Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 27 ஜூன், 2013

நெல்லையில் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 நெல்லையில் கவுன்சிலிங்கிற்கு முன்பாகவே நடக்கும் இடமாறுதல் நடவடிக்கையை கண்டித்து கல்லூரி ஆசியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் கடந்த ஆண்டு முறையான அறிவிப்பிற்கு பின் நடந்தது.

இந்த ஆண்டு கவுன்சிலிங் அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஆசிரியர்கள் காத்திருதனர். இந்நிலையில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கவுன்சிலிங்கிற்கு முன்னதாகவே இடமாறுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் நேற்று ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி முன் நடந்த போராட்டத்திற்கு கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் பேராசிரியை வான்மதி தலைமை வகித்தார். செயலாளர் விஜிலா ரூபி முன்னிலை வகித்தார். ஆர்ப்õபாட்டத்தில் பங்கேற்றக ஆசிரியர்கள் கவுன்சிலிங் அறிவிப்பு இல்லாமல் நடக்கும் இடமாறுதல் செய்யும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுபோல் சுரண்டை அரசு கல்லூரியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ. படிப்பு


ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் + எம்.பி.ஏ., படிப்பைப் படிக்க நினைப்பது மிகவும் புத்திசாலித்தனமான செயல். இதை நடத்தும் சில கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

* வினோத் குப்தா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், ஐ.ஐ.டி., காரக்பூர்

* சைலேஸ் மேத்தா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், ஐ.ஐ.டி., மும்பை

* நர்ஸி மோஞ்சி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் ஹையர் ஸ்டடிஸ், என்.ஐ.எம்.எஸ்., மும்பை

* லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ

* குருஷேத்ரா பல்கலைக்கழகம், குருசேத்ரா

* தேவி அகில்யா விஸ்வவித்யாலயா, இந்தூர்

* பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிலானி

* மகரிஷி தயானந்தர் பல்கலைக்கழகம், ரோடக்

ராஜ்யசபா தேர்தல் முடிவு: திமுக வெற்றி ,தேமுதிக தோல்வி


தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடை பெற்றது.  முற்பகல் 11.25க்கு முதல்வர் ஜெயலலிதா முதல் வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது. 2 மணி 18 நிமிடங்கள் நடந்த இந்த வாக்குப் பதிவின்போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 231 பேர் வாக்களித்தனர். பாமக உறுப்பினர்கள் 3 பேர் வாக்குப் பதிவில் கலந்து கொள்ளவில்லை.

2.30 மணிக்கு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

அதிமுக சார்பில் போட்டியிட்ட மைத்ரேயன், அர்ஜூனன், ரத்தினவேல், லட்சுமணன் ஆகிய நால்வரும் வெற்றி பெற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட டி.ராஜா வெற்றி பெற்றார். மீண்டும் ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட டி.ராஜா வெற்றி பெற்றார். மீண்டும் ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 22 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.