Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 28 ஜூலை, 2012

மெட்டலர்ஜி இன்ஜினியரிங் படிப்பு

பொறியியல் படிப்புகளில் உள்ள முக்கிய பிரிவுகளில் மெட்டலர்ஜி இன்ஜினியரிங் பிரிவும் ஒன்று. மெட்டலர்ஜி என்பது, மெட்டீரியல்ஸ் சயின்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் ஆகியவை தொடர்பான துறையாகும்.


இது, மெட்டலிக் அம்சங்களின் பௌதீக மற்றும் ரசயானப் பண்புகளையும், அதன் உள்மெட்டலிக் இணைப்புகள் மற்றும் அதன் கலப்புகள் ஆகியவைப் பற்றி ஆய்வு செய்கிறது.
அனைத்து விதமான மெட்டல் தொடர்பான பகுதிகளையும் கொண்டு, ஒரு விரிவான துறையாக மெட்டலர்ஜி பொறியியல் விளங்குகிறது. பிசிக்கல் மெட்டலர்ஜி பிரித்தெடுக்கும் மெட்டலர்ஜி மற்றும் மினரல் புராசஸிங் போன்றவை அத்துறையின் 3 பெரும் பிரிவுகளாகும்.
பிசிக்கல் மெட்டலர்ஜி என்பது சிக்கல் தீர்த்தல் செயல்பாட்டில் பயன்படுகிறது. பல்வேறு விதமான உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படும் மெட்டாலிக் கூட்டமைப்பு வகைகளை மேம்படுத்தலாம்.


பிரித்தெடுக்கும் மெட்டரர்ஜி தொழில்நுட்பம் என்பது, தாதுக்களிலிருந்து மெட்டலை பிரித்தெடுக்கும் செயல்பாட்டில் பயன் படுத்தப்படுகிறது. புவி மேலோட்டில் இருந்து தாதுப் பொருட்களை சேகரிக்கும் செயல்பாட்டில் மினரல் புராசஸிங் தொழில்நுட்பம் பயன்படுகிறது.
மெட்டலர்ஜிக்கல் பொறியியல் பாடத்தை முதன்மையாக எடுத்துப் படிக்கும் ஒருவர், மேற்கூறிய 3 துறைகளைப் பற்றிய அடிப்படைகளைக் படிப்பதோடு, பொதுவான பொறியியல் பாடத்தையும் படிப்பார்கள்.


நமது சமூகம் இயங்க நமக்கு உலோகங்கள் தேவை. கார்கள், பைக்குகள், விமானங்கள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களின் முக்கியப் பகுதி பொருளாக உலோகம் உள்ளது. எனவே, இத்தகைய உலோகங்கள் மற்றும் தாதுப்பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் வடிவமைத்தல் மற்றும் மெட்டல் பண்புகளை ஆராய்தல் போன்ற பல விஷயங்களை மெட்டலர்ஜிக்கல் பொறியியல் கற்றுத்தருகிறது.


இதைதவிர, வெவ்வேறு விதமான உலோகங்களை சோதனை செய்தல், சூழ்நிலை மாற்றங்கள் மற்றும் பிற நிலைகளைப் பற்றியும் இத்துறை மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
மெட்டலர்ஜி நிபுணர்கள் என்பவர்கள், தாதுக்களை கையாளுதல் மற்றும் புதிய கூட்டிணைவுகளை மேம்படுத்தல் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், மேலும் வெவ்வேறு வகையான உலோகங்களின் செயல்பாட்டிற்கான புதிய முறைகளையும் உருவாக்குகிறார்கள்.


மெட்டலர்ஜி படிப்பை தமிழ்கத்தில் வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:
1. என்.ஐ.டி., திருச்சி
2. பி.எஸ்.ஜி., டெக்னாலஜி, கோவை
3. அரசு பொறியியல் கல்லூரி, சேலம்

மாணவர்கள் படிப்பு, வேலை, பணம் என வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளக்கூடாது

 மாணவர்கள் படிப்பு, வேலை, பணம் என தங்கள் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளக்கூடாது. அதையும் தாண்டி சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.காந்திசெல்வன் கூறினார்.
 
 சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் காந்திசெல்வன் பேசியது:- "நாட்டில் பெரும்பாலான கல்விக்கூடங்கள் வியாபார நிறுவனங்களாக மாறிவிட்டது. எல்கேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு கூட பெற்றோர்கள் லட்சங்களை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு பணம் செலுத்தி படிக்க வைக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் மனதில் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே உருவாக்குகிறார்கள்.
 
 மாணவர்களும் படிப்பு, வேலை, பணம் என தங்கள் வாழ்க்கையை சுருக்கி கொள்கிறார்கள். இவைகளை தாண்டி சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் செய்ய வேண்டிய பணிகள் மாணவர்களுக்கு நிறைய உள்ளது. மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமையை சமூக நலனுக்கும், இயலாதவர்களுக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.
 
 இன்னும் 10 ஆண்டுகளில் 50 லட்சம் தொழில்நுட்ப மாணவர்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கிவருகிறது. தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.