Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 28 ஜூலை, 2012

மாணவர்கள் படிப்பு, வேலை, பணம் என வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளக்கூடாது

 மாணவர்கள் படிப்பு, வேலை, பணம் என தங்கள் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளக்கூடாது. அதையும் தாண்டி சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.காந்திசெல்வன் கூறினார்.
 
 சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் காந்திசெல்வன் பேசியது:- "நாட்டில் பெரும்பாலான கல்விக்கூடங்கள் வியாபார நிறுவனங்களாக மாறிவிட்டது. எல்கேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு கூட பெற்றோர்கள் லட்சங்களை செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு பணம் செலுத்தி படிக்க வைக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் மனதில் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே உருவாக்குகிறார்கள்.
 
 மாணவர்களும் படிப்பு, வேலை, பணம் என தங்கள் வாழ்க்கையை சுருக்கி கொள்கிறார்கள். இவைகளை தாண்டி சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் செய்ய வேண்டிய பணிகள் மாணவர்களுக்கு நிறைய உள்ளது. மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமையை சமூக நலனுக்கும், இயலாதவர்களுக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.
 
 இன்னும் 10 ஆண்டுகளில் 50 லட்சம் தொழில்நுட்ப மாணவர்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கிவருகிறது. தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக