Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 9 அக்டோபர், 2013

உணர்ச்சிகளைத் தூண்டி இளைஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்காதீர் : IUML மாநில பொதுச்செயலாளர் வேண்டுகோள்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் அவர் பேசியதாவது,

முஸ்லிம் லீகில் யார் இருக் கிறார்கள்; இளைஞர்களை உருவாக்க முடியுமா? என்றெல் லாம் கேட்டு வந்த காலகட்டத் தில், "நல்லொழுக்க இளைஞர்களை ஒருங்கிணைக்கும் நல்லொழுக்க மாநாடு நன் முறைகாட்டும் தாய்ச்சபை அழைப்பில் ஒன்று கூடு" என்று அழைப்பு விடுத்தோம்.

1500 பேர் வந்தால் போதும் என்றோம் அதைவிட நான்கு மடங்கு வருவதாக தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. இவ்வளவு பேருக்கு இங்கு இடம் ஏற்பாடு செய்ய முடியாது என குறைத்தோம். அப்படியும் கடைசியில் 4800 பேர் தங்கள் வருகையை பதிவு செய்திருக் கிறார்கள்.


அவர்கள் இங்கு வருகை தந்தது மட்டுமல்ல இந்த மாநாட்டின் பெருமை, இந்த மாநாட்டின் நோட்டீஸ் விளம் பரங்களிலிருந்து, டிஜிட்டல் பேனரிலிருந்து, கொடி தோரணங்கள் அமைப்பதிலி ருந்து அனைத்து ஏற்பாடுகளை யும் மாணவர்கள் செய்து முழு ஒத்துழைப்பை கொடுத்து இங்கு செலவினங்களை மிச்சப்படுத்தி தந்து மார்தட்டி வந்துள்ளார்கள்.

இன்று முஸ்லிம்கள் சிறையை நிரப்ப வேண்டும் என்கிறார்கள். சிறைச்சாலை களை நிரப்ப வேண்டாம்-கல்விச் சாலைகளை நிரப்புவோம்; மதரஸாக்களை நிரப்புவோம்; நன்னெறிபோதிக்கும் இடங் களை நிரப்புவோம்.

சமுதாயத்தின் தலைமை என்பது உணர்ச்சிகளை தூண்டிவிட்டு இளைஞர்களை பழிகடாகளாக ஆக்குவது அல்ல. அவர்கள் நாளைய தலைமுறையை வழிநடத்தக் கூடிய திறமை சாலிகளாக நல்வழிபடுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில்தான் சிறந்த தலைமையில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் கருத்தரங்கில் பிற்பகல் 3 மணியிலிருந்து 6 மணி வரை உணர்ச்சி பூர்வமான கருத்துக்களை பதிவு செய்ய தார்கள். இப்படிப்பட்ட மாணவர்களை பக்குவப்படுத்தி நல்ல. தலைவர்களாக அவர் களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதுதான் தலைவர் பேராசிரி யரின் கனவாகும். ஆர்ப்பாட்டம் போர்ப்பாட்டம் என்று இளைய சமுதாயத்தை அலைக்கழித்து அவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்கி ஆதாயம் அடைகிறார் கள். இவர்களுடைய பேச்சை நம்பி சிறை சென்றவர்களெல் லாம் வாழ்வை தொலைத்தார் களே தவிர இன்று வரை சிறையிலிருந்து மீள முடிய வில்லை .

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களையும், துணை முதல் வர் தளபதி அவர்களையும் மேடையிலே வைத்துக் கொண்டு, தெரிந்தோ, தெரியாமலே சில தவறுகளை செய்து நீண்டகாலம் தண்டனை அனுபவித்து விட்ட முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள்; அவர்களின் நன்னடத்தைக்கு நான் பொறுப் பேற்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்கும் என்றார் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத்.

சமுதாய உணர்வுகளை புரிந்து சமுதாயம் எதை எதிர் பார்க்கிறது, சமுதாயத்திற்கு இன்று எது தேவை என்பதை உணர்ந்து பணியாற்றக் கூடியவர்தான் நம் தலைவர் பேராசிரியர், அப்படிப்பட்ட தலைவர் பேராசிரியர் நாடாளு மன்ற தேர்தலில் நம் நடவடிக் கைகள் எப்படி இருக்க வேண்டும். என்பதை தெளிவாக அறிவித்திருக்கிறார்.

மோடியின் முகமூடியை கிழிப்போம்

மோடி என்ற முகமூடியை கொண்டு வந்து இன்று காட்டுகிறார்கள். அந்த போலி முகமூடியை கிழித்தெறிந்து மதசார்பற்ற ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய கடமையை நிறைவேற்ற நம்மை அர்ப்பணிப் போம்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அனைத்து தொகுதிகளையும் வெல்வதற்கு பம்பரமாகச் சுழன்று பணியாற்ற இதோ நாங்கள் இருக்கிறோம் என மாணவச் செல்வங்கள் திரண்டுள்ளனர்.

தமிழகத்தில் இளைஞர் களின் சக்தியை ஒருமுகமாக திரட்டுகின்ற தளபதி மு.க.ஸ்டா லின், கேரளாவில் இளைஞர்கள் மிகவும் நேசிக்கின்ற சக்தியா கத் திகழும் குஞ்ஞாலிகுட்டி ஆகியோர் இங்கே வருகை தந்திருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் உறுதி மொழி ஏற்றுள்ளீர்கள்.

கூடினோம்-கலைந்தோம் என்றில்லாமல் இனிதான் நமக்கு மிக முக்கிய பணிகள் இருக்கின்றன. இந்த முஸ்லிம் மாணவர் பேரவையிலிருந்து கேரள முன்னாள் முதல்வர் சி.எச்.முஹம்மது கோயா, மத்திய அமைச்சர் இ.அஹமது சாகிப், கேரள அமைச்சர் குஞ்ஞாலி குட்டி, நம் தலைவர் பேராசிரி யர்முனீருல் மில்லத் உள்ளிட்ட தலைவர்கள் உருவானார்கள்.

எங்களைப் போன்றவர்கள் நாங்கள் மாணவர்களாக இருந்த போது 1991-ல் முஸ்லிம் மாணவர் பேரவைக்கு மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் எங்களுக்கு பொறுப்புகளைத் தந்து உருவாக் கினார்கள். நாங்கள் அதில் பெற்ற பயிற்சியால் தாய்ச்சபை யில் பொறுப்புகளை வகித்தோம்.

இன்று எங்களைப் போல் ஒரு சக்தி உருவாகிவிட்டது. அவர்களை தாய்ச்சபை தலைமை நிலையத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றோம். இவ்வாறு IUML மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் குறிப்பிட்டார்.