Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 1 ஜூலை, 2013

கம்பெனி செகரடரிஷிப் படிப்பு

காமர்ஸ் படிப்பவருக்கான தொழிற்படிப்புகளாகக் கருதப்படுவது சி.ஏ., கம்பெனி செகரடரிஷிப், ஐ,சி.டபிள்யூ.ஏ., போன்றவை. இதில் கம்பெனி செகரடரிஷிப் படிப்பும் சிறப்பான வேலை வாய்ப்புகளைத் தரக்கூடியது. ஒரு நிறுவனத்திற்கான சட்ட பூர்வமான ஆலோசனைகளை தருவது கம்பெனி செகரடரி தான்.

50 லட்சத்திற்கு மேல் நிலையான ஷேர் முதலீட்டைக் கொண்டிருக்கும் நிறுவனம் ஒவ்வொன்றும் கம்பெனிஸ் ஆக்ட் எனப்படும் கட்டாய விதிகளின் படி ஒரு கம்பெனி செகரடரியை தனது பணியில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, வணிக விதிகளை நன்றாக அறிந்திருப்பது, திறமையான மேலாண்மை ஆகியவற்றில் கம்பெனி செகரடரி தான் முக்கிய பங்காற்றுகிறார்.

இந்தியாவில் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரடரிஸ் ஆப் இந்தியா என்னும் அமைப்பு தான் இந்தத் தொழிற்படிப்பை நடத்துகிறது. இதில் 3 நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

* அடிப்படைப் படிப்பு (Foundation Course)
* இடைநிலைப் படிப்பு (Intermediate Course)
* முதன்மைப் படிப்பு (Final Course)
இந்த 3 படிப்புகளையும் வெற்றிகரமாக முடிப்பவர் பின்பு கம்பெனி செகரடரியாகப் பணியாற்றலாம். அடிப்படைப் படிப்புக்கு +2 முடித்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பு இது பட்டப்படிப்பு தகுதியாக இருந்தது. அடிப்படைப் படிப்புக்கான தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இடைநிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் அடிப்படைப் படிப்பை விட்டுவிட்டு இதில் நேரடியாகச் சேரலாம்.

முதன்மைப் படிப்பு எனப்படும் பைனல் தேர்வில் இன்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெறுபவர் கலந்து கொள்ளலாம்.தபால் மூலமாகவோ நேரடியாகவோ 18 மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற பின்பு தான் இந்தத் தேர்வை எழுத முடியும். இதற்கு கட்டாயமான நடைமுறைப் பயிற்சியும் தேவை.
கம்பெனி செகரடரி படிப்பை முடிப்பவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர அரசுத் துறையிலும், சட்ட நிறுவனங்களிலும் சிறப்பான பணி வாய்ப்பைப் பெற முடிகிறது. எம்.பி.ஏ.,வில் நிதிப் பிரிவை சிறப்பாகப் படித்து திறமைகளின் அடிப்படையில் உயர் பதவியைப் பெறும் ஒருவர் பெறும் சம்பளத்திற்கு ஈடான சிறப்பான சம்பளம் இதற்கும் தரப்படுகிறது.

இந்தியாவில் இந்தப் படிப்பை நடத்துவது ஒரே நிறுவனம் தான். ஐ.சி.எஸ்.ஐ., எனப்படும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் டில்லியில் உள்ளது. மேலும் கோல்கட்டா, மும்பை, சென்னை மற்றும் டில்லியில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. மேலும் 36 இடங்களில் கிளைகள் உள்ளன. 10 உட்கிளைகளும் இருக்கின்றன.

சென்னை அலுவலக முகவரி
புது எண் 9 பழைய எண் 4,
வீட்கிராப்ட்ஸ் சாலை, நுங்கம்பாக்கம்,
சென்னை 600 034,

மதுரை அலுவலக முகவரி
சி3, 3வது மாடி, ஏ.ஆர்.பிளாசா,
16/17 வடக்கு வெளி வீதி,
மதுரை 625 001. போன் 2340797

கோவை அலுவலக முகவரி
556 மேட்டுப்பாளையம் ரோடு
கோயம்புத்தூர் 641 043.
போன் 2452006, 4385766

திருச்சி அலுவலக முகவரி
34ஏ புரமனேட் சாலை
கன்டோன்மெண்ட்
திருச்சிராப்பள்ளி 620 001
போன் 2416337.

மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகை

மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை சார்பில், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

குறைந்தது 55 விழுக்காடு மதிப்பெண் எடுத்து 2011ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகை பெறும் மாணவர்களுக்கு 11ம் வகுப்பில் 6 ஆயிரம் ரூபாயும், 12ம் வகுப்பில் 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும், மேலும் விவரங்கள் அறியவும் www.maef.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித் தொகை

இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் உயர்கல்வி பயில விரும்பும் இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி
ஏழ்மை நிலையில் உள்ள, கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். உயர்நிலைப் பள்ளியில் உருது அல்லது ஆங்கில வழிக் கல்வி பயின்றிருக்க வேண்டும்.

உயர்கல்வி
மருத்துவம், பொறியியல், கற்பித்தல், நிர்வாகம் ஆகிய துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு www.irf.net என்ற  இணைய தளத்தை காணவும்.