Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 23 மே, 2013

ஹெல்த் இன்பர்மேடிக்ஸ் படிப்பு


டில்லியில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மேனேஜ்மென்ட் ரிசர்ச் கல்வி நிறுவனத்தில், ஹெல்த் இன்பர்மேடிக்ஸ் மேனேஜ்மென்ட் பி.ஜி., டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் கேட், மேட் ஆகிய நுழைவுத் தேர்வுகளில் ஒன்றை எழுதியிருப்பது அவசியம்.

இந்த துறையில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள், நுழைவுத் தேர்வு எழுதியிருக்க தேவையில்லை.

விண்ணப்பத்தை கல்வி நிறுவன இணையதளத்தில் ‘டவுண்லோடு’ செய்யலாம்.

விண்ணப்பிக்க ஜூன் 2 கடைசி தேதி.

மேலும் விபரங்களுக்கு www.iihmrdelhi.org

என்.சி.டி.இ. அதிகாரம் வழங்கியும் கேரளமாநிலத்தில் பின்பற்றுவது போன்று ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடை பின்பற்ற முடியாது : ஜெயலலிதா அரசு அறிவிப்பு

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.

கடந்த, 10ம் தேதி, சட்டசபையில், பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், பல எம்.எல்.ஏ.,க்கள், டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

60 சதவீத மதிப்பெண்கள் என்ற அளவால், சமுதாயத்தில் பின் தங்கிய தேர்வர்களால் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது என்றும், குறிப்பாக, 55 சதவீதம், 58, 59 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் தேர்வர்கள் கூட, தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சுட்டிக் காட்டினர்.

அப்போது, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், "இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது" என தெரிவித்தார். இதனால், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான, டி.இ.டி., தேர்வு அறிவிப்பில், தகுதி மதிப்பெண்கள் குறைப்பு செய்யப்படவில்லை.

வழக்கம் போல், தகுதி மதிப்பெண்களாக, 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் சட்டக்கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் மந்தம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தின் மூலம் நெல்லை, மதுரை, சேலம், திருச்சி உள்பட பல இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன. இந்த சட்டக்கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று முன்தினம் முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

மருத்துவம், என்ஜினீயரிங் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவ–மாணவிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். ஆனால் சட்டக்கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வாங்குவதற்கு மாணவ–மாணவிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. நெல்லை சட்டக்கல்லூரியில் விண்ணப்பங்கள் விற்பனை மந்தமாகவே உள்ளது.