Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 21 ஜனவரி, 2013

லட்சம் பேருக்கு "கல்தா" நிச்சயம்:பி.எஸ்.என்.எல்., நிறுவனம் திட்டம்


பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டுள்ளது.பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிறுவனத்தின் வருவாயில், 48 சதவீதத்தை, ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவிட வேண்டிய நிலை உள்ளது. இது, அந்த நிறுவனத்துக்கு, பெரும் சுமையாக உள்ளது.

எனவே, இந்த சுமையை குறைக்கும் வகையில், விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், ஒரு லட்சம் ஊழியர்கள், தேவைக்கு அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.எனவே, இந்த கூடுதல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதன் மூலம், இவர்களுக்கான சம்பளத் தொகை, மீதமாகும் என, அதிகாரிகள் மதிப்பிட்டு உள்ளனர். ஒரு லட்சம் பேர், விருப்ப ஓய்வு பெற்றால், தற்போதுள்ள சம்பளச் சுமையில், 15 சதவீதம் வரை குறையும்.

இதன் பின்,நிறுவனத்தை, சுமுகமான முறையில் செயல்படுத்த முடியும். அளவுக்கு அதிகமான ஊழியர்களின் எண்ணிக்கையைத் தவிர, மேலும் ஒரு பிரச்னையும் உள்ளது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், தற்போது பணியாற்றும் ஊழியர்களின் சராசரி வயது, 50 ஆக உள்ளது. இதில், குறிப்பிட்ட சிலருக்கு, வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு, போதிய திறமை இல்லை.இவ்வாறு, பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் தெரிவித்தன.

நேராக கொடுத்த புகாரை ஏற்க மறுத்த போலீசார்:"பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதற்கு கூடுதல் மரியாதை


அனுபவ் சோனி என்ற இளைஞர், பெங்களூரில் செயல்படும், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். கடந்த வியாழனன்று, கார்ல்டன் டவர் என்ற இடத்திலிருந்து, ஒயிட்பீல்ட் என்ற இடத்திற்கு, மாநகர பஸ்சில் பயணம் செய்தார்.பழைய விமான நிலைய சாலையில், பஸ்சில் வரும் போது, நான்கைந்து பேர், அனுபவை தாக்கி, அவரின் மொபைல் போன் மற்றும் பணம் வைத்திருந்த பர்சை பறித்துச் சென்றனர்.

பணத்தை இழந்த அந்த இளைஞர், புகார் கொடுக்க, பழைய விமான நிலைய சாலை, போலீஸ் நிலையம் சென்றார். "சம்பவம் நடந்தது, எங்கள் எல்லையில் இல்லை' என, தெரிவித்த போலீசார், எச்.ஏ.எல்., போலீசில் புகார் கூறும்படி தெரிவித்தனர்.எச்.ஏ.எல்., போலீசாரும் புகாரை பெற்றுக் கொள்ளவில்லை. "சம்பவம் நடந்தது, பஸ்சில். கார்ல்டன் டவர் போலீசில் போய் புகார் கொடுங்கள்' என்றனர். இதனால், விரக்தி அடைந்த அனுபவ், வீட்டுக்கு திரும்பினார்.

மொபைல் போனையும் அந்த நபர்கள் பறித்து சென்றதால், மாற்று, "சிம்' கார்டு வாங்க, மொபைல் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, போலீசில் புகார் செய்த நகல் கேட்டனர். மீண்டும் மறுநாள் போலீஸ் நிலையம் சென்ற அனுபவ், தன் வழக்கை பதிவு செய்யுமாறு கேட்டார்.

மறுத்த போலீசார், "போன் தொலைந்தது என, புகார் எழுதித் தந்தால் வழக்கை பதிவு செய்கிறோம்' என்றனர். "கொள்ளையர்கள் பறித்தனர் என, புகார் கொடுத்தால், ஏற்க முடியாது' என கூறியதால், வேறு வழியின்றி, "மொபைல் போன் தொலைந்து விட்டது' என, புகார் கொடுத்து, புகார் நகலை பெற்று, அதை மொபைல் போன் நிறுவனத்திடம் கொடுத்தார்.
பணம், மொபைல் போனை கொள்ளையர்களிடம் பறி கொடுத்ததை விட, போலீசார் நடந்து கொண்ட விதத்தால், மிகுந்த மன வேதனை அடைந்த அனுபவ், நடந்த சம்பவங்களை, பெங்களூரு நகர போலீசாரின், "பேஸ்புக்' இணையதளத்தில் எழுதினார்.

சனிக்கிழமை அவரின் மொபைலை தொடர்பு கொண்ட, பழைய விமான நிலைய சாலை மற்றும் எச்.ஏ.எல்., போலீசார், நடந்த சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதுடன், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் உறுதி அளித்தனர். மேலும், போலீஸ் அதிகாரி ஒருவர், அனுபவிடம் மன்னிப்பும் கேட்டார்.நெகிழ்ந்து போன அனுபவ் சோனி, மனிதனின் முகத்திற்கு இருக்கும் மதிப்பை விட, "பேஸ்புக்' இணையதளத்திற்கு இருக்கும் மரியாதையை எண்ணி வியந்தார்.

மாணவர்களுக்கு சுகாதாரம் கற்பிப்பு: அசத்தும் அரசுப்பள்ளி

கள்ளிக்குடி ஒன்றியம், எம்.போத்தநதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த சுகாதாரப் பள்ளியாக செயல்படுகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் பயன்படுத்தும்படி, எஸ்.எஸ்.ஏ., மற்றும் முழு சுகாதாரத் திட்டத்தில் தண்ணீர் வசதியுடன் தனி கழிப்பறைகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

 மேலும், கழிப்பறை சென்று பின்பும், சாப்பிடும் முன்பும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவுகின்றனர். வாரத்தில் ஒரு நாள் ஆசிரியைகள் முன் கைநகங்களை சுத்தம் செய்கின்றனர். சுத்திரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. கூடையில் மட்டுமே குப்பைகளை மாணவர்கள் சேகரிக்கின்றனர். தினமும், சுகாதார ஆத்திசூடி சொல்கின்றனர். போதுமான சோப்புகள், கைதுடைக்கும் துண்டுகள் கொடுத்து சுகாதார விழிப்புணர்வை தலைமையாசிரியை சித்ரா மற்றும் ஆசிரியைகள் செய்து வருகின்றனர். 

கம்பெனி செக்ரெட்டரி - ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பணி!


கார்பரேட் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும், ஒரு நபர் முக்கியப் பங்காற்றியிருப்பார். ஆனால், அவர் வெளியே தெரியமாட்டார். அவர்தான், கம்பெனி செக்ரட்டரி.

ஒரு சிறந்த கம்பெனி செக்ரட்டரி என்பவர், சட்டம், மேலாண்மை, பைனான்ஸ் மற்றும் கார்பரேட் நிர்வாகம் ஆகிய பல்துறை அறிவை தன்னகத்தேக் கொண்டு, ஒரு நிறுவனம் - அதன் இயக்குநர்கள் வாரியம் - பங்குதாரர்கள் - அரசாங்கம் - பிற ஏஜென்சிகள் ஆகியவற்றுக்கிடையே ஒரு பாலமாக திகழ்கிறார்.

ஒரு கம்பெனி செக்ரட்டரி என்பவர், உள்புற சட்ட நிபுணராக இருந்து, நிறுவனத்தின் சட்ட திட்டங்களின் படி செயல்படுபவராக திகழ்கிறார். கார்பரேட் சட்டம், செக்யூரிட்டீஸ் சட்டம், கேபிடல் மார்க்கெட் மற்றும் கார்பரேட் நிர்வாகம் ஆகியவற்றில் நிபுணராக இருக்கும் ஒரு கம்பெனி செக்ரட்டரி, இயக்குநர்களின் வாரியத்திற்கு, முதன்மை ஆலோசகராக இருக்கிறார் மற்றும் நிறுவனத்தின் அனைத்துவிதமான முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகிறார்.

சரியான தகுதியுள்ள ஒரு கம்பெனி செக்ரட்டரி, ஏதேனுமொரு கார்பரேட் நிறுவனத்திலும் பணிபுரியலாம் அல்லது தனியாகவும் பயிற்சி செய்யலாம். குறைந்தபட்சம் 5 கோடி மற்றும் அதற்கும் மேலான பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள், தமக்கான ஒரு முழுநேர கம்பெனி செக்ரட்டரியை கட்டாயம் நியமித்துக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்தப் பணிக்கான தேவைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பைனான்சியல் பிளானிங், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், வெல்த் மேனேஜ்மென்ட், அஸெட் மேனேஜ்மென்ட், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், பிரைவேட் ஈக்யூடி பைனான்ஸ் போன்ற வளர்ந்துவரும் பல அம்சங்களும், கம்பெனி செக்ரெட்டரிகளின் தேவைகளை அதிகரிக்கின்றன. இத்துறையில் பயிற்சி கொடுப்பதற்காக இருக்கும் பிரபல கல்வி நிறுவனம் ICSI. இத்துறை சார்ந்த பயிற்சிகளை ஒழுங்குபடுத்தவும், மேம்படுத்தவும், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாக இது உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம், தொலைதூரக் கல்வியின் மூலமும் படிப்புகளை வழங்கி, கம்பெனி செக்ரெட்டரிகளை உருவாக்குகிறது. மேலும், விருப்ப வாய்மொழி பயிற்சி வகுப்புகளும் உண்டு.

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்த ஒரு மாணவர், கம்பெனி செக்ரெட்டரி படிப்பில் சேரலாம். ஆனால் அவர் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். பவுண்டேஷன் ப்ரோகிராம், எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராம் மற்றும் ப்ரொபஷனல் ப்ரோகிராம் என்பவையே அவை. இதனோடு சேர்த்து, 15 மாதங்கள் பிராக்டிகல் பயிற்சியையும் முடிக்க வேண்டும். இந்த பிராக்டிகல் பயிற்சியை, விரும்பினால், எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராமில் தேறிய பிறகும் மேற்கொள்ளலாம்.

அதேசமயம், பட்டப்படிப்பை முடித்தப்பிறகு, கம்பெனி செக்ரெட்டரி படிப்பில் சேர விரும்பினால், எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராம் மற்றும் ப்ரொபஷனல் ப்ரோகிராம் என்ற இரு நிலைகளை முடிக்க வேண்டும். இதனுடன் சேர்த்து, 15 மாத ப்ராக்டிகல் பயிற்சியும் உண்டு. படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர், ICSI -ன் அசோசியேட் உறுப்பினராக நீங்கள் நியமிக்கப்படுவீர்கள் மற்றும் அதன்பிறகு, உங்களின் பெயருக்குப் பின்னால், ACS என்ற எழுத்துக்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். Associate Company Secretary என்பது இதன் அர்த்தம்.

கம்பெனி செக்ரெட்டரி படிப்பிற்கான சேர்க்கை ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை, ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் டைபெறுகின்றன.

இங்கு பயிற்சிபெற்ற கம்பெனி செக்ரெட்டரிகளுக்கு, வெளிநாட்டு பணிவாய்ப்புகள் அதிகம். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல கம்பெனி செக்ரெட்டரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் திறமைகள் மற்றும் சிறப்பான தகுதி நிலைகளுக்கு அங்கு மதிப்பு அதிகம்.

மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், ஆண்டுக்கு, 25 லட்சம் முதல் சுமார் 1 கோடி வரை சம்பளம் கிடைக்கிறது. சம்பள விகிதமானது, ஒருவரின் திறமை மற்றும் பணிபுரியும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. கம்பெனி செக்ரெட்டரிகள், மத்திய மற்றும் மாநில அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள், யூனியன் பிரதேசம் மற்றும் மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அரசு அமைப்புகள், அறக்கட்டளை மற்றும் லாப-நோக்கமற்ற நிறுவனங்கள் ஆகியவைகளில் பரவலான பணி வாய்ப்புகளை பெறலாம்.

WTO மற்றும் GATS ஆகியவற்றின் மூலமாக, சேவைகள், உலகமயமாக்கப்பட்டுள்ளதால், இத்துறைக்கான பணிவாய்ப்புகள் பல்வேறான உலக நாடுகளில் அதிகரித்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுடன், இந்திய அரசு இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதால், கம்பெனி செக்ரெட்டரிகளின் உலகம் இன்னும் விரிந்துள்ளது.

மேலும், 2009ம் ஆண்டின் கம்பெனிகள் மசோதா, கம்பெனி செக்ரெட்டரி தகுதி நிலையை, CEO மற்றும் CFO தகுதி நிலைகளுக்கு சமமாக நிறுத்துகிறது. இதன்மூலம், பொறுப்புகளும் அதிகரிக்கிறது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் பொது பயிற்சியில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் கீழ்கண்ட பிரிவுகளில் விரிந்துள்ளன. அவை,

Corporate Restructuring
Cross border insolvencies
Mergers and amalgamations
International tax planning
National Integrated VAT systems(GST)
Competition law and competition economics
Arbitration and dispute resolution
Legal and knowledge process outsourcing
Knowledge management
Indirect taxation

கட்டண விபரங்கள்

பவுண்டேஷன் ப்ரோகிராம் - ரூ.3600
எக்ஸிகியூடிவ் ப்ரோகிராம் - ரூ.7000 (வணிகம் படித்த மாணவர்களுக்கு)
வணிகம் படிக்காத மாணவர்களுக்கு - ரூ.7750
ப்ரொபஷனல் ப்ரோகிராம் - ரூ.7500

தேர்வுக்கட்டணம்

ஆண்டுக்கு இருமுறை, ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பவுண்டேஷன் ப்ரோகிராம் - ரூ.875
எக்ஸிக்யூடிவ் ப்ரோகிராம் - ரூ.900(per module)
ப்ரொபஷனல் ப்ரோகிராம் - ரூ.750(per module)

தேர்வெழுத, விண்ணப்பிக்கும் கடைசித் தேதிகள்

மார்ச் 25 (ரூ.100 அபராதத்துடன் ஏப்ரல் 9 வரை கட்டலாம்)
செப்டம்பர் 25 (ரூ.100 அபராதத்துடன் அக்டோபர் 10 வரை கட்டலாம்)

நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக மதச்சார்பற்ற மற்றும் முற்ப்போக்கு சகதிகள ஒன்று திரள வேண்டும் :காங்கிரஸ் அழைப்பு

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video