Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 28 அக்டோபர், 2013

சிறைச்சாலையில் சிந்தனையாளர்கள்! ----- புலவர் அ.ஹிலால் முஸ்தபா

அண்ணன் M.M.P(எம்.எம்.பீர் முஹம்மது சாஹிபு)  , ஒரு கூட்டத்தில் பேசி விட்டு திரும்புகிறார். அந்த நேரத்தில் தமிழகத்து போலீசார், அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இது நடந்தது 1965 செப்டம்பர் மாதம் 17 அன்று.

அந்தக் கூட்டத்தில், இந்தியச் சட்டத்துக்கு விரோதமாகவோ , கலவரங்களைத் தூண்டி விடும் கொடூரமாகவோ அல்லது, பிரமுகர்களைக் கொச்சைப் படுத்தி அவமானகரமாகவோ M.M.P அண்ணன் பேசி விட்டார் எனக் கருத வேண்டாம். இப்படியெல்லாம் முறையற்ற, ஒழுங்கு நெறிக்குத் தப்பிப் போன, சட்டத்திற்கு எதிரான எந்தப் பேச்சுகளையும் M.M.P அண்ணன் தன் வாழ்நாளில் பேசியதே கிடையாது. ஆனாலும் கைதானார்.

அந்தக் கூட்டம் முஸ்லிம் லீகின் கொள்கைப் பிரச்சாரக் கூட்டம் அன்று. மீலாது பெருவிழா மேடையுமன்று. இஸ்லாமிய இலக்கிய மன்றமுமன்று.

இந்திய பாகிஸ்தான் போர் நடந்த காலக்கட்டம் அது. பண்டித ஜவஹர்லால் நேரு, தேசிய ஒருமைப்பாட்டுக் குழு என்ற ஒரு அமைப்பை இந்தியப் பாராளுமன்றத்தில் வெளியிட்டு அதன் தலைவராகக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களை நியமித்தார்.

இந்தியா முழுவதும் தேச ஒற்றுமை , தேச பாதுகாப்புக்கு மக்கள் ஆற்ற வேண்டிய பணி, இந்திய மக்களிடையே உருவாகி இருக்கும் ஐக்கியத்திற்குக் குந்தகம் விளைவிக்காத நடைமுறைகள் பற்றி எல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டியதுதான் இந்தக் குழுவின் பணி.

இது மாதிரி நெல்லையில், காயிதே மில்லத்தின் உத்தரவின் பேரில் இந்தப் பிரச்சாரப் பணிக் கூட்டத்தில் பேசி விட்டு திரும்பிய M.M.P அண்ணனைத்தான் தமிழ் நாடு காவல்துறை கைது செய்தது.

1965 செப். 17 அன்று குளச்சலில் இருந்த ஷாஹுல் ஹமீது சாஹிப், பள்ளிவாயிலில் தொழுது விட்டு வெளியே வருகிறார். அந்த இடத்திலேயே காவல்துறை வந்து நின்று, அவரது இல்லத்திற்குக் கூட செல்ல அனுமதிக்காமல் காவல்துறை வேனில் ஏற்றிச் சென்றது. இந்த ஷாஹுல் ஹமீது சாஹிப்தான் பிந்தைய நாள்களில் சென்னைப் புதுக்கல்லூரி தமிழ்த் துறையில் சேவையாற்றிய குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப்.

குளச்சலில் இந்தக் கைது அன்று பரபரப்பானது. காவல்துறை ஷாஹுல் ஹமீது சாஹிபை எங்கு அழைத்துச் சென்றது என்ற விவரம் தெரியவில்லை. ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு திருமணம் ஆகி நான்கு மாதம் பத்து நாள்தான் ஆகி இருந்தது. இந்த நிகழ்வை நினைவுகூரும் பொழுது ஒருமுறை பேரா. ஷாஹுல் ஹமீது சாஹிப், “என் மனைவியை முதன்முதலில் பிரிந்தது அன்றுதான்” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

குளச்சல் இயக்கத்தார்கள், நண்பர்கள், இல்லத்தார்கள் கைது செய்து காவல்துறை எங்கே அழைத்துச் செல்கிறது என்று தேட ஆரம்பித்தார்கள். காவல்துறை இவர்களுக்குக் கண்ணாமூச்சி காட்டிவிட்டு இரணியல் காவல் நிலையத்தில் ரகசியமாக கொண்டு வைத்து விட்டார்கள்.

இந்தக் கைதுக்கு காவல்துறைக்கும் காரணம் தெரியவில்லை. ஷாஹுல் ஹமீது சாஹிபுக்கும் காரணம் புரியவில்லை. ஆனால் இரவு காவல் நிலையத்தில் கைதியாக அடைக்கப் பட்டுவிட்டார்.

மறுநாள் காலையில் போலீசார் ஷாஹுல் ஹமீது சாஹிபிடம் சொன்னார்கள்.

“DIR ( Defence of India Rule) – இந்திய பாதுகாப்பு சட்டப்படி நீங்கள் கைது செய்யப் பட்டு இருக்கிறீர்கள். உங்களை வேலூர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப் போகிறோம்” என்றார்கள்.

ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு அப்பொழுதுதான் விவரம் புரிகிறது.

வேலூருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே M.M.P அண்ணனும் இதே சட்டப் பிரிவில் கைதாகி இருந்தார். திருச்சி A.M. யூசுப் சாஹிபும் இதே சட்டப் பிரிவில் கைதாகி இருந்தார்.

இந்த இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி ஒருவரை கைது செய்ய சம்மன் தேவை இல்லை. கைதானவர் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. கைதானவரை ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைத்து வைக்கலாம். இந்தச் சட்ட விதி இப்படித்தான் அமைக்கப் பட்டு இருந்தது.

இதில் ஒரு தந்திரமும் இருந்தது. ஆறாவது மாதத்தில் கைதியை விடுதலை செய்யும் பொழுது அவர் அந்த ஜெயில் வாசலைத் தாண்டி வெளியில் வந்தவுடன் மீண்டும் உடனடியே கைது செய்து ஆறு மாதம் உள்ளே வைத்து விடலாம்.

இந்தச் சட்டம் இயற்றப் பட்டதில் இருந்து , பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் மீதுதான் பாய்ந்துக் கொண்டு இருந்தது. அப்போதுதான் முதல் முறையாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மீதும் பாய்ந்து இருக்கிறது.

வேலூர் சிறைச்சாலையில் M.M.P அண்ணனுக்கு 17 ஆம் எண் அறை. குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு அறை எண் 18. திருச்சி யூசுப் சாஹிபிற்கு அறை எண் 16 ஒதுக்கப் பட்டிருந்தன. யூசுப் சாஹிபின் கைது எண் 151, M.M.P அண்ணனுக்கு 152, குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிபிற்கு 153. அதாவது, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் 151 ஆவது கைதி A.M. யூசுப் சாஹிப். 152 கைதி M .M.P , 153 கைதி குளச்சல் ஷாஹுல் ஹமீது.

இவர்களுக்குப் பக்கத்தில் பொதுவுடமைக்காரர்கள் அடைக்கப் பட்டு இருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தோழர் P. ராமமூர்த்தி, தோழர் கோவை ஈஸ்வரன் போன்றோர்.

ஆனால் ஜெயிலில் இவர்கள் சந்தித்து கொள்ளாதவாறு தடுப்பு செய்யப்பட்டு இருந்தது.

காலையில் ஆறு மணிக்குச் சிறை அறைக் கதவைத் திறப்பார்கள். குறிப்பிட்ட அந்த பகுதிக்குள் அவர்கள் நடமாடிக் கொள்ளலாம். மாலை ஆறு மணிக்கு இவர்களை உள்ளனுப்பி அறைக் கதவைப் பூட்டி விடுவார்கள்.

இவர்களுக்குப் பணிபுரிய தேர்ந்தெடுக்கப் பட்ட சில கைதிகளை சிறைத்துறை ஏற்பாடு செய்து இருந்தது.

சிறையில் இருந்த முஸ்லிம் லீகர்களாகிய இவர்களுக்கு உதவி செய்ய நாவித சமுதாயத்தைச் சார்ந்த துர்வாசர் என்பவர் வந்தார். அவர் நல்ல மனிதராம். குளச்சல் ஷாஹுல் ஹமீது இந்தத் தகவலைக் குறிப்பிட்டார்.

துர்வாசரை M.M.P அவர்கள், ஒருமுறை கூப்பிட்டு சொன்னாராம்.
“ஐயா உம் துர்வாசர் பெயரை மாற்றிக் கொள்ளும். முன்னால் உள்ள துர் –ஐத் தூக்கிப் போட்டு விட்டு திருவைச் சேர்த்துக் கொண்டு திருவாசர் ஆகிவிடும்” என்றாராம்

ஒரு நாள், இந்தத் துர்வாசர் மூலமாக , இவர்களுக்குத் தோழர் P.ராமமூர்த்தியிடமிருந்து ஒரு செய்தி வந்ததாம்.

“நீங்கள் கைதாகி இங்கிருப்பதைச் செய்தித்தாளில் படித்தேன். நாம் சந்தித்துக் கொள்ள வேண்டாம். நான் ஒரு செய்தியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்” எனச் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

இந்தியப் பாதுகாப்பு சட்டம் எதற்காக? அதனுடைய சரத்துகள் என்ன? என்ற முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று பொதுவுடைமை இயக்கம், உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது. அதற்கு உச்ச நீதிமன்றம், அந்த விதிகளை வெளியிட அரசுக்கு ஆணையிட்டுத் தீர்ப்புக் கூறியது.

இந்தத் தீர்ப்பு நகலின் ஒரு பிரதியைத் துர்வாசர் வழியே தோழர் ராமமூர்த்தி இவர்களுக்குக் கொடுத்து அனுப்பினார்.

அதில் , சிறைச் சாலைக்குள் இந்தக் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தினம் ஒரு மருத்துவர் வந்து பரிசோதிக்க வேண்டும். இவர்கள் விரும்பிய உணவிற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். சிகை அலங்காரங்கள் போன்றவற்றை செய்துக் கொள்ள வழி வகுக்க வேண்டும். ஆடைகளைத் துவைத்து தர ஏற்பாடு செய்து தர வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு புது ஆடை கொடுக்க வேண்டும் போன்ற விதிகள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தன.

வேலூர் ஜெயிலர் வாசுதேவன் நாயர். தினம் ஒருமுறை இவர்களைச் சந்தித்து செல்வார். மிக நல்ல மனிதர். சிறைச் சூப்பிரண்டண்ட் ஜெகன்னாத முதலியார். இவரும் ஒரு அற்புதமான மனிதர். இப்படி இவர்களைப் பற்றி குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப் குறிப்பிடுகிறார்.

ரமலான் மாதம் வந்துவிட்டது. சூப்பிரண்டண்ட் ஜெகன்னாத முதலியார் இவர்களைப் பார்க்க வருகிறார். முஸ்லிம் லீகின் மூவரும் சூப்பிரண்டண்டிடம் கோரிக்கை வைத்தனர்.

“ரமலான் மாதத்தில் எங்களுக்குச் சஹர் உணவிற்கு (சூரிய உதயத்திற்கு முன்னர்) ஏற்பாடு செய்ய வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் நோன்பு திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இரவு எட்டு மணிக்கு மேல் தராவீஹ் தொழுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.” என கோரிக்கைகள் வைத்தார்கள்.

இவர்கள் வைத்த இந்தக் கோரிக்கைகளைச் சூப்பிரண்டண்ட் ஜெகன்னாத முதலியார் , தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

தலைமைச் செயளாலரிடமிருந்து, நோன்பின் முப்பது தினங்களுக்கும் இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்க உத்தரவு வந்து சேர்ந்தது.

ரமலான் மாதம் வேலூர் சிறைச்சாலையில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை எண்கள் 16,17,18 மட்டும் அதிகாலை 3 மணிக்குக் கதவுகள் திறக்கப் பட்டன. இரவு 9 மணிக்குத் தராவீஹ் தொழுகை முடிந்தபின் சிறைக் கதவுகள் மூடப்பட்டன.

ரமலான் மாதம் முழுவதும் வேலூர் சிறைச் சாலையில் சுவனத்து நிழல் சோபிதம் கொண்டு இருந்தது.

M.M.P. அண்ணன்,A.M. யூசுப் சாஹிப், குளச்சல் ஷாஹுல் ஹமீது ஆகிய மூவரும் கைதாகிய இரண்டு மாதங்களுக்குப் பின்னர், இதே சட்ட விதியில் திருச்சி A.M. ஹனீஃப் கைதாகி உள்ளே வந்து சேர்ந்தார்.

டெல்லி பாராளுமன்றத்தில் மேலவையிலும், மக்களவையிலும் தமிழகத்தின் இந்த நிகழ்வு குறித்து பேசப்பட்டது.

ராஜ கோபாலச்சாரியார்(ராஜாஜி) காங்கிரஸை விட்டு வெளியே வந்து சுதந்திரா கட்சியை நிறுவி அரசியல் செய்து கொண்டிருந்தார். இந்த சுதந்திரா கட்சியின் பொதுச் செயளாலர் S.S. மாரிச்சாமி மாநிலங்களவையில் இந்த கைது பற்றி வினா எழுப்பினார்.

மாநிலங்களவைக்கு மேற்கு வங்கத்தில் இருந்து வந்திருந்த தோழர் புபேஷ் குப்தாவும் கேள்வி எழுப்பினார். மக்களவையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் வினா தொடுத்தார்கள்.

“தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை பிரதமர் பண்டித நேரு அமைத்து , அதற்கு என்னைத் தலைவராகப் போட்டு இருக்கிறார். இந்த ஒருமைப்பாட்டு விளக்கப் பொதுக் கூட்டம் நெல்லையில் நடந்தது. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த M.M.பீர் முஹம்மது என்பவர் அந்தக் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கிய உடன் தமிழ்நாடு காவல்துறையினர் , இந்திய பாதுகாப்புச் சட்டவிதியில் கைது செய்து இருக்கிறார்கள்.இந்திய ஒருமைப்பாட்டுக் குழுவுக்கு நான் தலைவன். , இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் எங்கள் இயக்கத் தோழர் கைதாகிறார். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று காயிதே மில்லத் மக்களவையில் கேட்டார்கள்.

அப்போது இந்திய உள்துறை அமைச்சராகக் குல்சாரிலால் நந்தா இருந்தார். (இவர்தான் பண்டித நேரு மரணித்தவுடன் தற்காலிகப் பிரதமராகச் சில நாள் இருந்தார். அதன் பின்னர் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். இவரை அடுத்துத்தான் இந்திரா காந்தி பிரதமாராகப் பதவி ஏற்றார்).

மேலவையில் தோழர் புபேஷ் குப்தா, S.S. மாரிச்சாமி , மக்களவையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இவர்களுடைய வினாக்களுக்கு எல்லாம் சேர்த்து ஒரே ஒரு பதில்தான் பாராளுமன்றத்தில் வைக்கப் பட்டது.

“எங்கோ ஒரு தவறு எப்படியோ நடந்து விட்டது”. என்பதுதான்.

வேலூர் சிறைச் சாலைக்கு , வேலூர் ஹபீபுல்லாஹ் சாஹிப் வாரம் வாரம் வந்து, சிறைச்சாலைக்குள்ளிருக்கும் நமது பெருமைக்குரியவர்களைச் சந்தித்து செல்வார்.

சிறை விதிகளின் படி கைதிகள் தங்களைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி தரலாம் என்று பட்டியல் தர வேண்டும். அந்த அடிப்படையில்தான் சிறைக்கு வெளியில் இருப்பவர்கள் சந்திக்க அனுமதி வழங்கப்படும்.

ஒருமுறை , இவர்களைச் சந்திக்க லெப்பைக் குடிக்காடு ஜமாலி சாஹிப் (இவர் முஸ்லிம் லீகின் சென்னை ராஜதானி சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்) வேலூர் சிறைக்கு வந்தார். ஆனால் A.M . யூசுப் சாஹிப் இவர் பெயரைக் குறித்துக் கொடுக்காததினால் ஜமாலி சாஹிப் தடுக்கப் பட்டார். இவர்களைப் பாராமலேயே ஜமாலி சாஹிப் திரும்பிச் செல்ல நேர்ந்தது.

1966 ஜனவரி 25 ஆம் தேதி, இவர்களுக்கு வேலூர் சிறைச்சாலையிலிருந்து விடுதலைக் கிடைத்தது.

சென்னையிலிருந்து காயிதே மில்லத் , சென்னை மேயராக இருந்த Dr.ஹபீபுல்லாஹ் பேக் , சென்னை மாநகராட்சி துணை மேயராக இருந்த சிலார் மியான் , வேலூர் ஹபீபுல்லாஹ் ஆகியோர் வேலூர் சிறைச்சாலைக்கு வந்தார்கள். சிறையில் இருந்தவர்கள் , சிறைக்கு வெளியே விடுதலையாகி அனுப்பப்பட்டார்கள்.

அழைத்து செல்ல வந்திருந்த காயிதே மில்லத்தைச் சிறையைச் சுற்றிப் பார்க்க அழைத்தார் ஜெயில் சூப்பிர்ண்டன்ட் ஜகன்னாத முதலியார். காயிதே மில்லத்தும் சம்மதித்துச் சென்றார்கள். ஒரு ஜீப்பில் அமர வைத்து உள்ளே சுற்றிக் காட்டினார். அப்பொழுது காயிதே மில்லத், ஜெயில் சூப்பிரண்டன்டிடம் கேட்டார்களாம்,

“எங்கள் இயக்கத்தவர்கள் உள்ளே எப்படி நடந்துக் கொண்டார்கள்” என்று .

”இதுவரை உள்ள என் பணிக்காலத்தில் இப்படிபட்ட நபர்களை நான் சந்தித்ததே இல்லை, இவர்களை அரசு ஏன் கைது செய்தது என இந்த நிமிடம் வரை எனக்குப் புரியவில்லை” என்று சூப்பிரண்டன்ட், வாக்குமூலம் தந்தாராம்.

ஜெயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கு ஏற்கனவே வெளியில் நின்றிருந்த M.M.P. அண்ணன் A.M. யூசுப் சாஹிப், குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப், A.M. ஹனீஃப் சாஹிப் ஆகியோர் காயிதே மில்லத்திற்கு மாலைப் போட்டு வரவேற்றார்களாம்.

இந்தச் சிறை அனுபவங்களைப் பேரா. குளச்சல் ஷாஹுல் ஹமீது சாஹிப் சொல்லிக் காட்டும் பொழுது ஒரு காப்பிய ரசனை நமக்கு ஏற்படும்.

புதன், 23 அக்டோபர், 2013

இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட அதற்கு இணையான உறவுகள் ------------2

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் , எனது பள்ளித் தோழன் ஒருவன் நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான் .அவன் 3 -ஆம் ஆண்டை பூர்த்தி செய்யும் நிலை வரும் போது ,என்னிடம் வந்து ,மாப்ளே நான் MCA திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் சேரணும் என்று கூறினான் . விண்ணபித்து போய் சேர வேண்டியதுதானே என்று கூறினேன் . அங்கே , மார்க் அடிப்படையில் தான் ,எடுப்பாங்க அதோடு கொஞ்சம் சிபாரிசு இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறினான் .அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் . அதற்கு அவன் ,என் மாமா விடம் இது விசயமாக பேசினேன் ,அவர் உன்னால் முடியும் என்று கூறினார் என்றான் .எனக்கு ஒன்றும் புரியவில்லை ,நாளைக்கு பேசுவோம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன் .

வீட்டிற்கு வந்த பின்தான் அவன் சொன்னதற்கு விடை கிடைத்தது . மறுநாள் காலையில் மாப்ளே ,கிளம்பு என்று அவனை கூப்பிட்டேன் ,எங்கே ? என்று கேட்டான் ,உடனே கிளம்பு என்றேன் ,அவனது இருசக்கர ஹீரோ ஹோண்டாவை எடுத்துக் கொண்டு குற்றாலம் அருகில் இருக்கும் நன்னகரத்திற்கு சென்றோம் . அங்கே ,அன்றைய மத்திய அமைச்சர் அருணாசலத்தின் வீட்டிற்கு எதிரே இருந்த ,பள்ளிவாசலோடு இணைந்த இஷாத்துல் இஸ்லாம் சபையின் கட்டிடத்தில் ,அதன் தலைவர் ,காயிதே மில்லத்தின் அன்பு தொண்டராக ,சமுதாயத்தை பற்றியே சதாவும் சிந்தித்துக் கொண்டிருந்த ,எனது சமுதாயப் பணியின் ஆசான், தலைவர் அஹமது கபீர் ரிபாயி (ரஹ்) அவர்களை சந்தித்தோம் .அன்பான வரவேற்பு , முறுக்கும் சாயாவும் வந்தது . என்னுடன் வந்த நண்பனை அறிமுகம் செய்துவிட்டு , பல விஷயங்கள் AK .ரிபாயி (ரஹ்) அவர்கள் சொல்ல அதனை கேட்டு நாங்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு ,சென்ற காரணத்தை சொன்னேன் .

அப்போது , தலைவர் அவர்கள் ,எனக்கு ஜமால் முஹம்மது கல்லூரியில் ஒரே ஒரு இடம் கிடைக்கும் , அது இந்த வருடம் உனது நண்பனுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்ப்போம் ,இன்ஷாஅல்லாஹ் என்று கூறிவிட்டு . அன்றைய ஜமால் முஹம்மது கல்லூரியின் செயலாளருக்கு தொலைபேசி மூலம் பேசினார்கள் ,நண்பனின் பட்டபடிப்பு விசயமாக கூறினார்கள் .தலைவர் பேசிவிட்டு ,அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினார்கள் . அப்போம், நான் லட்டர் தருகிறேன் அதனை கொண்டு போய் கொடுங்கள் ,அட்மிஷன் கிடைத்துவிடும் என்று கூறி எங்களை அனுப்பிவைத்தார்கள் .

வெளியில் வந்த உடன் என் நண்பன் கேட்டான் , மாப்ளே ,எல்லோரும் முதலாளினு சொல்றாங்க , முன்னாள் MP , பெரிய ஆளு ,எப்படிப்பா ,இப்படி எளிமையாக இருக்காங்க ? அதுவும் , ,சின்ன பையன்கள் நாமோ கேட்டவுடன் விசயத்தையும் முடித்து தந்துவிட்டார்கள் ,எனக்கு ஆச்சரியமாக இருக்குது என்று கூறினான் . நான் , அதுதான் நான் தேர்ந்தெடுத்த பாதையின் தலைவர்கள் . சமுதாயத் தியாகம் தான் அவர்களது வாழ்க்கை என்றும் , இஷா அத்துல் இஸ்லாம் சபையின் மூலம் ரிபாயி சாஹிபும் அவர்தம் குடும்பத்தார்களும் ,சமுதாய பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் செய்த சேவைகளையும் ,காயிதே மில்லத்திற்கும் ரிபாயி சாஹிபு (ரஹ் ) அவர்களுக்கும் உள்ள குடும்ப உறவுகளையும் எடுத்துக்கூறினேன் .

நண்பனும் ,கல்லூரியில் சேர்ந்தான்,MCA படிப்பை முடித்தான் ;வெளிநாடு சென்றான் நல்ல சம்பாத்தியம் செய்கிறான் .ஆனால் ,ஒரு தடவை கூட அவன் என்னிடம் தனக்கு சிபாரிசு செய்த அந்த மனிதரை பற்றி கேட்டதில்லை . அவருக்கு நன்றி கூட சொன்னதில்லை .

ஆனால் ,ஆயிரக்கணக்கான மக்களால் முதலாளி என்றும் ,தலைவர் என்றும் மனம் நிறைய அன்போடு அழைக்கப்பட்ட அந்த தலைவர் என்னை காணும் போதெல்லாம் ,அந்த பையன் படிப்பை பற்றி விசாரிப்பார்கள் .

அந்த பெரிய மனிதரின் உறவு எனக்கு கிடைத்தது எனக்கு அல்லாஹ் இந்த உலகத்தில் தந்த பெரும் பேராக ,பெரும் பாக்கியமாக நான் எண்ணுகிறேன் . வல்லா அல்லா , அந்த தலைவரின் மண்ணறையை சொர்க்கச்சோலையாக்கிவைபானாக !

திங்கள், 21 அக்டோபர், 2013

புதிய தொழில் படிப்பை முன்மொழிந்தது யு.ஜி.சி!

பிளம்பிங், கார்பென்டரி மற்றும் பிற திறன்கள் ஆகியவைத் தொடர்பான பயிற்சிகளை அளிக்க, தொழிற்கல்வி பிரிவில், ஒரு புதிய பட்டப்படிப்பை யு.ஜி.சி., முன்மொழிந்துள்ளது.

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்தப்பிறகு, பட்டப் படிப்பை மேற்கொள்ளாமல், பல்வேறு சூழல்களால் தொழில்துறை பணிகளுக்கு சென்றுவிட்ட நபர்களுக்காக இப்படிப்பு(B Voc) தொடங்கப்படுகிறது. இதன்மூலம் பிளம்பிங், கார்பென்டரி மற்றும் அதையொத்த பிற தொழிற்பிரிவுகளில் ஈடுபட்டுள்ள நபர்கள், எளிதில் பட்டதாரிகளாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவை இப்படிப்பை வழங்கலாம் என்று UGC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பு, கிரெடிட் சிஸ்டம் அடிப்படையில் நடத்தப்படும் மற்றும் வருகைப்பதிவு விஷயத்தில் நெகிழ்வுத் தன்மையும் உண்டு. இதன்மூலம், தங்களின் பணிச்சூழல் காரணமாக, மாணவர்களால் தொடர்ச்சியாக வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் போனாலும், அவர்களால் தேர்வெழுதி பட்டம் பெற முடியும்.

இப்படிப்பு(B Voc), 3 வருட பட்டப் படிப்பு என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள், தங்களுடைய பகுதியின் சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை தாங்களே வடிவமைத்துக் கொள்ளலாம். () தவிர்த்து, துணைநிலைப் பாடங்கள் மற்றும் trades ஆகியவைகளுக்கு கிரெடிட்டுகள் வழங்கப்படும். அதேசமயம், ஒரு தொழில் திறனற்ற நபர், பட்டம் பெறுவதற்கு இந்தப் படிப்பு உதவுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கல்வியாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், "நாட்டில் இருக்கும் கலை-அறிவியல் கல்லூரிகள், தங்களின் வழக்கமான படிப்புகளையே சிறப்பாக நடத்த முடியாத சூழல் நிலவுகையில், புதிதாக இன்னொரு படிப்பை நடத்துமாறு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இதனால், மாணவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இப்படிப்பால், புதிய பயன் ஒன்றும் ஏற்படாது.

மேலும், பல கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில், போதுமான ஆய்வக வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லை. எனவே, இப்போதைய தேவை என்னவெனில், இருக்கும் படிப்புகளுக்கு தேவையானதை செய்வதுதானே ஒழிய, புதிய படிப்புகள் அல்ல. ஆனால், இதையும் மீறி அந்தப் படிப்பை(B Voc) நடத்தியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அது தொழில்நுட்ப கல்லூரிகளிலேயே நடத்தப்படு வேண்டும். ஏனெனில், அங்குதான் அதற்கான அடிப்படை வசதிகள் உள்ளன" என்று தங்களின் ஆதங்கத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

சென்னையில் விடிய விடிய மழை: வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்

சென்னையில் நேற்றிரவும் இன்று காலையிலும் பெய்த இடைவிடாத மழை காரணமாக தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வளசரவாக்கம் மண்டலம் 11–ல் மதுரவாயல் 144–வது வார்டு பகுதியில் உள்ள அபிராமி நகர், காமாட்சி நகர், ஜெயராம் நகரில் உள்ள வீடுகளில் வாசல் வரை மழைநீர் தேங்கி கிடக்கிறது.

இதேபோல் 145–வது வார்டான செல்லியம்மன் நகரிலும் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இங்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கிடப்பதால் மழைநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதேபோல் கொளத்தூர், பாடிக்குப்பம், பேசின் பிரிட்ஜ், ராம்நகர், குபேரன் நகர் பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.

வியாசர்பாடி சி.கல்யாணபுரம், எம்.கே.பி.நகர், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, ஓட்டேரி, அயனாவரம், ஜாபான் ஆபிஸ் பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், வள்ளூவர் கோட்டம் மெயின் ரோட்டில் மழை நீருடன், சாக்கடை நீர் கலந்து ரோட்டில் ஓடுவதால் நடக்கவே அறுவெறுப்பாக உள்ளது.

வடபழனி பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பஸ் நிலையத்திற்கு வர முடியாமல் மக்கள் ரோட்டிலேயே நின்று பஸ் ஏறி சென்றனர்.

இதேபோல் கோயம்பேடு சிக்னல், ஓட்டேரி ஜங்ஷன், அபிராமி தியேட்டர் அருகேயும் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

அம்பத்தூர் எஸ்டேட் ரோட்டில் பள்ளம்– மேடு தெரியாத அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் லாரி சிக்கி நடுரோட்டில் கவிழ்ந்து கிடக்கிறது. இதனால் எஸ்டேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.



பட்டறைவாக்கம், மேனாம்பேடு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் ரோட்டிலேயே மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் மக்கள் சகதியில் நடந்து வீட்டை விட்டு வெளியே வரும் அவல நிலை உள்ளது.

விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெரு, நடேசன் தெருக்களிலும் மழைநீர் வடியாததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஒக்கியம் துரைப்பாக்கம் கிருஷ்ணா நகரில் மழைநீர் தேங்கியதால் கவுன்சிலர் எம்.எஸ்.பாஸ்கரன் ஜே.சி.பி. எந்திரத்தை வரவழைத்து மழைநீரை வடிய வைக்க முயற்சி மேற்கொண்டார்.

சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளிலும் ஒருநாள் மழைக்கே ரோட்டுக்கு தண்ணீர் வந்ததால் மக்கள் கஷ்டப்பட்டு செல்ல முடிந்ததை பார்க்க முடிந்தது.

புதன், 9 அக்டோபர், 2013

உணர்ச்சிகளைத் தூண்டி இளைஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்காதீர் : IUML மாநில பொதுச்செயலாளர் வேண்டுகோள்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் அவர் பேசியதாவது,

முஸ்லிம் லீகில் யார் இருக் கிறார்கள்; இளைஞர்களை உருவாக்க முடியுமா? என்றெல் லாம் கேட்டு வந்த காலகட்டத் தில், "நல்லொழுக்க இளைஞர்களை ஒருங்கிணைக்கும் நல்லொழுக்க மாநாடு நன் முறைகாட்டும் தாய்ச்சபை அழைப்பில் ஒன்று கூடு" என்று அழைப்பு விடுத்தோம்.

1500 பேர் வந்தால் போதும் என்றோம் அதைவிட நான்கு மடங்கு வருவதாக தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. இவ்வளவு பேருக்கு இங்கு இடம் ஏற்பாடு செய்ய முடியாது என குறைத்தோம். அப்படியும் கடைசியில் 4800 பேர் தங்கள் வருகையை பதிவு செய்திருக் கிறார்கள்.


அவர்கள் இங்கு வருகை தந்தது மட்டுமல்ல இந்த மாநாட்டின் பெருமை, இந்த மாநாட்டின் நோட்டீஸ் விளம் பரங்களிலிருந்து, டிஜிட்டல் பேனரிலிருந்து, கொடி தோரணங்கள் அமைப்பதிலி ருந்து அனைத்து ஏற்பாடுகளை யும் மாணவர்கள் செய்து முழு ஒத்துழைப்பை கொடுத்து இங்கு செலவினங்களை மிச்சப்படுத்தி தந்து மார்தட்டி வந்துள்ளார்கள்.

இன்று முஸ்லிம்கள் சிறையை நிரப்ப வேண்டும் என்கிறார்கள். சிறைச்சாலை களை நிரப்ப வேண்டாம்-கல்விச் சாலைகளை நிரப்புவோம்; மதரஸாக்களை நிரப்புவோம்; நன்னெறிபோதிக்கும் இடங் களை நிரப்புவோம்.

சமுதாயத்தின் தலைமை என்பது உணர்ச்சிகளை தூண்டிவிட்டு இளைஞர்களை பழிகடாகளாக ஆக்குவது அல்ல. அவர்கள் நாளைய தலைமுறையை வழிநடத்தக் கூடிய திறமை சாலிகளாக நல்வழிபடுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில்தான் சிறந்த தலைமையில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் கருத்தரங்கில் பிற்பகல் 3 மணியிலிருந்து 6 மணி வரை உணர்ச்சி பூர்வமான கருத்துக்களை பதிவு செய்ய தார்கள். இப்படிப்பட்ட மாணவர்களை பக்குவப்படுத்தி நல்ல. தலைவர்களாக அவர் களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதுதான் தலைவர் பேராசிரி யரின் கனவாகும். ஆர்ப்பாட்டம் போர்ப்பாட்டம் என்று இளைய சமுதாயத்தை அலைக்கழித்து அவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்கி ஆதாயம் அடைகிறார் கள். இவர்களுடைய பேச்சை நம்பி சிறை சென்றவர்களெல் லாம் வாழ்வை தொலைத்தார் களே தவிர இன்று வரை சிறையிலிருந்து மீள முடிய வில்லை .

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களையும், துணை முதல் வர் தளபதி அவர்களையும் மேடையிலே வைத்துக் கொண்டு, தெரிந்தோ, தெரியாமலே சில தவறுகளை செய்து நீண்டகாலம் தண்டனை அனுபவித்து விட்ட முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள்; அவர்களின் நன்னடத்தைக்கு நான் பொறுப் பேற்கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்கும் என்றார் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத்.

சமுதாய உணர்வுகளை புரிந்து சமுதாயம் எதை எதிர் பார்க்கிறது, சமுதாயத்திற்கு இன்று எது தேவை என்பதை உணர்ந்து பணியாற்றக் கூடியவர்தான் நம் தலைவர் பேராசிரியர், அப்படிப்பட்ட தலைவர் பேராசிரியர் நாடாளு மன்ற தேர்தலில் நம் நடவடிக் கைகள் எப்படி இருக்க வேண்டும். என்பதை தெளிவாக அறிவித்திருக்கிறார்.

மோடியின் முகமூடியை கிழிப்போம்

மோடி என்ற முகமூடியை கொண்டு வந்து இன்று காட்டுகிறார்கள். அந்த போலி முகமூடியை கிழித்தெறிந்து மதசார்பற்ற ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய கடமையை நிறைவேற்ற நம்மை அர்ப்பணிப் போம்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அனைத்து தொகுதிகளையும் வெல்வதற்கு பம்பரமாகச் சுழன்று பணியாற்ற இதோ நாங்கள் இருக்கிறோம் என மாணவச் செல்வங்கள் திரண்டுள்ளனர்.

தமிழகத்தில் இளைஞர் களின் சக்தியை ஒருமுகமாக திரட்டுகின்ற தளபதி மு.க.ஸ்டா லின், கேரளாவில் இளைஞர்கள் மிகவும் நேசிக்கின்ற சக்தியா கத் திகழும் குஞ்ஞாலிகுட்டி ஆகியோர் இங்கே வருகை தந்திருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் உறுதி மொழி ஏற்றுள்ளீர்கள்.

கூடினோம்-கலைந்தோம் என்றில்லாமல் இனிதான் நமக்கு மிக முக்கிய பணிகள் இருக்கின்றன. இந்த முஸ்லிம் மாணவர் பேரவையிலிருந்து கேரள முன்னாள் முதல்வர் சி.எச்.முஹம்மது கோயா, மத்திய அமைச்சர் இ.அஹமது சாகிப், கேரள அமைச்சர் குஞ்ஞாலி குட்டி, நம் தலைவர் பேராசிரி யர்முனீருல் மில்லத் உள்ளிட்ட தலைவர்கள் உருவானார்கள்.

எங்களைப் போன்றவர்கள் நாங்கள் மாணவர்களாக இருந்த போது 1991-ல் முஸ்லிம் மாணவர் பேரவைக்கு மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் எங்களுக்கு பொறுப்புகளைத் தந்து உருவாக் கினார்கள். நாங்கள் அதில் பெற்ற பயிற்சியால் தாய்ச்சபை யில் பொறுப்புகளை வகித்தோம்.

இன்று எங்களைப் போல் ஒரு சக்தி உருவாகிவிட்டது. அவர்களை தாய்ச்சபை தலைமை நிலையத்தின் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றோம். இவ்வாறு IUML மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

காஜி சான்றிதழ்கள் சட்டப்படியானவை என அரசு அங்கீகரிக்க வேண்டும் ,முஸ்லிம்கள் திருமணங்களை சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்யாதீர் :இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு அரசுக்கும் சமுதாயத்திற்கும் வேண்டுகோள்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (அக்.5) காலை 10.30 மணிக்கு சென்னை வேப்பேரி, ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள பெரியார் மைய அரங்கில் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் நடைபெற்ற இக் கூட்டத் தில் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெ மில்லத் சர்வதேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. மற்றும் மாநில நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர் கள், மாவட்டங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 454 பேர் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சமுதாயப் பிரபலங் களில் காலம் சென்றோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மஃபிரத்துக்கு துஆ செய்யப் பட்டது.

அதனைத் தொடர்ந்து வருகை தந்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை எடுத் துக் கூறினர்.


இக்கூட்டத்தில் கீழ்க் காணும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன:

1. இஸ்லாமிய திருமணச் சட்ட விளக்கக் கருத்தரங்குகள் கூட்டங்கள் வெற்றிக்கு நன்றி

இஸ்லாமிய திருமணச் சட்ட விளக்கக் கருத்தரங்கு கள் தமிழகத்தின் பெரும் பாலான நகரங்களில் சிறப்பாக நடத்தி, முஸ்லிம் சமுதாய மக்கள் மத்தியிலும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் இடத்தி லும் இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் பற்றிய தெளிவை யும் விழிப்புணர்வையும் ஏற்ப டுத்திய மாவட்ட முஸ்லிம் லீகுகளுக்கு இப்பொதுக் குழு பாராட்டும் வாழ்த்தும் தெரி விக்கிறது.

இந்தக் கருத்தரங்குகள் வெற்றிபெற அனைத்து வகை களிலும் ஒத்துழைப்பும் ஆதர வும் அளித்துள்ள மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் சங்கைக்குரிய உலமா களுக் கும் சமுதாயச் சான்றோர்க ளுக்கும் புரவலர்களுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கிறது. 2. """"முன்மாதிரி"" மஹல்லா விருதுகள் வழங்கும்

மஹல்லா ஜமாஅத் மாநாடு
தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு, 2013 டிசம்பர் 28 சனிக்கிழமை திருச்சியில் நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.

தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத்துகளை கிராமப்புற மஹல்லா ஜமாஅத், நகர்ப்புற மஹல்லா ஜமாஅத், மாநகர் மஹல்லா ஜமாஅத் என்று மூவகைப்படுத்தி, ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத் நிர்வாக மும், மஸ்ஜிது பராமரிப்பு, மதரஸா நடத்துதல், ஷரீஅத் பஞ்சாயத்து நடத்துதல், மஹல்லா ஜமாஅத் பைத்துல் மால் நடத்துதல், திருமணப் பதிவு செய்தல், பிறப்பு இறப்பு பதிவு செய்தல், அரசு களின் நலத் திட்டங்களை ஜமாஅத்தினரின் பயன்பாட் டுக்கு உதவி புரிதல் போன் றவைகளில் முன்னுதாரணமாக திகழும் மஹல்லா ஜமாஅத் துகளை மேற்கண்ட மூன்று வகையில் இருந்தும் வகைக்கு ஐந்து ஜமாஅத்துகள் தெரிவு செய்து, அவ்வாறு தேர்வு செய்யப்படும் 15 மஹல்லா ஜமாஅத்களுக்கு முன்மாதிரி மஹல்லா ஜமாஅத் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது எனவும் இப்பொதுக்குழு முடிவு செய்கி றது.

3. வார்டு கன்வீனர்கள் நியமனம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட, நகர, வார்டு மற்றும் பிரைமரி நிர்வாகிகளில் சிலர் மாற்றப்பட்டும், சிலர் வெளிநாடு சென்றும், அவர் களின் முகவரிகள் மாற்றப்பட் டும் உள்ள நிலையில், மாவட்ட, நகர, வார்டு மற்றும் பிரைமரி நிர்வாகிகளின் புதிய பட்டி யலை தலைமை நிலையத் துக்கு அக்டோபர் 15ம் தேதிக் குள் அனுப்பி வைக்க வேண் டப்படுகிறது. ஒவ்வொருவரின் முழு முகவரியுடன் தொடர் புக்குரிய தொலைபேசி எண்ணும் அவசியம் குறிப்பி டப்படுதல் வேண்டுவதாகும்.

இதுவரை இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் அமைப்புகள் இல்லாமல் இருக்கிற மாநகர, நகர, பேரூர் வார்டுகளில், வார்டு கன்வீனர் என்று அந்த வார்டு முஸ்லிம் லீகர் ஒரு வரைத் தெரிவு செய்து, அவ் வாறு கன்வீனர்கள் நியமிக் கப்பட்டுள்ள வார்டு விவரங் களும், அவைகளின் கன்வீனர் களின் முகவரி மற்றும் தொலைபேசி விவரங்களும், அவர்களின் புகைப்படங் களுடன் அக்டோபர் இறுதிக் குள் தலைமை நிலையத்துக்கு மாவட்ட தலைவர்கள்/செயலா ளர்கள் அனுப்பி வைக்கப் பணிக்கப்படுகிறார்கள்.

அக்டோபர் இறுதிக்குள் இந்த பட்டியல் அனுப்பத் தவறும் மாவட்டங்களில் உள்ள மாநகர, நகர, பேரூர் வார்டுக ளுக்கு, அந்தந்த வார்டுகளில் உள்ள முஸ்லிம் லீக் உறுப்பி னர்களில் ஒருவரை வார்டு கன்வீனராக நியமித்து அறி விக்கும் அதிகாரத்தை தலைமை நிலையம் செயல் படுத்தும் என்றும் முடிவு செய் யப்படுகிறது.

4. தேர்தல் நிதி
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தமிழகம் முழுவதிலும் உள்ள சமுதாய மக்களிடமி ருந்து தேர்தல் நிதி திரட்டுவது என்றும், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. ஆயிரம், ரூ. 500, ரூ. 100 என்று நன்கொடை ரசீது அச்சிட்டு மாவட்ட முஸ்லிம் லீகுகள் மூலம் அக்டோபர் 15ம் தேதியி லிருந்து துவங்குவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

5. காஜிகளுக்கு அங்கீகாரம்
தலைமை காஜி, மாவட்ட காஜிகள், மஹல்லா ஜமாஅத் துகளில் இயங்கும் மஸ்ஜிதுக ளின் இமாம்களான மஹல்லா காஜிகள், முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திரு மணம் மற்றும் மணமுறிவு நிகழ்வுகளின் போது முன் னின்று, அக்காரியங்களை நிறைவேற்றி வைக்கும் பழக்க மும் பண்பாடும் பாரம்பரியமாக முஸ்லிம் சமுதாயத்தில் காலங் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.



அதனடிப்படையில்தான் திருமணம் அல்லது மண முறிவு நடந்ததற்கான அத் தாட்சி சான்றிதழ்களை காஜி கள் வழங்கிவரும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது. இத்தகைய காஜிகளின் சான்றிதழ்கள் நீதிமன்றங்களி லும், அரசாங்க அலுவலங்களி லும் சொத்து மற்றும் பாகப் பிரிவினைகள் நடக்கும் மன் றங்களிலும், ஏற்றுக்கொள்ளப் படுவதும் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ள வழக்க மேயாகும். இந்தப் பாரம்பரிய முறை யில் திருமணம், மணமுறிவு மற்றும் வாரிசுதாரர்கள் பற்றிய காஜிகளின் சான்றளிப்புகளை தமிழக அரசும் மத்திய அரசும் அங்கீகரித்து ஏற்று, காஜிக ளின் சான்றிதழ்கள் சட்டப்படியா னவை என்று அறிவிக் குமாறு மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக்கொள் கிறது.

6. மஹல்லா ஜமா அத் திருமணப்பதிவு
தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் திருமணப்பதிவு தப்தர் (பதிவேடு)களில், தமிழ் நாடு அரசு 2009இல் நிறை வேற்றியுள்ள திருமண கட்டா யப்பதிவு சட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரின் திருமண பதிவுக்கென்று தனியே தரப்பட்டுள்ள படிவம் 1(அ) இல் கண்டுள்ள விவரங்களின்படி முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்யுமாறும், அதற்கு ரிய நான்கு நகல்களை வைக்குமாறும், பதிவு செய்யப் பட்ட படிவ நகல் ஒன்றை மணமகன் வீட்டாருக்கும், மற்றொன்றை மணமகள் வீட்டாருக்கும், மற்றொன்றை மஹல்லா ஜமாஅத்திற்கும், மற்றொன்றை மாவட்ட காஜியின் திருமணப் பதிவு கோப்புக்கும் தரும் வகையி லும் தப்தர்களை அமைத்துக் கொள்ளுமாறு தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை இப்பொதுக் குழுக் கேட்டுக் கொள்கிறது.

7. முஸ்லிம் திருமணங்களை சிறப்பு திருமணப் பதிவு சட்டப்படி பதிவு செய்யாதீர்

மஹல்லா ஜமாஅத் தப்தர் களில் பதிவு செய்யப்படும் திருமணங்கள், அரசு பதிவா ளர் அல்லது சார் பதிவாளர் இடம் பதிவு செய்யும்போது, படிவம் 1(அ) இல் உள்ளபடியும், மஹல்லா ஜமாஅத் தப்தரில் உள்ளபடியும் பதிவு செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம் திருமணங்களை விஷேச திருமணப்பதிவு சட்டப்படி (ளுயீநஉயைட ஆயசசயைபந ஹஉவ) பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் தத்தமது ஜமாஅத் தார்களுக்கு விளக்கி கூறு மாறும் இப்பொதுக் குழு வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது. 8. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துக

இந்திய சிறுபான்மையருள் பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம் சமுதாயம், கல்வி, பொருளாதார, சமூக வாழ்வில் மிகவும் பின் தங்கியும், எஸ்ஸி, எஸ்.டி. வகுப்பினரின் நிலையி லும் தாழ்ந்து உள்ள நிலையி லும் உள்ளதால், முஸ்லிம் களின் மேம்பாட்டுக்கென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் களுக்கென்று தனியே 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக் கப் பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு சட்டமாக்கி, முஸ்லிம் சமுதாயத்திற்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட் டுக்கொள்கிறது.

9. பொதுசிவில் சட்டம் பற்றிய பிரிவை நீக்குக
இந்திய அரசியல் அமைப் புச் சட்டத்தில் உள்ள 44வது பிரிவும், நாடு முழுவதிலும் எல்லா மக்களுக்கும் ஏற்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அதில் இடம் பெற்றி ருக்கும் வாசகமும் அதே அரசியல் அமைப்புச் சட்டத் தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும், மத சுதந்திரத்திற்கும், சமயச் சார்பின்மைக் கொள்கைக்கும் மாறுபட்டும் முன்னுக்குப் பின் முரணா கவும் இருப்பதால், அந்த 44வது பிரிவை அரசியல் அமைப்புச்சட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக் குழுக் கூட்டம் வற்புறுத்து கிறது.

10. உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகள் நியமனம் செய்யக் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத் தில் நிரந்தர நீதிபதிகள் 40 பேரும் கூடுதல் நீதிபதிகள் இருவரும் உள்ளனர். அறுபது நீதிபதிகள் நிரந்தரமாக இருப்ப தற்கு நியதி இருக் கிறது. இப்போதுள்ள 42 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த வராக இருக்கிறார். அவரும் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது. 42 நீதிபதிகள் இருந்த போது 4 முஸ்லிம் நீதிபதி கள் இருந்து வந்துள்ள மரபு இருக்கிறது. அந்த பாராட்டுக் குரிய மரபு இப்பொழுது பின்பற்றப் படாதிருப்பது, தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்குரிய பிரதிநிதித் துவமே இல்லை என்னும் வருந்ததக்க நிலையை உருவாக்கியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் குறைந்தபட்சம் நான்கு முஸ்லிம் நீதிபதிகள் இடம்பெறும் வகையிலும் சமூக நீதியை நிலை நிறுத்தும் வகையிலும் நீதிபதிகளின் நியமனங்களைச் செய்யுமாறு மத்திய மாநில அரசுகள் பரிந் துரைக்க இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


 11. இலங்கை வடக்கு மாகாண புதிய அரசுக்கு வரவேற்பு
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடந்த மாகாண கவுன்சில் தேர்தலில், தமிழ் தேசிய முன்னணி 80 சதவீதம் வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியைக் குவித்து, நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர் களை முதலமைச் சராகத் தேர்வு செய்திருப்பதை இக்கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியோடு வரn வற்று வாழ்த்துகிறது.

இலங்கையின் இறை யாண்மையையும் ஒற்றுமை யையும் நிலைநிறுத்தும் வகை யில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அதிகாரப் பகிர்வுகளையும் ஜனநாயக முறையில் பெறுவதற்குரிய அணுகுமுறையை தமிழ்தேசிய முன்னணி அரசு பின்பற்றும் என முதலமைச்சர் திரு விக் னேஸ்வரன் அவர்கள் தெரி வித்திருப்பது மிகுந்த பாராட் டுக்குரியதாகும்.

வடக்கு மாகாண தமிழ் தேசிய முன்னணி அரசின் இந்த பண்பட்ட, பாராட்டுக் குரிய, பக்குவப்பட்ட அரசியல் ரீதியான அணுகு முறைக்கு இலங்கை அரசும், இந்திய அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங் களும் தேவைப்பட்ட ஒத்து ழைப்பு, ஆதரவு, உதவிகள் அனைத் தையும் செய்திட முன்வர வேண்டும்மென இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

12 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி
2014 மே மாதம் நடைபெற விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்று, ஜனநாயகப் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்வதென்றும், தேசிய அளவில் ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமதர்ம, சமூகநீதிக் கொள்கைகளைப் பேணிப் பாதுகாப்பதுடன், மாநில அரசுகளின் உரிமைக ளுக்கு உரிய மதிப்பளித்து, மாநிலந்தோ றும் தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதா ரத்துறைகளில் தன்னிறைவு பெறும் வகையில் எல்லா வகையான ஒத்துழைப்பும் நல்கிவருவதோடு, நாட்டு மக்களின் சமூகப் பன்முகத் தன்மையை மதித்துப்போற்றி, மதம், மொழி, இனம், மற்றும் கலாச்சார வழிப்பட்ட சிறு பான்மை மக்களின் உரிமை களுக்கு பாதுகாப்பளித்து, அவர்களின் நன் மதிப்பைப் பெறுகின்ற நல்லாட்சி அமையப் பாடுபடுவதெனவும் இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் தி.மு.க.வுக்கும் இடை யில் நீண்ட காலமாக தொடர்ந்து நீடித்து வரும் கொள்கை ரீதியான உறவும், கூட்டணியும் தொடரும் என இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வேண்டும்,அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும் :முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு கோரிக்கை

சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அக்டோபர் 5ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணிவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு- 

1. மாணவர் கல்விக் கடன் துரிதமாக கிடைக்கச் செய்தல்
உயர் கல்வி பயிலும் மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண் டும் என்பது அரசின் நிலைப் பாடு. இந்தக் கல்விக் கடன்கள் எந்தச் சூழ்நிலையிலும் நிராகரிக்கப் படாமல் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும் என மத் திய அரசு பல முறை அறிவுறுத்தி யுள்ளது. ஆயி னும், எண்ணற்ற ஊர்களில் ஏராளமான வங்கிகள் ஜாமீன் உள்ளிட்ட பல்வேறு கார ணங்களை கூறி விண்ணப்பங் களை நிராகரிக்கின்றன.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்று மாண வர்களின் சொந்த ஜாமீன் அடிப்படையில் வங்கிகள் கடன் உதவி வழங்க வேண் டும் என வலியுறுத்துவதோடு, இந்த கல்விக் கடன்களை ஆண்டின் இறுதியில் வழங்காமல் கல்வி யாண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.



2. கல்விக் கடன் வட்டியை ரத்து செய்ய வேண்டுதல்
பொருளாதாரத்தில் நலிவ டைந்த பிரிவினருக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இக் கடனை பெறுகின்ற மாண வர்கள் படித்துப் பட்டம் பெற்று, வேலைவாய்ப்புக்காக காத்தி ருந்து வேலைவாய்ப்புக் களை பெற்றபின், கடன்களை அடைக் கின்றனர். ஆனால், கல்விக் கான கடனுக்கு தொடக்கத்தி லிருந்தே வட்டி விதிக்கப்படுவ தால் உரிய வேலைவாய்ப்பு பெறாதவர்கள் பெரும் சிரமம் அனுபவிக்கின்றனர். எனவே, கல்வி நலனுக்காக மாணவர்களின் நலனுக்காக எத்தனையோ திட்டங்களை தீட்டக்கூடிய மத்திய அரசு, வங்கிகள் வழங்கக்கூடிய கல்விக்கடனுக்கான வட்டியை ரத்து செய்து வங்கிகளின் இந்த வட்டியை ஏற்குமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. 3. தமிழகத்திற்கு சிறுபான்மை பல்கலை.

சிறுபான்மை சமூகத்தின் கல்வி மேம்பாட்டு அவசியம் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு பல பல்கலைக் கழகங் களை அமைத்து சிறுபான்மை யினரை கைதூக்கி விட முடி வெடுத்துள்ளது. அதன் தொடக்கமாக 6 பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட உள்ளன. அவ்வாறு அமைக்கப் படும் சிறுபான்மையினருக் கான 6 மத்திய பல்கலைக்கழ கங்களில் ஒன்றை தமிழ்நாட் டில் அமைக்குமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4. சிறுபான்மை மொழிக்கான அங்கீகாரம் உறுதி செய்தல்
தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழி வழியில் கல்வி கற்று வந்தனர். சமச்சீர் கல்வி தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டபோது சிறுபான்மை மொழிகளுக்கான அந்தஸ்து காப்பாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு அது ஏற்கப்பட்டது.


ஆனால், உர்தூ, மலை யாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் அரபி வழியில் கல்வி கற்கும் வாய்ப்பு படிப்படியாக குறைக்கப் பட்டு சிறுபான் மையின மொழிகள் நசுக்கப் பட்டு விடுமோ என்ற ஐயப்பாடு தமிழக சிறுபான்மை மொழி பேசுவோருக்கு ஏற்பட்டுள் ளது.

எனவே, சிறுபான்மை மொழி பேசுவோர் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி கற்க தகுந்த உத்தரவு பிறப் பித்து அதை உறுதிப்படுத் துமாறு தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தமிழ்நாடு மாநில உர்தூ அகாடமி வேண்டுதல் 

தமிழகத்தில் உர்தூ மொழி பேசுவோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின் றனர். உர்தூ மொழியின் நன்மைக்காக கடந்த காலங்களில் உர்தூ அகாடமி செயல்பட்டு வந்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாகியும் உர்தூ அகாடமி இதுவரை அமைக்கப்படவில்லை. நிதி நிலை அறிக்கையில் அறிவிக் கப்பட்டும் இது செயல்படுத் தப்படாதது உர்தூ மொழி பேசுவோரிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள் ளது.

இதுமட்டுமின்றி, ஆங்கி லேயர் ஆண்டு கொண்டிருந்த 1902-ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலை தாஹிர் சாஹிப் தெருவில் உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி துவக் கப்பட்டு கடந்த 111 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்தது. அப் பயிற்சிப் பள்ளிக்கான முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டு விரிவுரை யாளர் பணியிடங்கள் நிரப்பப் படாமலேயே இருந்து அதையே காரணம் காட்டி மாணவர்கள் சேர்க்கப்படாமல் இறுதியில் 6-8-2013-ம் தேதிய அறிவிப்பில் அந்த பயிற்சிப் பள்ளி மூடப்பட்டு விட்டது. இது உர்தூ மொழி பேசுவோருக்கு இழைக்கப் பட்ட மாபெரும் அநீதியாகும்.

எனவே, தமிழக அரசு உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை உடனடியாக திறப்ப தோடு, காலியான பணி இடங் களில் உர்தூ ஆசிரியர்களை நியமிக்கவும், மாநில உர்தூ அகாடமியை அமைக்கவும் வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது. 



6. மாவட்ட தலைநகரங்களில் சிறுபான்மை மாணவர் விடுதி
பள்ளிப் படிப்பை முடித்த சிறுபான்மையின மாணவர் கள் உயர் கல்வி பெறுவதற்கு கிராமப்புறங்களில் வாய்ப்புக் கள் இல்லாததால் நகரப்புறங் களையே நாட வேண்டி யுள்ளது. அவ்வாறு நகர்ப்புற கல்லூரி களில் படிக்கும் மாணவர்கள் அங்கு பெரும் தொகை கட்டணமாக வசூலிக் கப்படுவதால் விடுதிகளில் தங்கி படிக்க வாய்ப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.

மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட நகரங்களில் சிறு பான்மையின மாணவர்களுக் கென விடுதிகள் இல்லை. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு தடைபடுகிறது.

எனவே, மாவட்ட தலைநக ரங்களில் சிறுபான்மை மாண வர்களுக்கென விடுதிகளை அமைக்குமாறு தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள் கிறது.

7. முஸ்லிம் களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்றவுடன் மொழி மற்றும் மதச்சிறுபான்மையி னருக்கான தேசிய ஆணை யத்தை 2005 மார்ச் 15-ம் தேதியன்று அமைத்தது. அந்த ஆணையம் 2006 மே 26 அன்று பிரதமரிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்தது. சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் - அதில் முஸ்லிம் களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்த அந்த ஆணை யத்தின் அறிக்கை மத்திய அரசால் ஏற்கப்பட்டு உடனடி யாக அமுல்படுத்தப்பட வேண் டும் என இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

8. தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டை உயர்த்துக
தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம் களுக்கு தனி உள்ஒதுக்கீடு 2007 செப்டம்பர் 17-ல் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களை கைதூக்கி விட இந்த ஒதுக் கீட்டை உயர்த்தித் தர வேண் டும் என தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது.



நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தித்தரப் படும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அம்மையார் குறிப்பிட்டிருந் தார். அது நிறைவேற்றப்பட வில்லை. எனவே, முஸ்லிம்களுக் கான 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள் கிறது.

9. முழு மதுவிலக்கை அமல்படுத்துக  

அனைத்து தீமைகளுக் கும் காரணம் மது என்றால் அது மிகையல்ல. வருமா னத்தை அதிகரிக்க மதுக் கடைகள் அதிகரிப்பது நமது நாட்டுக்கு உகந்ததல்ல.

கண்ட இடங்களில் எல்லாம் பார் திறக்கப்படுவ தும், இரவு நேரங்களில் கூட அதனை திறக்கச் செய்திருப் பதும், யார் வேண்டுமானாலும் மது வாங்கவும், குடிக்கவும் அனுமதிப்பதும், இளைஞர்கள், குறிப்பாக மாணவர்களை சீரழியச் செய்து வருகிறது.

எனவே இதனை முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமுல் படுத்துமாறு இம் மாநாடு வலி யுறுத்துகிறது. 


10. அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை
நாட்டின் பல்வேறு மாநி லங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் எண்ணற்ற முஸ்லிம் இளை ஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி ஆண் டாண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடு விக்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக மத்திய அரசு மாநி லங்களுக்கு உரிய தாக்கீது களை பிறப்பித்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக சில தினங்களுக்கு முன்னால் மத்திய உள்துறை அமைச்சர் மாநில முதல்வர்களுக்கு அனுப்பிய தாக்கீதில் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் இல்லை என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்றுள்ளது. எனவே, இன்னமும் காலம் கடத்தாமல் நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விடுவிக்கப்படுவதோடு நீண்ட காலம் அவர்களுடைய சிறை வாழ்வுக் காக உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.





11.மத்திய அரசின் சிறுபான்மையோருக்கான பல்கலைக் கழகம்
சிறுபான்மையோர் கல்விநிலை மேம்படும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள  சிறுபான்மையோருக்காக தனி பல்கலைகழகத்தில் ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது .
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தந்த இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : மு.க.ஸ்டாலின்

அரசியல் நிர்ணய சபை நாடாளுமன்ற, சட்டமன்றங் களில் இடம்பெற்று முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சார தனித்தன்மை களை பாதுகாத்தல் உள்ளிட்ட வாழ்வுரிமையை பெற்றுத்தந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். முஸ்லிம் சமுதாயத்தை இன்று கண்ணியத்தோடு வழி நடத்துகிறார் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் என முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாட்டில் தி.மு.க. பொரு ளாளரும் முன்னாள் துணை முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் மனம் திறந்த பாராட்டு தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாடு சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அக்டோபர் 5ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணிவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில்

முஸ்லிம் மாணவர் பேரவை மாநில செயலாளர் ஏ. செய்யது பட்டாணி வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளரும், கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

 மு.க.ஸ்டாலின் தளபதி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாடு இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. காலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூடி 12 தீர்மானங்களை நிறைவேற்றி மாலையில் நடைபெறுகின்ற மாநில மாநாட்டிலும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இங்கு கருத்தரங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றிருக் கிறது. பல்வேறு தலைப்புகளில் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பங்கேற்று அதிலே மிகச்சிறப்பாக உரையாற்றி இருக்கிறீர்கள்.

பேராசிரியர் உரையாற்றும் போது பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய மாணவச் செல்வங்களின் மிகச்சிறப்பான உரையை குறிப்பிட்டு சொன் னார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டது. இக்கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சி ஒரு புறம் என்றாலும் அந்த அற்புதமான உரைகளை கேட்க தவறிவிட் டோமோ என்ற வருத்தம்தான்.

என்னை இந்த மாநாட்டிற்கு அழைத்தபோதும் அழைப் பிதழை தந்த சமயத்திலும் நான் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று கேட்டேன். 6.30 மணிக்கு வாருங்கள் 8.00 மணிக்கு அனுப்பி விடுகிறோம் என்றார்கள். அவர்கள் முற் கூட்டியே வரச்சொல்லியிருந் தால் கருத்தரங்கில் எழுச்சி யோடு உரையாற்றிய மாணவச் செல்வங்களின் உரையை கேட்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அந்த மாணவ நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன்.



இந்த மேடையில் ஒரு பொருத்தம் ஏற்பட்டிருக்கிறது . அது என்ன பொருத்தம் என்றால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொருளாளரான பி.கே. குஞ்ஞாலி குட்டியும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளரான நானும் கலந்து கொண்டிருப்பதுதான். திட்டமிட்டுத்தான் அழைத்திருக் கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

மாநாட்டு தீர்மானங்கள்
இங்கே 10 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்தீர்மானங்கள் இந்த மேடையில் முன் மொழியப் பட்டு உங்களால் ஏற்று கொள்ளப் பட்டிருக்கிறது. தீர்மானங்களை நிறைவேற்றித்தாருங்கள் என்று உணர்வு பூர்வமாக கோரி யிருக்கிறீர்கள்.

அத்தீர்மானங்கள் இங்கே முன்மொழியப்பட்டபோது பேராசிரியர் என்னிடத்திலே சொன்னார்; ஏதோ நீங்கள் ஆட்சியில் இருப்பதை போல இந்த தீர்மானங்களை நாங்கள் எடுத்து சொல்கிறோம் என்று இங்கே பேசுகிறபோது கூட அதை எடுத்து சொன்னார்கள். அதை மாற்றிக் கூட சொன்னார்கள் நீங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த மேடையி லேயே அதை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற உறுதி மொழி தந்திருப்பீர்கள் என்றார்கள்.

எனக்கு என்ன உணர்வு எற்படுகிறது என்று கேட்டால் கலைஞர் முதல்வராக, தி.மு.க. ஆட்சியிலே இருந்திருந்தால் இந்த தீர்மானங்களை முன் மொழிய வேண்டிய அவசியமே இருந்திருக்காது, அந்த வாய்ப்பை தமிழக மக்கள் தவற விட்டு விட்டார்கள். நான் உங்களை குறை சொல்ல வில்லை தயவு செய்து யாரும் தவறராக கருதி விடக்கூடாது. தமிழக மக்கள் தவற விட்டு விட்டார்கள். அதனால் இப்பொழுது வேதனை படு கிறார்கள்- வருத்தப்படு கிறார்கள்- துக்கப்படுகிறார் கள்-வெளியிலே சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள். உரிமையோடு வரக்கூடியவர்கள்

முஸ்லிம் மாணவர் பேரவையின் இந்த மாநாடு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப் பாளர்களாக கேரள மாநில தொழில் அமைச்சர் வந்திருக் கிறார். நான் வந்திருக்கிறேன். தொடர்ந்து வந்து கொண்டி ருக்க கூடியவன்தான். தலைவர் கலைஞர் அவர்களாக இருந் தாலும் சரி திராவிட முன் னேற்றக்கழகத்தில் எங்களை போன்றவர்களாக இருந்தாலும் சரி நீங்கள் அழைக்கிற போதெல்லாம் வரக்கூடியவர் கள். அதையும் தாண்டி உரிமையோடு சொல்ல வேண்டு மானால் நீங்கள் அழைத்தாலும் அழைக்க வில்லையென்றாலும் உரிமையோடு வரக்கூடியவர் கள் நாங்கள். அந்த வகையிலேதான் இந்த நிகழ்ச் சிக்கு நாங்கள் பெருமையோடு வந்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் சந்திக்கின்ற நல்வாய்ப்பை பெற்றிருக் கின்றேன். அதற்காக முஸ்லிம் மாணவ பேரவை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளுக்கு, அதையும் தாண்டி பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர் களுக்கு என்னுடைய நெஞ் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உரிமைகளை பெற்றுத்தந்த முஸ்லிம் லீக்
இந்திய திருநாடு ஆங்கி லேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருந்த காலகட்டத் தில் 1906ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப் பட்டு முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன்மைகளை பாதுகாத்து, கல்வி வேலை வாய்ப்புகளை உருவாக்கி விகிதாச்சார பிரதிநி தித்துவத்தை பெற்றுத் தந்தது. 1948ம் ஆண்டு மார்ச் மாதம் 10 தேதி சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கக் கூடிய அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில் இந்த இயக்கத்தை தலைவரக பொறுப்பேற்று அயராது உழைத்திருக்கக்கூடிய அந்த உழைப்பை பாடுபட்டிருக்கக் கூடிய அந்த பண்பை சமு தாயத்தின் வளர்ச்சிக்காக குரல்கொடுத்திருக்க கொண்டி ருக்க கூடிய அந்த உணர்வு களை எல்லாம் நான் இந்த நேரத்தில் நினைத்து பார்க்கி றேன்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இடம்பெற்று அன்றைக்கே குரல் கொடுத்திருக்கிறார். முஸ்லிம் களின் வாழ்வாதார உரிமைக் காக, இட ஒதுக்கீட்டிற்காக, தனித் தன்மைகளை பாது காக்க வேண்டும் என்பதற்காக அன்றைக்கே குரல் கொடுத் திருக்கக்கூடிய அந்த வரலாற்றை நாம் இன்றைக்கு எண்ணிப் பார்க்கிறோம். இன்னமும் சிறப்பாக சொல்ல வேண்டும். என்றால் இந்தியா வின் ஆட்சி மொழியாக எந்த மொழி இடம் பெற வேண்டும் என்ற பிரச்சினை வந்த நேரத்தில், இலக்கண வளமும் இலக்கிய நயமும் ஒருங்கே அமைய பெற்றிருக்கக்கூடிய என்னு டைய தாய் மொழி தமிழ்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக அமைய வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.

அப்படிப்பட்ட கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி அவருடைய மறைவுக்குப் பின்னால் மறைந்த பெருமதிப் பிற்குரிய அப்துஸ் ஸமது அவர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்தி, அவர் மறைவுக்கு பின்னால் இந்த இயக்கத்தை பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கள் சிறப்போடும் கண் ணியத்தோடும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பல்வேறு தலைவர்கள் இடம் பெற்று இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை பெற்று தந்திருக் கிறார்கள். அறிஞர் அண்ணா காலம் தொட்டு கண்ணியத் திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்து தோழமை உணர்வோடு, அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் அவர்கள் அதே நிலையை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

அந்த உணர்விலேதான் தலைவர் கலைஞர் அவர்கள் சிறுபான்மை முஸ்லிம் சமுதாய பெருமக்களுக்காக எத்தனை யோ சாதனைகளை திட்டங் களை உருவாக்கி தந்திருக் கிறார்கள். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கல்வி வேலை வாய்ப்பு பெறுவதற்காக முஸ்லிம் சமுதாயத்தை பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டு மென கோரிக்கை வைத்த போது அதை நிறைவேற்றி தந்தார். பிற்படுத்தபட்டோருக் கான இட ஒதுக்கீட்டிலிருந்து 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை முஸ்லிம் சமு தாயத்திற்காக வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இதன் காரணமாகத்தான் பொறியியல் கல்லூரியிலும், மருத்துவ கல்லூரியிலும் முஸ்லிம் மாணவர்கள் ஏராள மானோர் பயிலக்கூடிய வாப்பை பெற்றிருக்கிறார்கள் என்பது வரலாறு. இதனை நான் பெருமை யோடு இங்கே குறிப்பிட முடியும்.

பெண்களுக்கு சொத்திலே பங்களிக்கப்பட வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்காக தந்தை பெரியார் அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் மிக முக்கியமானது எது என்றால் சொத்திலே பெண் களுக்கு சம உரிமை தந்திட வேண்டும் என்பதுதான். 1929லே நிறை வேற்றப்பட்ட அந்த தீர்மானத்தை அறுபது ஆண்டு களுக்குப்பிறகு 1989லே நிறைவேற்றித் தந்தது கலைஞர் தலைமையிலான திராவிடர் முன்னேற்ற கழக ஆட்சி.

1969ல் மீலாது நபிக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சிதான். உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் சேர்த்த தும் தி.மு.கழக ஆட்சிதான். அண்ணா சாலையிலுள்ள கலைக்கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டி மகிழ்ந்ததும் தி.மு.கழக ஆட்சிதான். விண் ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு வழங்கியது தி.மு.கழக ஆட்சி தான். 1999ல் சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம், 2001லே காயிதே மில்லத் மணி மண்டபம் அமைத்திட ரூ 58 லட்சரூபாய் ஒதுக்கி அந்த பணியையும் தொடங்கி வைத் தது தலைவர் கலைஞர் அவர்கள் தான். சீறாப்புராணம் பாடிய அமுதகவி உமறுப்புலவருக்கு 2008ல் எட்டயபுரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டது கலைஞ ருடைய ஆட்சியில்தான் என்பதை நான் இங்கு நினைவு படுத்திட விரும்புகிறேன். இப்படி ஒரு பெரிய பட்டியலை நான் தர முடியும். நேரத்தின் அருமை கருதி நான் சுருக்கமாகவே இவைகளை எடுத்து நான் சொல்லியிருக் கிறேன். முஸ்லிம் மாணவர் பேரவையில் இருந்து உருவான தலைவர்கள்

மாணவச்செல்வங்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாட்டை நடத்துகிறீர்கள். இங்கு உரையாற்றியவர்கள் கூட சொன்னார்கள், ‘பெரியவர் களாகிய நாங்கள் இதில் தலையிடவில்லை ஒதுங்கிக் கொண்டோம். முழு பணியையும் மாணவர்கள் இடத்தில் ஒப் படைத்தோம் அவர்கள் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’ என்று.

இங்கே உரையாற்றியவர்கள் குறிப்பிட்டார்கள், முஸ்லிம் மாணவர் பேரவை 1958லே உருவாக்கப்பட்டது என்று. அந்த அமைப்பிலிருந்து உருவானவர் தான் கேரளாவின் முதல்வர் பதவியிலே அமர்ந்த சி.எச். முஹம்மது கோயா அவர்கள். அதைப்போன்று இன்றைக்கு மத்தியிலே அமைச்சர் பொறுப்பிலே உள்ள இ. அஹமது அவர்களும் இந்த அமைப்பி லிருந்து உருவானவர் தான். ஏன், இங்கே அமர்ந்திருக் கக்கூடிய கேரள தொழில்துறை அமைச்சர் பி.கே. குஞ்ஞாலி குட்டியும் இந்த அமைப்பில் இருந்து உருவான வர்தான்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலத்தில் முஸ்லிம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர்தான் இன்று இயக்கத்தை நடத்தக்கூடிய கண்ணி யத்திற்குரிய அய்யா காதர் மொகிதீன் என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

இவைகளை எல்லாம் நான் இங்கு எடுத்துச்சொல்வதற்கு என்ன காரணம் என்றால் வரக்கூடிய தலைமுறையின ரானமாணவ செல்வங்கள் எழுச்சியோடு மாநாட்டை நடத்து வது மட்டும்மல்ல தீர்மானங்களை நிறைவேற்று வது மட்டுமல்ல, இங்கே பேசுகின்ற உரைகளை கண் ணும் கருத்துமாக கேட்பது மட்டுமல்ல நாட்டினுடைய நிலைமைகளை நினைத்து பார்த்து இங்கு சொல்லப் படக்கூடிய கருத்துக்களை ஏற்று செயல்படுத்த வேண்டு மென கேட்டுக் கொள்ள கடமைபட் டிருக்கிறேன்.

மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதை மனதிலே பதிய வைத்து கொள்ள வேண்டும். எதையும் என்று சொன்னால் எதை செய்ய வேண்டுமோ அதை. விஞ் ஞானத்தின் வளர்ச்சியில் நாம் கம்ப்யூட்டரின் முன் னேற் றத்தை கண்டு கொண்டு இருக்கிறோம். இன்று மாணவர்களின், இளை ஞர்களின் வாழ்வில் நாட்டுப் பற்று, மொழிப்பற்று என்பது குறைந்து கொண்டே வருகிறது. நாம் அதை மறுத்திட முடியாது.

ஆனால் காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி என்பது வேண்டும் ஒரு நாடு வளர வேண்டுமானால் விஞ்ஞான வளர்ச்சி தேவை. விஞ்ஞான வளர்ச்சி சில நேரங்களில் ஆபத்தாகவும் முடிந்து விடு கிறது. விஞ்ஞான வளர்ச்சியால் தான் செல்போன் உருவானாது. அந்த செல்போன்கள்தான் கர்நாடக சட்டப்பேரவையில் அமைச்சர் களையே காட்டி கொடுத்தது. அந்த வளர்ச்சி தேவையில்லை. மாணவர் போராட்டம்

1967ல் அண்ணா தலைமை யில் திராவிடர் முன்னேற்றக் கழக ஆட்சி அமைவதற்கு எது காரணம் என்று சொன்னால் மாணவர் அமைப்புதான். 1937-38ம் ஆண்டிலே இந்தி திணிப்பை எதிர்த்து போராடிக்கூடிய மொழிபோர் தொடங்கப்பட்ட போது அதன் உச்சகட்டமாக அது 1962லேதான் வெடித்தது. திணிக்கப்படக்கூடிய இந்தியை எதிர்க்க வேண்டும். நம்முடைய தாய் மொழி அழகு தமிழ் மொழியை காப்பற்றிட வேண்டும் என்ற முழக்கம் ஒலிக்கிறது.

இந்த போராட்டம் உச்ச கட்டத்தை அடைகிறது தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு காரா கிரகத்தில் அடைக்கப்படுகிறார்கள். அண்ணா சிறையில் அடைக் கப்படுகிறார். தலைவர் கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார். பல தலைவர்கள் இப்படி சிறையில் அடைக்கப்படு கிறார்கள். அப்போது தமிழகத் தில் இருக்கக்கூடிய இளைஞர் கள் குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக்கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.


எங்கு பார்த்தாலும் மாணவர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவர் கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த சிதம்பரம் நகர் வீதியிலே ஒன்று சேர்ந்து ஊர்வலத்தை நடத்துகிறார்கள். அவர்களின் வலது கையிலே திராவிட முன்னேற்றக்கழகத்தின் இரு வண்ணக்கொடி. இடது கரத்தில் இந்தி ஒழிக,தமிழ் வாழ்க என எழுதப்பட்ட அட்டை அதைத் தாங்கி முழங்கி வருகிறார்கள்.

அப்போது கோட்டையில் அமைர்ந்திருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் உத்தரவிடு கிறார்கள். இந்தியை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும், தமிழ் வாழ்க என எவனாவது வாய் திறந்து சொன்னாலும் அவனை எல்லாம் காக்கை குருவிகளை சுட்டு தள்ளுவதைப்போல் சுட்டுத்தள்ளுங்கள். என ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதற்கு கட்டுப்பட்டு காவல் துறையினர் செயல்படுகிறார் கள். காக்கை குருவிகளை சுட்டு தள்ளுவதை போல் சுட்டு தள்ளுகிறார்கள்.

அப்படி சுடப்பட்ட நேரத்தில் அந்த மாணவர் பட்டாளத்துக்கு தலைமை ஏற்று நடத்திய ஒரு மாணவன் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய மாணவன். அவன் யார் என்று கேட்டால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு போலீசார் பெற்றெடுத்த செல்வன் அவன் பெயர் ராஜேந் திரன். நீங்கள் இன்றைக்கு சிதம்பரத்திற்கு சென்றால் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குள்ளே ஒரு சிலை இருக்கிறது. அந்த சிலைதான் ராஜேந்திரனுடைய சிலை.

இன்னும் பெருமையுடன் சொல்கிறேன் அவன் படித்த பல்கலைக்கழகத்திலே இருக் கிறது உலகத்திலேயே எந்த பல்கலைகழகத்திலும் படித்த மாணவனுக்குசிலை கிடையாது. ஆனால் சிதம்பரத்தில் இருக்கக் கூடிய அண்ணாமலை பல்கலை கழகத்தில் இருக்கிறது. அவன் ஏன் சிலையாக மாறியிருக் கிறான் என்றால் அந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி வந்தபோது போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி றான். அவன் நெஞ்சிலே குண்டு பாய்கிறது. அவன் கீழே சாய்கிறான் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தபோது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறான். அவனை பெற்றெடுத்த பெற்றோர்கள் ஒரு போலீசார் குடும்பம்.

அவனை தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல மாணவர்கள் முயற்சிக் கிறார்கள். அவன் தடுக்கிறான். நியாயமாக அவன் என்ன சொல் லியிருக்க வேண்டும், என் தாய், தந்தையரை பார்க்க வேண்டும் என் உறவினர்களை பார்க்க வேண்டும் என்று. ஆனால் அவன் கடைசி நேரத்தில் கூட நான் படித்து பட்டதாரி ஆக வேண்டும் என்றுகூட சொல்ல வில்லை. அந்த கடைசி நேரத் தில் கூட அவன் முழங்கிய முழக்கம் எது என்று சொன்னால் இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று அந்த முழக்கத்தோடுதான் உயிர் பிரிந்தது. ஆக, அந்த உணர்வு மாணவர், இளைஞர்கள் இடத்தில் இருக்கிறதா என்றால் அது குறைந்து கொண்டிருக் கிறது. நமக்காக இல்லை யென் றாலும் நம்முடைய எதிர்கால சந்ததியினருக்காக உங்களைப் போன்ற மாணவர்கள் இளைஞர் கள் முன் வந்தால்தான் ஒரு புத் துணர்ச்சியை மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அதை ஏற்படுத்துவதற்கு உறுதி எடுக்கின்ற முயற்சியிலேதான் இந்த மாநாட்டை நடத்தி கொண்டிருக்கிறீர்கள். அந்த உணர்வோடுதான் நானும் பங்கேற்க வந்திருக்கிறேன். உங்கள் தீர்மானங்கள் வெற்றி பெற தலைவர் கலைஞரோடு சேர்ந்து நானும் ஒத்துழைப்பேன் என உறுதி கூறுகிறேன்.

இவ்வாறி தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

புதன், 2 அக்டோபர், 2013

நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் :சேயன் ஹமீது


இன்று லுஹர் தொழுகைக்குப் பின் பள்ளியில் என்னைச் சந்தித்த நண்பர் ஒருவர் காமராஜரையும், ப. ஜீவானந்தம் அவர்களையும் சிறந்த அரசியல் தலைவர் என்று சொல்லி இருக்கீங்க, ஏன் காயிதே மில்லத் இல்லையா? எனக் கேட்டார்.
நான் சொன்னேன், "நான் எப்பவும் காயிதே மில்லத் அவர்களை வெறும் அரசியல் தலைவராக மட்டும் பார்ப்பதில்லை, அவர் அரசியலையும் மீறி ஒரு ஆன்மீகத் தலைவர். எப்போதெல்லாம் உலகில் அரசியலும் ஆன்மீகமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல செர்ந்திருந்ததோ அப்பவெல்லாம் அரசியலில் ஒழுக்க விழுமியங்கள் கோலோச்சின. 

காயிதே மில்லத் அவர்கள் மிக உயர்வான ஆன்மீக அரசியல் வாதி!
"தொடர்ச்சியாக தமிழர்கள் மறக்கக் கூடாத மாமனிதர்கள் பட்டியல் ஒன்று விருப்பு வெறுப்பின்றித் தயாரிக்கப்பட்டால், கட்டாயம் அப்பட்டியலில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயர் இடம்பெற்றே தீரும்.
ஒரு தமிழனாக, ஒரு முஸ்லீமாக, ஒரு இந்தியனாக, ஒரு தலைவனாக, மாந்தநேயம் உள்ள மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணங்களைத் தனக்குத் தானே வகுத்துக் கொண்டு, அந்த இலக்கணங்களை விட்டு விலகாத இலக்கியமாகத் தானே வாழந்துகாட்டிய பெருமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் ஒருவராக 1948 ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார்.

14.9.49 அன்று அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழி பற்றி விவாதித்தபோது இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என ஆணித்தரமாக எடுத்துரைத்தார். வரலாற்றின் பொன்னேட்டில் அன்று அவர் பொறித்துச் சென்ற வைர வரிகள் இவை:
“ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.

அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.

அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”
பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.

அவருக்கு ஒரு காரை வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஒரு உதவி கேட்டார். “ஐயா என்னிடம் வெளிநாட்டுக் கார் உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்” என்றார். அதற்கு என் வீட்டில் கார் கொட்டகை இல்லையே என்றார் காயிதே மில்லத். “கார் கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்” என்றார் மலேசிய அன்பர். நேரடியாக காரை பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.

கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு காரை வாங்கி சாவியை காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஒன்றின் உபயோகத்திற்கு அந்தக் காரை அங்கேயே கொடுத்து விட்டார்.

ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஒரு உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு காயிதே மில்லத் அவர்கள் இது எனது சகோதரருக்கு எழுதுகின்ற கடிதமாகையால் அலுவலகப் பணத்தை இதற்கு செலவழிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். அலுவலகப் பொறுப்பாளர் உடனே, தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தானே, எனவே கட்சிப் பணத்தை செலவு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டானாவை அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பி விடுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டார்.

இதுபோல் காயிதே மில்லத் அவர்களின் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள். நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்."

செவ்வாய், 1 அக்டோபர், 2013

முஸ்லிம் மாணவர் பேரவையின் கடந்தகாலமும் நிகழ்காலமும் :பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் 5-10-2013 சனிக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் எம்.எஸ்.எஃப் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

மாணவர்கள் பங்கேற்கும் மாநில மாநாடா? - என்று சிலர் வினா தொடுக்கிறார்கள் - பலர் வியந்து மாநாட்டை எதிர் நோக்கியிருக்கிறார்கள். எம்.எஸ்.எஃப் முஸ்லிம் மாணவர் பேரவையில் உள்ள தம்பிகள் - நம் சமுதாயத்திற்கு பணிபுரிய வந்துதித்த தங்கக் கம்பிகள். சில ஆண்டுகளாக மாவட்ட அளவில் பயிலரங்கங் கள் என்று நடத்தி பேரும், பாராட்டும் பெற்று வந்தவர்கள்.

இப்போது முதல் முறையாக மாநில மாநாடு என்று அறிவித்து மிகுந்த உற்சாகத்துடன் களம் இறங்கி காரியங்கள் செய்து வருகிறார்கள். முதலில், சில இடங்களில் எம்.எஸ்.எஃப் மாநில மாநாடு என்று சுவர் விளம்பரம் எழுதினார்கள். அதற்கு பிறகு பார்த்தால் தமிழ்நாட்டின் பெருநகரங்கள், நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் என்று எங்கு பார்த்தாலும் சுவர் விளம்பரங்கள் தெரிகின்றன! இதனை பார்த்து சிலர் வயிறும் எரிகின்றனர்.

நமக்குந்தான் பெரு வியப்பாக இருக்கிறது. மாநில அளவில் செய்யது பட்டாணி - ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் - தலைமையில் 12 பேர் அடங்கிய அமைப்புக்குழு தான் அமைத்தோம்.

அவரும், அவரது அணியினரும் எம்.எஸ்.எஃப் அமைப்புப் பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபட்டு முழுமூச்சுடன் பாடுபட்டு இப்போது எங்கு பார்த்தாலும் எம்.எஸ்.எஃப் என்பதை பார்ப்பவர்களின் கண்களில் படும்படி செய்திருக்கிறார்கள்.

சுவர் விளம்பரத்தில் ஆரம்பித்து ஸ்டிக்கரில் பரவி, டிஜிட்டல் பேனர்களில் ஒளிவீசி இன்றைக்கு தமிழக முஸ்லிம் சமுதாயத் தில் உள்ள அனைவரும் பேசக்கூடிய அளவுக்கு எம்.எஸ்.எஃப் மாநில மாநாட்டுச் செய்தி விளம்பரம் ஆகியிருக்கிறது.

இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?


எம்.எஸ்.எஃப் தலைமை குழுவுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும், அறிவுரையும், அறவுரையும் ஒவ்வொரு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளும், சமுதாயப் பெரியோரும் சங்கைமிகுந்த உலமாகளும் வழங்கியுள்ளதே காரணமாகும்.

சமுதாயத்தின் சான்றோரும், ஆன்றோரும், பெரியோரும் மனம் மகிழும் அளவுக்கு மாணவர்கள் எழுச்சி பெற்றிருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதிலும் புதுச்சேரி உள்பட 43 மாவட்டங்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என அமைப்பு விதிகள் கூறுகின்றன.

எம்.எஸ்.எஃப் மாநில மாநாட்டையொட்டி இந்த 43 மாவட்டங்களிலும், மாவட்ட எம்.எஸ்.எஃப். அமைப்பாளர்களை நியமித்து பட்டியலும் தந்திருக்கும் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பாராட்டுக் குரியவர்கள்.

காலங்காலமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்காக சேவை செய்து வரும் மூத்த தலைவர்கள் சமயம் வரும்போது எப்படி சாதனை புரிவார்கள் என்பதற்கு இந்த மாவட்ட அமைப்பு பட்டியல் ஓர் அத்தாட்சியாகும்.

இதுதான் இன்றைய தேவை! இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் அரவணைப்பு தேடுகிறார்கள். அதனை மூத்தவர்கள் தரும்போது அவர்களுக்கு மத்தியில் புதியதொரு எழுச்சி பிறக்கிறது - இதனால் சமுதாயம் சிறக்கிறது.

ஒவ்வொரு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தத்தமது மாவட்டங்களிலிருந்து 200, 300, 500 மாணவர்களை மாநாட்டுக்கு அழைத்து வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடக்கின்றன என தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தலைமை நிலையத்திற்கு வந்துள்ள தகவல்களை பார்க்கும் போது சென்னை பெரியார் திடல் மாணவர் பேரவை மாநில மாநாட்டுக்கு போதுமா? என்ற ஐயத்தை எழுப்பியிருக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால், எம்.எஸ்.எஃப். மாநில மாநாட்டுக்கு இனிமேல் சென்னை தீவுத்திடல்தான் சரியான இடம் எனத் தெரிகிறது. இதை இன்று சமுதாயம் புரிகிறது.

அக்டோபர் 5 சனிக்கிழமையில் எம்.எஸ்.எஃப். மாநாடு வன்முறைக்கு பணியவும் கூடாது!

வன்முறைக்கு துணியவும் கூடாது! - என்று ஒங்கி ஒலிக்கப் போகிறது. இந்த ஓங்கார ஒலிதான் நாட்டில் எங்கும் இனி ஒலிக்கப் போகிறது.

காயிதெ மில்லத் காலத்தில் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்ட பன்னூலாசிரியர் ஏ.கே. ரிபாயி சாஹிப் அவர்களால் முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் என இந்த எளியேன் அறிவிக்கப்பட்டபோது நான் ஒருவன்தான் எம்.எஸ்.எஃப். உறுப்பினன் என்ற நிலை இருந்தது.

சிந்தனைச்செல்வர் சிராஜுல் மில்லத் காலத்தில் இன்றைய பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மற்றும் மில்லத் இஸ்மாயில், கவிஞர் ஷேக் மதார், ஏ.எச். முஹம்மது இஸ்மாயில், காரை சஹாபுதீன், ஆடுதுறை ஜமால் இப்றாஹீம், வந்தவாசி அப்துல் காதர் ஷெரீப், கீழக்கரை எஸ்.கே.எஸ். அமீதுர் ரஹ்மான், இப்றாஹீம் மக்கீ, மேட்டுப்பாளையம் யு.எஃப். அப்துல் ஹக்கீம், ஹாங்காங் ஹசன், பள்ளபட்டி யூனுஸ், காயல் ஜரூக், லால்பேட்டை அப்துல் ரஹ்மான், திருச்சி பைஸுர் ரஹ்மான், கடையநல்லூர் ஹபீபுல்லாஹ் போன்ற தம்பிகள் மாணவர் பேரவையில் முன்னணியில் இருந்து ஒவ்வொரு கல்லூரியிலும் எம்.எஸ்.எஃப். அமைப்புப் பணியில் ஈடுபட்டனர். மீலாது விழாக்கள் நடத்தினர். மீலாது கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினர்.

அன்றைக்கு இந்த மாணவர் பேரவையினர் குற்றாலத்தில் மாபெரிய மாநாடு ஏற்பாடு செய்து பனாத்வாலா சாஹிப் மற்றும் கேரளத் தலைவர்களை பங்கேற்கச் செய்து சாதனை புரிந்தனர்.

இன்றைக்கு அந்த மாணவர் பேரவையில் தோன்றிய சகோதரர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இன்று மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் பணியாற்றுகிறார்.

பொதுச் செயலாளர், மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், மற்றும் ஹமீதுர் ரஹ்மான், லால்பேட்டை அப்துல் ரஹ்மான், நாகூர் ஆலியா சேக் தாவூது மiடிரக்காயர், கத்தார் கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மது, முகம்மது முஸ்தபா, சிங்கை கவுஸ் முகம்மது, ஆடிட்டர் முகம்மது ஹஸன், குவைத் பாரூக், ஷகீன்ஷா, பாங்காக் வாவு சம்சுதீன், ஹாங்காங் முகம்மது ஹஸன் ஆகியோர் பெரும் தூண்டு சக்தியாக இருந்து இன்றைக்கு செய்யது பட்டாணி தலைமையில் மாநில மாநாடு நடக்கிறது.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் எம்.எஸ்.எஃப். பிரதிநிதிகளுக்கு மதிய உணவை அளிக்கும் பொறுப்பை விருதுநகர் ஹோட்டல் அதிபர் இப்ராஹிம்ஷா பெருமன துடன் ஏற்று உற்சாகப்படுத்துகிறார்.

இது சரித்திரம் படைக்கும் சாதனை மாநாடு. மாணவர் எழுச்சிக்கு இது தொடக்கம். இனி ஆண்டுதோறும் நாடு வியக்க எழுச்சி மாநாடு நடக்கும். புதிய சரித்திரம் படைக்கும்.