Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 21 ஜனவரி, 2013

மாணவர்களுக்கு சுகாதாரம் கற்பிப்பு: அசத்தும் அரசுப்பள்ளி

கள்ளிக்குடி ஒன்றியம், எம்.போத்தநதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த சுகாதாரப் பள்ளியாக செயல்படுகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் பயன்படுத்தும்படி, எஸ்.எஸ்.ஏ., மற்றும் முழு சுகாதாரத் திட்டத்தில் தண்ணீர் வசதியுடன் தனி கழிப்பறைகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

 மேலும், கழிப்பறை சென்று பின்பும், சாப்பிடும் முன்பும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவுகின்றனர். வாரத்தில் ஒரு நாள் ஆசிரியைகள் முன் கைநகங்களை சுத்தம் செய்கின்றனர். சுத்திரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. கூடையில் மட்டுமே குப்பைகளை மாணவர்கள் சேகரிக்கின்றனர். தினமும், சுகாதார ஆத்திசூடி சொல்கின்றனர். போதுமான சோப்புகள், கைதுடைக்கும் துண்டுகள் கொடுத்து சுகாதார விழிப்புணர்வை தலைமையாசிரியை சித்ரா மற்றும் ஆசிரியைகள் செய்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக