Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 27 ஜூன், 2013

நெல்லையில் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 நெல்லையில் கவுன்சிலிங்கிற்கு முன்பாகவே நடக்கும் இடமாறுதல் நடவடிக்கையை கண்டித்து கல்லூரி ஆசியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் கடந்த ஆண்டு முறையான அறிவிப்பிற்கு பின் நடந்தது.

இந்த ஆண்டு கவுன்சிலிங் அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஆசிரியர்கள் காத்திருதனர். இந்நிலையில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கவுன்சிலிங்கிற்கு முன்னதாகவே இடமாறுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் நேற்று ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி முன் நடந்த போராட்டத்திற்கு கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் பேராசிரியை வான்மதி தலைமை வகித்தார். செயலாளர் விஜிலா ரூபி முன்னிலை வகித்தார். ஆர்ப்õபாட்டத்தில் பங்கேற்றக ஆசிரியர்கள் கவுன்சிலிங் அறிவிப்பு இல்லாமல் நடக்கும் இடமாறுதல் செய்யும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுபோல் சுரண்டை அரசு கல்லூரியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக