Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 5 ஜூலை, 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பாளையில் கருத்தாளர்களுக்கான கருத்தரங்கம் நேற்று ஆரம்பமானது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒவ்வொரு பாட வாரியாக பயிற்சிகள் நடத்தப்படுகிறது.


இந்த பயிற்சிக்கான முதன்மை கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆரம்பமானது. முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரி பாய் தலைமை வகித்தார்.

ஆர்.எம்.எஸ்.ஏ உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வரவேற்றார். முனைஞ்சிபட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கவின் துவக்கி வைத்தார். ஆர்.எம்.எஸ்.ஏ ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகராஜன், செல்வராஜன் பயிற்சி குறித்து விளக்கமளித்தனர்.


நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள் தொகுத்து வழங்கினார். கருத்தாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
இப்பயிற்சி இன்றும் (5ம் தேதி) தொடர்ந்து நடக்கிறது. இப்பயிற்சி பெறும் கருத்தாளர்கள் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை 9 மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக