானத்திற்கு வந்து அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி விளையாட்டை ரசிக்கும் வீரர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்போட்டிகளை டி.வி.,கள், இன்டர்நெட்கள் மூலம் பார்க்கும் மக்களை ஏமாற்றும் போலி விளையாட்டு; இந்த விளையாட்டுக்களை ஒளிபரப்புவோர் விளம்பரங்கள் மூலம் பெரிய தொகையை பெறுகின்றனர்; இது புரியாமல் இதனை ரசிக்கும் அப்பாவி மக்களிடம் அவர்களின் பணத்தையும் நேரத்தையும் கொள்ளையடிப்பது போன்ற செயல்; வீரர்களும், தரகர்களும் போட்டியின் எப்பகுதியில் சூதாட்டம் செய்ய வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விடுகின்றனர்; இவர்கள் ஏற்கனவே தீர்மானத்த முடிவுகளையும், அதிக அளவிலான பெட்களையும் மைதானத்திலும், டிவியிலும் கண்கூடாக காண முடிகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக்சிங்கை தடுக்க சட்டம் :
விளையாட்டுக்களில் சூதாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபில், தம்மால் இயன்ற அளவு இந்த சட்டத்தை விரைவில் அமல்ப்படுத்த முயற்சி செய்வதாகவும், இந்த சட்டம் குறித்த வரைவு விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சூதாட்டம் விவகாரம் தொடர்பாக ஸ்ரீசந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் 3 ‌பேரை டில்லி போலீசார் கைது செய்திருப்பதாகவும், மும்பை, சண்டிகர், கோல்கட்டா, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களின் உதவியுடன் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், வீரர்களிடம் குரல் சோதனையும் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.