Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 1 ஜூன், 2013

கிராம அதிகாரிக்கு மிரட்டல் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் கைது

வறட்சி நிவாரண பணம் கிடைக்காத ஆத்திரத்தில கிராம நிர்வாக அலுவலரை கொலை மிரட்டல் செய்ததாக இந்தி ய கம்யூனிஸ்டு பிரமுகரை, போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாக்கு வெட்டி தொடக்க கூட்டுறவு வேளான் கடன் வங்கியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவிப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. பசும்பொன் காலனியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் போஸ்(60) என்பவர் வறட்சி நிவாரண பணம் வாங்க வந்திருந்தார். ஆனால் பட்டியலில் இவரது பெயர் சேர்க்கப்படவில்லையாம்.    

இதற்கு பசும்பொன்-தவசிக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் முத்து கிருஷ்ணன்தான் காரணம் என்று எண்ணி, போஸ் ஆத்திரம் அடைந்து, வங்கியில் இருந்த முத்துகிருஷ்ணனுடன் தகராறு செய்து, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் செய்தாராம்.

சம்பவம் குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் முத்து கிருஷ்ணன் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் ஜேசு, சார்பு ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, போஸை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக