Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 21 மே, 2013

மெட்டீரியல் சயின்ஸ் (MATERIAL SCIENCE ) படிப்பு


பொருட்களின் அமைப்பிற்கும், அதன் தன்மைக்கும் இடையிலான தொடர்பை படிக்கும் துறை பொருளறிவியல் (மெட்டீரியல் சயின்ஸ்). குறிப்பிட்ட பொருளை எப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு உட்படுத்தினால் என்ன விளைவை பெறலாம் என்பதை இதில் பயிலலாம். இத்துறை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கான்பூர்
இக்கல்விநிறுவனத்தில் எம்.டெக்., மற்றும் பிஎச்.டி.,பிரிவுகளில் பொருளறிவியல் சார்ந்த படிப்புகளை படிக்கலாம். விவரங்களுக்கு www.iitk.ac.in

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை
இங்குள்ள உலோகவியல் மற்றும் பொருளறிவியல் துறை, பி.டெக்., இரட்டை(டூயல்) டிகிரி, எம்.டெக்., எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., பிரிவுகளின் கீழ், இத்துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. பயில விரும்புவோர் கேட் தேர்வில் கட்டாய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விவரங்களுக்கு www.iitm.ac.in

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காரக்பூர்
பொருளறிவியல் துறையில், ஆய்வுகளை கொண்டு வரும் நோக்கில், 1971ம் ஆண்டு இந்த படிப்பு இங்கு துவங்கப்பட்டது. எம்.டெக்.,பிரிவில் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் படிப்பு வழங்கப்படுகிறது. கேட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.iitkgp.ac.in

* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, துர்காபூர்
இங்கு பி.டெக்., மற்றும் எம்.டெக்.,கில் இந்த படிப்பு கற்றுத்தரப்படுகிறது. விவரங்களுக்கு www.nitdgp.ac.in

* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
இப்பல்கலையில் எம்.எஸ்சி., மெட்டீரியல் சயின்ஸ் உள்ளது. இதில் தெர்மோடைனமிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன், குவாண்டம் மெக்கானிக்ஸ், கிறிஸ்டலோகிராபி, செராமிக்ஸ் ஆகியவை குறித்து இந்த படிப்பில் முழுவதுமாக கற்றுத் தரப்படுகிறது. விவரங்களுக்கு www.annauniv.edu

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு
எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., பிரிவுகளில் மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங் உள்ளது. பொருளறிவியல்/உலோகவியல்/செராமிக்ஸ் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு mazerials.iisc.ernez.in

உப்பு கொள்முதலில் ம.பி., பிஜேபி அரசு ஊழல்


காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த அரசில், ஊழல் அதிகரித்து விட்டது. ம.பி., மாநில குடிமப் பொருள் வழங்கல் துறை சார்பில், கடந்தாண்டில், உப்பு கொள்முதல் செய்யப்பட்டது. 1 டன் உப்பு, 6,700 ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டது.

டெண்டர் விதிமுறைகளை மீறி, மிக அதிக விலைக்கு, இந்த கொள்முதல் நடந்துள்ளது. அருகில் உள்ள, குஜராத் மாநிலத்தில், இதே வகையான உப்பு, 1 டன், 3,300க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில், 5,670 ரூபாய்க்கும், ஆந்திராவில், 5,900 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ம.பி.,யில் மட்டும், அதிக விலை கொடுத்து, கொள்முதல் செய்தது ஏன்? இதில், ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்த வேண்டும். முதல்வர், சிவ்ராஜ்சிங் சவுகானுக்கும், இதை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார்.

அப்பாவி பெண்ணை, பயங்கரவாதி எனக் கூறி, சுட்டுக் கொன்றது குஜராத் மோடி அரசு : சரத் பவார்

அப்பாவி பெண்ணை, பயங்கரவாதி எனக் கூறி, சுட்டுக் கொன்றது குஜராத் அரசு. அந்தத் தவறை, தன் போலீஸ் துறையின் திறமையாக மெச்சிக் கொண்டவர், முதல்வர், நரேந்திர மோடி,'' என, மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான, சரத் பவார் கூறினார்.


 தானே நகரின், மும்பாரா என்ற இடத்தில், அமைச்சர் சரத் பவார் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.

கூட்டத்தில், சரத் பவார் கூறியதாவது:மும்பாரா பகுதி, ஒரு காலத்தில், அனைத்து சட்ட விரோத செயல்களுக்கும் தாயகமாக விளங்கியது. இப்போது, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. மாநிலத்தை ஆளும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. அடுத்த முறையும், இந்தப் பகுதி மக்கள், எங்கள் கூட்டணி வேட்பாளர்களையே ஆதரிப்பர்.

குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தன் போலீஸ் துறையை மெச்சிக் கொள்பவர். 2004ம் ஆண்டு, அப்பாவி முஸ்லிம் பெண் இஷ்ரத் ஜஹானையும், அவருடன் இருந்த இருவரையும், பயங்கரவாதிகள் என கருதி, குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்தவர்கள் என, கூறிய மோடி, மும்பை போலீஸ் செய்ய முடியாத காரியத்தை, குஜராத் போலீசார் செய்ததாக, பெருமை அடித்துக் கொண்டார். ஆனால், உண்மையில், இஷ்ரத் ஜஹான் அப்பாவி பெண்; அவருக்கும், பயங்கரவாதத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை.இவ்வாறு, சரத் பவார் பேசினார்.