Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 26 ஜூலை, 2013

குண்டு தயாரிக்கும் ஆர்.எஸ்.எஸ். : திக்விஜய் சிங்

மத்திய பிரதேச சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு முகாமிட்டுள்ள திக்விஜய் சிங், நேற்று, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளிக்கிறது. இதை நான் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை,
உண்மையாகவே கூறுகிறேன். 


1992ம் ஆண்டு, இந்த மாநிலத்தில், பா.ஜ., ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், சேவா பாரதி இல்லத்தில், குண்டு வெடித்தது. அதில் ஒருவர் இறந்தார்.அந்த வழக்கை, பா.ஜ., மூடிவிட்டது. 1993ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், குண்டுவெடிப்பு தொடர்பாக,சங் பரிவார் அமைப்பை சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டார். அது போல், 2004ல், மோவா என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர், தனக்கு, ஆர்.எஸ்.எஸ்., சில் குண்டு தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறினார். இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார்.