Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆன்-லைனில் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம்


பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கல்வித் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலமே ஆன்லைனில் உதவித் தொகைக்கு வி்ண்ணப்பிக்கும் புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூ், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.12.58 கோடி மதிப்பீ்ட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக நெல்லையில் உயர் நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கு முன்பு உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதா, பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள முடியாது. பள்ளிகளிலும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக 19 இலக்க எண் வழங்கபட உள்ளது. இந்த 19 இலக்க எண்ணை பதிவு செய்து மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவரே விண்ணப்பத்தின் நிலவரம், உதவித் தொகையின் நிலவரம் ஆகியவற்றை பிரத்யேக எண் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த புதிய திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் அமலுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

அஸ்ஸாமில் தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் முஸ்லிம் லீக் நிவாரண குழுவினர் 250 முகாம்களில் தங்கி இருப்பவர்களிடம் நேரடி விசாரணை


சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவ ரத்தின்போது பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந் தித்து துயர் துடைக்கும் பணி யில் ஈடுபட அமைக்கப்பட்ட குழுவினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அஹமது தலைமையில் முதல் நாளாக நேற்று 250 முகாம்களில் தங்க வைக் கப்பட்டி ருப்பவர்களிடம் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறிய குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து உடனடி யாக தக்க நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி கூறினார் கள்.

அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் பி.வி. அப்துல் வஹாப், கேரள மாநிலச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தேசியச் செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, உ.பி. மாநிலத் தலைவர் டாக்டர் மதீன், மும்பை மாவட்டச் செயலாளர் சி.ஹெச். அப்துல் ரஹ்மான் ஆகியோர் 23-8-2012 அன்று காலை அஸ்ஸாம் மாநில தலைநகர் குவஹாத்தி சென்றனர். விமான நிலையத் தில் அஸ்ஸாம் மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகள் வர வேற்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அஸ்ஸாம் கலவர நிவா ரணக் குழு விமான நிலையத்தி லிருந்து நேரடியாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிக் கப்பட்டுள்ளவர்கள் தலைநகர் குவஹாத்தியில் முகாமில் தங்கியிருப்பவர்கள் முதலில் சென்று பார்த்து விபரங்கள் கேட்டனர். குவஹாத்தியிலி ருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள துப்ரி மாவட்டத்திற்கு சென்றனர். அங்கு 250 முகாம் களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு முகாம்களில் பாதிக் கப்பட்டவர்களிடம் விசாரிக்கும் போது அவர்களது அவலக்குரல் குழுவினருக்கு கண்ணீரை வர வழைப்பதாக இருந்தது. அனைத்து சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் தினக் கூலிகளாக வேலை செய்யும் ஏழை முஸ்லிம்களை திட்ட மிட்டே தாக்கப்பட்டதும், அவர் கள் செய்வதறியாமல் நிராயுத பாணியாக்கப்பட்டிருப்பதும் வேதனையளிக்கக்கூடிய செய் தியாகும்.

தேசியத் தலைவர் இ.அஹ மது தiமையிலான குழு முகாம் களில் தங்கியிருந் தவர்களை சந்தித்து முழுமையான தகவல் களை பெற்றபின், துப்ரி மாவட்ட ஆட்சியர் குமந் சரன் காலிதா, குவஹாத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்வின் அக்னி காத்ரி, மாவட்ட காவல் துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி, தாசில்தார், வருவாய் அதிகாரி ஆகியோரை நேரில் சந்தித்தனர். பாதிக்கப் பட்டவர்களின் குறைகளை எடுத் துக்கூறி உடனடி நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி னர். மாவட்ட அதிகாரிகள் கீழ்மட்டத்தில் உள்ள அரசு அலு வலர்களுக்கு தேவையான நட வடிக்கை எடுக்க உத்தரவிட்ட னர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அஸ்ஸாம் கலவர நிவா ரணக் குழு இன்றும் (24-8-2012) நாளையும் அஸ்ஸாமில் முகா மிட்டு அஸ்ஸாம் மாநில கவர்னர், முதல்வர், அமைச்சர் கள் மற்றும் மாநில அதிகாரிகளை நேரில் சந் தித்து நிவாரணப் பணிகள் துரி தப்படுத்த வலியுறுத்துகின் றனர்.

மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடெங்கிலும் வசூல் செய்து வரும் அஸ்ஸாம் நிவாரண நிதியை, முதல் தவணையாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குகின்றனர். தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹமது டெல்லி திரும்பியதும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து அஸ்ஸாம் நிலவரம் குறித்து எடுத்து கூற இருக்கின்றார்.