Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 27 ஜூன், 2013

ராஜ்யசபா தேர்தல் முடிவு: திமுக வெற்றி ,தேமுதிக தோல்வி


தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடை பெற்றது.  முற்பகல் 11.25க்கு முதல்வர் ஜெயலலிதா முதல் வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது. 2 மணி 18 நிமிடங்கள் நடந்த இந்த வாக்குப் பதிவின்போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 231 பேர் வாக்களித்தனர். பாமக உறுப்பினர்கள் 3 பேர் வாக்குப் பதிவில் கலந்து கொள்ளவில்லை.

2.30 மணிக்கு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

அதிமுக சார்பில் போட்டியிட்ட மைத்ரேயன், அர்ஜூனன், ரத்தினவேல், லட்சுமணன் ஆகிய நால்வரும் வெற்றி பெற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட டி.ராஜா வெற்றி பெற்றார். மீண்டும் ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட டி.ராஜா வெற்றி பெற்றார். மீண்டும் ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 22 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக