Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 5 ஜூலை, 2013

கல்வி முறையில் மாற்றம் வேண்டும் : உச்ச நீதிமன்றம்


"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மகரிஷி மகேஷ் யோகி விஸ்வ வித்யாலயா என்ற கல்வி நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு, நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பி.எஸ்.சவுகானைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்" முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை, முந்தைய நிலையை விட, இப்போது அதிகரித்துள்ளது. கல்வியறிவு குறைவாக இருந்த போது, மனித மாண்பு சிறப்பாக இருந்தது. இப்போது, கல்வியறிவு அதிகரித்து உள்ளது; மனித மாண்பு குறைந்து விட்டது.

இதற்கு காரணம், கல்வி முறையில் உள்ள சிக்கல் தான். கல்வி கற்பதற்கான குறிக்கோள் எட்டப்படவில்லை; எனவே, நாட்டின் கல்வி முறையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பாளையில் கருத்தாளர்களுக்கான கருத்தரங்கம் நேற்று ஆரம்பமானது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒவ்வொரு பாட வாரியாக பயிற்சிகள் நடத்தப்படுகிறது.


இந்த பயிற்சிக்கான முதன்மை கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆரம்பமானது. முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரி பாய் தலைமை வகித்தார்.

ஆர்.எம்.எஸ்.ஏ உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வரவேற்றார். முனைஞ்சிபட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கவின் துவக்கி வைத்தார். ஆர்.எம்.எஸ்.ஏ ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகராஜன், செல்வராஜன் பயிற்சி குறித்து விளக்கமளித்தனர்.


நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள் தொகுத்து வழங்கினார். கருத்தாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
இப்பயிற்சி இன்றும் (5ம் தேதி) தொடர்ந்து நடக்கிறது. இப்பயிற்சி பெறும் கருத்தாளர்கள் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை 9 மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்றனர்.