Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 21 மே, 2013

உப்பு கொள்முதலில் ம.பி., பிஜேபி அரசு ஊழல்


காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த அரசில், ஊழல் அதிகரித்து விட்டது. ம.பி., மாநில குடிமப் பொருள் வழங்கல் துறை சார்பில், கடந்தாண்டில், உப்பு கொள்முதல் செய்யப்பட்டது. 1 டன் உப்பு, 6,700 ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டது.

டெண்டர் விதிமுறைகளை மீறி, மிக அதிக விலைக்கு, இந்த கொள்முதல் நடந்துள்ளது. அருகில் உள்ள, குஜராத் மாநிலத்தில், இதே வகையான உப்பு, 1 டன், 3,300க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில், 5,670 ரூபாய்க்கும், ஆந்திராவில், 5,900 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ம.பி.,யில் மட்டும், அதிக விலை கொடுத்து, கொள்முதல் செய்தது ஏன்? இதில், ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்த வேண்டும். முதல்வர், சிவ்ராஜ்சிங் சவுகானுக்கும், இதை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக