Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 10 மார்ச், 2013

தற்காலிக பணியிடத்தில் 10 ஆண்டுகளாக தவிக்கும் கம்ப்யூட்டர் பணியாளர்கள்


 தமிழகத்தில் 529 பேரூராட்சிகள் உள்ளன. சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் வரி, கடை லைசென்ஸ் சலான், பிளான் ரசீதுகள், பில்கள், வவுச்சர்கள் என அனைத்திற்கும் கம்ப்யூட்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பேரூராட்சிகளில் இருந்து இயக்குனர் அலுவலகத்திற்கு, இ-மெயில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அனைத்து பேரூராட்சிகளிலும், ஆன்லைனில் ரசீது போடும் முறை அமலில் உள்ளது. அனைத்து பணிகளுமே கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளர்கள் மட்டும் நியமிக்கப்படவில்லை.

அனைத்து பணியாளர்களுமே தற்காலிக பணியிடத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, 10 ஆண்டுகளாக மிகவும் குறைந்த அளவு சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. இதனால் மிகவும் சிரமமான வாழ்க்கை சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாடு பேரூராட்சி செயல்அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் அனைத்து பணியாளர் சங்க மாநிலபொதுச் செயலாளர் மகேஸ்வரன் கூறியதாவது: கம்ப்யூட்டர் பணியாளர்கள் இல்லாவிட்டால், பேரூராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்து விடும். எனவே அவர்களை பணிநிரந்தரம் செய்து, சம்பளம் வழங்க வேண்டும். செயல் அலுவலர்களும் கம்ப்யூட்டர் இல்லாமல் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செயல்அலுவலர்களுக்கு கட்டாயம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க வேண்டும். இதன் மூலம் அரசுடன் தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்ள முடியும். பேரூராட்சி நிர்வாகம் எளிதாகும்,என்றார்.

பயோ-டெக்னாலஜியில் ஆய்வு செய்ய உதவித்தொகை


முதுநிலை பயோடெக்னாலஜியில் சிறப்புத் திட்ட ஆய்வுக்காக ஐந்தாண்டு கால  உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பங்கேற்று ஆய்வு செய்ய, பாரதிதாசன் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்கலை மானியக்குழுவின் சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், 2011-2016ம் ஆண்டு வரையிலான சிறப்பு ஆய்வு திட்டத்தில் ஆய்வு செய்ய, தற்காலிக பணியிடமாக ஆய்வாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். முதுநிலை பயோ டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும். டி.என்.ஏ., தொழில்நுட்பம், திசுவளர்ப்பு, டிரான்பர்மேஷன் மற்றும் எச்பிஎல்சி ஆய்வில் முன்அனுபவம் இருக்க வேண்டும்.

உதவித்தொகையாக 8,000 ரூபாய் வழங்கப்படும். ஒரு காலி இடம் மட்டுமே உள்ளது. விருப்பமும், தகுதியுமுள்ளவர்கள் வரும் 18ம் தேதிக்குள் பேராசிரியர் கணபதி, தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், யு.ஜி.சி., -எஸ்.ஏ.பி., திட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 24 என்ற முகவரிக்கு தங்கள் சுயவிவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
அல்லது aganapathi2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். கூடுதல் விவரங்களை www.bdu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சிந்தனைக் களம் :மார்ச் - 10

இந்தியத் துணை கண்டம் 1947 - ம் ஆண்டு "இந்திய யூனியன் " என்றும் பாகிஸ்தான் என்றும் இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு , 1947 - ஆகஸ்டு 15 - ஆம் நாள் சுதந்திரம் அடைந்தது .அவ்வாறு சுதந்திரம் அடைந்த இந்தியாவில் ,இஸ்லாமியர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்பட்டது . இந்தியாவில் வாழ்ந்த பெரும் பெரும் முஸ்லிம் தலைவர்கள் , பெரும் பெரும் பணக்காரர்கள் ,குறிப்பாக வட இந்திய மாநில மக்கள் பாகிஸ்தானில் குடியேறினர் .

இந்த நிலையில் ,இந்தியாவில் தங்கிய சில முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம்களுக்கு தனியாக அரசியல் அமைப்பு தேவையில்லை , தனிப்பட்ட சிவில் சட்டங்கள் கூட தேவையில்லை என்று முழங்கத் தலைப்பட்டனர் .

தாங்கள் பிறந்த மண்ணை ,தாங்கள் ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திர தாய் மண்ணை விட்டு போகாத முஸ்லிம்கள் ,முஸ்லிம்களாக வாழ்வதற்கு கேள்விக்குறி எழுப்பப்பட்டது .

அந்த கொடூரமான நிலையில் , அல்லாவை மட்டுமே நம்பி 1948 -ஆம் ஆண்டு மார்ச் -10 -ஆம் நாள் இந்தியாவிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் கூட்டம் இன்றைய சென்னை ராஜாஜி ஹாலில் நடந்தது . அந்த கூட்டத்திற்கு ராஜாஜி ஹாலை வழங்கிய அன்றைய ஆட்சியாளர்கள் கூட , முஸ்லிம்கள் தங்கள் வாழ் உரிமையை கேட்பதற்கு தலைப்பட மாட்டார்கள் இந்த கூட்டத்தோடு ,முஸ்லிம்கள் கூடுவது முடிந்துவிடும் என்று எண்ணிதான் கொடுத்தார்கள் .

ஆட்சியாளர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி ,அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வண்ணம் சில முஸ்லிம் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் நடந்து கொண்டனர் . இந்தநிலையில் அந்த கூட்டத்தில் ,ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் , இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் தன் மானத்தோடு ,தங்கள் மார்க்கத்தை
கடைபிடித்து வாழ்வார்கள் ,அதனில் எந்த மனித ஆட்சியாளர்களும் தலையிட அனுமதிக்க மாட்டோம் ; இந்தியாவில் இஸ்லாமியர்கள் ,இஸ்லாமியர்களாக வாழ "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்"தொடரும்; இந்தியாவில் ஒரு உண்மையான முஸ்லிம் இருக்கும் வரை ,உலகின் இறுதிநாள் வரை இன்ஷாஅல்லாஹ் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிலைக்கும், அல்லாஹு அக்பர் ! முஸ்லிம் லீக் ,ஜிந்தாபாத் !
என்று கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் வீர முழக்கமிட்டார்கள்!

இந்தியாவில் முஸ்லிம்கள் பிறந்ததிலிருந்து , இறக்கும் வரை இஸ்லாமிய சட்டதிட்டங்களின் அடிப்படையில் வாழ்வதற்கு உரிமை முழக்கமிட்டு ,அந்த உரிமைகளை நம் சமுதாயத் தந்தை காயிதே மில்லத் (ரஹ் ) அவர்கள் நிலைநாட்டிய பெருநாள் ,திருநாள் ,உரிமைகள் மீட்டப்பட்ட நாள் ,1948 ,மார்ச் -10 ஆம் நாள் !


இந்தியாவில் இஸ்லாமியக் குழந்தை பிறந்த பின் செய்யப்படும் விசயங்களிலிருந்து ,அவன் இறந்த பின் அடக்கம் செய்யப்படும் விஷயங்கள் வரை உரிமைகளை பெற்றுத் தந்த பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !

இந்தியாவில் ஆலிம்களை அரசு ஊழியர்களாக்கிய பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !

டெல்லி, அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின், முஸ்லிம் சமுதாய உரிமையை நிலைநிறுத்திய பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !

இந்தியாவில் முஸ்லிம்களின் உண்மை நிலையை உலகறியச் செய்த ராஜேந்திர சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கள் அமைய காரணமான பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !

சென்னை புதுக்கல்லூரியிலிருந்து நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிவரை உருவாக காரணமான பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திட வித்தான பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !

உலமாக்கள் நல வாரியம் பெற்றுத் தந்த பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !

இந்திய பெருநாட்டில் சமூக நல்லிணக்கம் நிலைபெற்று , மதச்சார்பற்ற ஜனநாயகம் நிலைபெற்று ,அனைத்து சமூகமும் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதோடு ,சிறுபான்மை முஸ்லிம் சமுதாயமும் கல்வி ,வேலைவாய்பு ,ஆட்சி அதிகாரத்தில் சம உரிமை பெற்று வாழ ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை வலுப்பெறச் செய்வோம் என்று முஸ்லிம்கள் உரிமை நிலைநாட்டப்பட்ட இன்று மார்ச் -10 ஆம் நாளில் சூழுரைப்போம் !

அல்லாஹு அக்பர் ! முஸ்லிம் லீக் ,ஜிந்தாபாத் !

---------அபு ஆஸிமா