Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 20 பிப்ரவரி, 2013

பாராசிட்டாமல் (PARACETAMOL ) குறைப்பால் உயிரிழப்பு தவிர்ப்பு


பாராசிட்டாமல் மாத்திரை உட்கொள்ளும் அளவு குறைக்கப்பட்டதால், 600 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிநிவாரணியாக பயன்படும் பாராசிட்டாமல் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்வதால், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு, பலர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க, பிரிட்டனில் பாராசிட்டாமல் மாத்திரை விற்பனை குறைக்கப்பட்டது. மருந்தகங்கள் மூலம், 32 பாராசிட்டாமல் மாத்திரைகளும், மருந்தகம் அல்லாத இடங்களில், 16 மாத்திரைகளும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என, கடந்த, 1998ல் பிரிட்டன் அரசு, உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது குறித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கேத் ஹாட்டன் குறிப்பிடுகையில், "இந்த உத்தரவின் மூலம் பாராசிட்டாமல் உட்கொள்வது குறைக்கப்பட்டதால், 600 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இந்த மாத்திரைகளை இன்னும் குறைப்பதன் மூலம், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மேலும் பலர் உயிரிழப்பதை கட்டுப்படுத்த முடியும்' என்றார்.

ரத்தினங்கள் மற்றும் வைரங்கள் தரம் பிரிப்பதற்கான பயிற்சி வகுப்புகள்


இரத்தினக் கற்களைப் பற்றி கற்றுக்கொடுப்பதற்காக Institute of Diamond Trade(IDT) எனும் வைர வணிகம் பற்றிய கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இரத்தினங்கள் மற்றும் வைர வணிகத்துக்கான கல்வியை ஆன்லைன் வழியாக கற்றுக்கொடுக்கிறது. இந்த துறையில் ரத்தினங்கள் பற்றிய அறிவை வளர்ப்பதற்கு உதவும் வகையில் 60 நாள் அறிமுகப் பயிற்சி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

அதேபோன்று வைர நகை விற்பனையாளர்கள், மதிப்பீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் வைரங்கள் தரம் பிரிப்பதற்கான 8 வார பயிற்சி வகுப்பு கற்றுக்கொடுக்கப்படுகிறது. வைரங்கள் தரம் பிரிப்பதற்காக நிறம், தூய்மை, வெட்டுதல் மற்றும் கேரட் அளவு பற்றிய சர்வதேச தர மதிப்பீட்டு விபரங்கள் கற்றுக்கொடுக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள் வைர நகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலும், ஆய்வுக்கூடங்களிலும் வேலை செய்யலாம்.

ஐடிடி நிறுவனம் இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது. பயிற்சிக்கான கட்டணங்கள் முறையே, ரத்தினங்கள் பற்றிய பயிற்சிக்கு ரூ.9,950ம், வைரங்கள் பற்றிய பயிற்சிக்கு ரூ.5,515 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர்வதற்கான கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சான்றிதழ் படிப்புகளும் கற்றுத்தரப்படுகிறது. அவை பற்றிய தகவல் அறிய www.idt.edu.in என்ற இணையதளத்தை காணவும்.

சமுதாயத்தை மேம்படுத்தும் சமூகசேவை படிப்பு


தொடக்கத்தில் சமூகசேவையோடு தொடர்புடைய படிப்பாக மட்டுமே சமூகப்பணி கருதப்பட்டது. ஆனால் வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளான போதைப்பொருள் பயன்பாடு, மனநல பிரச்னைகள், முதியோர் வாழ்வு, தொழிலாளர் நலன், கிராமப்புற மேம்பாடு போன்றவற்றுக்கு பெரும் பங்காற்றும் துறையாக விளங்க உதவுவது சமூகப்பணி தான்.

சமூகசேவையில் ஈடுபடுபவருக்கு ஏற்படும் மனதிருப்தியை வார்த்தைகளால் கூற முடியாது. மனிதர்களை உளவியல் ரீதியாக அணுகும் ஆர்வம், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவை ஒருவரிடம் இருந்தால், இப்படிப்பை மேற்கொள்ளலாம். பிறரின் வாழ்வில் நம்மால் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்க முடியும், என்ற நம்பிக்கை இத்துறைக்கு அவசியம் வேண்டும்.

சமூக பொருளாதார மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளை களைய முயற்சிப்பதே சமூகவியலாளர்களின் முக்கியப் பணி. இதற்கு கவுன்சலிங் எனப்படும் ஆலோசனை, மாநாடுகளை நடத்துவது, ஆதாரமான வளங்களை அதிகப்படுத்துவது, பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சமூகத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவது, உடல்நல திட்டங்களை செயல்படுத்துவது என இவர்களின் பணி, உயரிய நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும்.

சமூகப் பணிகளின்கீழ் கிளினிகல் சமூகப்பணி, பள்ளி சமூகப்பணி, உளவியல் சமூகப்பணி, மறுசீரமைப்பு மற்றும் குற்றங்களை களையும் பணி, மருத்துவ சமூகப்பணி, சமுதாயப்பணி என பல பிரிவுகள் உள்ளன. தொழிற்சாலை சமுதாயப் பணியும் இருக்கிறது.

அரசுத் துறைகளிலும், தன்னார்வ நிறுவனங்களிலும் சமூகப்பணி படித்தவருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. எம்.எஸ்.டபிள்யூ., அல்லது எம்.ஏ. படிப்பாக இதைப் படிக்கலாம். யுனெஸ்கோ, யுனிசெப், லேபர் பீரோ போன்றவற்றில் இதைப் படிப்பவருக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன.