Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 1 ஜூன், 2013

கிராம அதிகாரிக்கு மிரட்டல் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் கைது

வறட்சி நிவாரண பணம் கிடைக்காத ஆத்திரத்தில கிராம நிர்வாக அலுவலரை கொலை மிரட்டல் செய்ததாக இந்தி ய கம்யூனிஸ்டு பிரமுகரை, போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாக்கு வெட்டி தொடக்க கூட்டுறவு வேளான் கடன் வங்கியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவிப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. பசும்பொன் காலனியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் போஸ்(60) என்பவர் வறட்சி நிவாரண பணம் வாங்க வந்திருந்தார். ஆனால் பட்டியலில் இவரது பெயர் சேர்க்கப்படவில்லையாம்.    

இதற்கு பசும்பொன்-தவசிக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் முத்து கிருஷ்ணன்தான் காரணம் என்று எண்ணி, போஸ் ஆத்திரம் அடைந்து, வங்கியில் இருந்த முத்துகிருஷ்ணனுடன் தகராறு செய்து, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் செய்தாராம்.

சம்பவம் குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் முத்து கிருஷ்ணன் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் ஜேசு, சார்பு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, போஸை கைது செய்தனர்.

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்பு

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்புகளுக்கு வரும் ஜூன் 5 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2013-14-ஆம் கல்வியாண்டிற்கு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு   பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு (முன்னாள் படைவீரர், சிறந்த விளையாட்டு வீரர் மற்றம் மாற்றுத்திறனாளிகள்) மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் அந்தந்தப் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 5.06.2013 முதல் 21.6.2013 வரை வழங்கப்படும்.   தொழிற் படிப்பு இடையே புகுத்தப்பட்ட sandwich course பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அத்தகைய படிப்பு நடத்தப்படும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படும்.

பட்டயப் படிப்புச் சேர்க்கைக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பில் (SSLC/Matriculation) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த பலவகை  தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள்:    21.6.2013.

கற்பனை வளம் மிக்க நுண்கலை படிப்பு

அரசு கவின்கலைக் கல்லூரியில் 2013-14ம் ஆண்டிற்கான பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்பு:

பி.எப்.ஏ., (காட்சித் தொடர்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, சுடுமண் ஆலையக வடிவமைப்பு, துகிலியல், பதிப்போவியம்) ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையதளப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 23 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் எனில் உச்ச வயது வரம்பு 26 ஆகும்.

முதுகவின் கலைப் பட்டப்படிப்பு, எம்.எப்.ஏ (காட்சித் தொடர்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, சுடுமண் ஆலையக வடிவமைப்பு, துகிலியல், பதிப்போவியம்)

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப கட்டண தொகையுடன் ரூ.15க்கான தபால் தலை ஒட்டி, சுய முகவரி எழுதிய கவரை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பம் பெறலாம். மேலும் சென்னை அல்லது கும்பகோணம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் விண்ணப்ப கட்டணம் வரைவோலையை செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 17ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.

 கூடுதல் தகவல்கள் அறிய 044-25610878, 0432-2481371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.