Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மரக்காணம் சாதி கலவரத்தில் நிதானத்தை கடைபிடித்த தமிழக காவல் துறை மேலப்பாளையம் முஸ்லிம்களை கைது செய்ய அவசரம் காட்டியது ஏன்? : பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கேள்வி



மரக்காணம் சாதிக் கலவரங்களில் நிதானத்தை கடைபிடித்த
 தமிழக காவல் துறை மேலப் பாளையம் முஸ்லிம்களை கைது செய்ய அவசரம் காட்டியது ஏன்? என நெல்லை செய்தியாளர் கள் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர்பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கேள்வி எழுப்பினார்.கைதான நால்வரின் குடும் பங்களுக்கு மனிதாபிமான உதவியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்டம் சார்பில் ரூ.40 ஆயிரம் உதவி வழங்குவதாகவும் அறிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத் தில் தன்னை சந்தித்து முறையிட்ட கிச்சான் புஹாரி, பீர் முகைதீன், பஷீர் மற்றும் சாலின் குடும்பங்களுக்கு மனிதா பிமான அடிப்படையில் ரூ.40 ஆயிரம் வழங்குவ தாக அறிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர்பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று காலை திருநெல் வேலிக்கு வருகை புரிந்தார். அவரை அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள குடும்பங்களைச் சார்ந்த பெண்களும், ஆண்களும் சுமார் 100 பேர் சந்தித்து மனு அளித்து முறையீடு செய்தனர். நடந்த விஷயங்களை விவரமாக கேட் டறிந் தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கும் பேட்டி யளித்தார்.

அப்போது அவர் கூறியதா வது-

சென்னையில் தேசிய செயற்குழு

எதிர்வரும் மே 11-ம் தேதியன்று சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ.அஹமது சாஹிப், பொருளா ளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி உட்பட கேரள அமைச்சர்கள், அனைத்து மாநில தலைவர், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்களுமாக 125 பேர் கலந்து கொள்கின்றனர். இக் கூட்டத்தில் மிக முக்கியப் பிரச்சினையாக சிறை வாசிகளாக அடைக்கப்பட் டுள்ள முஸ்லிம் நிரபராதிகள் விஷயத்தில் மேற்கொண்டு என்னசெய்வது? என்பது குறித்து முடிவெடுத்து அறி விக்க உள்ளோம்.

கடந்த டிசம்பர் மாதம் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நாங்கள் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின்படி மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு தாக்கீது பிறப்பித்தது.

அதில், நீண்ட காலம் சிறை வாசிகளாக உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய் வதற்கும் அல்லது அவர்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து சொந்த ஜாமீனில் விடுவிப்ப தற்கும், 3 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட நீதிபதியை கொண்டு ஆய்வு நடத்தி விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதனை நடைமுறைப்படுத் தாததால் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி யன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

ஏற்கனவே உள்ள விசா ரணை சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள் என்று நாங்கள் கோரி வரும் நேரத்தில் தற்போது புதிதாக முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல் துறை கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்துள் ளது.

தவறு செய்தவர்கள் கைது செய்யப்படக்கூடாது என்றோ, தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படக்கூடாது என்றோ சொல்லக் கூடியவர்கள் அல்ல நாங்கள்.

ஆனால், பழிவாங்கும் உணர்வோடு சிறையிலிருந்து வெளிவந்தவர்களை கைது செய்வதும், அவர்களை குண்டு வெடிப்பில் இணைப்பதும் அவர் களுடைய தாயார், மனைவி, மக்கள்கூட அவர்களை சந்திக்க அனுமதி மறுப்பதும் என்ன நியாயம்?

கர்நாடகத் தேர்தலும் குண்டுவெடிப்புகளும்

கர்நாடகத்தில் பா.ஜ.க. கட்சி ஆளுகிறது. அம் மாநிலத்தில் மே மாதம் 5-ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் யாருக்கு சாதகம்? என்பது உங்களுக்கே தெரியும்.

ஆனால், இந்த குண்டு வெடிப்பு வழக்கில் மேலப் பாளையம் முஸ்லிம் இளைஞர் கள் கைது செய்யப்பட்டுள்ளது புரியாத புதிராக உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதி கள் என ஒட்டு மொத்த மேலப் பாளையம் ஊரே சொல்கிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட ஜமாஅத்துகள் உள்ளன. குண்டுவெடிப்பு வழக்கை தவிர நாகர்கோவில் ஆர்.எஸ் .எஸ். பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட் டுள்ள வாலிபர் மேலப்பாளையம் பள்ளியில் தொழுது கொண்டி ருந் ததை ஜமாஅத்தார் அனைவ ருமே பார்த்துள்ளனர். அப்படியானால், அதேநேரத் தில் அந்த நபர் அந்த தாக்குதல் சம்பவத்தில் எப்படி ஈடுபட்டி ருக்க முடியும்? அவர் போலீசில் வாக்கு மூலம் கொடுத்ததாக சொல்கிறார்கள். மிரட்டி துன் புறுத்தப்பட்டு காவல் நிலை யத்தில் பெறப்படும் வாக்கு மூலங்களை நீதிமன்றங்களே ஏற்றுக் கொள்வதில்லை.

மரக்காணம் கலவரத்தில் நிதானம்!

இப்போது நான் கேட்ப தெல்லாம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மரக்காணத் தில் சாதி மோதல் நடைபெற் றுள்ளது. இதில் மிகுந்த நிதா னத்தை கடைபிடித்த தமிழக காவல் துறை மேலப் பாளையம் முஸ்லிம்களை கைது செய்வ தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

இதுபோன்ற வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச் சையாக செயல்படாமல், கைது செய்யப்படுபவர்கள் உண்மை யிலேயே இக் குற்றத்தை செய்திருப்பார்களா? என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்து அந்த ஆய்வுக்குப் பின்னர் இன்னொரு மாநிலத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஏனெனில் கர்நாடகத்தை ஆளும் பி.ஜே.பி. முஸ்லிம்கள் விஷயத்தில் எத்தகைய மனப்பான்மை கொண்ட வர்கள்? என்பது நாடறிந்த விஷயம்.

பீகார், மராட்டியம், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்துத்துவ அமைப்புகளின் அலுவலகங் களில் பல முறை குண்டுகள் வெடித்திருக்கின்றன. பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுபோன்ற குண்டு வெடிப்பு களில் எந்த முஸ்லிம் அமைப்பு களின் அலுவலகங்களிலும் வெடித்தது இல்லை.

எனவே, குண்டுகளை யார் கையாளுகிறார்கள் - அவைகள் எங்கே பதுக்கப்படுகின்றன என்பதை அறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டு வெடிப்பு நடந்த போதெல்லாம் முஸ்லிம்கள் மீது இப்படித்தான் குற்றம் சுமத் தப்பட்டது.

பாட்லா குண்டுவெடிப்பு, டெல்லி போலி என்கவுண்ட்டர் சம்பவங்களை தொடர்ந்து நானும், இ.அஹமது சாஹிபும், சோனியாகாந்தியையும், பிரதமரையும், அன்றைய உள்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசினோம். அதன் பலனாகவே, மாலேகான் சம்ஜவுதா, அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு களில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இந்துத்துவ அமைப்புகளை சார்ந்தவர்களும், இந்து துறவிகளும் அதில் ஈடுபட்டிருந்தது வெட்ட வெளிச் சத்திற்கு வந்துள்ளது. எனவே, நேர்மையாக விசாரித்தால் நீதி கிடைக்கும்.

நிருபர்களாகிய உங்கள் முன்னேதான், கைதானவர் களின் குடும்பங்களைச் சேர்ந் தவர்கள் இத்தனை பெண்க ளும் எங்களிடத்தில் கண்ணீ ருடன் முறையிட்டிருந்ததை நீங்கள் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தீர் கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று உறுதிபடக் கூறினார்கள்.

எனவே, கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களை அவர் களின்குடும்பத்தார்கள் உடனடியாக சந்திப்பதற்கு அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கைதான நால்வரின் குடும் பங்களுக்கு மனிதாபிமான உதவியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்டம் சார்பில் ரூ.40 ஆயிரம் உதவி வழங்குவதாகவும் அறிவித்தார்.

உற்பத்தி பொறியியல் (Production Engineering) படிப்பு

இன்ஜினியரிங் படிப்புகளில் ஒன்றான உற்பத்தி பொறியியல், வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப பொருட்களை தரமானவையாக உற்பத்தி செய்தல், குறிப்பிட்ட காலத்துக்குள் தருதல் போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறது.

இந்த படிப்பு பல்வேறு துறைகளுடன் தொடர்புடையது. இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங், மேனுபேக்சரிங் இன்ஜினியரிங், உற்பத்தி பொருள் வடிவமைப்பு, மார்கெட்டிங், நிதி மற்றும் கார்பரேட் பிளானிங் போன்ற துறை சார்ந்த பயிற்சிகளும் இந்தி படிப்பின் மூலம் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

பொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் மேம்பாடடைவதற்கு உற்பத்தி பொறியியல் மிகவும் பயன்படுகிறது. படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.

இப்படிப்பை வழங்கும் கல்லூரிகள் 

1. Government College of Technology - Coimbatore 
2. PSG College of Technology - Coimbatore
3. Jayalakshmi Institute of Technology - Dharmapuri
4. Sri Sairam Engineering College - Tambaram , Chennai 
5. Velammal Engineering College - Chennai

ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy) படிப்புகள்

வேலை காரணமாக ஏற்படும் உடற்பாடுகளை பற்றிய படிப்பு இது. அந்தக் குறையுடன் பணிகளைச் சிறப்பாகச் செய்ய உதவுவது பற்றி ஆக்குபேஷனல் தெரபியில் விவாதிக்கப் படுகிறது.

குறையை நிறையாக்கி, சுதந்திரமுடனும், சிறப்பாகவும் பணி புரியும் வழிகள் இதில் ஆராயப் படுகிறது. உடற் குறைகள் உள்ளவர்கள் தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்ய உரிய கருவிகளை வடிவமைப்பது, சூழலுக்கு ஏற்றபடி தம்மைத் தகவமைத்துக் கொள்வது போன்ற பணிகளிலும் இந்தப் படிப்பு கவனம் செலுத்துகிறது.

இதைப் பாடமாக படித்தவர்கள் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் ஆகவோ, டெக்னிகல் உதவியாளராகவோ பணிக்குச் செல்ல முடியும்.

இப்படிப்பை வழங்கும் கல்விநிறுவனங்கள் 

1. College of Occupational Therapy , Tiruverkadu
2. S.R.M. College of Occupational Therapy, Nandambakkam , Chennai
3. Santhosh College of Occupational Therapy, Besant Nagar, Chennai 
4. Christian Medical College , Vellore
5. K.M.C.H. College of Occupational Therapy , Coimbatore
6. Meenakshi College of Occupational Therapy , Chennai
7. Saveetha College of Occupational Therapy, Velappanchavadi, Chennai 

திங்கள், 29 ஏப்ரல், 2013

கூடங்குளம் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 925 மெகாவாட்: அணுசக்தி துறை அறிவிப்பு



நெல்லை, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதலாவது யூனிட் அமைக்கப்பட்டு, 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி துவங்க, தயாராக உள்ளது. இரண்டாவது யூனிட்டிலும், 1000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான, கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

"இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கே வழங்க வேண்டும்' என, தமிழக அரசு முதல் தொழில், வர்த்தக அமைப்புகள் வரை, குரல் கொடுத்து வருகின்றன. இதற்காக, மதுரை சிறுகுறுந்தொழில் அதிபர்கள் சங்கம் (மடீட்சியா) என்ற அமைப்பும், டில்லி பார்லிமென்ட் முன், போராட்டம் நடத்தியது. "தமிழக மின்தேவைக்கு, மின்பாதை அமைக்க வேண்டும்.
கூடங்குளம் மின்சாரத்தை, முழுமையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி, பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, அணுசக்தி துறையின் சார்பு செயலாளர் சி.டி.சாக்கோ, "மடீட்சியா' நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கூடங்குளத்தில் உற்பத்தியாகும், 2000 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்திற்கு 925 மெகாவாட், கர்நாடகத்திற்கு 442 மெகாவாட், கேரளத்திற்கு 266 மெகாவாட், புதுச் சேரிக்கு 67 மெகாவாட், ஒதுக்கீடு செய்யப்படாதவை 300 மெகாவாட்' என, குறிப்பிடப்பட்டுள்ளார். அணுசக்தித் துறையின் அறிவிப்புக்கு, "மடீட்சியா' தலைவர் மணிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதழியல் துறை (Journalism ) படிப்புகள்


இன்றை கால கட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கேற்ப எளிதான, பரந்த வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி, தொலைக்காட்சிகள் மட்டுமே தகவல் அறிய உதவும் சாதனங்களாக இருந்தநிலை, இன்று தலைகீழாக மாறியிருப்பது ஒன்றே, இத்துறையில் வளர்ச்சியை காட்டுகிறது.

இதழியல் துறையில் அவரவர் பதவி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் கிடைக்கிறது. பேனாவும், புகைப்படக் கேமராவும் மட்டும் இருந்தால் போதும் என்று எண்ணக்க்கூடாது. நடப்பு விவகாரங்கள் உட்பட அனைத்து துறைகள் சார்ந்த அறிவும், தெளிவான கண்ணோட்டமும், எளிய மொழி நடையும், கருத்துக்களை துணிவுடன் வெளியிடக்கூடிய மனப்பாங்கும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் இத்துறைக்கு இன்றியமையாதது.
நேரம் காலம் கருதாமல் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டியதும் பத்திரிக்கையாளர்களின் கடமை.

அரசு வகுத்துள்ள நெறிகளின்படி நிருபருக்கு குறைந்த பட்சம் ரூ. 5,500 ல் இருந்து 10,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. மூத்த நிருபருக்கு இந்த ஊதியம் மேலும் அதிகரிக்கிறது.

உதவி ஆசியர் பணிக்கு ரூ. 8,000 என்று தொடங்கி ரூ. 15,000 ஆயிரம் வரை கிடைக்கிறது. அனுபவம், தகுதி போன்றவற்றின் அடிப்படையில் இது மேலும் அதிகரிக்கும். பணி புரியும் நிறுவனங்களைப் பொறுத்து இந்த ஊதியம் வேறுபடுகிறது. தற்போது இத்துறையில் போட்டி அதிகரித்திருப்பதால், பத்திரிக்கையாளர்களின் ஊதியமும் அதற்கேற்ப அதிகரித்து வருகிறது.

மேலும் பயணப்படி, தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. பலதரப்பட்ட பிரமுகர்களோடு பழகும் வாய்ப்பு, இத்துறையில் பணி புரிபவர்களுக்கு கிடைக்கும் சாதகமான அம்சம் ஆகும்.

நாட்டில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் இதழியல் பாடங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இதழியல் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிலையங்கள் :

1. University Of Madras
2. SRM University , Chennai
3. Madras Christian College, Chennai
4. Asian College Of Journalism , Chennai
5. Alagappa University
6. Annamalai University
7. Bharathidasan University
8. Bharathiyar University
9. Centenary Bldg College , Chennai 
10. softview media college , Chennai

இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி படிப்பு

இந்த நூற்றாண்டில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியத்துறை பயோ டெக்னாலஜி. என்சைம்கள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றின் உதவியுடன் ரசாயனப் பொருட்கள், எரிபொருட்கள் உற்பத்தி செய்யும் துறையே இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி என்கிறோம்.

உயிரியல் அடிப்படையில் பொருள்களை உருவாக்கும் புதிய துறை இது. சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு போன்ற துறைகளில் இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள், வேளாண் தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், உணவு பதனீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை அமைப்புகள், பயோ எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், பயோ டெக் ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

நான்கு ஆண்டு இளநிலைத் தொழில்நுட்பப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிலையங்கள் :

1. ANNA UNIVERSITY  , CHENNAI

2. ALAGAPPA COLLEGE OF TECHNOLOGY , CHENNAI

3. Arulmigu Kalasalingam University

4. Bharathidasan Institute of Engineering & Technology, Tiruchirappalli

5. Kamaraj College of Engineering & Technology, Madurai 

கேம் (GAME ) டிஸ்சைனிங் படிப்பு


சாப்ட்வேர் டெவலப்மெண்டில் கேம்டிசைனிங் என்பது இன்று ஒரு தவிர்க்க முடியாத வடிவமாகும்.

போர்டு கேம்ஸ், வீடீயோ கேம்ஸ், கார்ட் கேம்ஸ் என இன்று கேம்ஸ்களோடு அறிமுகம் இல்லாதவர் யார் இருக்கிறார்? சினாப்ஸ், ஸ்மாக்ஆல், இஸிர் இன் போடெக் போன்ற கேம்ஸ் சாப்ட்வேர் நிறுவனங் களில் இத் துறையில் சிறப்புத் திறன் பெற்றிருப் பவருக்கு நல்ல வாய்ப் புகள் கிடைக்கின்றன.

இத்துறையில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் கேம் டிசைன், டிப்ளமோ இன் கேம் டிசைன் அண்ட் கேமிங், வீடியோ கேம் டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் சர்டிபிகேஷன் என பல படிப்புகள் இருக்கின்றன.

ஐதராபாத்திலுள்ள கலர் சிப்ஸ் அனிமேஷன் டிரெயினிங் சென்டர், அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், மும்பை யிலுள்ள டிஜிடல் அகாடமி பிலிம் ஸ்கூல் மற்றும் சென்னையிலுள்ள இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் ஆகியவற்றில் இந்தத் துறைப் படிப்புகளைப் படிக்கலாம்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

மத்திய அரசு துறைகளில் இன்ஜினியர் பணி



மத்திய அரசின் இன்ஜினியர் பிரிவில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அகில இந்திய அளவில் நடத்தப்படும் Engineering Services Examination-2013 தேர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(UPSC) அறிவித்துள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இன்ஜினியர்

கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு பாடத்திட்டம் பற்றிய விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும். எழுத்துத் தேர்வுக்கான அனுமதி கடிதத்தையும் மேற்கண்ட இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் முறையில் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக அரசு போலீஸ் துன்புறுத்தலில் வாலிபர் மரணம் ; அதிக இழப்பீடு 4.40 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு



போலீஸ் காவலில் மரணமடைந்தவரின் குடும்பத்துக்கு, அதிக இழப்பீட்டுத் தொகை, 4.40 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தைச் சேர்ந்த, செல்வி என்பவர், தாக்கல் செய்த மனு:

என் கணவர், அண்ணாமலை. விருத்தாச்சலம் பஸ் நிலையத்தில், பொருட்கள் வாங்கும் போது, அவரை, போலீசார் தாக்கினர். போலீஸ் காவலில் வைத்தனர். அன்று, எங்கள் கிராமத்துக்கு வந்து, பழனிவேல் என்பவரை, விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். மறுநாள், என் கணவர் இறந்து விட்டார். அவரை, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீசார் சேர்ந்து தாக்கியதாக, பழனிவேல் தெரிவித்தார். 2004ம் ஆண்டு, நவம்பர் மாதம், சம்பவம் நடந்தது. எனக்கு, தகுந்த இழப்பீடு வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சத்தியசந்திரன் ஆஜரானார். நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவு: மனித உரிமை மீறல் நடந்துள்ளது எனக்கூறி, 1.50 லட்சம் ரூபாய், இழப்பீடு வழங்க, மாநில மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் காவலில் இருக்கும் போது, அவர்களின் துன்புறுத்தலினால், அண்ணாதுரை இறந்துள்ளார். அவருக்கு, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. மனித உரிமை கமிஷன் பிறப்பித்த, 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது, சொற்பமானது தான். நியாயமான இழப்பீடு, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அண்ணாதுரை இறக்கும் போது, அவரது வயது, 40. மாத சம்பளம், 4,500 ரூபாய் என, கணக்கில் கொண்டு, இழப்பீடு தொகை கணக்கிடப்பட வேண்டும்.

எனவே, 5.90 லட்சம் ரூபாய், இழப்பீடு பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது. ஏற்கனவே, 1.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், மீதித் தொகை, 4.40 லட்சம் ரூபாயை, இரண்டு மாதங்களில், உள்துறைச் செயலர் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி ராஜா உத்தரவிட்டுள்ளார்.

எனர்ஜி இன்ஜினியரிங் படிப்பு


அன்றாட தேவைகளுக்கு ஆற்றல் அவசியம். வாழ்க்கையை இயங்க ஆதாரமாக இருக்கும் இந்த எரிபொருள்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன, எங்கிருந்து இது கிடைக்கிறது என்று நாம் ஒருபோதும் சிந்தித்து பார்ப்பது கூட இல்லை.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்கள் எப்படி வருகிறது? இந்த எரிபொருள்கள் எப்படி மின்சாரமாக மாறுகின்றது? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த எனர்ஜி இன்ஜினியரிங் துறை.

ஆற்றல் மூலங்களை கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தக் கூடிய எரிபொருளாக மாற்றுவது; எரிபொருள்களைத் தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்வது; உள்ளூரில் எரிபொருள்களை மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பாதுகாப்பான முறையில் வினியோகிப்பது என பல நிலைகளிலும், ஆற்றல் துறை நிபுணர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

வழங்கப்படும் படிப்புகள்
பி.இ., (எனர்ஜி இன்ஜினியரிங்), பி.டெக்., (எனர்ஜி அண்டு என்விரான்மென்டல் இன்ஜினியரிங்), எம்.டெக்., (எனர்ஜிடிக்ஸ்) , எம்.டெக்., (எனர்ஜி), எம்.டெக்., (எனர்ஜி அண்டு என்விரான்மென்டல் இன்ஜினியரிங்), எம்.டெக்., ( எனர்ஜி அண்டு பொலுõசன் கண்ட்ரோல்), எம்.பி.ஏ., (எனர்ஜி மேனேஜ்மென்ட்) ஆகிய பிரிவுகளில் எனர்ஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 படிப்பில், அறிவியல் பிரிவு படித்தவர்கள் இளநிலை படிப்புகளில் சேரலாம்.

கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லுõரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

1. Anna University , Chennai
2. Kumaraguru College Of Technology, Coimbatore
3. PSG College Of Technology, Coimbatore
4. National Institute Of Technology, Tiruchirappalli
5. Kalasalingam University , Sirivilliputtur

வேலை வாய்ப்புகள்
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள எரிபொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

திருச்சி ஐ.ஐ.எம் (IIM ) - இல் பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு


திருச்சி ஐ.ஐ.எம்., சென்னை மையத்தில், பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பிற்கான, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி ஐ.ஐ.எம்., இயக்குனர் பிரபுல்லா அக்னி ஹோத்ரி கூறியதாவது: ஐ.ஐ.எம்., திருச்சியின் சென்னை மையம், திருச்சி வளாகத்துடன், "வீடியோ கான்பரசிங்” மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம், அங்கிருந்தபடியே பேராசிரியர்கள், தங்கள் தகவல்களை பரிமாறி கொள்ள முடியும். ஆசிரியர்கள், பாட வகுப்புகளும் பதிவு செய்யப்படுகிறது.


பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு கடந்தாண்டு, சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் ஆண்டாக மாணவர் சேர்க்கையை துவக்கினோம். இளங்கலையில், 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களும், மூன்றாண்டு பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். வாரந்தோறும், நான்கு நாள்கள் மாலையில், வகுப்புகள் நடக்கும். மொத்த இடங்கள், 50. மூன்றாண்டு கல்வி கட்டணம், 10 லட்சம் ரூபாய்.


விண்ணப்ப படிவத்தை, www.iimtrichy.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்து தேர்வு, நேர்காணலுக்கு பின், சேர்க்கை நடைபெறும். கேட்-2012, ஜிமேட் தேர்வு எழுதியவர்களுக்கு, எழுத்து தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள், மே, 12க்குள் வந்து சேர வேண்டும்.இவ்வாறு பிரபுல்லா கூறினார்.

சனி, 27 ஏப்ரல், 2013

மத்திய அரசின் மானியத்தை மக்கள் நேரடியாக பெற ஜெயலலிதா எதிர்ப்பு


 "மானியத் தொகையை, நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை கைவிட்டு, மாநில அரசுகள் மூலம், மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்; இல்லையேல், நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த முடியாது' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அவர் நேற்று எழுதிய கடிதம்: பயனாளிகளுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டத்தின், இரண்டாவது கட்டத்தை, 2013 ஜூலை மாதம் முதல், மத்திய அரசு துவங்க உள்ளதாக அறிகிறேன். ஏற்கனவே, தமிழகத்தில், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை, இத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின், இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறேன். ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை, தவிர்த்துவிட்டு, மக்களை நேரடியாக அணுகுவது, கூட்டாட்சி தத்துவம் மற்றும் பரவலாக்கப்பட்ட ஜனநாயக முறைக்கு எதிரானது. பணத்தின் மூலம், மாநில மக்கள் மீது, மத்திய அரசு செல்வாக்கு செலுத்துவதாக அமைகிறது. கல்வி உதவித் தொகை, மருத்துவ கால உதவி, பென்ஷன் ஆகியவற்றை, வங்கிக் கணக்குகள் மூலம், பயனாளிகளுக்கு அளித்து வருகிறது. ஆனால், மத்திய அரசு அறிமுகம் செய்யும், நேரடி மானியம் அளிக்கும் திட்டம், மாநில அரசு மீது, மேலாண்மை செலுத்துவதாக அமையும். பொது வினியோகத் திட்டம், உர மானியம், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு, நேரடி மானியம் அளிக்க முயற்சிப்பதை, துவக்கத்திலிருந்து எதிர்த்து வருகிறோம். பணத்தை அளிப்பதற்காக மட்டுமல்ல, சந்தையில் பொருட்கள் தேவையான நேரத்தில், போதியளவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நேரடி மானியத்தை எதிர்க்கிறோம். பயனாளிகளை முழுமையாக அறிந்து, பட்டியல் எடுக்கும் பணியை மாநில அரசு மேற்கொள்கிறது. ஆனால், நேரடி மானியத்தை மத்திய அரசு அளிப்பது, பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக உள்ளது.

 மாநில அரசுகளை ஆலோசிக்காமல், நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என, மத்திய திட்ட கமிஷன், கண்டிப்பான அறிவுரைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஆனால், மாநில அரசுகளை ஆலோசிக்காமல், மத்திய அரசு, தன்னிச்சையாக முடிவெடுத்து, ஒவ்வொரு திட்டங்களையும் அறிவிக்கிறது. அதன் பின், அம்முடிவை அமல் செய்யும் களமாக மாநில அரசுகளை பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறை, முற்றிலும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நேரடி மானியத் திட்டத்துக்கு, தயார் செய்யப்பட்டுள்ள, 25 திட்டங்களில், பல திட்டங்களில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளது. இதில், தேசிய ஊரக சுகாதார திட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம் ஒன்று.

தமிழகத்தில் அமல்படுத்தப்படும், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் போலவே, இந்திரா காந்தி கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை, மத்திய அரசு அமல் செய்கிறது. இத்திட்டத்துக்கு, நேரடி மானியத்தை பயனாளிகளுக்கு அளிக்க முன்வருகிறது. ஒரு மாநிலத்தில், ஏற்கனவே ஒரு திட்டம் செயல்படும்போது, அதுபோன்ற மற்றொரு திட்டத்தை, மத்திய அரசு அமல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதில், மாநிலத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கலாம். மேலும், கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களை, மாநில அரசு அமல்படுத்திவிட்டு, திட்டத் தொகையில், ஒரு பகுதியை, மத்திய அரசிடம் பெறுகிறது. இந்த நிலையில், மத்திய அரசு, நேரடியாக பணம் அளித்தால், மாநில அரசுகள் பாதிக்கப்படும். எனவே, தற்போது திட்டமிட்டுள்ள முறையில், நேரடி மானியத் திட்டத்தை அமல் செய்தால், பெரும் நிர்வாக பிரச்னைகள் ஏற்படும். எனவே, நேரடி மானியத் திட்டத்தை, மாநில அரசுகள் மூலம், மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இல்லையேல், தமிழகத்தில் அத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாஜக அரசு கர்நாடக மக்களுக்கு துரோகம் இழைக்கிறது : சோனியா


கர்நாடக மக்களுக்கு  பாஜக அரசு துரோகும் இழைத்து வருகிறது. எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்று சோனியா கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, இன்று சிக்மக்லூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது, கர்நாடக மக்களுக்கு  பாஜக அரசு துரோகும் இழைத்து வருகிறது. எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். தங்களது இருண்ட நாட்களை மாற்ற விரும்புகின்றனர் மக்கள். இப்போதே அந்த மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார்.

மேலும், கர்நாடக மக்களின் நலனை பாஜக அரசு முற்றிலும் புறக்கணித்து விட்டது. துரோகம் இழைத்து விட்டது. கர்நாடக சுரங்க முறைகேடு, சுற்றுச் சூழலையே கெடுத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

புவி அறிவியல்(Earth Science) படிப்பு



பூமி, கடல், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களைப் பற்றிப் படிக்கும் பிரிவு, புவி அறிவியல் அல்லது "எர்த் சயின்ஸ்" என அழைக்கப்படுகிறது.

பூமியிலிருந்தே அனைத்து வளங்களையும் பெறுகிறோம். எர்த் சயின்ஸ் துறை, எண்ணெய், இயற்கை எரிவாயு, எரிபொருள், நீர், மண் போன்ற வளங்களை ஆய்வு செய்வது, இயற்கைச் சூழல், சுற்றுச் சூழலை பாதுகாப்பது, இயற்கை சீற்றங்களான நில நடுக்கம், மண் சரிவு போன்றவற்றிலிருந்து புவியைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களில் கவனத்தை செலுத்துகிறது.

பணித் தன்மை
எர்த் சயின்டிஸ்டுகளாகப் பணி புரிவோர் மனித இனம், தகவல், புதிய சிந்தனை, தொழில்நுட்பம் போன்றவற்றை இணைத்து பணி புரிகின்றனர். ஆய்வுக் கூடங்கள், அலுவலகங்கள்,மாறுபட்ட பருவநிலைகள், நில நடுக்கம், எரிமலை இருக்கும் பகுதிகளில் பணி புரிவது போன்ற சவால் இவர்களுக்கு காத்திருக்கின்றன.

துறைப் பிரிவுகள்
எர்த் சயின்ஸ் துறையில் பல உட்பிரிவுகள் உள்ளன. புவியின் இயற்கைத் தோற்றங்களைப் படிப்பதற்காக பாறைகள், மண் போன்றவற்றைத் தோண்டி ஆய்வு செய்வது இதில் ஒன்று. வளி மண்டலம், ஹைட்ரோஸ்பியர், பூமி போன்றவற்றின் தன்மையை அறிவதற்காக, எர்த் சயின்டிஸ்டுகள் இயற்பியல், கணிதம், வேதியியல் தத்துவங்களை பயன்படுத்துகின்றனர். நிலத்தடி நீரிலுள்ள வேதிப் பொருட்கள், கனிமங்களின் அளவையும் ஆய்வு செய்கின்றனர்.

ஹைட்ரோ ஜியாலஜிஸ்டுகள் நிலத்தடி நீரையும், ஓசனோகிராபர்கள் கடல் தொடர்புடைய ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். பெட்ரோலியம் ஜியாலஜிஸ்டுகள், இயற்கை எண்ணெய், எரிவாயுவின் இருப்பிடம், உற்பத்தி குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

கூடுதல் தகுதி
கடுமையான தட்பவெப்பத்தில் பணி புரிவது, பூமிக்கு அடியில் பணி புரிவது போன்ற சவாலான பணிகள் நிறைந்த இத்துறையில் பணியாற்ற, நல்ல உடல் தகுதி பெற்றிருப்பது அவசியம். குழு மனப்பான்மை, நிர்வாகத் திறன் மற்றும் தலைமைப் பண்புகளைப் பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. பி.எஸ்சி., எம்.எஸ்சி., டிப்ளமோ மற்றும் பி.எச்டி., ஆகிய பிரிவுகளில் இப்படிப்பு உள்ளது.

வேலை வாய்ப்பு
ஜியோ சயின்டிஸ்டுகளுக்கு பிற இடங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ், மினரல் எக்ஸ்புளோரேஷன், இந்திய வானிலை மையம், ஓ.என்.ஜி.சி., ஜெம் இண்டஸ்ட்ரி, கட்டுமானத் துறை, கனிம ஆய்வு நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் என பல வாய்ப்புகள் உள்ளன.

எங்கு படிக்கலாம்?
* டில்லி பல்கலைக்கழகம்
* ஐ.எஸ்.எம்., பல்கலைக்கழகம், தன்பாத்
* ஐ.ஐ.டி.,  காரக்பூர்
* ஐ.ஐ.டி.,  ரூர்க்கி
* புனே பல்கலைக்கழகம்
* கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

உலகம் வேடிக்கைபார்த்து சிரிக்கிறது; பாராளுமன்றத்தை நடத்த விடுங்கள்: பிரதமர்

நிலக்கரி ஊழல் தொடர்பாக சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும், சீன படைகள் ஊடுருவல், பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் மீதான தாக்குதல், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குரல்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : நிலக்கரி ஊழல் தொடர்பாக சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் பதவி விலகும் பேச்சிற்கே இடமில்லை; அது குறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது; உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்; நான் தவறு ஏதும் செய்யவில்லை; சுப்ரீம் கோர்ட் அளித்த இறுதி நிலை அறிக்கையை அரசியல் நிர்வாகிகள் பார்க்கவில்லை; அதனால் அமைச்சர் பதவி விலக அவசியமில்லை; இந்திய எல்லைக்குள் சீன படைகளின் ஊடுருவலை தடுக்க நாங்கள் முறையாக திட்டமிட்டு வருகிறோம்; எல்லை பிரச்னையை பெரிதாக்க நாங்கள் விரும்பவில்லை; எல்லை பிரச்னை விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும்; நமது திட்டங்களை நாமே கேலி செய்யாமல் பார்லிமென்ட் கூட்டத்தை நடத்த விடுங்கள்; நமது செயல்களால் உலகம் நம்மை பார்த்து சிரிக்கிறது; பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் தாக்கப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். 

ரயில் டிரான்ஸ்போர்ட் பட்டயப்படிப்பு


புதுதில்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ரீடைல் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், டிப்ளமோ படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்:

Transport Economics and Management

Multi - Modal Transport (Containerisation) & Logistics Management

கல்வித்தகுதி:
பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கல்வி கட்டணம்: ஒவ்வொரு படிப்பிற்கும் ரூ.4000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள்: டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, செகந்தராபாத், லக்னோ, குவகாத்தி மற்றும் புவனேஸ்வர்.

படிப்பு பற்றிய முழுவிவரங்களை குறிப்பேட்டினை வாங்கி தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பேட்டின் விலை ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.100 இதனை இன்ஸ்டிடியூட் ஆப் ரீடைல் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் புது தில்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி.,யாக எடுக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு Institute of Rail Transport, 17, Rail Bhavan, New delhi - 110001. New Delhi 110001, Ph: 011-23304147 என்ற முகவரியில் அறியலாம் அல்லது www.irt-india.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

தமிழகத்தில் நான்கு மாதங்களில் 281 இளம் பெண்கள் மாயம்


செல்வி .ஜெயலலிதா  ஆட்சி நடைபெறும் தமிழகத்தில், கடந்த நான்கு மாதங்களில், 281 இளம் பெண்கள் உட்பட மொத்தம் 553 பேர் காணாமல் போய் உள்ளதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குடும்பச் சண்டை, வயதானவர்களை ஒரங்கட்டுவது, இளம் வயது காதல், பெற்றோரின் மிரட்டலுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடுவது, கடத்தல் என, காணாமல் போவோர் குறித்த புகார்கள் தினமும் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படுகிறது.

தமிழக போலீஸ் இணையதள தகவல்படி, கடந்த ஜனவரி, 1 முதல் ஏப்., 20 வரை, 553 பேர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 16 வயது முதல் 30 வயது வரையிலான பெண்கள் மட்டும், 281 பேர். இதில், 160 பேர் பள்ளி, கல்லூரியில் படிப்பை முடித்த மற்றும் படிப்பை தொடரும் மாணவிகள். 30 வயதுக்கு மேல் 75 வயதுக்கு உட்பட்டோர், 27 பேர் காணாமல் போய் உள்ளனர். இவர்கள் கணவர் மற்றும் பிள்ளைகளால் கை விடப்பட்டவர்கள்.காணாமல் போனவர்களில், 198 பேர் ஆண்கள். 16 வயது முதல், 30 வயது உடைய இளைஞர்கள், 85 பேர். காதல் மோகத்தில் பெண்களுடன் தலைமறைவாகி இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காணாமல் போனவர்களில், 29 பேர், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.

பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் படி, 175 பேரை , போலீசார் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள, 378 பேரை கண்டு பிடிக்க முக்கிய நகரங்களில் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனிமேஷன் (Animation ) பட்டப்படிப்பு


வால்ட் டிஸ்னி எப்போது மிக்கி மவுசை கண்டறிந்தாரோ அப்போதே அனிமேஷன் துறை களைகட்டி விட்டது எனலாம். அதன் பிறகு தொழில் முறையிலான அனிமேஷன் படிப்புகள் அதித முறையில் வளரத் தொடங்கி விட்டது. படங்களை நகரச் செய்வதே அனிமேஷன் என்பதாகும். மிடியாவின் மிக வேகமாக வளரும் துறையாக 2டி அனிமேஷன், 3டி அனிமேஷன், கதைகள் என குழந்தைகளிடம் மட்டுமல்லாது அனைவரிடமும் பிரசித்தி பெற்று வருகின்றது.

தகுதி: இப்படிப்பில் சேருவதற்கு +2ம் வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
1. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன்
2. ஜீ இன்ஸ்டிடியூட் ஆப் கிரேட்டிவ் ஆட்ஸ்
3. இன்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர்
4. ஐ.ஐ.டி., மும்பை
5. மாயா அகடமி ஆப் அட்வான்ஸ் சினிமேட்க்ஸ்
6. டூன்ஸ் அனிமேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்
7. ராய் பல்கலைக்கழகம்

வேலைவாய்ப்புகள்: இத்துறையில் பயிற்சி பெறுபவர் மாடலர். லேஅவுட், ஆர்டிஸ்ட், கிளீன் அப் ஆர்டிஸ்ட், ஸ்கேனர் ஆபரேட்டர், டிஜிடல் இங்க் அண்ட் பெயின்ட் ஆர்டிஸ்ட், கீ பிரேம் அனிமேட்டர், பேக்கிரண்ட் ஆர்டிஸ் மற்றும் அனிமேட்டர் போன்ற பணிகளில் ஈடுபடலாம். அனிமேஷன் படிப்பை பயிலும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்பது உறுதியாக கூற முடியும்.

சூரிய மின்சக்தி தொழில்நுட்பப் பயிற்சி


சூரிய மின் சக்தி உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு அறியும் விதத்தில், புதிய பயிற்சித் திட்டங்களை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையம் அறிமுகம் செய்துள்ளது.

இப்படிப்பு ஒரு மாத கால பயிற்சியாக வழங்கப்படுகிறது. சூரிய மின்சக்தி உபகரணங்கள் சார்ந்த Photo Voltaic Electric System மற்றும் Photo Voltaic Solar மென்பொருட்கள் உற்பத்தி ஆகிய இரண்டு பயிற்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்சாரத்தின் தேவைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு, சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை ஆகியவற்றை பற்றி மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்படுகிறது.

ஐஐடி, பாலிடெக்னிக், பொறியியல் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த ஒரு மாத  பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு சென்னை கிண்டி ஐடிஐ.,யில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 87545 90964, 044 – 2250 1011 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டறியலாம்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் :நெல்லை கலெக்டர் சி.சமயமூர்த்தி


தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறையில் வருங்காலத்தில் மாணவ, மாணவிகளின் தேவை அதிகரித்து உள்ளது. அதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில் மையம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரி பேராசிரியர்களுக்கு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 கருத்தரங்கம் நடத்தி 6 ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

9–வது கருத்தரங்கம் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சி.சமயமூர்த்தி தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

தகவல் தொழில் நுட்பம்
நாடு வளர்ந்து வரும் நிலையில் தகவல் தொழில் தொடர்பு தொழில் நுட்பம் என்பது அவசியமானது. போலீஸ் துறையில் கூட கம்ப்யூட்டரின் தேவை அதிகரித்து உள்ளது. சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிக்க கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

தமிழக அரசு, தகவல் தொழில் நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப பூங்காங்களை தொடங்கி உள்ளது. இந்த பூங்காக்களில் பல்வேறு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தொழில் தொடங்கி உள்ளன.

மானியத்துடன் கடன்
தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக வரி விதிப்பில் விதி விலக்கு அளித்து உள்ளது. ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கி வருகிறது.

இந்த தொழில் நுட்ப பூங்காக்கள் மூலம் நமது நாட்டில் இருந்து, உலக நாடுகளை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் வேலை செய்ய அதிக அளவு மாணவ, மாணவிகள் தேவைப்படுகிறார்கள். அதன் தேவையை கருத்தில் கொண்டு தான் கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கருத்தரங்குகள் பெரிய நகரங்களில் தான் நடத்தப்படும். இந்த வாய்ப்பு நெல்லைக்கு கிடைத்து உள்ளது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் வந்து இருக்கிறீர்கள்.

வேலை வாய்ப்பு
நீங்கள் மாணவர்களை தகவல் தொழில் நுட்பத்துறைக்கு தயார் செய்ய வேண்டும். எப்படி மாணவர்களை தயார் செய்வது, வருங்காலத்தில் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று இங்கு விளக்கம் அளிப்பார்கள். அதன் நோக்கத்தை பேராசிரியர்கள் புரிந்து கொண்டு, அதன்படி மாணவர்களை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சி.சமயமூர்த்தி பேசினார்.

செராமிக் பொறியியல் படிப்பு


செராமிக் பொறியியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள், களிமண் தொடர்பான பண்படுத்துதல், மணல் மற்றும் களிமண் போன்ற உலோகமல்லாத மற்றும் உயிரற்ற பொருட்களை பலவித பயன்பாட்டுப் பொருட்களாக தன்மை மாற்றம் செய்தல் ஆகிய பணிகளை பிரதானமாக செய்வார்கள்.

வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது என்பதால், களிமண் இன்றைய உற்பத்தி உலகின் பல அம்சங்களில் பயன்படுத்தப்படுகிறது. களிமண் பொறியியல் படித்த ஒருவர், தொழில்நுட்ப மேலாண்மையில் பயிற்சி பெறுபவர், நிர்வாகி, திட்ட மேற்பார்வையாளர் விற்பனை பொறியாளர் அல்லது தொழில்நுட்ப ஆலோசகர் போன்ற நிலைகளில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

தனியார் மற்றும் அரசுத் துறைகளில், செராமிக் பொறியாளர்களுக்கு ஏரளமாக பயில வாய்ப்புகள் உள்ளன. ஆய்வகம் அல்லது களிமண் பொருள் உற்பத்திக் கூடங்கள் போன்றவைகளில் ஆராய்ச்சியாளர்களாக பணியாற்ற முடியும். செராமிக் பொறியலில், அறிவியல் மற்றும் தயாரிப்பு அம்சங்களில் அனுபவமுடையவர்கள், நிர்வாகிகள், திட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனை பொறியாளர்கள் போன்ற பெரிய நிலைகளிலான பணி வாய்ப்புகளைப் பெற முடியும்.

சிவில் நியூக்ளியர் களம், எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவையும், செராமிக் துறையில் அபரிமித பணி வாய்ப்புகளை வழங்குகின்றன. இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றவர்கள், ஓரிடத்தில் ஊதியத்திற்கு பணிபுரிவதைவிட, அத்துறை தொடர்பான புதிய தொழில்களைத் தொடங்கி வாழ்வின் புதிய உயரங்களை அடையலாம்.

புதிதாக படித்து வெளிவருபவர்கள், அரசு மற்றும் தனியார் ஆகிய 2 துறைகளிலும், ஆரம்பத்தில் ரூ.9000 முதல் ரூ.13000 வரையில் ஊதியம் பெறுகிறார்கள். அதே சமயத்தில் அனுபவமுள்ள ஒரு பொறியாளர் மாதம் ரூ.50,000 மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கிறார்.

செராமிக் துறையில் பி.இ, பி.டெக்., பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ ஆகியவற்றில் எந்த ஒன்றை படிக்க வேண்டுமென்றாலும், ஒருவர் தனது பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை கட்டாயப் பாடமாகக் கொண்டு குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதே சமயம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர 60 சதவீத மதிப்பெண்கள் தேவை.

பெரும்பான்மையான கல்லூரிகளில், மாணவர்களைச் சேர்க்க நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதேசமயம் பணிபுரியும் நபர்களுக்கு வேறு சில வாய்ப்புகள் உள்ளன. இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ்அமைப்பில் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வை எழுதி, அதன்மூலம் தொலைநிலைக் கல்வி முறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

1. Alagappa college of Technology. Chennai

2. Andhra Unibersity College of Engineering, Visakapattinam

3. Banaras Hindu University. Varanasi.

4. Central Glass and Ceramic Research Institute. Kolkata

5. College of Engineering and Technology, Bikanar

6. Gobernment College of Engineering and Ceramic Technology, Kolkatta

7. NIT, Rourkela

8. Anna University, Chennai 

இளநிலை பட்டபடிப்புகளுக்கு உதவித் தொகை


இந்தியாவில் கலை/அறிவியில்/வணிகம்/மருத்துவம்/பொறியியல் அல்லது வேறு தொழிற்கல்வியில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு கான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 230 மாணவர்கள் உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.

உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கல்விக் கட்டணம், இதரக் கட்டணம், விடுதி/உணவுக் கட்டணம் ஆகியவை சேர்ந்ததாக இந்த நிதியுதவி அமையும்.

www.faeaindia.org ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புவது சிறந்தது. அல்லது இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தும் தபாலில் அனுப்பலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 
பவுன்டேஷன் பார் அகாடமிக் எக்ஸலென்ஸ் அன்ட் ஆக்சஸ் (எப்ஏஇஏ),
சி-25, கடாப் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, நியூ மெஹ்ரவுலி ரோடு, நியுடெல்லி-110016.
தொலைபேசி 011-41689133

உயர்கல்விக்கான உதவித்தொகை


அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான தேசிய நிறுவனம் (NISTADS), உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்குகிறது.

தகுதி: 12ம் வகுப்பை முடித்தவர்கள் மட்டுமே, இதைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள்.

வயது:
விண்ணப்பிக்கும்போது, 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை:
அதிகபட்சம் 5 வருடங்கள் வரை அல்லது படிப்பு முடியும் வரை வருடம் ரூ.80,000 வழங்கப்படும். (இரண்டில் எது முன்னதாக நிகழ்கிறதோ, அதுவே கணக்கில் எடுக்கப்படும்).

விண்ணப்பம் பெறுதல் மற்றும் பிற விபரங்களை அறிய www.inspire-dst.gov.in என்ற இணையதளம் செல்க.

வானிலை அறிவியல்(Weather Science) படிப்புகள்


வானிலை அறிவியல் என்பது, வளிமண்டலம் குறித்த அறிவியலின் ஒரு உட்பிரிவு. இது வானிலை மாற்றங்களையும், வானிலை பற்றிய முன்னறிவிப்புகளையும் மையமாகக் கொண்டு இயங்குகிறது.

இத்துறை, பூமியின் வளி மண்டலத்தில் நிகழும் இயற்பியல், வேதி மாற்றங்களையும், இயக்கங்களையும் உள்ளடக்கியது. வளி மண்டலத்துக்கும், புவி மேற்பரப்புக்கும் உள்ள தொடர்பு இயக்கங்களிலும் கவனம் செலுத்துகிறது.

மீடியா வாயிலாக முன்னறிவிப்புகளை வெளியிடுவோர் இத்துறையினரே. சுனாமி போன்ற இயற்கை பேரழிவுக்குப் பின், இதன் அவசியம் இன்றியமையாததாகிறது.

தகுதிகள் :
வானிலை அறிவியல் துறையில் பணிபுரிய விரும்புவோர், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்து, இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவேண்டும். இதில் பி.எஸ்சி., பி.டெக்., இளநிலைப் படிப்புகள் உள்ளன.

முதுநிலை படிப்பை எம்.எஸ்சி., எம்.டெக்., படிப்புகளாக இரண்டு ஆண்டுகளில் படிக்க முடியும். இத்துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க விரும்புவோர், இளநிலையில் வானிலை அறிவியல், இயற்பியல் அல்லது இன்ஜினியரிங் துறையில் படித்திருக்க வேண்டும்.

பணி வாய்ப்புகள்:
இத்துறையில் படித்தவர்களுக்கு, அரசுத்துறையில்தான் பணி வாய்ப்புகள் உள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையுடன் தொடர்புடைய சில தனியார் நிறுவனங்களிலும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ராணுவப்பணிகளில் படைகளை நகர்த்துவது, விமானப் படை இயக்கம், குண்டு வீசுதல், கடற்படையை இயக்குவது போன்றவற்றுக்கு வானிலை தகவல் இன்றியமையாதது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெட்டீயாரலஜி, இந்திய வானிலை அறிவியல் துறை, இந்திய விமானப்படை, விண்வெளி ஆராய்ச்சி மையம், நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சி ஆகியவற்றில் பணிபுரியலாம்.

இத்துறை பல்வேறு சவால்களையும், சாதனைகளையும் உள்ளடக்கியுள்ளது. கல்வித் தகுதியையும், அனுபவத்தையும் பொறுத்து நல்ல ஊதியத்தை பெற முடியும்.

அரசுப் பணியில் நுழைந்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளமாகப் பெறலாம். வெளிநாடுகளில் வேலை கிடைத்தால், அதிக சம்பளம் பெற முடியும்.

கல்வி நிறுவனங்கள்:
* பாரதியார் பல்கலைக்கழகம்
* கொச்சின் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
* ஆந்திரா பல்கலைக்கழகம்
* ஐ.ஐ.டி., கோரக்பூர்

புதன், 24 ஏப்ரல், 2013

காந்தி கிராமிய கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்பு


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ந்திகிராம் கிராமிய கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
இளநிலையில் பி.எஸ்சி., பி.ஏ., பி.பி.ஏ., பி.காம்.,ஆகியவற்றில் பல்வேறு பிரிவுகள்

முதுகலையில் எம்.ஏ, எம்.எஸ்சி., எம்பில்

ஒருகிணைந்த படிப்பு, தொழிற்கல்வி படிப்பு,

டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் கையேடுகளை கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏப்ரல் 26ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. மேலும் தகவலுக்கு www.ruraluniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் 547 பணி நிரவல் பணியிடங்கள் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்


நெல்லை மாவட்டத்தி ல் 547 பணி நிரவல் பணியிடங்கள் உள்ளதால் பல்வேறு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட அனைத்து வட்டார, பொறுப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நடந்தது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் தர்மராஜ் பிராங்களின் வரவேற்றார். முன்னாள் பொருளாளர் சிவஞானம், மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் 547 பணியிடங்கள் பணி நிரவல் பணியிடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் அதிகமான ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஏற்படும் அபாயம் உள்ளதால் பல பள்ளிகள் மூடப்பட வேண்டிய ‹ழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை தடுக்கும் வகையில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற ஆணையை முதல்வர் பிறப்பிக்க வேண்டும்.

சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் மற்றும் பணி மாறுதல் மூலம் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பணியிடங்களை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். கடந்த 2006 முதல் கால முறை ஊதியம் பெற்று அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரிந்து வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 6வது ஊதிய குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு


முதல் தலைமுறை பட்டதாரிகள், சுய தொழில் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆட்சியர் லில்லி வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் சார்பாக, முதல் தலைமுறை பட்டதாரிகள் தொழில் துவங்க, தமிழக அரசு, 25 சதவீத மானியத்தில், 5 லட்ச ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கி வருகிறது.

நடப்பாண்டில், தகுதியான தொழில் முனைவோர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில், மகளிர் தொழில் முனைவோருக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சேவை மற்றும் உற்பத்தி தொழில் துவங்க விருப்பம் உள்ள பொதுப்பிரிவினர், தங்களது பங்களிப்பாக, முதலீட்டு தொகையில், 10 சதவீதம், சிறப்பு பிரிவினர், 5 சதவீதம் செலுத்த வேண்டும்.

தொழில் முனைவோருக்கு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அல்லது பல்லவன் கிராம வங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும். கடன் தொகையை முறையாக செலுத்தினால், 25 சதவீத மானியத்துடன், மூன்று சதவீதம் வட்டி மான்யமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் விண்ணம்பம் செய்பவர்கள், இளநிலை பட்டதாரிகள் அல்லது பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., தொழில் பயிற்சி பெற்றவர்களாகவும், அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர், 25 முதல், 35 வயதிற்குட்பட்டவர்களாகவும், சிறப்பு பிரிவினரான, மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவனத்தினர், சிறுபான்மையினர், திருநங்கைகள் ஆகியோர், 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை. உரிமையாளர், பங்குதாரர் நிறுவனமாக இருக்கலாம். பங்குதாரர் நிறுவனமாக இருப்பின் அனைத்து பங்குதாரர்களும் திட்டத்தின் தகுதிகளுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தின், இரு நகல்களில், வயதிற்கான சான்று, இருப்பிட சான்று, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி, கல்வி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட பட்ட, பட்டய சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ், முன்னாள் ராணுவனத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையாக இருப்பின், அதற்கான சான்றிதழ் வழங்கிட வேண்டும்.

திட்ட அறிக்கை மற்றும் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான, உத்தேச விற்பனை மற்றும் மொத்த வருமானம் அறிக்கை, திட்ட மதிப்பீட்டில் நிலத்தின் மதிப்பு சேர்க்கப்பட்டிருந்தால், நிலபட்டாவின் நகல், இயந்திரங்கள் அல்லது கருவிகளின் அசல், நகல் விலைப்பட்டியல், சான்று உறுதி மொழிப் பத்திரம், மாவட்ட தொழில் மையத்தில் இருந்து பெறப்பட்ட தொழில் முனைவோர் பதிவறிக்கை(பாகம்1) ஒப்புகை சான்று, பங்குதார் நிறுவனமாக இருந்தால், கூட்டு ஒப்பந்த்தின் பத்திர நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் ஏற்கனவே கடன் பெற்று திரும்பி கட்ட தவறியவர்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்றவர்கள், மத்திய, மாநில அரசின் பிற திட்டங்களில், மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.

இத்திட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான தேர்வுக் குழுவினரால் நேர்முக தேர்வின் மூலம் பரிசீலிக்கப்படுவார்கள். ஆர்வமும், தகுதியும் உள்ள தொழில்முனைவோர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, அனைத்து இணைப்புகளுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளில் சேர்க்கை நிறுத்தம்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலை.,யில் பல்வேறு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

ஐந்தாண்டு படிப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு நெல்லை பல்கலை.,யில் எம்.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்எஸ்சி., கணிதம் மற்றும் உளவியல் ஆகிய ஒருங்கிணைந்த படிப்புகள் துவக்கப்பட்டன. ஐந்தாண்டு பட்டப்படிப்பான இதில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் நேரடியாக சேர்க்கப்பட்டனர். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திடீர் நிறுத்தம்
இந்நிலையில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து வரும் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பாடங்களான எம்டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்எஸ்சி., கணிதம், உளவியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திக் கொள்வது என பல்கலை., முடிவு செய்துள்ளது.

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வரப்பிரதாசமாக அமைந்திருந்ததாகவும், இந்த பாடங்களை நிறுத்துவதால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எம்.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு படிக்க பிற கல்வி நிறுவனங்களில் நிறைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லை பல்கலை.,யில் இந்த படிப்புக்கு கட்டணம் மிகவும் குறைவாகும். நெல்லை சுற்றுப்பகுதியில் பெரும்பாலாலும் நடுத்தர வகுப்பு மக்களே வசிக்கின்றனர்.

இவர்களது குழந்தைகளுக்கு ஐந்தாண்டு எம்.டெக்., படிப்பு ஒரு வரப்பிரதாசமாக இருந்தது. இந்த படிப்பை நிறுத்துவதால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கல்வியறிவு பெற முடியாமல் போய்விடும். எனவே நெல்லை பல்கலை.,யில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குழப்பங்கள்
ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்துவதற்கு பல்வேறு காரணங்களை பல்கலை., தெரிவிக்கிறது.
பல்கலைக்கழகம் பட்டமேற்படிப்புகளை கற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனமாகும்.

பிளஸ் 2 படித்து விட்டு, பல்கலை.,க்கு நேரடியாக மாணவர்கள் வருவதால் அவர்களுக்கு போதிய முதிர்வுத்தன்மை இல்லை. பிளஸ் 2 முடித்து விட்டு நேரடியாக வரும் மாணவ, மாணவிகள் பல்கலை.,யில் பக்குவம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்கள், பேராசிரியர்கள் இடையே இடைவெளி ஏற்படுகிறது. மாணவர்களை கட்டுப்படுத்தவதும் கடினமாக உள்ளது.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் பெரும்பாலானோர் பிஎட்., படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். உதாரணமாக நெல்லை பல்கலை.,யில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கணிதம் படிக்கும் மாணவர்களுக்கு எம்எஸ்சி., பட்டம் மட்டுமே வழங்கப்படும்.

இந்த பட்டத்தை வைத்துக் கொண்டு, மாணவர்களால் பிஎட்., படிக்க முடியாது. பிஎஸ்சி., பட்டம் இருந்தால் மட்டுமே பிஎட்., படிப்பில் சேர முடியும். இது போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது மாணவர்கள் பல்கலை., நிர்வாகத்தை குறை கூறுகின்றனர்.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டம் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதிலும் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது. இந்த படிப்பு ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

எனவே நெல்லை பல்கலை.,யில் வரும் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலை., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்று கால்நடை வளர்ப்பு தொழில் துவங்கினால் வெற்றி பெறலாம்


கால்நடை பராமரிப்பு துறையில் பயிற்சி பெற்று, கால்நடை வளர்ப்பு தொழில் துவங்குமாறு பல்கலைக்கழக துணை வேந்தர் பிரபாகரன் கூறினார்.

விழுப்புரத்தில் நடந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் சார்பில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சி நிறைவு விழாவில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு மூலம் விவசாயிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, விவசாயத் தொழில் 50 சதவீதம் மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துவிட்டதாலும், விவசாய பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததாலும் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கால்நடை பராமரிப்பு மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆண்டு முழுவதும் வருமானத்தை ஈட்ட முடியும். மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 1500 அடி ஆழத்திற்கு போர் போட்டு, விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனால், அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ஒப்பந்த கோழி வளர்ப்பிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கறவை மாடுகள் வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.

தற்போது, பொதுமக்கள் சிறந்த உணவு, உடை அணிந்து நாகரிகமாக வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், சத்தான உணவு சாப்பிடுவதற்காக, கால்நடை துறை சார்பில் இறைச்சி, முட்டை, பால் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது.

கால்நடைகளை வளர்க்க விரும்புவோர், அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு துறையில் சென்று பயிற்சி பெற்று, தொழில் துவங்க வேண்டும். இதன் மூலம் தொழிலை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். இவ்வாறு துணை வேந்தர் பிரபாகரன் பேசினார்.

ஐ.ஐ.எம். - ன் மேனேஜ்மென்ட் படிப்பு


இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனத்தில், மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ் பி.ஜி., புரோகிராம் படிப்புக்கு, சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் கேட் அல்லது ஜிமேட் நுழைவுத் தேர்வு எழுதியிருப்பது அவசியம். மேனேஜ்மென்ட் துறையில், ஐந்து ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க மே 24 கடைசி தேதி.

விபரங்களுக்கு www.iimidr.ac.in/iimi

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டிலாவது இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத் தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் என மொத்தம் 52 உள்ளன. இப்பள்ளிகளில், முக்கிய பாடங் களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் உதவியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதுபோன்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பெரும்பாலும், இளங்கலை பட்ட படிப்பு முடித்து, முன் அனுபவம் இல்லாத ஆசிரியர்களாக உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, கல்வித்துறை அதிகாரிகளும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனாலும், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது.

அரசு பள்ளிகளில், மேல்நிலை பிரிவுக்கு கணிதம், இயற்பியல், வணிக கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. பொதுத்தேர்வின் போது, தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.

கடந்தாண்டில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிந்தது. நடப்பாண்டிலும், இதே நிலை நீடிக்கும் அபாயம் உள்ளது. வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன், முக்கிய பாடங்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறுகையில், "ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்றதாலும், பணி ஓய்வு பெற்றதாலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு முன் புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வாய்ப்புள்ளது.

பொதுத்தேர்வின் போது, பள்ளிகளில் தற்போது இருக்கும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டும் பாடம் நடத்தப்பட்டுள்ளதால், தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் இருக்காது" என்றார்.

மீன்வள தொழில்நுட்பம்(Fishery Technology) : இலவச பயிற்சி


மத்திய கடல்சார் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சார்பாக, மீன்வள தொழில்நுட்பம் பற்றி, இலவச பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.

மத்திய அரசின் கடல்சார் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சார்பாக, மாணவர்களுக்கு, கேப்டன் மற்றும் கப்பல் பொறியாளர் பணிக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, விடுதி வசதியுடன், மாதம், 700 ரூபாய் உதவித்தொகை, வழங்கப்படுகிறது.

பயிற்சி காலம், 2 ஆண்டுகள். தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு, ஜூன், 22ம் தேதி, அகில இந்திய அளவில், நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், கணிதம் மற்றும் அறிவியலில், 40 சதவீதம் மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள், www.cifnet.gov.in என்ற இணையதள முகவரியில் பெறலாம். அடுத்த மாதம், 15 தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 044 - 25953769 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வியியல் படிப்புகள்


தமிழ்நாடு உடற்கல்வியியல் (பிசிகல் எஜூகேஷன்) மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், எம்.பில்., எம்.எஸ்சி., போன்ற படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் விளையாட்டுத்துறைக்காக, முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலை சென்னை நுங்கம்பாக்கத்தில் 2005 முதல் செயல்படுகிறது.

என்ன படிப்புகள் :
* எம்.பில்., பிசிகல் எஜூகேஷன் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட முதுநிலை படிப்பில் 55 சதவித மதிப்பெண்களோடு தேர்ச்சி அத்துடன் இரண்டாண்டுகள் ஆசிரியாராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* எம்.பில்., யோகா படிப்பிற்கு சம்பந்தப்பட்ட முதுநிலை படிப்பில், 55 மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* எம்.பில்., எக்சசைஸ் பிசியாலஜி அண்டு நியூட்ரிசியன் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட படிப்பில் முதுநிலை பட்டம், அத்துடன் இரண்டாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* எம்.பில்., பயோமெக்கானிக்ஸ் அண்டு உடலியக்கவியல் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் முதுநிலை பட்டம் அத்துடன் இரண்டாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* எம்.பில்., அட்வான்ஸ்டு டிரெய்னிங் அண்டு கோச்சிங் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட படிப்புகளில் முதுநிலை பட்டம் அத்துடன் இரண்டாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* எம்.எஸ்சி., ஸ்போர்ட்ஸ் கோச்சிங் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட படிப்புகளில் இளங்கலை, டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி அத்துடன் இரண்டாண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பல்கலையில், நேரிலோ தபாலிலே அல்லது இணையதளத்திலோ பெற்று விண்ணப்பிக்கலாம்.

கட்டணமாக ( எஸ்.சி/ எஸ்.டி.,  250, மற்றவர்  500) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  டிடி யை The  Registrar, Tamil Nadu Physical Education and Sports University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அத்துடன் கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வழங்கும் கடைசி நாள் ஏப்ரல் 30.

விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3.

நுழைவுத்தேர்வு நாள் மே 9.

வகுப்புகள் தொடங்கும் நாள் மே 13.

விவரங்களுக்கு www.tnpesu.org

திங்கள், 22 ஏப்ரல், 2013

பால்வள தொழில்நுட்ப படிப்பு (food and dairy technology)


இந்தியாவின் முக்கிய தொழிலாக பால்வளதுறை விளங்குகிறது. பால் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு உள் மற்றும் வெளி நாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. பால் பொருட்கள் தயாரிப்பில் இந்தியா சிறந்த இடத்தை வகுக்கின்றது.

பாலின் மூலம் பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதால், அதற்கு அடிப்படையாக விளங்கும் பசுக்களை நல்ல முறையில் பராமரித்து அதற்கு தேவைபடும் சத்தான ஆகாரங்களை சரியான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. பதப்படுத்தும் பணியில் பாலை நுகர்வோர் பயன்படுத்தும் விதத்தில் அதை மாற்றுவது, தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களாக மாற்றும் பணிகளும் உள்ளன. பல்வேறு இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலானது தொழிற்சாலையை அடைந்தபின் பால் மற்றும் பால் பொருட்களாக பதப்படுத்தப் படுகிறது. இதற்கு டெய்ரி டெக்னாலஜிஸ்டுகள் எனப்படும் தொழில் நுட்ப வல்லுனர்கள் பணியில் நியமிக்கப்படுகிறார்கள். தொழில்நுட்பம் மற்றும் தரக்கட்டுப்பாடு போன்ற பணிகளை இவர்கள் செய்கிறார்கள். பதப்படுத்தும் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல், கொள்முதல் செய்யப்பட்ட பாலை முழுவதுமாக பதப்படுத்துவது போன்ற கூடுதல் பணிகளை இவர்களே செய்கிறார்கள்.

பால்வளத்துறையை முறையாக நடத்த இதற்கென படிப்புகள் வழங்கப்படுகிறது. இது துவக்கத்தில் பால்வளத் தொழில்நுட்பம் என்பது வெடினரி சயின்சின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்து வந்தது. இத்துறையின் முக்கியத்துவம் அறிந்து பல கல்வி நிறுவனங்களில் இது தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகிறது. இப்படிப்புகளில் முறைப்படுத்தல், உறையிடுதல், சேமித்தல், பரவல், சந்தைப்படுத்தல், வெண்ணெய், நெய், கோவா, பாலாடைக்கட்டி போன்றவற்றை தயாரித்தல் போன்றவற்றை செய்யும் விதத்தை முறையாக கற்று கொடுக்கப் படுகின்றது. இத்துறையில் டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு படிக்க விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவிலோ அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விவசாயப் பாடப்பிரிவில் பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துறையில் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் பால்வளத் துறை படிப்புகள் வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

* College of Veterinary Science, Andra Pradesh

* Sanjay Gandhi Institute of Dairy Technology

* Indira Gandhi Krishi Vishwavidyalaya, Chattisgarh

* Seth MC College of Dairy Science. Gujrat

* National Dairy Research Institute, Haryana

* University of Agricultural Sciences, Karnataka

* College of Dairy Technology, Madhya Pradesh

* Maharana Pratap University of Agriculture & Technology, Rajasthan

* College of Dairy Science, Rajasthan

* Faculty of Veterinary Science and Animal Science, West Bengal

* Institute of Food and Dairy Technology, Chennai

மின்சாரவியலில் முதுநிலை மற்றும் டிப்ளமோ


சட்டீஸ்கரில் இயங்கி வரும் ஜிந்தால் மின் தொழில்நுட்ப கல்வி நிலையம் முதுநிலை மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுநிலை - தெர்மல் பவர் பிளான்ட் டெக்னாலஜி

தகுதி: முழு நேர பி.இ. படிப்பில் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் / கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை பட்டயம் - தெர்மல் பவர் பிளான்ட் டெக்னாலஜி

தகுதி: மூன்று வருட டிப்ளமோ படிப்பில் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரிகல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் / கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து படித்திருக்க வேண்டும்.

வயது: 2013 ஜூலை 01 அன்று 26 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 மே 2013.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.jipt.org என்ற இணையதளத்தை காணவும்.

கணிதம் படிப்பவர்களுக்கு உதவித்தொகை


சென்னை கணிதவியல் நிறுவனத்தில், கணித துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள், இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளாலும் அங்கீகரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

இங்கு வழங்கப்படும் படிப்புகள் அனைத்தும் முழுவதும் கணிதம் தொடர்பான பாடங்களை உள்ளடக்கியதாகும். மற்ற பாடங்கள் எதுவும் இந்த படிப்பில் இடம்பெறுவதில்லை. மேற்படிப்புகளை தொடர்பவர்களுக்கும், முழவதும் கணிதப் படிப்புகளை படிக்க விரும்புபவர்களுக்கும் இப்படிப்பு ஏற்றதாகும்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் கூட இப்படிப்புகளை முடித்தவர்கள் மேற்படிப்புகளைத் தொடர வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம், மேலாண்மை, நிதி கணிதவியல், சாப்ட்வேர் போன்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கணிதவியல் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்.

பி.எஸ்சி (ஹானர்ஸ்), கணிதம் மற்றும் கணினி அறிவியல், பி.எஸ்சி (ஹானர்ஸ்) இயற்பியல் ஆகிய இரண்டு இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றது. நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழத முடியும். இப்படிப்புக்கான கல்விக் கட்டணம் பருவத்திற்கு ரூ.750 செலுத்த வேண்டும்.

இந்த படிப்பிற்கு உதவித் தொகையாக மாதந்தோரும் ரூ.4000 மும், இதர செலவுகளுக்கு ரூ.1000மும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி விகிதத்தைப் பொருத்து உதவித்தொகை வழங்கப்படும்.

முதுநிலைப் படிப்பில் எம்.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், பயன்பாட்டுக் கணிதம் உள்ளிட்ட மூன்று பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.

எம்.எஸ்சி., கணிதப் படிப்பில் சேர பி.டெக்., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைப்பெறும். எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பில் சேர கணினி துறையில் பி.இ., பி.டெக்., முடித்திருப்பது அவசியமாகும். எம்.எஸ்சி., பயன்பாட்டுக் கணிதப் படிப்பில் சேர பி.எஸ்சி.,யில் கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் பி.இ, பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

இந்த படிப்பிற்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4,800 வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகையுடன் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 கூடுதலாக வழங்கப்படுகிறது.

பிஎச்.டி., படிப்பில் கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. கணிதப் படிப்பில் சேர எம்.எஸ்சி., கணிதம், பி.இ பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். இயற்பியல் ஆராய்ச்சி படிப்பில் சேர பி.இ, பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி கணினி அறிவியல் போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை தொடர்பவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி உதவித் தொகையாக மாதத்திற்கு ரூ.16,000மும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.18,000மும் வழங்கப்படுகிறது. இதை தவிர புத்தகத்திற்கு என தனியாக ஆண்டுக்கு ரூ.10,000 மற்றும் தங்கும் விடுதி செலவுக்கு கல்வித் தொகையில் 30 சதவீதம் கூடுதலாகவும் வழங்கப்படுகிறது.

இந்த கல்வி நிறுவனத்தில் முழநேர படிப்பு மட்டுமல்லாமல் பகுதி நேர ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய: www.cmi.ac.in

சனி, 20 ஏப்ரல், 2013

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் பி.டெக் படிப்பு


இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியில் பி.டெக்., படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பி.டெக்., ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ஏவியனிக்ஸ், பிசிகல் சயின்ஸ் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். +2வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜெஇஇ தேர்வில் தகுதி பெற்ற பின் ஜெஇஇ(மெயின்) 2013 தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: +2வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும், ஜெஇஇ மெயின் தேர்வில்  60 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iist.ac.in என்ற இணையதளத்தில் இருந்து ஆன்லைன் வழியாக மே 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய கல்வி நிறுவன இணையதளத்தை அணுகலாம்.

இளநிலை ஹோமியோபதி படிப்பு


கொல்கத்தாவில் உள்ள தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பான பி.எச்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இதன் கால அளவு ஐந்தரை ஆண்டு ஆகும். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

பி.எச்.எம்.எஸ் படிப்புக்கு12ம் வகுப்பில் (இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம்) ஆகிய பாடப் பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 17 வயது நிரம்பியராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் அவசியம்.

விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பொதுப்பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இலவசம்.

மே 10 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.nih.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.