Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

வங்கிகளில் கடன் வாங்குவது தவறில்லை: ப.சிதம்பரம்


மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கிளையையும், ஏ.டி.எம்.மையத்தையும் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்  திறந்து வைத்து பேசியதாவது:-

பாங்க் ஆப் மகாராஷ்டிரா மிகப்பெரிய வங்கியாகும். இந்தியா முழுவதும் ஆயிரத்து 624 கிளைகள் உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும், தற்போது திறந்து வைத்த கிளையை சேர்த்து 30-வது கிளையாகும். மகராஷ்டிரா மாநிலத்திலேயே இது ஒரு முன்னோடி வங்கியாகும். நான் இத்தொகுதியில் 39 மாதங்களில் 66 முறை சுற்றுபயணம் செய்துள்ளேன். இந்தியாவிலேயே சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 72 மத்திய கிளை வங்கிகள் பொதுமக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.

வங்கியில் கணக்கு வைத்திருப்பது நமது தனிமனித உரிமை ஆகும். வங்கியில் தொழில் தொடங்குவதற்கோ, கல்வி கற்பதற்கோ, வீடு கட்டுவதற்கோ, கண்டிப்பாக கடன் கேட்க வேண்டும். கடன் வாங்குவது தவறு கிடையாது. மத்திய அரசு கிராம புறங்களில் வங்கி சேவை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 129 மாவட்டங்களில் ஆயிரத்து 23 வங்கி கிளைகளை திறந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள், மகளிர் குழுவினர், மாணவ-மாணவிகள் பயன் பெறவேண்டும்.

நான் 2010-ல் இங்கு வரும் போது, மத்திய வங்கி இங்கு ஏதும் இல்லை என கோரிக்கை வைத்தனர். மகாராஷ்டிரா வங்கியை ராஜகம்பீரத்திற்கு கொண்டு வந்ததன் மூலம், அந்த கோரிக்கை நிறைவேற்றப் பட்டுவிட்டது. இப்போது, இந்த கிளை மூலம் 2 கோடி கடன் வழங்கப்பட உள்ளது. இதில் ரூ.15 லட்சம் கல்விகடனாக வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. வங்கிசேவையை கிராம மக்கள் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக