Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து

மதுரை விமான நிலையத்தில் ரூ.130 கோடியில் சர்வதேச தரத்துடன் புதிய டெர்மினல் கட்டப்பட்டது. விமான நிலைய ஓடுதளமும் விமானங்கள் வந்து செல்லும் வகையில் 7,500 அடியாக நீட்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை,கொழும்பு இடையே விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இமிகிரேஷன் சோதனை மையம் செயல்படவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கிடையே மலேசியாவிலிருந்து 23 சுற்றுலா பயணிகளுடன் இரண்டு சிறிய ரக தனியார் விமானங்கள் நேற்று மதியம் மதுரை விமான நிலையத்தில் இறங்கியது. இமிகிரேஷன் சோதனையை எம்பி மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார். விரைவில் பன்னாட்டு பயணிகள் விமானங்கள் மதுரைக்கு இயக்கப்பட உள்ளன. இலங்கைக்கு செப்.8ம் தேதி முதல் மிகின் லங்கா நிறுவனம் விமானம் இயக்கப்பட இருந்தது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானம் செப்டம்பர் 20ம் தேதி முதல் இலங்கைக்கு விமான சேவையை துவக்குகிறது என்றார்.

வங்கிகளில் கடன் வாங்குவது தவறில்லை: ப.சிதம்பரம்


மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கிளையையும், ஏ.டி.எம்.மையத்தையும் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்  திறந்து வைத்து பேசியதாவது:-

பாங்க் ஆப் மகாராஷ்டிரா மிகப்பெரிய வங்கியாகும். இந்தியா முழுவதும் ஆயிரத்து 624 கிளைகள் உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும், தற்போது திறந்து வைத்த கிளையை சேர்த்து 30-வது கிளையாகும். மகராஷ்டிரா மாநிலத்திலேயே இது ஒரு முன்னோடி வங்கியாகும். நான் இத்தொகுதியில் 39 மாதங்களில் 66 முறை சுற்றுபயணம் செய்துள்ளேன். இந்தியாவிலேயே சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 72 மத்திய கிளை வங்கிகள் பொதுமக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.

வங்கியில் கணக்கு வைத்திருப்பது நமது தனிமனித உரிமை ஆகும். வங்கியில் தொழில் தொடங்குவதற்கோ, கல்வி கற்பதற்கோ, வீடு கட்டுவதற்கோ, கண்டிப்பாக கடன் கேட்க வேண்டும். கடன் வாங்குவது தவறு கிடையாது. மத்திய அரசு கிராம புறங்களில் வங்கி சேவை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 129 மாவட்டங்களில் ஆயிரத்து 23 வங்கி கிளைகளை திறந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள், மகளிர் குழுவினர், மாணவ-மாணவிகள் பயன் பெறவேண்டும்.

நான் 2010-ல் இங்கு வரும் போது, மத்திய வங்கி இங்கு ஏதும் இல்லை என கோரிக்கை வைத்தனர். மகாராஷ்டிரா வங்கியை ராஜகம்பீரத்திற்கு கொண்டு வந்ததன் மூலம், அந்த கோரிக்கை நிறைவேற்றப் பட்டுவிட்டது. இப்போது, இந்த கிளை மூலம் 2 கோடி கடன் வழங்கப்பட உள்ளது. இதில் ரூ.15 லட்சம் கல்விகடனாக வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. வங்கிசேவையை கிராம மக்கள் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடையநல்லூரில் வசிக்கும் 101 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர்


நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த அவரது பெயர் சுப்பையாநாயுடு. 15-8-1912 ந்தேதி பிறந்த இவர் இந்த மாதம் 100 வயதை கடந்து 101வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
 
காசிதர்மம் ஜில்லா போர்டு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த இவர் 1971-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 40 ஆண்டுகளாக பென்சன் பெற்று வருகிறார். யாருடைய துணையும் இல்லாமல் தனது தேவைகளை தானே செய்து வருகிறார். தினமும் தனது தோட்டத்திற்கு சென்று விவசாய பணிகளை கவனித்து வருகிறார்.
 
பேரன், பேத்திகளோடு இன்பமாக வாழ்க்கை நடத்தி வரும் அவர் கூறியதாவது:-
 
திடகாத்திரமாய் இருக்கும் எனக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது. 101 வயதின் துவக்கத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். தினமும் நடைபயிற்சியை தவறாமல் கடைபிடித்து வருகிறேன் என்றார்.